youtube

18 May 2013

ம ந்திர தியானத்திற்குப்

ம ந்திர தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது ”ஓம்”. பிரணவ மந்திரமாகக் கருதப்படும் இம்மந்திரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடவுளர்களின் பெயரை ஜபிக்கும் போது கூட இந்துக்கள் இந்த ஓமை சேர்த்தே ஜபிக்கின்றனர். ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணாய ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

கிறிஸ்துவ தியானத்தில் ஜான் மெய்ன் “மாராநாதா” என்கிற மந்திரத்தை உபயோகித்தார். இது ஏசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய அராமிக் மொழிச் சொல் எனப்படுகிறது. இதற்கு ஏசுவே வாருங்கள், அல்லது ஏசு வருகிறார் என்பது பொருள் என்கிறார்கள். செயிண்ட் பாலும், செயிண்ட் ஜானும் இந்த பிரார்த்தனை சொல்லைப் பயன்படுத்தி இருப்பதாக சொல்லப் படுகிறது.

புத்த மதத்தில் ”ஓம் மணி பத்மே ஹம்” என்ற மந்திரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மதத்தினர் தங்கள் புனித நூல்களில் உள்ள சொற்களில் ஏதாவது ஒன்றை மந்திர தியானத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.
மூல துர்காவின் மந்தரம்:

ஓம் ஹ்ரீம் துர்க்காயை நம:
வன துர்காவின் மந்த்ரம் :
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தும்
உத்திஷ்ட புருஷி கிம்ஸ்வபிஷி பயம்மே
ஸமுபஸ்திதம் யதிசக்ய மசக்யம்வா தன்மே
பகவதி சமய ஸ்வாஹா

சூலினி துர்காவின் மந்த்ரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்
ஜ்வல ஜ்வல சூலினிதுஷ்ட க்ரஹ
ஸும் பட் ஸ்வாஹா

ஜாதவேதோ துர்காவின் மந்த்ரம் :

ஜாதவேதஸே ஸுனவாம ஸோமமராதியதோ
நிதஹாதி வேத: ஸந: பர்ஷததி துர்காணி
விச்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்னி:

சாந்தி துர்காவின் மந்த்ரம் :

ஓம் ஹ்ரீம் தும் துர்காம் தேவீம்
சரணமஹம் ப்ரபத்யே

சபரி துர்காவின் மந்த்ரம்

ஹ்ராம் ஹ்ரீம் ஸெள: க்லௌம் ஐம் ஸ்ரீம்
ஜ்வலத் துர்கே ஏஹ்யேஹி
ஸ்புரப்ரஸ்புர ஆதிவிஷ்ணு ஸோதரி, அஸ்த்ர
ஜ்வலத்துர்கே, ஆவசயாவேசய ஜ்வலத்துர்காய
வித்மஹே ஜாஜ்வல்யமானாய தீமஹி தன்னோ
படபாநல: ப்ரசோதயாத், வமலவரயூம் ஜ்வலத்
துரகாஸ்த்ரே ஹும்பட் ஸ்வாஹா

வைண துர்காவின் மந்த்ரம் :

ஓம் சிடி சிடி சண்டால்யை மஹா
சண்டால்யை அமுகம்மே வசமானய ஸ்வாஹா

தீப துர்காவின் மந்த்ரம் :

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் அமும்
துர்கே ஏஹ்யேஹி ஆவேசய ஆவேசய க்ரோம்
தும் துர்கே க்ரோம் ஹ்ரீம் ஆம் ஹும்பட் ஸ்வாஹா

ஆசூரி துர்காவின் மந்த்ரம் :

ஓம் கடுகே கடுகபத்ரே அஸுபகே ஆசூரி ரக்தே
ரக்தவாஸஸே அதர்வணஸ்யதுஹிதே அகோரேகோர
கர்ம காரிகே அமுகஸ்ய கதிம் தஹ தஹ உபவிஷ்டஸ்ய
குதம் தஹதஹ ஸுப்தஸ்யமனோ தஹதஹ
ப்ரபுத்தஸ்ய ஹ்ருதயம் தஹதஹ ஹனஹன பசபச
தாவத்தஹ தாவத்பச யாவன்மே வசமாயாதி ஹும்பட் ஸ்வாஹா

