youtube

29 October 2015

சரப்பயிற்சியின் போது கடைப்பிடிக்க வேண்டியது
ஈரமற்ற தரையில் விரிப்பின் மீது அமர்ந்து காற்றோட்டமுள்ள இடத்தில் செய்ய வேண்டும். பனியும், குளிரும் இல்லாத காலங்களில் நதிக்கரை, ஏரிக்கரை, தோட்டம், வெளி மலைப்பகுதி ஆகிய இடங்களில் செய்யலாம். உணவுக் கட்டுப்பாடு அவசியம், சாத்வீக உணவு நல்லது. அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், மீதி கால் வயிறு வெறுமையாய் இருக்க வேண்டும்.
சரப்பயிற்சி செய்ய ஏற்ற காலங்கள்
1.சூரிய உதயம் 3நாழிகை (3 x 24 = 72 நிமிடங்கள்)
2.மதியம்
3.சூரியன் மறைவதற்கு முன்னும் பின்னுமாக 4 நாழிகை.
4.(அர்த்த இராத்திரி) நடு இரவு சாமத்தில்.
சரப்பயிற்சியின் போது மூச்சை வெளிவிடல் உள் வாங்கல், மெதுவாகவும் நிதானமாகவும் செய்ய வேண்டும்.பூரித்த நாடி வழியே இரேசிக்காமல் பயிற்சி செய்வது சரியானபடி நன்மை அளிக்கும். இரேசித்த நாடி வழியே பூரிக்கலாம். இது பயிற்சி முறையைப் பொறுத்து அமையும். சரப்பயிற்சியின்போது பத்மாசனம் (அ) துறவிகளாக இருப்பின் சித்தாசனம் நிலையில் இருந்து கொள்ளலாம் (அ) சாதாரணமாக சுக ஆசனத்தில் (சப்பணமிட்டு அமர்தல்) இருந்து கொண்டு செய்யலாம்.
பயிற்சி முறை
முதலில் வலதுகையின் ஆட்காட்டு நடுவிரல்களை மடக்கிக் கொள்ள வேண்டும். வலது கட்டை விரலால் வலது நாசித் தொளையை மூடிக் கொண்டு இடது தொளையால் மெதுவாக காற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உள்ளிழுக்க வேண்டும்.அடுத்து வலது கட்டை விரலை எடுத்துவிட்டு மோதிர விரல் மற்றும் சிறுவிரல்களால் இடது நாசித் துவாரத்தை அடைத்துக் கொண்டு மிகவும் மெதுவாகவும், நிதானமாகவும் வலது நாசித் துவாரத்தின் வழியாகத் காற்றை இரேசிக்க வேண்டும். அடுத்து வலது மூக்குத் துளை வழியாகவே காற்றை பூரகம் செய்து பின் இடது மூக்குத் துளை வழியாக இரேசிக்க வேண்டும்.இதுவே பயிற்சியின் ஒரு கட்டமாகும். இதைத் தொடர்ந்து 50 முதல் 60 தடவை வரை செய்யலாம்.
பிரத்தியாகாரம்
இது 5 புலன்களை வசப்படுத்தும் விஞ்ஞானக் கலையாகும். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய பொறிகளின் வழியாக அனுபவிக்கும் நுகர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சி முறை பிரத்தியாகாரம் ஆகும். புலனுகர்வு அளவுக்கு மிஞ்சும் போது உயிராற்றல் அழிகிறது. எனவே அளவுடன் புலனுகாலை அமைத்து உடலை நோய்வாய்படாமல் அழியாமல் காத்து வருவதற்கும் மனதை நம் கட்டுபாட்டிற்கு கொண்டு வரவும் இப்பயிற்சி உதவுகிறது.
தாரணை
இது மனதை ஒருமுகப்படுத்தும் (Concentration) கலை (அ) பயிற்சி முறையாகும். பிரத்தியாகாரப் பயிற்சி உடையவர்களுக்கு இது எளிதில் வாய்க்கும். ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி மனதை ஒருநிலைப்படுத்துதல் தாரணை எனப்படும். வாயு தாரணை என்பது பிராணாயமத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி குண்டலினியை எழுப்பும் பயிற்சி முறை ஆகும் என்பர்.
தியானம்
மனதை வசப்படுத்தும் பரிபூரண விஞ்ஞானக்கலை, மனவிசை புலன்களின் வழியே பொறிகள் வாயிலாக கண்டபடி அலைக்கழிக்கப்படுவதை தடுத்து அதனை பிரசுத்தியாகாரம் தாரணை வழியாக ஒருமுகப்படுத்தி நம் வசப்படுத்தி ஏதேனும் ஒரு பொருள் பற்றிய இடைவிடாச் சிந்தனை (Cessation of all thoughts except one) சித்தர்கள் கடவுளையே சிந்தித்து இறைமையை உணர்வதற்கு தியானமே, கருவியாக ஆயிற்று, ஆழ்நிலை தியானம் (Transcendental Meditation) என்பது மேலும் ஒரு படி மேலே போய் சிந்தனையற்ற எண்ண அலைகள் நீங்கிய அமைதியான மன நிலையை அடைவதாகும்.
தியானத்தின் மூலம் மனக்கிலேதம் (Stress) நீங்குகிறது. மனமும், உடலும் புத்துணர்ச்சி பெறுகின்றன. மனம் அதிகம் பாதிப்பதால் உண்டாகும் அதி குருதி அழுத்த நோய், மதுமேக நோய் இவை வராது தடுக்கவும், வந்து விட்டால் அந்நோய்களைக் கட்டுப்படுத்தவும் தியானம் பயன்படுகிறது. தியானப் பயிற்சியின் மூலமாக குண்டலினியை எழுப்புதல் எளிய முறையாகும். தியானத்தை எப்போது வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். தியானத்தை சுக ஆசனத்தில் இருந்து கொண்டு அல்லது பத்மாசனத்தில் இருந்துக் கொண்டு செய்யலாம் (அ) படுத்துக் கொண்டேயும் செய்யலாம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
சமாதி
அஷ்டாங்க யோகத்தின் இறுதி நிலை, சித்தர்கள் இறைநிலையை உணர்ந்து இறை தன்மை அடையும் நிலை ஆகும். பொதுவாக கூறும்போது குறிப்பிட்ட இலக்கை நோக்கி மனதை செலுத்தி இறுதியில் இந்த இலக்கை அடைதல் சமாதி எனலாம்.

