youtube

26 May 2015

அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்


அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்

சேலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமலை. கஞ்சமலையின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள்
பழமையானது.

சிறப்பு:

சித்தர்  கோவிலில் கிரிவலம் நடப்பது இங்குதான். திருவண்ணமலைக்கு அடுத்தபடியாக இங்குதான் கிரிவலம். இங்கு பௌர்ணமி மாலை 7.30 அடிவார கோவிலில் தொடங்கி 19km சுற்றி அடுத்தநாள் காலை 5 மணிக்கு கிரிவலம் முடிவடைகிறது.

பொது தகவல்:

கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது.

இத்திருக்கோயிலில் சித்ராபவுர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வர்.

மலை முழுவதும் இரும்புத்தாது (Magnetite, Grunerite & Quartz) மட்டுமே உள்ளது. அதனாலேயே இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள்ளது.
ஆனால் இந்த மலையில் அரசாங்கத்தால் கனிமவள  திட்டப்பணி 1சதவிகிதம் கூட நடத்த முடியவில்லை.

அடிவார கோவில்:

இக் கோவில் சுமார் 1000-2000 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும் .
இக் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேச வழிபாடுகள் நடை பெறுகின்றன.

அடிவார  கோயிலுக்குள் பத்து தீர்த்தங்கள் உள்ளது. முக்கியமானவை நந்தி தீர்த்தம் மற்றும் காந்த தீர்த்தம் ,
காந்த தீர்த்தத்தை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் உப்பு, மிளகு வாங்கிப்  போடுகிறார்கள் இதில்.

சமீபத்தில் உருவாக்கப்பட்ட "ஞானசற்குரு பால முருகன்" கோயில் உள்ளது.  
எங்கும் இல்லாத நாரதர் உருவ சிலை, சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் உருவ சிலைகள் உள்ளது.

இது "அமாவாசை கோயில்” ஆகும்.

சித்தர்:

காலங்கி சித்தர்  கூடுவிட்டு கூடு பாய்வது மற்றும் அஷ்டமாசித்திகளை அறிந்தவர். காற்றையே உடலாகக்  கொண்டவர். இவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலை செய்த போகரின் குரு.
திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர்.

இவர் இங்குள்ள மூலிகை உண்டு முதுமையில் இருந்து இளமை தோற்றத்திற்கு திரும்பியது
இந்த மலையில் தான். அதனாலேயே இந்த மலைக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு "இளம்பிள்ளை"
என்று பெயர் பெற்றது. திருமூலரின் உத்தறவின்படி இங்கேயே இருந்து அருள்பாவிக்கிறார்.

இங்கு உள்ள மூலிகைகளை வைத்து சித்தர்களால் இரும்பை தங்கம் ஆக்க முடியும்.
இப்படிபட்ட மூலிகை யார் கண்ணுக்கும் தென்படாது. மாத்திரம் சொல்லியே அணுகவேண்டும்.

இங்குள்ள ஒரு பாஷாணத்தை போகர் பழனி மலை முருகன் சிலை செய்ய பயன் படுத்தி உள்ளார்.
ஒன்பது பாஷாணகளில் இதுவும் ஒன்று.

பார்க்க வேண்டிய இடங்கள் :

அடிவாரக் கோயில்:

1.கணபதி, ஞானசற்குருபாலமுருகன் கோவில்
2.முனீஸ்வரர் ஆலயம்
3.சித்தேஸ்வரர் கோவில்
4.பத்து தீர்த்தங்கள்  (பெரிய நந்தி கிணறு, ராகு கேது தீர்த்தம், காந்த தீர்த்தம் …)
5.காளி அம்மன் கோவில்
6.நவகிரகம் , நாகதேவதை கோவில், மடம்

மலைக்கோயில்:

7.சித்தி விநாயகர்
8.வேட்டைக்கார சாமி
9.அன்னதான குடில் (சிவ லிங்கம்)
10.காவல் ஆஞ்சநேயர்
11.பிள்ளையார் பாறை
12.காலங்கி பாதம்
13.நாகர் புற்று
14.மேல் சித்தர் கோவில் (18 சித்தர்கள்)
15.மேல்>கிழ்>பாலமலைசித்தர் நேர் கோட்டில்
16. கிணறு, இரட்டைலிங்கம் (சிவசக்தி)
17.ஐயப்பன் கோவில்
18.கன்னிமார் கோவில்
19.பெருமாள் கோவில்
20.புலித்தோல் பாறை
21.தியான மலை (சித்தர்கள் கூடும் பாறை)
22.ஆதி சிவன் பாறை (ஆத்மா லிங்கம்)
23.கரிய பெருமாள் கோவில்
24.77அடி ஆஞ்சநேயர்  
25.நாகதேவி சிலை       அரியானுர் வழி
26.சுயம்பு லிங்கம்
27.சுழுமுனை ஊத்து, சுழுமுனை குகை
28.அகஸ்தியர் குகை, காலங்கி குகை
29.மணல் ஊற்று / காளி கானல் / மூங்கில்வனம்
30.ரோம விருச்சம், சந்தன மரம்
31.மதிமயக்கி வனம்
32.சிற்றாறு, பொன்னி நதி

*  பௌர்ணமி கிரிவளம் - 7.00pm to 4.30am

1.விநாயகர் கோவில்
2.தச அவதார பெருமாள் கோவில்
3.ஆஞ்சநேயர் கோவில்
4.சடையாண்டி  ஊத்து, சமாதி, கோவில்,
5.இரட்டைலிங்கம் கோவில்
6.ராமர் கோவில்
7.இளம்பிள்ளை சித்தர் கோவில்
[ வெண்மணல், கிணறு, தேக்கு மரதோப்பு ]

அருள்மிகுவெள்ளிங்கிரிஆண்டவர்திருக்கோயில்


வெள்ளியங்கிரி


                                                    அருள்மிகுவெள்ளிங்கிரிஆண்டவர்திருக்கோயில்
சிறப்பு:

ஏழாவது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோயில் அமைந்துள்ளன.
இம்மலையில் மிகவும் கடுங்குளிராக இருக்கும்.

