youtube

21 January 2016

ஆன்மீக த்தில் சிறிது நாட்டம்

ஆன்மீக த்தில் சிறிது நாட்டம்உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர்.

சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் “புருவ மத்தியில் தியானம் செய்யுங்கள் என்று தான் கூறுகின்றனர் “.

புருவமத்தி எது என்று சாதரணமாக யாரிடம் கேட்டாலும் “புருவமத்தி” என்று நாம் நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தை கூறுவர்.

இன்று பல யோகா மையங்களும் இதையே தான் கூறுகிறது.

புருவமத்தி என்றால் பொட்டு வைக்கும் இடமா என்றால் அது தான் இல்லை?

சிறிது சிந்தித்து பார்த்தல் இது புலப்படும்.

அதற்கு முன் அவ்வை பிராட்டி நமக்கு கூறும் இந்த பாடலை நினைவில் கொள்ளுங்கள் ”

“தேவர் குறளும் திருநான் மறை முடிபும்

மூவர் தமிழும் முனி மொழியும் – கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒரு வாசகம் என்று உணர்”

திருக்குறள் நான்கு வேதங்கள் /தேவாரம் அகத்தியர் முதலான சித்தர் பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும் உரைப்பது ஒரு வாசகம். மெய். உண்மை. சத்தியம். மெய்பொருள்.

ஆக அணைத்து ஞானிகளும் ஒரே இடத்தில் தான் தியானம் செய் என்று கூறியிருப்பார் என்று தெளிவாகிறதல்லவா.

சரி முதலில் புருவ மத்தி எது என்று நாம் சிறிது சிந்திப்போம்?

நாம் பொட்டு வைக்கும் இடம் இரு புருவங்களிடையே உள்ளது. ஞானிகள் இரு புருவ மத்தி எனக் கூறவில்லையே?! புருவ மத்தி என்று ஒருமையில் தானே கூறினர். ஒரு புருவம் அதன் மத்தி என்று ஒன்றும் இல்லை, அதன் கீழ் இருப்பது கண்.

இப்படி சிந்திக்க வேண்டும். யூகிக்க வேண்டும். புருவ மத்தி என்று சொன்னார்களே அதன் கீழ் உள்ள கண்ணை பற்றி தானே சொல்லியிருப்பர்.

நாம் சிந்தித்ததை சித்தர்கள், ஞானிகள் பாடல்கள் கொண்டு பார்போம். எல்லா சித்தர்களும் , ஞானிகளும் நாம் தியானம் செய்ய வேண்டிய இடம் புருவ மத்தியான கண்ணே என்று நேரடியாகவும், பரிபாசயாகவும் கூறிபிட்டுள்ளனர். அதில் சிலவற்றை இதில் பார்போம். இதை விட அதிக விளக்கம் வேண்டின் எங்கள் குருநாதர் எழுதியுள்ள புத்தகத்தை வாங்கி படிக்கவும்.

“புருவ மத்தி எதென்றக்கால் பரப்பிரம்மமானதோர் அண்ட உச்சி” . – சித்தர் காகபுசந்தர்.

புருவமத்தி பரப்பிரம்மமான அண்ட உச்சி. அண்டம் போல் அழகான , பூமி போல் அழகான கண்மணி, உச்சி என்றால் கண்மணி மத்தியாகும். அது பரப்பிரம்மமானது. அதாவது ஒளியானது புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி.

கண் நிறைந்த ஜோதியட புருவமத்தி

அலையாதே புருவமத்தி துலையென்றெண்ணி

அப்பனே மூக்கு நுனி அந்தமாச்சே அகத்தியர்

கண்ணில் நிறைந்த ஜோதியே (அ ) ஒளியே புருவமத்தி என்று தெளிவாக அகத்தியர் பெருமான் நமக்கு உரைக்கிறார்.

வள்ளல் பெருமான் புருவம் கண் என்று தெளிவாக கூறிவிட்டார்.

“கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார். “நடுக்கண் தான் புருவபூட்டு” இதற்கு விளக்கமும் வேண்டுமோ.

மேலும் வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.

“என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்”

தன் கண்ணில் தான் தானும் தவம் செய்தேன் என்று வள்ளலாரே குறிபிடுகிறார்:

இதை திருமூலர் திருமந்திரத்தில் பரிபாசையாகவும், நேரடியாகவும் குறிபிடுகிறார்:

“நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்

வாட்டம் இல்லை மனைக்கும் அழிவில்லை “

இங்கு திருமூலர் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார். ஒரு சித்தர் புருவமத்தி என்றார், இங்கு திருமூலர் நடுமூக்கு என்கிறார். எது சரி. அவ்வை பிராட்டி கூறிய முதல் பாடலை நினைவு கொள்ளுங்கள்.

