youtube

17 May 2016

வெளியூருக்குப் சகல வசியத்திற்கும் மந்திரம்

வெளியூருக்குப் சகல வசியத்திற்கும் மந்திரம்

வெளியூருக்குப் சகல வசியத்திற்கும் மந்திரம்


 போனால்
ஓம் ஹரயே ஓம் என்று ஜெபித்து போகச் சகலமும் நம்மையாகும்’’ ஓம் சர்வமோக வசிகரி’’ என்று பிராதகாலைலெழுந்ததும் பத்து உரு ஜெபிக்க சகல வசியமாகும்

எமகிங்கிலியன் மந்திரம்

எமகிங்கிலியன் மந்திரம்



ஓம் எமவாயே எமவாயே, நசிவே நசிவே எமகிங்கிலியா நான் நினைத்த பேரையாகிலும் பூதப்பிரேத பிசாசி பில்லி சூனியம் ஏவல் முறைப் பாடுகள்ளையும் பிடி பிடி பிடி அடி அடி அடி அசக்கு அசக்கு நசி நசி நசி உரு ஜெபிக் சித்தியாகும்.

இதற்கு பூஜை சாராயம் பச்சை மாட்டிரைச்சி குங்கிலியப் புகை கந்த பொடிவைத்து மூலம் எவ்-அவ் என்பதாய்ச் ஜெபிக்க சகலமும் ஜெயிகும்

குரளி வசிய மந்திரம்

குரளி வசிய மந்திரம்



அரி அரிபகவான் ஆனந்தபகவான்

அரஹரசிவசிவ அம்பிகை துணையே

ஓம்நமோபகவதே உத்கண்ட பகவதே

உருதேறீ குழந்தை வாவா

உயிர்எனப்பண்ணும் உகம்மான தாயே வாவா

ஒரு கையில்பந்தும் ஒருகையில் செம்பு

ஒரு கையில்சூலமும் இப்படிபலபல

காரண காட்சிகள் காட்டும் கண்கட்டு

களறீவிளையாடும் காரணக் குரளி வாவா

குறளிவாவா நான்நினைத்த புஷ்பம் பொன்காசுபூதலம்

மொய்க்கப்புபுதுமைகள் காட்ட

தன்கையில் எடுத்து என்கையில் தருவாய்

தங்ககாசி உன்னுடைய சிங்காரம்

சிறுவேல்விழியும் மாகணவிரிப்பு

அதுமேல்விருப்பு பொர்காவடியும்

பூமாலை ஆகாச சிங்கா தனத்திலிருந்து

வாவாதாயே வரந்தருவாய்

வந்து என் முன்னின்று என் சொல்லைகேட்டு

என் வசம்மகா நின்ற சுவாஹா

இந்தவிதமாக1௦௦8தரம்உருகொடுக்க புழுங்கல் அரிசி சோரு கோலிக்கறீ சாராயம் மலர் இளநீர் கச்சைகருவாடு பழம் பானகம்வைத்துசாம்பிராணிபுகைபோட பழம் முதலியவைதிண்பண்டங்கள் கொண்டுவந்து கொடுக்கும்

10 May 2016

எளிய பரிகாரங்களும் ,மிக பெரிய பலன்களும்

நவகிரக பாதிப்புகளிலிருந்து விடுபட சில பரிகாரங்களை தொடர்ந்து செய்தால் நம்முடைய கஷ்டங்களின் தாக்கம் குறையும் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.அவைகள் என்ன என்று பார்க்கலாமா ?

காகத்திற்கு உணவு அளித்தல் .இதை நாம் நிறைய வீடுகளில் பாத்திருப்போம்.

பறவைகளுக்கு தாகம் தீர மாடியில் நீர் வைத்தல்.

பசுவிற்கு அகத்தி கீரை,பச்சரிசி ,வெல்லம் கொடுத்தல்.


எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலம் போட  வேண்டும்.எறும்பிற்கு உணவு அளித்தால் 108 பிராமிணர்கள் சாப்பிடுவதற்கு சமம்.

மீன்களுக்கு பொரி அளித்தல்.மதுரைக்கு அருகில் உள்ள  திருப்பரங்குன்றம் முருகன் கோவில்களில் அங்கு வரும் பக்தர்கள் பொரி வாங்கி மீன்களுக்கு போடுவார்.
மலை மேல் உள்ள கோவில்களில் குரங்குகள் நிறைய இருக்கும் .அதற்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும்.

கோவிலில் உள்ள விளக்கிற்கு எண்ணெய்  ஊற்றுதல் சிறந்த பலனை கொடுக்கும்.

ஊனமுற்றவர்களுக்கு உணவு ,உடை அளிக்க வேண்டும்.

அரச மரத்திற்கு நீர் ஊற்றுதல் .

அன்ன தானம் ,நீர் பந்தல் போன்றவைகளை செய்தல் வேண்டும்."நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்பது  போல ஒருவனுக்கு வயிறார உணவு கொடுப்பதும் ,தாகம் என்று வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பதும் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது .சித்திரை மாதத்தில் வரும் மதுரை சித்திரை திருவிழா காலத்தில் மக்கள் நீர் மோர் கொடுத்தும் ,நீர் கொடுத்தும் புண்ணியத்தை சேர்ப்பர் .

