youtube

8 August 2012

) குரு கோச்சார ரீதியாக ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 5, 7 மற்றும் 9ல்(வியாழ நோக்கம் என்று சொல்வார்கள்) வரும் காலத்திலும் 2) அதே போல் லக்கினத்திற்க்கு 7ம் இடத்தை(அதாவது லக்கினத்திற்க்கு 11, லக்கினம், மற்றும் லக்கினத்திற்க்கு 3ம் இடத்தில் குரு வரும் காலம்) கோச்சார ரீதியாக குரு பார்வையிடும் காலத்திலும். 3) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு குரு கோச்சார ரீதியாக‌ வரும் காலத்திலும் (இந்த அமைப்பு திருமணம் நடப்பதற்க்கு கொஞ்சம் வலுவான அமைப்பு) 4) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டை குரு கோச்சார ரீதியாக பார்க்கும் காலத்திலும் 5) லக்கினாதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும் 6) 7ம் அதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும் 7) ராகு/கேது கோச்சார ரீதியாக ஜாதகத்தில் லக்கினம், ராசி, நவாம்ச லக்கினம், சுக்கிரன் இருக்கும் ராசி ஆகிய இடங்களுக்கு வரும் காலத்திலும் 8) சனி தசை அல்லது புத்தி காலத்திலும் 9) ஏழரைச் சனி காலத்திலும் 10) சுக்கிரனின் தசை அல்லது புத்தி காலத்திலும் 11) ராகு/கேதுவின் தசை அல்லது புத்தி காலத்திலும் இவ்வனைத்திலும் ஒரு சில அமைப்புகளாவது ஒன்றாக கூடி வரும் போது கண்டிப்பாக ஜாதகருக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் நடைபெரும்

6 August 2012

Arulakam (அருளகம்) With Arulchelvan Skip to contentHomeஇராவத்தை(படங்கள்)Dr.Indra.S.Siva-YohamKids Page360 viewALAVAYAMPATHY (NEW)Arulakam Announcementஇராவத்தை(கும்பாபிசேகம்)ஈழத்து பண்டிதர்கள் / புலவர்கள்ஏனையவைகிராம இணையத்தளங்கள்குழந்தைகளூக்கான தமிழ் பெயர்கள்சங்ககாலப் புலவர்கள்சைவ / சமுகத் தொண்டர்கள்சைவ / தமிழ்ப் பெரியார்கள்சைவ அறுசுவை உணவுகள்சைவ சித்தாந்த நூல்கள்சைவ/தமிழ் பாடசாலைகள்சைவம் / Saivamஜாதகம்/கிரக மாற்றப் பலன்கள்தமிழர் கலாச்சாரம் / கலைகள்தமிழ் பேச்சு எங்களின் மூச்சுதிருமண சேவைநல்லை ஆதினம்நாலாயிர திவ்ய பிரபந்தம்நோயற்ற வாழ்வே…..புதிய யுகத்தை நோக்கிய பாதையில் பழைய யுக்திகள்புராணங்கள் / தேவாரப் பதிகங்கள் / நாயன்மார்கள்/ஆழ்வார்கள்பூசைகள்பொங்கி எழும் உணர்வலைகள்பொழுது போக்குமன்னர்கள்மரண அறிவித்தல் (New)முனிவர்கள் / சித்தர்கள்Choosing a Hindu NameDevotional speechesFrom Mesopotamia to EelamHindu Gods / GoddessHindu TemplesHistory of Languages / WritingINTERNATIONAL -EDUCATIONJesus in IndiaMahabharathamMovie ClipsNadaswaram – MelamparamarakasiyamTamilThirukkuralTIME &TEMP..Wishes for….YOGAYOUR COMPASSIONATE HELP IN KIND HOWEVER SMALL IT MAY BE WILL GO A LONG WAY TO ASSIST THESE PARENTLESS AND DISABLED EALAM TAMIL CHILDREN TO REGAIN THEIR LIVES ← Older posts ஆடிச் செவ்வாய் விரதமும் அதன் மகிமையும் – அம்பிகையின் வடிவங்களின் விளக்கம் இணைப்பு Posted on August 5, 2012 | Leave a comment “ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி” தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. please visit here. → Leave a comment Posted in Uncategorized ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும் – 18.07.2012 Posted on July 18, 2012 | Leave a comment ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 18.07.2012 புதன்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. அன்றைய தினம் திருவாதிரை நட்சத்திரமும் கூடி இருப்பதால் மிகவும் சிறப்பு பொருந்தியதாக