நடுமூக்கு – இது பரிபாசை. ஞானத்திற்கு பொருள் காணனும்.! மேலோட்டமாக பார்த்து மூக்கு என்று ஏமாந்து போகாதீர். மூக்கை பார்த்து மோசம் போனவர் ஏராளம். இதன் விளக்கம் என்ன?

தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம். நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும் அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது! இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும். கண் என நேரடியாக சொல்லாமல் நடுமூக்கு என்றது நாம் சிந்தித்து தெளிய வேண்டும். குரு மூலம் உபதேசம் பெற்று தெளிய வேண்டும் என்பதற்காக. தான்.

மேல் கூறிய விளக்கத்திற்கு சான்று மற்றும் ஒரு திருமந்திர பாடலே

“நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்

தோட்டத்து மாம்பழந்தூங்கலு மாமே”

நயனம் என்றால் கண். இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.

மற்றுமொரு பாடல் திருமந்திரத்தில் இருந்து. தவம் எப்படி செய்ய வேண்டும் என்று கூறும் பாடல். இப்பாடலை படிக்கும் முன் “உடலில் உயிர் எங்கு உள்ளது “என்று இந்த லிங்கை படித்த பின் பார்க்கவும்”

“நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி

உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்

பற்றுக்குப் பற்றாய் பரம – னிருந்திடம்

சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே”

நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி இதை நாம் உற்று உற்று பார்க்க வேண்டும். கிணற்றை உற்று பார்த்தான் என்றால் கிணற்றில் உள்ளே பார்த்தான் என்று தானே பொருள். நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி உள்ளே இரு கண்களும் உள்ளே போய் சேருமிடம் நம் ஆத்மஸ்தானம். அதை தான் உற்று உற்று பார்க்க ஒளி விட்டு பிரகாசிக்கும் என திருமூலர் சொல்கிறார். அது தான் ஒளி தான் மந்திரம். அந்த நம் ஜீவஸ்தானம் தான் பரமன் இறைவன் இருக்குமிடம். நம் உயிரை பற்றி உடலை பற்றி இருக்கும் இடம். அதுவே சிற்றம்பலம் கோயில் என தெரிந்து கொண்டேன். நம் கண்மணியை பற்றியிருக்கும் ஒளி உள் ஒளி அம்சம். கண்மணி ஒளி வழி உள்ளே புக வேண்டும். குரு மூலம் உபதேசம், தீட்சை பெற்று கண் ஒளியை பற்றி உள் போக வேண்டும். இதுவே ஞானம். கண்ணை மூடி கொண்டு உற்று உற்று என பார்த்தாலும் மாயை தான் விளையாடும். கண்ணை திறந்து கண்மை ஒளியோடு போ.

மேலும் பல ஞானிகள் புருவமத்தியான கண்ணை இருதயம் என்பர். இருதயம் என்பதை பிரித்து பாருங்கள் இரு+ உதயம் . நம் உடலில் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், ஆக இதை தான் இந்த சூரிய , சந்திர உதயத்தை தான் இரு உதயமாக (இருதயமாக) கூறி உள்ளனர் ஞானிகள். இதை சிவவாக்கியர் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் கூறி உள்ளார்.

“வலது கண் சூரியன் இடது கண் சந்திரன்”

கீதையிலும் கிருஷ்ண பகவான் “மந்திரங்களில் நான் காயத்ரி” என்கிறார். காயத்ரி மந்திரத்தின் சாராம்சம் “கடவுளின் ஒளியை தியானிப்போமாக என்பதே.” கண்ணன் என்ற தமிழ் வார்த்தை நம் உடலில் இறைவன் துலங்குவதை குறிக்கும். கண் + அவன் = கண்ணன். ஆகா இந்த கண்ணனை – கண் ஒளியை தான் நாம் தியானிக்க வேண்டும்.

இப்படி அனைவரும் கூறுவது ஒன்று தான்.

கண் ஒளியை பற்ற உங்களுள் கடந்து செல்ல குருவிடம் உபதேசம் தீட்சை பெறுங்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

கொல்லா நோன்பு குவளையமெல்லாம் ஓங்குக

ஸ்ரீ சோபனா யட்சிணிதேவி

ஸ்ரீ சோபனா யட்சிணிதேவி
இந்த தேவதை உங்களை உங்களுடைய பகைவர்களிடம் மிருந்து அவர்களுடைய சதி திட்டங்களிருந்தும் காப்பாற்றும் சிக்கல்கள் ,குழப்பங்கள் ,துன்பங்கள், ஆபத்துகள் போன்றவற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருபவர்கள் அவற்றைச் , சமாளித்து அவற்றால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்துக் கொள்ள இந்த தேவதை நமக்கு பாதுகாப்பு அளிக்கும்.
எந்த காரியத்தையும் வெற்றிகரமாகச் சாதிக்ககூடிய துணிச்சலும் சக்தியும் ஏற்படும்
அன்னை நாம் உபாசனை செய்து வந்தால் தொழில் அல்லது வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்.பொருளாதாரநிலை வேகமாக உயரும்
கலைகளைக் கற்றுக் கொள்பவர்களால் அதை எளிதாக கற்றுக்கொள்ளவும் முடியும். பெரும் புகழும்யும்செல்வத்தையும் செல்வாகும்யும் பெறமுடியும்
.
அருள்வாக்கு,  ஜோதிடம்,பிரச்சனம்,வாஸ்து,சேர்மர்கடிங் முதலிய தொழில் செய்பவர்களுக்கு முக்காலம் உணர்த்தும். இவர்கள் அதிக சக்தி உடையவர்கள்.
அன்னை நாம் உபாசனை செய்து வந்தால் கடன்,பிரச்னைதீர்வு, தொழில் வளர்ச்சி ,எதிபாராத அதிஸ்டம்.அன்னை நேரில் வைத்து நமக்கு தரிசனம் தருவார்கள்.
இவர்கள்களுக்கு  மஞ்சள்அரளி பூ மிகவும் பிடிக்கும்.  இந்த  தேவதையை நாம் சித்தி செய்தல் நம்மிடம் முக்காலம் நமக்கு உணர்த்தும்.
இந்த தேவதை 21  நாள் மிக எளிதாக சித்து செய்துகொள்ளலாம்
எங்கள் ஆலயத்தில் பிரணபிரிதிச்டை செய்து விரதம் இருந்து கையால் யந்திரம் வரைந்து உங்களுக்கு வழங்கபடுகின்றன.
யட்சிணி தேவதை தெய்வ ஆகர்சணாம் அஞ்சனம் மை உடன் வழங்கப்படும்.
தேவதையை முறையாக ஆவகணம் செய்து மந்திர உரு ஜெபித்து பாவையாக வழங்கப்படும்
நாம் முறையாக பூஜை செய்து வந்தால் இந்த தேவியை நாம் சித்து செய்து கொள்ளலாம்.
வாழ்கையில் பல சதனை புரியலாம்.
நாம் இறந்த பிறகு இந்த அம்மன் நாம் ஆத்மாவை அழைத்து கொண்டு போவார்கள்.

நம்மை குழந்தை போல் பாதுகாப்பார்கள்

பொறாமைக்காரர்களால் தொல்லையா

பொறாமைக்காரர்களால் தொல்லையா?
வீட்டிலோ, பணியிடத்திலோ, தொழிலிலோ, உறவிலோ நாம் அறிந்தோ அறியாமலோ பொறாமைக்காரர்கள் முளைத்து விடுகின்றனர். காலப்போக்கில் இவர்கள் எதிரிகளாகக் கூட மாறி விடுகின்றனர். நான் யாருக்கும் ஒரு கெடுதலும் நினைக்கலே! ஏன் எனக்கு மட்டும் எதிரிகள் முளைக்கிறார்கள்! என்று சொல்லி வருத்தப்படுவர்கள் ஏராளம்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் வழிபாடு உகந்தது. சனிக்கிழமைகளில் 12 முறை சக்கரத்தாழ்வார் சந்நிதியை வலம் வந்து வணங்கலாம். துளசிமாலை சாத்தி, கல்கண்டு பிரசாதத்தை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு கொடுங்கள்.

யோகநரசிம்மர் படத்தை கிழக்கு முகமாக வைத்து மாலையில் தீபமேற்றுங்கள். யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே என்று 108 முறை உள்ளம் உருகிச் சொல்லுங்கள். பொறாமைக்காரர்களின் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவீர்கள்
,சகல தேவதா வசிய மந்திரம்



1. மகா கணபதி தியானம்
ஐம் கணபதி
 க்லீம் கணபதி
ஸவ்ம் கணபதி
வாவா கணபதி
சர்வ தேவாதி தேவர்களும்
 சர்வ ஜீவராசிகளும்
நான் நினைத்த அணைத்தும்
என் வசியமாக
வசிவசி அசியசி ஸ்வாஹா
2) தெஷிணாமூர்த்தி தியானம்
ஓம் நமசிவய சிவ சிவ சரணம் சிவானந்தம்
சிவ சிவ சிவாய ஆக்ருஷ்ய
( குறிப்பு: எந்த மந்திரம் சொல்லும் முன்பு மேற்கண்ட மந்திரத்தை தெட்சணாமூர்த்தி சன்னதியில் இருந்து 21 முறை சொல்லிவிட்டு பிறகு மந்திரங்கள் உச்சரித்தால் மந்திரம் சீக்கிரம் பலன் தரும்.)

3) சகல மந்திரங்களின் சாப நிவர்த்தி
ஓம் அங் உங் சிங் க்லீம் ஹபீம் அவவும் சல மந்திரங்களின் சாபம் நாசி மாசி சுவாகா .
4) பிராண பிரதிஷ்டை மந்திரம்
ஆம் ஹ்ரீம் க்ரோம் யரல வஷக்ஷனி ஹோம் ஹம்ச ஷெஷம் சோகம் அம்ச அஸ்ய (தேவதை பெயர்)பிராணா இகிப்ராணா ஜீவ இஹஸ்திதா   அஸ்யஸர் வேந்திரியாணி வாங்க்மன த்வச் சஹீஷ் சோதர தான சமான இகைவ .ஆக்த்ய அஸ்மின் பிம்பே யந்திரே (தேவதையின் பெயர்)ஸூகம் சிரம் திஷ்டந்து சுவாஹா .(தேவதையின் பெயர்)பிராணன் பிரதிஷ்டையாமி .

5) சகல யந்திரங்களுக்கும் அர்ச்சனை மந்திரம்
1) ஓம் பிராணயா பிராண ரூபாய பிராண லிங்காய பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,
2) ஓம் ஜீவாயா ஜீவா ரூபாயா ஜீவ லிங்காயா ஜீவ பிரதிஷ்ட்டாய ஸ்வாகா
3) ஓம் மந்திராயா மந்திர ரூபாயா மந்திர லிங்காயா ம்,மந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,
4 ஓம் தந்திராயா தந்திர ரூபாயா தந்திர லிங்கயாதந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,
5) ஓம் பிரம்மாயா பிரம்மா ரூபாயா பிரம்மா லிங்காயா பிரம்மா பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,
6) மந்திர காயத்ரி .
மந்திர ராஜாய வித்மஹே மஹா மந்திராய தீமகி தன்னோ மந்திர பிரசோதயாத்
7) யந்திர காயத்ரி
யந்திர ராஜாய வித்மஹே மஹா யந்திராய தீமகி தன்னோ யந்திர பிரசோதயாத் .
8) சகல  கருக்கலுக்கும் சக்தி அளிக்கும் மந்திரம்
நங் லங் மங் லங் சிங் லங் வங் லங் யங் லங் லம் லங் ஓம் ஆம் லா லீ லு உம் படு ஸ்வாஹா ரெட்டு கட்டு கட்டவிழ்க்கவும் .
9) பூஜிக்கும் தேவதைகளுக்கு பந்தந் நிவர்த்தி
ஐம் ஹ்ரீம் பகளாமுகி பூஜ்யமான சகல தேவதா மம சத்ரு பிரேரித தேவதாக்கு பந்தாத் முக்த பந்தா குரு குரு ஸ்வாஹா வங் சிங் உச்சாடாய உச்சாடாய .

10)  சகல தேவதா வசிய மந்திரம்
மீறியும் கிரியும் சிரியும் வசி வசி
இந்த பத்து மந்திரங்களை முறைப்படி தெரிந்து செய்வதுவே நலம் செய்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பலன்  தரும் .

20 January 2016

சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.
நீங்கள் எத்தனை கோடி ,
கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,
நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.
தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால் ,உங்களுக்கு அந்த சனிபகவான் —முழு அருள் கடாட்சம் வழங்கி ,
உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட ,ஒரு தேவரகசியம் போன்ற தகவலை ,
நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்
மட்டற்றமகிழ்ச்சி…….
தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே )
ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,
அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.
இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,
சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படித்தாலும்,
ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..
இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….
தெரியவில்லை!.. ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான்.
உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான
சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்பஒற்றுமைவேண்டும்என்றுநினைக்கும்சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.
தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,
தங்களிடம்பாசம்உள்ளவர்களாகத்திகழ இந்த
காணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.
திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக் கோலமிடுவார்கள்.அங்கேவாழை இலையைப் பரப்பிஅதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,
ஏழு,
ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,
காக்கைகளை “கா…கா…’
என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்
பறந்துவரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா…
கா…’
என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.
அந்தக்காக்கைகள்உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,
அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.
இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.
மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவு ம்
கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின்வாகனம்.
காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.
காக்கைகளில்நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு.
காக்கையிடம்உள்ளதந்திரம்வேறுஎந்தப்பறவைகளிடமும்காணமுடியாது.
எமதர்மராஜன்காக்கைவடிவம்எடுத்துமனிதர்கள்வாழுமிடம்சென்றுஅவர்களின்நிலையைஅறிவாராம்.
அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால்
எமன்மகிழ்வாராம்.எமனும் சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்குஉணவிடுவதால்ஒரேசமயத்தில்எமனும்சனியும்
திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது.தந்திரமானகுணம்கொண்டகா
காலையில்நாம்எழுவதற்குமுன்,
காக்கையின்சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும்.
நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்தால்அதற்குஉடனேஉணவிடவே
எனவே,
காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,
எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வாதத்தினைப்பெற்றுமகிழ்வுடன்வாழலாம்

பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்


பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்
இதை காளியின் அம்சம் கொண்டதாக கூறுவது வழக்கம்
இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது. கோர்ட்டுகளில் வழக்குகளை சந்தித்து வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும் வெற்றியை தேடி தரும் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.

மிக முக்கியமாக இது ஜன வசியம் செய்யக்கூடியது ஆகும். பலர் இதை தன வசியத்திற்காகவே உபயோகப்படுத்துகின்றனர்.

இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.

பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம்.

வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம்.கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சண்டை மிகுந்து இருந்தால், மனைவி இதை குலைத்து முகம் முழுதும் தேய்த்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும்மேலும் இதை சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் ஆட்காட்டி விரலில் ஊசியால் சிறிது குத்தி குருதி எடுத்து அத்துடன் குழைத்து நெற்றியில்இட்டு செல்ல எப்பேர்ப்பட்ட வராத பணமும் வந்து சேரும் என்பதாகவும் கூறப்படுகிறது.இந்த  கருப்பு  மஞ்சள்லில்     அனைத்து   யட்சிணிதேவதை  ,  தேவதைகள் , தேவர்கள் ,ரிஷ்கள் சித்தர், ஆவவகணம்       செய்வார்கள்  இந்த கருப்பு மஞ்சள்  வேண்டுபவர்கள்     தொடர்புக்கு  +919047899359   +918675426286

18 January 2016

திருஷ்டி பொருளை மிதித்து விட்டால் ஆபத்து என்பது உண்மையா

திருஷ்டி பொருளை மிதித்து விட்டால் ஆபத்து என்பது உண்மையா
நோய் பரப்பும் கிருமிகள் எதிர்ப்பு சக்தி இல்லாதவரைத் தாக்கும். அதுபோல, திருஷ்டி, செய்வினை, ஏவல் போன்ற தீய விஷயங்களும் பக்தியற்றவர்களையே பாதிக்கும். பக்தியுள்ளவன் கடவுளின் பாதுகாப்பு என்னும் கவசத்திற்குள் பாதுகாப்பாக இருக்கிறான். கந்தசஷ்டி கவசம், சண்முகக் கவசம் போன்ற நூல்கள் எல்லாம் நம்மைக் கவசம் போல பாதுகாப்பதற்காகவே இருக்கின்றன. இவற்றைப் பாராயணம் செய்தால், எந்த தீயசக்தியும் எந்த ரூபத்திலும் நம்மை அணுகுவதில்லை

17 January 2016

சோமநாதர் ஆலயம்! பன்னிரண்டு ஜோதி லிங்கங்களில் முதன்மைத் திருத்தலம் ஆகும்

சோமநாதர் ஆலயம்! பன்னிரண்டு ஜோதி லிங்கங்களில் முதன்மைத் திருத்தலம் ஆகும்

இந்துக்களின் தொன்மையான புராணமான கந்த புராணத்தில் ஜோதிர்லிங்க திருத்தலமான சோமநாதர் சிவபெருமான் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திரன் தனது 27 மனைவியரில் உரோகிணியுடம் மட்டும் அளவு கடந்த அன்பு பாராட்டி மற்ற மனைவியர்களைப் புறக்கணித்தான். தனது 26 மகள்களின் துயரத்தைக் கண்டு சீற்றங் கொண்ட தந்தை தட்சப்பிரசாபதி, சந்திரனுக்கு காச நோயினால் தேய்ந்து போகக் கடவது என்று சாபமிட்டார். ஒவ்வொரு நாளும் தேய்ந்து வந்த சந்திரன் இறுதியில் சௌராஷ்ட்டிரத்தின் கடற்கரையில் உள்ள பிரபாச தீர்தத்தில், சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை சரணடைந்து நோய் நீங்கி சுகமடைந்தான். அதன்படிசந்திரன்தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது.

கந்த புராணத்தில் ப்ரபாச காண்டம் சோமநாதர் திருக்கோயிலின் சிவலிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கடியில் அமைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.மகாபாரதத்திலும் சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட வரலாறு கூறப்படுகின்றது.

ஸ்ரீகிருஷ்ணர் தனது அவதார முடிவின் போது இங்குள்ள பிரபாச பட்டினத்திற்கு தங்கியிருந்த காலத்தில், வேடுவனின் கனையால் காலில் தாக்கப்பட்டு இறந்தார் என பாகவத புராணம்கூறுகிறது.

சோமநாதர் ஆலயத்தை இடித்தவர்கள் உருவ வழிபாட்டினை எதிர்க்கும் இஸ்லாமிய மன்னர்கள் பல முறை சௌராஷ்ட்டிர பகுதி மீது படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை ஆறு முறை அடியோடு இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றனர்.

சோமநாதரின் ஆலயத்தை இடித்த இஸ்லாமிய மன்னர்கள் பெயர்கள் பின்வருமாறு.
முதல் முறையாக கி.பி. 725ல் சிந்து மாநில இஸ்லாமிய அரபு ஆளுனர் ஜூனாயத்தின் (Junayad) கட்டளைப்படி, உருவ வழிபாட்டை எதிர்க்கும் இசுலாமியப் படைகள்,சௌராஷ்ட்டிர தேசத்தை ஆண்டு கொண்டிருந்த, பிரதிஹர குல மன்னான இரண்டாம் நாகபாதர் காலத்தில் சோமநாதபுரம் கோயில் இரண்டாம் முறையாக இடிக்கப்பட்டது.

கி.பி. 1025, டிசம்பர் மாதம், கஜினி முகமது சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன், ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று, 20,000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச்சென்றான். ஆயிரக்கணக்கான இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தைஉடைத்து, அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள், தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றான்.
24.02.1296-இல் குஜராத்தை ஆண்ட இராசா கரன் என்ற மன்னர் காலத்தில், அலாவுதீன் கில்ஜி சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினான். பின்னர் காம்பத் நாட்டின் இரண்டாம் கர்ண தேவ வகேலா மன்னரை கொன்று, அவரின் மனைவி கமலாதேவியை மதமாற்றம் செய்து மணந்து கொண்டான். கில்ஜி, 50,000 ஆயிரம் பேரைக் கொன்று, 20,000 பேரை அடிமைகளாக பிடித்துச் சென்றதுடன் ஆயிரக்கணக்கான கால்நடைகளையும் கவர்ந்து சென்றான். இந்த செய்தியை ஹாசன் நிஜாமைச் சேர்ந்த தாஜ்-உல்-மாசிர் என்ற வரலாற்று அறிஞர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1375ல் ஜூனாகாத் சுல்தான், முதலாம் முசாபர் ஷா, உருவ வழிபாட்டினை அவமதிக்கும் பொருட்டு, சோமநாதபுரம் ஆலயத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினான்.

கி.பி. 1451ல் ஜூனாகாத் சுல்தானாக இருந்த முகமது பேக்டா என்பவர் சோமநாதரின் ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கினார்.

கி.பி 1701ல்  முகலாய மன்னன் அவுரங்கசீப் சோமநாதபுர ஆலயத்தை இடித்து தரை மட்டம் ஆக்கிச் சென்றான்.

எத்தனை எத்தனை அந்நிய கொலை கூட்டத்தினர் இக்கோவிலை சிதைத்தாலும் ஈசனின் கிருபையினால் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டுள்ளது.

வீழ்ச்சியிலும் வளர்ச்சி பதிவு தொடரும்!

         ஓம் நமசிவாய!