26 October 2015

அவை:நீர் மூலம், செண்டு மூலம், முளைமூலம், சிற்று மூலம், வரண் மூலம், ரத்த மூலம், வினைமூலம், மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்திமூலம், சூத மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாத மூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம் மற்றும் கவ்வு மூலம்.இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை என்பதால் இவற்றை நவமூலம் என்றும் சொன்னார்கள்.நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை குணப்படுத்தும் பல அரிய மூலிகைகளை ஓலைச் சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள்.அதனடிப்படையில் மூலநோய்க்கு பிரத்யேகமான மூலிகை மருந்துகள் தயாரிக்கப்பட்டு அளிக்கும்போது பக்க விளைவுகள் இல்லாமல் மூலநோய் குணமாகும்.ஒரு மண்டலம் சாப்பிடும் மருந்துகளும் உள்ளன, ஒரே வாரத்தில் குணமாகும் மருந்துகளும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன.இதனால் உள் மூலம் குணமாகும், வெளிமூலம் சுருங்குகிறது. ஆசனவாயில் இருக்கும் சீழ்க்கட்டிகள் உடைந்து ஆற்றப்படுகின்றன. மல ஜலம் சுலபமான முறையில் வெளியேறுகிறது. மீண்டும் வருவதில்லை.உதாரணத்திற்கு ஒரு மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.துத்திக் கீரை என்ற ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக் கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் தலைக் காட்டாது. எத்தகைய மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலைமீது விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டிவிட, கட்டி உடைந்துவிடும். மூல முனைகள் உள்ளுக்குச் சென்றுவிடும். வேண்டுமானால் நீங்கள் கூட செய்து பார்க்கலாம்.
🙏🙏👌👌🙏🙏👌👌🙏🙏

இந்துக்கள் அனைவரும் தம் இல்லத்திலோ அல்லது கோவில்களிலோ பூஜை செய்வதற்க்கு முண்னதாக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில, . . .
~~~~~~~~~~~~~~~~~~

1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாஸங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாஸங்கள்(3).
~~~~~~~~~~~~~~~~~~

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம் முதலில் . . .