பெருமை:

5,833 அடி உயரம் கொண்ட மலை. சித்தர்கள் கடுந்தவம் செய்த இடங்களில் இம்மலையும் ஒன்று.

முதல் மலை;

முதல் மலை முழுவதும் படிகளாகவே உள்ளது. அடிவாரத்தில் இருந்து வெள்ளை பிள்ளையார் கோவில்
வரை  சுமார் 2000 படிகள் இருக்கும்.

இரண்டாவது மலை:

வெள்ளை பிள்ளையார் கோவிலில் இருந்து இரண்டாவது மலை தொடங்குகிறது. இங்கு படிகள் கிடையாது.
கரடு முரடான பாதைகள் மட்டுமே.

மூன்றாவது மலை:

 இம்மலையில் வழுக்குப்பாறை உள்ளது இதில் ஏறுவதற்கு படிகள் பல செதுக்கி உள்ளனர் மற்றும் வேங்கை மரங்கள் அதிகம் காண படும். இம்மலை முடிவில் பாம்பாட்டி சுனை உள்ளது.

நான்காம் மலை:

இம்மலையை ஒட்டன்சமாதிமலை அல்லது திருநீர்மலை என்பார்கள். இங்கு கோரை புல்கள் அதிகம் உள்ளது.
இம்மலையின் பாதைகள் வெண்மையான மணல்கள் நிறைந்து காண படுவதால் திருநீர்மலை என்பார்கள்.
இங்கு வாடாத சீறமஞ்சள் மற்றும் வசுவாசி என்ற மதுரகளி பாக்கு  விளைகிறது.

ஐந்தாவது மலை:

இம்மலையை பீமன் உருண்டை மலை என்பார்கள். ஒரு பெரிய பாறை களி உருண்டை போல் உள்ளதால் இப்பெயர்
வந்திருகிறது. இங்கு சீதை வனம் உள்ளது. இதில் சீதை சிலை ஒன்று உள்ளது. இம்மலை சமவெளியாகயும்
செண்பகம் மற்றும் குறுஞ்சி செடிகள் உள்ளது. காற்று அதிகம் வீசும் மலை.

ஆறாவது மலை:

இம்மலையை சந்தன மலை என்பார்கள். மலை முழுவதும் சந்தன நிறத்தில் உள்ளது. புல்கள் அதிகம் உள்ள பகுதி.
இங்கும் அதிக அளவில் காற்று வீசும். ஆண்டிசுனை இம்மலை முடிவில் உள்ளது. இது தான் பிரம்மா தீர்த்தம்
என்கிறார்கள். ஏழாம் மலையில் உள்ள வெள்ளியங்கிரி நாதர்க்கு இங்குள்ள தண்ணீரில் தான் அபிஷேகம்
நடைபெறுகிறது. இங்கு அர்ச்சுனன்/கிருஷ்ணன் தவம் செய்த சேத்திழைக்குகை உள்ளது.

ஏழாவது மலை:

இம்மலையில் பாதைகள் சிறிது சிரமமாக இருக்கும். இம்மலை பாதைகளின் இருபுறமும் குறுஞ்சி செடியும் புல்களும் அதிகம் உள்ளது. உச்சியில் தோரண கல் மலையாக உள்ளது. இதில் பிள்ளையார் சந்நிதி முதலில்  இருக்க குகைக்குள் அம்மன் சந்நிதி உள்ளது. வெள்ளியங்கிரி ஆண்டவர் இன்னொரு குகைக்குள் இருந்து சுயம்பு லிங்கமாக அருள் தருகிறார் . இது பஞ்ச பூதங்கள் அனைத்தும் ஒருகிணைந்த சுயம்பு லிங்கம் ஆகும். இதை சுவாமி முடி மலை என்பார்கள்.

பார்க்க வேண்டிய இடங்கள் :

அடிவாரக் கோயில்:

1.4 1/2அடி ஐம்பொன் நடராஜர் சிலை
2.63 நாயன்மார்கள் கற்சிலை
3.பஞ்ச விநாயக மண்டபம்/ 5 விநாயகர்
4.இராசி தூண்

மலைக்கோயில்:

1.வெள்ளை பிள்ளையார் கோவில்
2.பாம்பாட்டி சுனை தீர்த்தம்
3.வழுக்குபாறை
4.விபூதி/திருநீர் மலை / ஒட்டன் சமாதி
5.பீமன் களியுருண்டை மலை
6.கைதட்டிசுனை
7.சீதை வனம்
8.சந்தன மலை
9.ஆண்டி சுனை/பிரம்பி தீர்த்தம்
10.சேத்திழைக் குகை/அர்ச்சுனன் தவம்
11.சுவாமிமுடி மலை
12.பொய்ப்பாலம்
13.ருத்திராட்ச மரம்