உங்களுக்கு எவையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யுங்க .நம்ம கையாலே பிறருக்கு உணவு அளிப்பது மிக சிறந்தது .அதுவும் பறவைகள்,எறும்புகள் போன்றவை வாய் பேச முடியாத ஜீவராசிகள் .அவர்களுக்கு செய்யும் சேவையே நாம் கடவுளுக்கு செய்யும் சேவையாகும் .

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..


வளமான வாழ்வை தரும் தீபம்

நம் இந்து சமயத்தில் ,எல்லோர் வீட்டு பூஜையறைகளிலும் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது .தீபம் எப்படி இருளை விரட்டி ஒளியை நமக்கு தருகிறதோ அதுபோலத்தான் நம் மனதிலுள்ள தீய எண்ணங்களை விரட்டி நல்ல எண்ணங்களை தருகிறது .

நாம் ஒளியின்  மூலமாக இறைவனை காண்கிறோம் .அந்த ஒளிச்சுடர் தீபம் ஏற்றுவதால் கிடைக்கிறது.ஊருக்கு முன் விளக்கு ஏற்றின் உயர்ந்த குடியாகும் என்பது  பழமொழி .அதாவது விடியற்காலை சூரியன் உதயமாகும் முன் பெண்கள் எழுந்து குளித்து ,வாசல் தெளித்து கோலம் போட்டு ,பிரம்ம  முர்த்த வேளையான 4.30 முதல் 6 மணி வரை நம் பூஜையறையில் தீபம் ஏற்ற வேண்டும்.அந்த அதிகாலையில் தீபம் ஏற்றுவதால்  நாம் செய்யும் அனைத்து காரியங்களும்   நன்றாக அமையும் .ஆதலால் தான் குழந்தைகளை அந்த நேரத்தில் எழுந்து, படிக்க  சொல்கிறோம் .

இந்த அவசர உலகத்தில் அதுக்கு எல்லாம் நேரம் எங்கே  இருக்கிறது? என இதைப் படிக்கும் தோழிகளுக்கு எண்ணங்கள்  ஓடிக் கொண்டிருக்கும் .அதற்கும் ஒரு வழி  இருக்கிறது .மாலையில் நீங்கள் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன்,கை ,கால்களை கழுவி விட்டு ,பூஜையறைக்கு சென்று  உங்கள் கையால் தீபம் ஏற்றி உங்கள் இஷ்ட தெய்வங்களை மனதார வழிபட்டால் நமக்கு கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும் .நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு செயல்களும் வெற்றியை தேடி தரும்.

மாலை சூரியன் மறைவதற்கு முன் 4.30 முதல் 6 வரை அல்லது கருங்கல் நேரமான 6.30 மணிக்கு தீபம் ஏற்றுவது நல்லது .4.30 --6.00 மணி பிரதோஷ காலமாகும்.சிவனுக்கு உகந்த காலமாக சொல்லப்படுகிறது.அக்னியின் வாயிலாக பகவானுக்கு அவிர்பாகம் அளிக்க செய்யும் யாகத்திற்கு இணையான பலனை தரக்கூடியது. பூஜையறையில்  இரு தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும்.

தீபம் ஏற்றும் எண்ணெய்

தீபம் ஏற்றுவதற்கு ஏற்ற எண்ணெயை தேர்ந்தெடுப்பது முக்கியம் .

எந்த எண்ணெயில் விளக்கு ஏற்றினால் என்ன பயன்?

நெய் தீபம்  ஏற்றினால் சுகமும் ,சந்தோஷம் வரும்.

நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் , எல்லா பீடைகளும் தொலைந்து போகும்.

விளக்கெண்ணெய்  தீபம் ஏற்றினால் ,புகழ் கிடைக்கும்.

வேப்பெண்ணெய் ,நெய்,இலுப்பை எண்ணெய் இவை முன்றும் கலந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் செல்வம் சேரும் .

நெய் ,விளக்கெண்ணெய் ,வேப்பெண்ணெய் ,இலுப்பை எண்ணெய் ,தேங்காயெண்ணெய் போன்ற 5 வகை எண்ணெயில் தீபம் ஏற்றி,அம்மனை வழிபட்டால் தேவியின்  அருள் கிடைக்கும்.

கடலை எண்ணெய் ,பாமாயில் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தக் கூடாது .

எந்த திசையில் தீபம் ஏற்ற வேண்டும்?

கிழக்கு திசை   ----- துன்பம்  அகலும்,கிரகங்களின்  சோதனைகள் விலகும் .

மேற்கு திசை  -------கடன் தொல்லை ,சனி ,பீடை ,கிரக தோஷம்,பங்காளி பகை நீங்கும்.

வடக்கு திசை-----செல்வம் சேரும்,திருமணத் தடை ,கல்வி தடை நீங்கி சர்வ மங்களம் உண்டாகும்.

