youtube

9 May 2017

ஜோதிடம் ஆன்மீகத்தின் நுழைவாசல்!!!

ஜோதிடம் ஆன்மீகத்தின் நுழைவாசல்!!!

விநாயகரை தேய்பிறை சதுர்த்தி வரும் நாளிலும்,முருகக்கடவுளை செவ்வாய்க்கிழமையன்றும் வழிபட அவர்களின் அருள் மொத்தமாகக் கிடைக்கும்;

குலதெய்வத்தை எந்த நாளிலும்,அண்ணாமலையாரை எந்த கிழமையிலும்,எந்த நாளிலும் வழிபடலாம்;

மஹவிஷ்ணுவை புதன் கிழமையன்றும்,மகாலட்சுமியை வெள்ளிக்கிழமையன்றும் வழிபட அவர்களின் அருள் கிட்டும்;

காலபைரவப்பெருமானை தேய்பிறை அஷ்டமியிலும்,வராகியை தேய்பிறைபஞ்சமியிலும் வழிபட்டால் வரங்கள் பெறமுடியும்;

உக்கிரமான பெண்தெய்வங்களான காளி,மாரி,முத்துமாரி,அங்காள பரமேஸ்வரி,புன்னைநல்லூர் மாரி,சமயபுரம்மாரி,இருக்கன் குடி மாரி,கன்னியாக்குமரி,புற்றுமாரி,நாகவல்லி,நாகேஸ்வரி முதலான தெய்வங்களின் அருள் கிட்டிட பவுர்ணமி நாட்களே சிறந்தது;

இவைகளை எல்லாம் ஒரே நிமிடத்தில் வாசித்துவிட்டோம்;ஆனால்,சித்தர்கள் இந்த தேவ ரகசியங்களை அறிய பல நூற்றாண்டுகளாகத் தவம் இருந்தனர்;


ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை செவ்வாய்க் கிரகம் நீசமடையும்;அந்த 45 நாட்களில் செவ்வாயின் ராசிகளான மேஷராசி,விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கவுரவ இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்;

அதே போல ஆண்டுக்கு ஒருமுறை சூரியன்,புதன்,சுக்கிரன் வெவ்வேறு மாதங்களில் நீசமடைவர்;அப்போது சிம்மராசி(சூரியனின் ராசி),ரிஷபராசி மற்றும் துலாம் ராசி(சுக்கிரனின் ராசி); மிதுனம் மற்றும் கன்னிராசி(புதனின் ராசி)யில் பிறந்தவர்கள் அவமானத்தை/அவதூறைச் சந்திக்க வேண்டியிருக்கும்;இதை முன் கூட்டியே கணிக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? ஜோதிடம் அறிந்தவர்களுக்கு மட்டுமே உண்டு;


அதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் என்ற ஒரு ரகசியக் கலை இருக்கிறது.ஜோதிடத்தின் உச்சக்கலை இது;இந்தக் கலையின் படி ஆலோசனை பெற்றவர்கள்,வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கின்றனர்;

அமாவாசைத் திதி அல்லது பவுர்ணமித் திதியில் பிறந்தவர்களுக்கு பஞ்சபட்சியில் தீய நேரமான படுபட்சி நாள் என்பதே கிடையாது;15 நாட்கள் காலண்டர் அடிப்படையில் பஞ்சபட்சி சாஸ்திரம் ஒவ்வொருவருக்கும் செயல்படுகிறது;இதன்படி ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை படுபட்சி நாள் என்று ஒன்று வரும்;அந்த நாட்களில் எடுக்கும் காரியங்களில் ஜெயிப்பது கடினம்;தமிழ்நாட்டு அரசியல்தலைவர்கள் இதில் தேர்ச்சி பெற்ற ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கிறார்கள்;அரசியல்தலைவர்கள் மட்டுமா? பெரும் தொழிலதிபர்களும்,அரசுப்பணியில் உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் இந்த ஆலோசனையைப் பின்பற்றுகிறார்கள்;


மேஷராசியினர் மகரராசியினரால் அதிகமான நன்மைகளைப் பெறுவர்;துலாம் ராசியினரிடம் நட்பு பெறுவர்;
இதே போல எந்த ராசியினருக்கு எந்த ராசியினர் உதவி செய்வார்கள்;எந்த ஜாதியில் பிறந்த மனிதர்களால் உதவி கிடைக்கும்;எந்த ஜாதியில் பிறந்தவர்களால் தொல்லை உண்டாகும் என்பதையும் ஜோதிட ஆலோசனையின் படி தெரிவிக்க முடியும்;