ஆகமங்கள் கூறுகின்றது. நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம்குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர். இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே! அமாவாசை தினம் பிதிர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம். நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்)குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று. அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையளையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும். → Leave a comment Posted in Uncategorized பித்ரு தோஷமும் ஆடி அமாவாசையும் Posted on June 29, 2012 | Leave a comment மேலதிக விபரத்திற்கு இங்கே அழுத்தவும். → Leave a comment Posted in Uncategorized சித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும் – 05.05.2012 Posted on April 26, 2012 | Leave a comment சித்திரா பௌர்ணமி என்பது; சித்திரை மாதம் பௌர்ணமி திதியில்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது.மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது. மேலதிக விபரத்திற்கு…… இங்கே அழுத்தவும். → Leave a comment Posted in Uncategorized அட்சய திருதியையும் அதன் சிறப்பும் Posted on April 23, 2012 | 1 Comment “அட்சயம்” என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் (அட்சயம்- தேயாது எதிர் கருத்துள்ள சொல், சயம் -தேய்தல்)). ஒவ்வொரு பௌர்ணமி அல்லது அமாவாசை திதுக்கு பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை. சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு……. இங்கே அழுத்தவும். → 1 Comment Posted in Uncategorized சித்திரைப் புத்தாண்டு – நந்தன வருடப் பிறப்பு – 13.04.2012 Posted on April 7, 2012 | Leave a comment நந்தன வருஷம் 13.04.2012 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 5:47 மணிக்கு உத்தராடம் – 1பாதத்தில் கன்னி இலக்கினத்தில் பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும், அன்றைய தினம் முன்னிரவு 7:20 மணிக்கு உத்தராடம் – 2 பாததில் துலாம் இராசியில் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன. வாக்கிய பஞ்சாங்கம் விஷூபுண்ணிய காலம் பகல் 1:45 முதல் இரவு 9:45 வரை அமைவதாக கணிக்கின்றது. மேலதிக விபரங்களுக்கு இங்கே அமர்த்துக. → Leave a comment Posted in Uncategorized சமய தீட்சையும் அதன் பயனும் Posted on March 30, 2012 | Leave a comment “தீக்ஷா” என்னும் சொல் ‘ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்னும் பொருளுடையது என ஆகம நூல்கள் விளக்கம் தருகின்றன. இச் சொல்லில் தீ-கொடு என்னும் வினையடி கொடுத்தலைக் குறிக்கின்றது. க்ஷி-அழி என்னும் மற்ற வினையடி அழித்தலைக் குறிக்கின்றது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை அழிப்பதனால் இது தீக்ஷா (தீட்சை) எனப்பட்டது. மேலதிக விரங்களுக்கு இங்கே அமர்த்தவும். → Leave a comment Posted in Uncategorized ← Older posts ← Older posts சிவசின்னங்கள் – உருத்திராட்சமும் அதன் மகிமையும் Posted on March 30, 2012 | Leave a comment உருத்திராக்கம் அணிவதால் கிடைக்கும் பலன்கள் உருத்திராக்கம் வெறும் நாகரீகத்திற்காக அணிகிற அணிகலன் அல்ல. எங்கெல்லாம் உருத்திராக்கம் வணங்கப் படுகின்றதோ அங்கெல்லாம் திருமகள் உறைகிறாள். உருத்திராக்கத்தை அணிவதால் ஒருவர் அகால மரணத்திலிருந்து தப்பலாம். உருத்திராக்கம் குண்டலினியை (ஆதம இன்ப முனை) எழுப்புவதில் துணை புரிகின்றது. இவ்வுலகப்பேறு, விண்ணுலகப்பேறு