ஜயதுர்காவின் மந்த்ரம் :

ஓம் துர்கே துர்கே ரக்ஷினி ஸ்வாஹா

திருஷ்டி துர்காவின் மந்த்ரம் :

ஓம் ஹ்ரீம் தும் துர்கே பகவதி
மனோக்ரஹம் மதமத ஜிஹ்வாபிசாசீருத்ஸாத
யோருத்ஸாதய, ஹித திருஷ்டி அதிக திருஷ்டி
பரதிருஷ்டி, ஸர்பதிருஷ்டி, ஸர்வதிருஷ்டி
விஷம்நாசம் நாசய ஹும்பட் ஸ்வாஹா

மூகாம்பிகா மந்திரம்

ஓம் ஐம் கௌரி ஐம் கௌரி ஐம்
பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா

26 March 2013

ஸ்ரீ ரேணுகா தேவி..

ஓம் ஆதி சக்தியைச வித்மஹே
ஜமதக்னி பத்னியைச தீமஹி
தந்நோ ரேணுகா: ப்ரசோதயாத்||

ஸ்ரீ ஸப்த மாதாக்களுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்..

ப்ராம்ஹி..

ஓம் ஹம்ஸ யுக்தாய வித்மஹே
மஹா சக்தியைச தீமஹி
தந்நோ ப்ராம்ஹீ: ப்ரசோதயாத்||

மாஹேஸ்வரி..

ஓம் மஹா தேவ்யைச வித்மஹே
ருத்ர பத்னியைச தீமஹி
தந்நோ மாஹேஸ்வரி: ப்ரசோதயாத்||

கௌமாரி..
ஓம்சக்தி தராயை வித்மஹே
காமரூபாயை தீமஹி
தந்நோ கௌமாரி: ப்ரசோதயாத்||

வைஷ்ணவி..

ஓம் கதாஸங்கராயை வித்மஹே
மஹாவல்லபாயை தீமஹி
தந்நோ வைஷ்ணவீ: ப்ரசோதயாத்||

வாராஹி..

ஓம் உக்ர ரூபாயை வித்மஹே
தம்ஷ்ட்ராகாரன்யை தீமஹி
தந்நோ வாராஹீ: ப்ரசோதயாத்||

இந்த்ராணி..

ஓம் மஹர் வஜ்ராயை வித்மஹே
ஸஹஸ்ர நயநாயை தீமஹி
தந்நோ இந்த்ராணீ: ப்ரசோதயாத்||

சாமுண்டி..

ஓம் கராள வதநாயை வித்மஹே
சிரோமலாயை தீமஹி
தந்நோ சாமுண்டீ: ப்ரசோதயாத்||

20 March 2013

நரம்பு தளர்ச்சியை போக்கும்

ஜாதிக்காய்......

பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயாகராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது.

ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும், ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து காலை மாலை பசும்பாலில் 4 கிராம் சூரணத்தை காய்ச்சி குடிக்கலாம். இது நரம்புத்தளர்ச்சியை போக்கும்.

மாதுளம் பூ.......

* மாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பலவித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.சளி, இருமல்,மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது.

* தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.

* மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

* மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

* ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.

முருங்கையின் மகத்துவம்.......

* பாலியல் குறைபாடு தொடர்பான மருத்துவத்தில் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

* முருங்கைப்பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* முருங்கை பூ சிறுநீர்ப் போக்கிகளை தூண்டு பவை, பித்த நீர் சுரப்பினை அதிகரிக்கும். முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். நரம்புகள் பலப்படும். உடல் வலுப்பெறும் உடல் சூடு தணியும்.

இதை இயற்கையின் வயாகரா என்று கூறலாம். முருங்கை கீரை, முருங்கை பூ இரண்டையும் சம அளவில் சேர்த்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்கடலையை வறுத்துப் பொடி செய்து தூவி உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை தன்மை அதிரிக்கும். கீரையும், பூவையும் சமஅளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்