தெற்கு திசை -----ஒரு போதும் இந்த திசையில் தீபம் ஏற்றக் கூடாது .அபச குணம் உண்டாகும்.

தீபங்களை ஏற்ற எந்த திரியை பண்படுத்த வேண்டும்?

தாமரை தண்டு திரி -----முன் வினை கர்ம பாவங்கள் நீங்கும்.

பஞ்சு திரி -----தெய்வ குற்றம் ,பிதுர்களால் ஏற்பட்ட சாபம்,வம்சாவளிப் பிரச்சினை போகும் .

நல்ல பலனை பஞ்சுத்திரி கொடுக்கும் .

சிவப்பு வர்ண துணி  திரி ----திருமண தடை நீங்கும்.குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும்.

மஞ்சள் வர்ண துணி திரி ------வெற்றி கிடைக்கும் .தேவியின் பூரண அருள் கிடைக்கும் .தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் .காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும் ,செய்வினை நீங்கவும் இந்த திரியால் விளக்கு ஏற்ற வேண்டும்.

வாழைத்தண்டு திரி ----குடும்ப அமைதி ,குழந்தை பேறு உண்டாகும் .முன்னோர்களால் ஏற்பட்ட சாபம் நீங்கும் .

வெள்ளெருக்கு திரி ----துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும்.

தினம்தோறும் தீபம் ஏற்றி வழிபட்டால்,நமக்கு எல்லா வளங்களும் கிடைக்கும் .அதுவும் முக்கியமாக அதிகாலையில் அம்பாளை வழிபடும் பக்தர்களுக்கு அம்பாள் குறைவில்லாத செல்வத்தையும்,அருளையும் கொடுப்பாள் .

நம் குழந்தைகள் கல்வியில் சிறந்தவராக திகழ்வர்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் .

இங்கனம்:- JSK ஆன்மீகம் அறிவுரை இந்துமதம்

27 April 2016

வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டுமா

* வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் மண் மீது ஒரு வீடுகட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, அந்த மண் மீது எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் மனிதனுக்கு இல்லை. ஆனால், சில பறவைகளுக்கு அதுபோன்ற ஞானம் நிறைய உண்டு.

* குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில்இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு.

. அதனால், இயற்கை‌யி‌ல் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சும சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார்.

* ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டுவர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக் கூடாது. மனிதனைத் தாண்டி சிட்டுக்குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்கவிடுவார். அதைச் சாப்பிட குருவி இரண்டு வரும், கத்தும், கொறித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணிலுக்கும் கூடு கட்டிக் கொடுப்பார். தூக்கனாங் குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக்கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்
.
* இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு.
வீட்டில் சிட்டுக்குருவி, அனில் போன்றவை கூடு கட்டி குஞ்சு பொரி க்கின்றன, குட்டி போடுகின்றன. இதை சிலர் கலைத்துவிடுகிறார்கள்.

ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொரிப்பது நல்லது
கழுதை படத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதை விட இதுபோன்று செய்தால் நல்ல பலன் இருக்கும்.

புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதமான சக்திகளை கொண்டுவருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இதுபோன்ற சாதகமான சக்தியைக் கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக் கூடாது.

இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்...

25 April 2016

சிவமயம்

கோவிலில் தீபம் காட்டுவது ஏன்?

தீப வழிபாடு நம் தமிழகத்தில் பழங்காலத்தொட்டு நடைபெற்று வருகிறது.கோவிலில் தெய்வத்திற்கு செய்யப்படும் பதினாறு உபச்சாரங்களில் தீப ஆராதனையும் ஒன்று.

கோவிலில் காட்டப்படும் தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.தீபத்தை இறவனுக்கும் காட்டுவதற்கு முன்னால்,ஒரு திரை போடப்படுகின்றது.தீபத்தை காட்டும்பொழுது திரை விலக்கப்படுகிறது.இதன் தத்துவம் என்னவென்றால்,நம்முடைய ஆணவம் என்கின்ற திரையை விலக்கினால் மனதில் ஞான ஒளி பிறந்து.நம்முடைய மனம் தெய்வ நிலையை அடையும் என்பதாகும்.

தெய்வத்திற்கு மூன்றுமுறை தீபம் காட்டப்படுகிறது,முதலில் காட்டுவது உலக நன்மைக்காவும்,இரண்டாவது காட்டுவது ஊர் நன்மைக்காகவும்,மூன்றாவது காட்டுவது பஞ்ச பூதங்களின் நன்மைக்காகவும் ஆகும்.பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன.

தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.

அறிவியல் பூர்வமாக பார்த்தால் அந்த காலத்தில் மின்சார வசதி இல்லாததால் இறைவனின் முகம் தெளிவாக தெரிவதற்கு தீபம் காட்டபடுவதாக சிலரின் கருத்தாக இருக்கும்.எது எப்படி இருந்தாலும் பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியை தீபமாக காட்டுவதில் நிறைய தத்துவங்கள் அடங்கிருப்பது என்பதே உண்மை.