ஆகியவற்றை அடைவதில் உருத்திராக்கம் உதவுகின்றது. இது முழுக் குடும்பத்தையும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழச் செய்யும். மேலதிக விபரத்திற்கு இங்கு அமர்த்தவும். → Leave a comment Posted in Uncategorized நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாகமாணிக்கக் கல் கக்கிய அதிசயம் Posted on March 13, 2012 | Leave a comment மட்டக்களப்பில் இருந்து வருகை தந்து, நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாம்பு நடனம் போட்ட இளைஞர் ஒருவர் , தனது வாயில் இருந்து நாக மாணிக்கக் கல்லை கக்கி ஆலய நிர்வாகத் தலை வரிடம் கொடுத்தார் .இவ் அதிசய நிகழ்வு இன்று 10 .03 .2012 காலை நிகழ்த்தப்பட்டது. அம்பாள் ஆலயத்திற்கு மட்டக்களப்பில் இருந்து அம்பாளைத்தரிசிக்க வந்த அடியவர் ஒருவருக்கு ஏற்ப்பட்ட அருள் கலையில் நாகம் போன்று அசைந்தாடி நாகரத்தின கல்லினை தனது வாயினால் இரத்தத்துடன் கக்கி எடுத்து அதனை ஆலய நிர்வாக தலைவரிடம் வழங்கி இவ் நாகரத்தின கல்லினை 9 ஆண்டுகளுக்கு பின்னர் எடுக்கும் படி கூறியுள்ளார். Please visit here. → Leave a comment Posted in Uncategorized பிரதோஷம் விரதமும் வலம் வரும் முறையும் Posted on March 8, 2012 | Leave a comment சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். நோய்கள் நீங்கும். எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு மாதமும், மாதமிருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும். பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும். For more ………. Please visit here. → Leave a comment Posted in Uncategorized மஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் Posted on February 19, 2012 | 1 Comment சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்: “மகா சிவராத்திரி” எனும் புனிதமான விரதம் இந்த வருடம் 19.02.2012 ம் திகதி கனடாவிலும், 20.02.2012 அன்று இலங்கையிலும் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது. சிவராத்திரி விரதம் பொதுவாக எல்லா சிவன் ஆலயங்களிலும் குறிப்பாக இலங்கையில் திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முனீஸ்வரம், பொன்னம்பலவாணேஸ்வரர், சாத்தாவோலை சம்புநாதீஸ்வரர் ஆலயங்களிலும் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் பெரு விழாவாக நடைபெற்று வருகின்றன. This is lord shiva the greaty god of destroyeerr and killed all the evil powers மேலதிக விரங்களுக்கு…………… இங்கே அழுத்தவும். → 1 Comment Posted in Uncategorized தைப்பூசம் Posted on January 22, 2012 | Leave a comment தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் இந்துக்களால் பண்டுதொட்டு புண்ணியநன்னாளாகக் கணிக்கப்பட்டு இறைவழிபாட்டுக்குரிய முக்கிய தினமாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. இந்துக்களால் கணிக்கப்படும் இருபத்தியேழு நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் எட்டாவதாக அமைகின்றது. தைமாதத்தில் வரும் பூச நட்சத்திரம் பௌர்ணமியுடன் கூடிய நாளாக அமைவதும் சிறப்புடையது. இந்நாளை தைப்பூசநன்னாளென்று கொண்டு இறைவழிபாட்டிற்கு உத்தமமான நாளாகக் கொள்கின்றோம். For more …… Please visit here. → Leave a comment Posted in Uncategorized தை அமாவாசையும் அதன் சிறப்பும் Posted on January 21, 2012 | 1 Comment தை மாதத்தில் (தமிழ் மாதம்) மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம் 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை அமைவதாகவும் சோதிடம் கணித்துள்ளது.. வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். For more ……… Please visit here. → 1 Comment Posted in Uncategorized Thai Pongal Posted on January 13, 2012 | Leave a comment Meaning of Thai Pongal This is a harvest festival – the Tamil equivalent of Thanksgiving. It is held to honor the Sun, for a bountiful harvest. Families gather to rejoice and share their joy and their harvests with others. The Sun is offered a “Pongal” of rice and milk. For more ….. Please visit here. → Leave a comment Posted in Uncategorized ← Older posts ← Older posts மார்கழி நோன்பு – திருவெம்பாவை விரதம் Posted on December 27, 2011 | Leave a comment திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் ”நோன்பை” ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று நிறைவு செய்வார்கள். இவ்விரதம் இவ் வருடம் 30.12.2011 அன்று ஆரம்பமாகின்றது என சோதிடம் கணித்துள்ளது. ஆனால் வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குவார்கள். For more ……. Please visit here. → Leave a comment Posted in Uncategorized பிள்ளையார் பெருங்கதை – பாடல் Posted on December 12, 2011 | Leave a comment கணபதி துணை. பிள்ளையார் கதை சிறப்புப் பாயிரம் செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங் கந்த புராணக் கதையில் உள் ளதுவும் இலிங்க புராணத்து இருந்தநற் கதையும் உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும் தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான் கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந் துன்னிய வளவயற் சுன்னா கத்தோன் அரங்க நாதன் அளித்தருள் புதல்வன் திரம்பெறு முருகனைத் தினந்தொறும் வரம்பெற வணங்கும் வரதபண்டிதனே. For more please visit here. → Leave a comment Posted in Uncategorized திருக்கார்த்திகை தீபம் – விளக்கீடு – 09.12.2011 Posted on November 25, 2011 | Leave a comment கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும். இத் திருநாள் இந்த வருடம் 08.12.2011 வியாழக்கிழமை அன்று அமைவதாக கணிக்கப்பெற்றுள்ளது. கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருவதால் இம்மாதம் கார்த்திகை எனப்பெயர் பெற்றது. கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப்பெற்றுகின்றது. அன்றைய தினம் திருவண்ணாமலை அழற் சோதி மலையாய், அருணாசலமாய், சோணகிரியாய் இலங்கும். [அருணம், சோணம் - சிகப்பு நிறம்] For more………….Please visit here. → Leave a comment Posted in Uncategorized Posted on November 9, 2011 | Leave a comment சபரிமலை யாத்திரையும் மகர மண்டல விரதமும் – யாத்திரைப் படங்கள் இணைப்பு ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா “நோன்பிருந்து, புலன் அடக்கி உள் அன்போடு ஐயனை அழைத்தால் அஞ்சேல் என அருள் தருவான் அருகில் வந்து “ இப் பூவுலகில் உள்ள எல்லா நாடுகளிலும் ஐயப்பனு்க்கு பல ஆலயங்கள் இருந்த போதிலும்; இந்தியாவின் மேற்குத் தொடர் மலையில் ஐயப்பனின் முக்கியமான கோயிகள் அமைந்துள்ளன. ஏழு சிரஞ்ஜீவிகளில் (பலி, வியாஸர், ஹநுமான், விபீணஷனர், கிருபர், பரசுராமர், அச்வத்தாமா) ஒருவரான பரசுராமர், ஐயப்பனுக்காக நான்கு முக்கிய கோயில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. குழத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன் கோவில் மற்றும் சபரிமலை. இந்த நான்குமே கேரள மாநிலத்தில் அதுவும், ஒரே மலைத்தொடரில் அமைந்துள்ளது சிறப்பான ஒரு விஷயமாகும்.