1.தமிழ் வருடங்கள்:-

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
~~~~~~~~~~~~~~~~~~

2.அயணங்கள்:-

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
~~~~~~~~~~~~~~~~~~

3.ருதுக்கள்:-

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)
3.வர்ஷருது(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது(மார்கழி,தை)
6.சிசிரருது(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~

4.மாஸங்கள்:-

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
~~~~~~~~~~~~~~~~~~

5.பக்ஷங்கள்:-

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~

6.) திதிக்கள்:-

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
~~~~~~~~~~~~~~~~~~

7.வாஸரங்கள்:-

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
~~~~~~~~~~~~~~~~~~

8.நட்சத்திரங்கள்:-

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
~~~~~~~~~~~~~~~~~~

9.கிரகங்கள்:-

கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
~~~~~~~~~~~~~~~~~~

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:-

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொருT நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .

நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
~~~~~~~~~~~~~~~~~~

11.நவரத்தினங்கள்:-

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
~~~~~~~~~~~~~~~~~~

12.பூதங்கள்:-
பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
 நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
~~~~~~~~~~~~~~y~~~~
y
13.மஹா பாதகங்கள்:-
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
~~~~~~~~~~~~~~~~~~

14.பேறுகள்
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.
~~~~~~~~~~~~~~~~~~

15.புராணங்கள்:-
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.c
~~~~~~~~~~~~~~~~~~

16.இதிகாஸங்கள்:-
இதிகாஸங்கள் மூண்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.

அனைவருக்கும் பகிர்வோம்.

24 October 2015

மனைக்கு ஆகா விருட்சங்கள் : -

சித்தர் பாடல் : -

தமிழகத்தில் தோன்றிய அருட்பெருஞ் சித்தர்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த பிரபஞ்ச இரகசிய விதிகளின் உண்மைகளை, உலக மக்களெல்லாம் அறிந்து கொண்டு பயன்பெறவும், அறம், பொருள், இன்பம், என்ற மூன்று வகைப் பேரினையும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும், என்ற  பேரருள் எண்ணங்களுடன் வாழ்வியல் தத்துவங்களையும், கோட்பாடுகளையும்  வகுத்து சுவடிகளில் பதிப்பித்துள்ளனர்.

இன்றைய வாழ்வியல் சூழ்நிலைக்கு உகந்த,மிகவும் தேவையான இரண்டு வித தலைப்புகளில் விளக்கம் காணலாம்.

1 - மனைக்கு ஆகா விருட்சங்கள்

2 - இரவில் ஆகா போசனங்கள்

"பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு
வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு
கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும்
பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும்
வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர
வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும்
நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே
குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்
குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி
குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி
ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு
இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு
குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே
பரதேசியாயிருப்பார் பாரே"

அகத்தியர் புனசுருட்டு - 500

இன்றைய நாகரீக உலகில் வீடுகள் கட்டி வசதியாக வாழவேண்டும் என விரும்புபவர்கள் தங்கள் இல்லங்களில் இஷ்டம் போல் மரங்களையும், குரோட்டன்ஸ் எனப்படும் தொட்டிகளில்
பதியம் செய்த செடி வகை களையும் வளர்த்து வருகின்றனர்.

மேற்கண்ட அகத்தியர் பெருமான் வடித்த பாடல்களில் உள்ள மரம்,செடி வகைகள்
வளர்த்து வரும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு நாளடைவில் உடல்நிலையில் அடிக்கடி
நோய்வாய்ப்படுதல்,செய்தொழில் நஷ்டம் , வருவாய் இழப்பு , கடன் தொல்லை , மனக்குழப்பம் போன்றவற்றிக்கு ஆட்பட்டு தனது வீட்டையே இழக்கும் சூழல் உருவாகும்.

இதுபோன்ற சூழ்நிலை களில் பாதிப்படைவோர் தனதுகிரகம் சரியில்லை, வீட்டின் வாஸ்து சரியில்லை என குழம்பிக் கொண்டிருப்பார்கள்.

எனவே இதில் கண்ட செடி,மரங்களை உடனே
அகற்றி நலம் பெறுங்கள்.

மேற்கண்ட செடி , மரங்களின் வகைகள் :

"1.பருத்தி,
2.அகத்தி,
3.பனை,
4.நாவல்,
5.அத்தி,
6.எருக்கு,
7.வெள்ளெருக்கு
8.புளியமரம்,
9.கருவேலன்,
10.முருங்கை,
11,கல்யாண முருங்கை,
12.கள்ளி
13.கருவூமத்தை,
14.இலவம்,
15.வில்வம்,
16.உருத்திராட்சம்,
17.உதிரவேங்கை"

இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது.

அடுத்து பதிவில் இரவில் ஆகாத உணவுகள் பற்றிய பாடல்  பார்ப்போம். . .

7 October 2015

சிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியவை

சிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியவை.
முடிந்தவரை இந்த பதிவை பகிரவும்
ஒரு தமிழனாக அப்துல் கலாமை நாம்
மதித்தே ஆகவேண்டும்.
இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள்
என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து பல
நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த
ஆராய்சியின் நோக்கம்
பூமி எப்படி உருவானது என்பது தான். அதன்
அடிப்படையில் விஞ்ஞானிகள்
ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள்
அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த
ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என
எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த
ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத்
தோண்டும் போது அதனால்
பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர்.
உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள்
அங்கே ஒர் சிவபெருமான்
சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்க
ள் என்று கூறினார், ஏன் என்று மற்ற
விஞ்ஞானிகள் காரணம் கேட்க...?!
அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான்
நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம்
இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில்
ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும்
நானே அண்டமும் நானே என்று சிவபெருமான்
கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938
ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர்.
அதற்குப் பல
கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த
கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்ட
தையும் அவர் விளக்கினார், மேலும் இந்த
உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான்
அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த
ஆபத்தும் வராது என்பதையும் கூறினார்.
அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல்
ஒரு சிலையை வைத்து அந்த
ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல்
பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்.

சுப நிகழ்ச்சியின் போது பிள்ளையார் பிடித்துபலன்கள் உள்ளது

ஒவ்வொரு வைப்பசுப நிகழ்ச்சியின் போது பிள்ளையார் பிடித்து தை காண்கிறோம் ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது அவை....
1:மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
2:குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.
3:புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்,விவசாயம் செழிக்கும்
4:வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.
5:உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
6:வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி,சூன்னியம் விலகும்.
7:விபூதியார் வினாயர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்
8:சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9:சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்
10:வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்
11:வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்
12:சர்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்கரை நோய்யின் வீரியம் குறையும்.
இறைவழிபாடே இல்லறத்தை நல்லறமாக்கும் அருமருந்து

23 September 2015

ஒரு முறை காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில், மேடையில் அமர்ந்து பக்தர்களிடையே அருளுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் மகா ஸ்வாமிகள். அப்போது ஆடு ஒன்று, வாசலைக் கடந்து மடத்தின் உள்ளேயே வந்து விட்டது. பெரியவா அமர்ந்திருந்த மேடைக்கு அருகே வந்து நின்று, ஸ்வாமிகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தது. கூட்டத்தில் சிலர் எழுந்து, விறுவிறுவென சென்று ‘ச்சூ… ச்சூ!’ என்று அந்த ஆட்டை அங்கிருந்து விரட்ட முற்பட்டனர்.இதைக் கவனித்த ஸ்வாமிகள் உரையை சற்று நிறுத்தி விட்டு, ஆட்டை விரட்ட முயன்ற பக்தர்களைத் தடுத்தார். ”அதை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். அதுக்குப் பசிக்குது. ஏதாவது தேவையா இருக்கும்.” என்றவர், தனக்கு முன்னால் பித்தளைத் தட்டில் இருந்த வாழைப்பழங்கள் சிலவற்றை எடுத்து, ஆட்டின் முன் நீட்டினார். அந்த ஆடு உற்சாகத்துடன் ஸ்வாமிகளுக்கு அருகே வந்து, ஒவ்வொரு பழமாக வாங்கிச் சாப்பிட்டது. சில விநாடிகளுக்குப் பிறகு, அங்கிருந்து வெளியேறியது.
பிறகு ஸ்வாமிகள், ”இப்ப ஆடு ரூபத்துல வந்துட்டுப் போனது தபோவனம் ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகள். தபோவனத்துல உட்கார்ந்துண்டிருக்கிற அவருக்கு என்னவோ ஒரு பசி… என்கிட்டேர்ந்து ஏதாவது வாங்கிச் சாப்பிடணும்னு தோணி இருக்கு. அதான் நேரா இங்கே வந்துட்டார். நான் வாழைப்பழங்களைக் கொடுத்ததும், அதைச் சாப்பிட்டுட்டு சாந்தமா புறப்பட்டுப் போயிட்டா” என்று சொல்ல… பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்!
தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத அந்த காலகட்டத்தில்… பல மைல் தொலைவுக்கு அப்பால் இருந்தாலும்… நேருக்கு நேர் சந்திக்காமலேயே தங்களது கருத்துகளையும் உணர்வுகளையும் மகான்கள் பரிமாறிக் கொள்வர் என்பதற்கு உதாரணம்.இந்தச் சம்பவம் தபோவனம் மகானின் பசியை காஞ்சி ஸ்வாமிகள் தீர்த்தார்.