23 June 2016

சக்தி சாரணை

சக்தி சாரணை

 பொற்றியென்ற சக்திசா ரணையை வாங்கப்
 பொருந்தியதொர் சங்கரம நாளில்சென்று 
ஊற்றியென்னும் நூல்கட்டி மந்திரந்தான் 
 உரைத்திடவே ஓம்பரமா பரமானந்தி 
மாற்றி மகா சக்தி கமல வல்லி 
 மாதாவே என்று சொல்லி சமூலம் வாங்கி  
நெற்றியெனும் பொடியாக்கி நித்தங்கொள்ள
நிலைத் தெந்த ஆயுதமும் தைத்திடாதே 
                                                                           -கருவூரார் 
பொருள்:
                  சக்தி சாரணையை எடுக்க சங்கரம நாளில்  சென்று நூலால் காப்பு கட்டி ."ஓம் பரமா பரமானந்தி மகா சக்தி கமலவல்லி மாதாவே " என்று மந்திரம் சொல்லி சமுலமாக எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் உண்ண,எந்தவித ஆயுதமும் உடலில் தைக்காது [உடலில் ஆயுதம் பாயாது]

No comments:

Post a Comment