சிலருக்கு குறிப்பிட்ட வருடங்கள் வரை மட்டுமே அருள்வாக்கு கைகூடும் என்பதையும் ஜோதிடத்தின் மூலமாக மட்டுமே கண்டறிய முடியும்;

சிலர் இப்பிறவியிலேயே சிவதரிசனத்தைப் பெறவே பிறந்திருப்பர்;அது அவர்களின் பிறந்த ஜாதகத்தில் நவக்கிரகங்கள் அமைப்பைப் பொறுத்துக் கண்டறியலாம்;

சிலர் 10,000 ஆண்டுகள் வரை வாழ்வார்கள் என்பதையும் கண்டறிய ஜோதிடம் மட்டுமே துணை;

ஜோதிட நம்பிக்கை இருப்பவர்களுக்கே ஆன்மீகம் விரைவாகக் கைகூடுகிறது என்பதற்கு கோடிக்கணக்கான சம்பவங்கள் ஆதாரமாக எல்லா யுகங்களிலும்,எல்லா காலங்களிலும்,எல்லா ஜாதி மக்களிடமும் நிகழ்ந்துள்ளன;நிகழ்ந்து வருகின்றன;

தமிழ்நாட்டில் ஒரு மனிதன், தன்னையறியாமலேயே மிகவும் சுபமான லக்னம் உதயமாகும் நேரத்தில்,முதல் வீடு கட்ட ஆரம்பிக்க,அதன் பிறகு அந்த மனிதன் தன்னுடைய வாழ்நாள் முழுக்கவும் வீடுகள் கட்டிக் கொண்டே இருந்துள்ளான்;முதல் வீடு கட்ட ஆரம்பித்த சுப லக்னமானது அவனைக் கோடீஸ்வரனாக்கியிருக்கிறது;ஆனால்,அந்த மனிதனின் ஜாதகப்படி ஒரே ஒரு சொந்த வீடு கட்டும் யோகம் கூட இல்லை;இந்த சம்பவத்தை ஒருமுறை கூர்ந்து கவனித்த ஒரு சித்தர் பெருமான்,இந்த சம்பவத்தின் அடிப்படையில் நவக்கிரகங்கள் சூட்சுமமாகச் செய்யும் அதிசயங்களை பல ஆண்டுகளாக ஆராய்ந்திருக்கிறார்;அப்படி ஆராய்ந்து,ஆய்வு முடிவுகளைத் தொகுத்து உலகத்திலேயே தலைசிறந்த ஜோதிட ஆராய்ச்சி நூலை வெளியிட்டார்;அதுதான் காலப்பிரகாசிகை!


இதே போல பல ஜோதிட அனுபவஸ்தர்கள் தமது ஜோதிட அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்;அது புதிய ஜோதிடர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது;பல லட்சம்தமிழர்கள் அதனால் வளமான,நலமான வாழ்வை அடைந்து கொண்டே இருக்கிறார்கள்:

பஞ்சபட்சியை சதாசிவன் முதன் முதலில் ரோமரிஷிக்கு உபதேசித்தார்;அதன் பிறகு,அந்தக் கலையானது குரு சீடன் பரம்பரை மூலமாக பல கோடி ஆண்டுகளாக பல லட்சம் ஜோதிடர்களால் இன்று நம்மிடையே பரவியிருக்கிறது;முதன் முதலில் ரோமரிஷி பஞ்சபட்சியைக் கற்றுக் கொண்டதால் சாகா வரம் பெற்று இன்றும் சூட்சுமமாக வாழ்ந்து வருகிறார்;தவம் செய்து வருகிறார்;பூமியில் 435 கோடி வருடங்கள் கடந்தால் பிரம்மாவுக்கு ஒரு நாள்;இப்படி பிரம்மாவுக்கு 100 வயது ஆகிவிட்டால்,அந்த பிரம்மாவின் ஆயுள் முடிந்ததாக அர்த்தம்;ஒரு பிரம்மா இறந்தால் ரோமரிஷியின் உடலில் இருந்து ஒரு ரோமம் உதிரும்;இது ரோமரிஷி பஞ்சபட்சியைக் கற்றதனால் கிடைத்த புகழ் ! பஞ்ச பட்சிக்கு அடிப்படையே ஜோதிடம் தான்;

இதே பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நிபுணராக இருப்பவர் காகபுஜண்டர் சித்தர்;இவர் அழிவே இல்லாத மகா சித்தர்;இவர் கூறுகிறார்;நாம் வாழ்ந்து வரும் பூமி இதுவரை ஆறு முறை அழிக்கப்பட்டிருக்கிறாதாம்;அதற்கு சாட்சியாக இருந்து வருபவர் அவர் மட்டுமே!


ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என்பதை மேல்நாட்டின் புரிந்து கொண்டதால் தான் அவர்களுடைய முக்கியமான பணிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் போது,ஜோதிட ஆலோசனையைக் கேட்கின்றனர்;சி.ஐ.ஏ.வுக்கே ஜோதிட ஆலோசனைப்படியே ஒற்றர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்;தமிழ்நாட்டில் ஒரு தினசரி செய்தித்தாள் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே தனது எடிட்டோரியலுக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது;


ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என்பதாலேயே பிரிட்டன் அரசு,இந்தியாவில் மெக்காலே கல்வித் திட்டத்தையும்,கிறிஸ்தவத்தையும் கட்டாயப்படுத்திப் பரப்பியது;இதன் மூலமாக அடுத்தடுத்து வரும் இந்தியத் தலைமுறையினரை இந்து தர்மத்தில் இருந்து பிரித்துவிடலாம்;என்பதே அவர்களின் அரசியல் தொலைநோக்குத் திட்டம்;இதில் பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டனர்;


ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என்பதாலேயே இருப்பதிலேயே மோசமான நேரத்தைத் தேர்ந்தெடுத்து,அந்த நேரத்தில் நமக்கு சுதந்திரம் தந்தது பிரிட்டன்;நமது கண்களை,நமது கைகளாலேயே குத்த வைப்பது என்பது இதுதானோ?!!!


ஜோதிடத்தின் மூலமாக வேற்றுக்கிரக மனிதர்களை நாம் எப்போது சந்திப்போம் என்பதைக் கணிக்க முடியும்;
மூன்றாம் உலகப் போர் எப்போது எந்த நாட்டினரால் ஆரம்பமாகும்;அதன் முடிவு என்னவாக இருக்கும்;என்பதையும் கணிக்கலாம்;


பூமியில் விடுபடாத புதிர்களை ஜோதிடத்தின் மூலமாக விடுவிக்க முடியும்;

எந்த நாடு எப்போது இரண்டு மூன்று துண்டுகளாக உடையும் என்பதையும் கணிக்கலாம்;

ஜோதிடம் ஒரு மஹா சமுத்திரம்;

ஜோதிடத்தை தொழில்முறையாகக் கற்றாலும் சரி;பொழுதுபோக்காகக் கற்றாலும் சரி;ஜோதிடம் கற்பவர்கள் சமஸ்க்ருதம் கற்பது அவசியம்;

முளைப்பாரி என்னும் அரிய தொழில்நுட்பத்தை

முளைப்பாரி என்னும் அரிய தொழில்நுட்பத்தை இப்போதுள்ள விவசாயிகள் துச்சமாக எண்ணியதன் விளைவுதான் இன்று பல ஆயிரம் பாரம்பரிய விதைகளை இழந்துவிட்டோம். மரபணுமாற்ற  அல்லது மானிய விதை என்று வீரியமில்லா சொத்தை விதைகளை வாங்கி, விதை திணிப்பை ஏற்றுக் கொண்டதின் விளைவே விவசாயம் உச்சி முகர்வதாக இல்லை. வருடாவருடம் விவசாயிகள் கொத்துக் கொத்தாக செத்து மடிகிறார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் முளைப்பாரி தொழில்நுட்பத்தை நாம் கைவிட்டதுதான். விவசாயிகள் பருவம் பார்த்து விவசாயம் செய்து அறுவடை செய்யும் நேரத்தில் முதலில் அடுத்த போகத்திற்கான தரமான விதைகளை தன்னுடைய நிலத்திலேயே தேர்வு செய்ய காலம்காலமாக கடைபிடித்த தொழில்நுட்பம் முளைப்பாரி.

விதைகளை தேர்வு செய்வதிலேயே பல நுட்பங்களை கடைப்பிடிப்பார்கள். நோய்தாக்குதல் இல்லாத தரமான பயிர்களில் இருந்து நன்றாக விளைந்த விதைகளை தேர்வு செய்வார்கள். அவ்வாறு தேர்வு செய்த நெல்,தானிய விதைகளை குதிர்களிலும்,கோட்டை கட்டியும்,சணல் அல்லது துணி சாக்குகளிலும் கொட்டி வைத்து பாதுகாப்பார்கள். அந்த விதைகளை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு அமாவாசையன்றும் பனி மற்றும் வெயிலில் காய வைத்து, அவற்றுடன் வேம்பு, மