26 December 2016

செவ்வாய் தோஷம்:

செவ்வாய் தோஷம்:
செவ்வாய் தோஷ பாதிப்பு உடையவர்கள் மண்கலயத்தில் கும்பம் வைத்து தேங்காய்க்கு பதிலாக வாழை ப10வை வைத்து, மல்லிகை பூவை கொண்டு 1008 உரு “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்” என்று செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் ஜெபித்து (7 வாரம்) கடல் மற்றும் ஆற்று தண்ணீரில் வாழை பூவை, விட்டு விட உடனே செவ்வாய் தோஷம் விலகும்.
கெட்ட கனவு, சகுன பாதிப்பில் இருந்து விடுபட:
எந்த கிழமையாக இருந்தாலும் அன்ற சூரிய உதயத்திற்கு முன்பு வாசி யோகத்தில் “ஓம் சிவசிவ ஓம்”மனதார ஜெபித்து வெண்ப10சணியை உணவில் சேர்த்து சாப்பிட உடனே தோஷம் நீங்கும்.
காரிய வெற்றி ஏற்பட:
ஒரு 1 அடி நீளம் 1 அடி அகலம் உள்ள வெள்ளை நிற அட்டையில் பச்சை நிறத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து அதில் மேற்படி மந்திரம் எழுதி கிழக்கு திசையில் உங்கள் தரையில் உட்காரும் பொழுது நெத்தி பொட்டிற்கு எதிரில் ஒட்டி
இதனை பார்த்து மனதார “ஓம் சிவசிவ ஓம்” என்று ஜெபித்து வர எண்ணிய நியாயமான எண்ணங்கள் படிப்படியாக நடைபெறும்.
குழந்தைகளை திருத்த:
இரவில் குழந்தைகள் ஆழ்ந்து உறங்கிய பின்பு அவர்கள் தலைமாட்டில் அமர்ந்து அவர்கள் தலையில் கை வைத்து “ஓம் சிவசிவ ஓம்” என்று மனதார ஜெபித்து உரு ஏற்ற படிப்படியாக குழந்தைகள் நமது சொல்படி கேட்டு நடக்க ஆரம்பிப்பார்கள்.
ராகு திசையின் பாதிப்பு நீங்க:
பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை வணங்கி அவரை 18 சுற்றுகள் அப்பிரதட்சணமாக சுற்றி அங்கு “ஓம் சிவசிவ ஓம்” என்று ஜெபித்து வர (தினமும்) ராகு திசையில் கெடுபலன் விலகும்.
கேது திசை பாதிப்பு நீங்க:
தனியாக உள்ள விநாயகர் கோவிலில் அப்பிரதட்சணமாக “ஓம் அரி ஒம்”;      சுற்றுகள் சுற்றி தினமும் ஜெபித்து வர வேண்டும். யானையை கொண்டு நமது முகத்தில் காற்றை ஊதிவிட செய்ய வேண்டும். கேது திசை கெடுபலன் குறையும்.
செல்வம் சேர (நியாயமான முறையில்):
தாமரை தண்டு திரியை பன்னீரில் நனைத்து காயவைத்து கன்னி மூலையில் விளக்கு ஏற்றி தீபம் வடக்கு நோக்கி எரிய வேண்டும். இதன் முன்பு பட்டு துணியில் அமர்ந்து “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்” என்று மனதார 1008 உரு தினசரி 90 நாட்கள் ஜெபித்து வர படிப்படியாக செல்வம் சேரும்.
மேலே கூறியபடி இன்னும் எத்தனையோ முறைகளில் தந்திரமாக மந்திரங்களை மாற்றி ஜெபித்து நம்முடைய தடைகளை நீக்கி வாழ்வில் வளமாக வாழலாம்


No comments:

Post a Comment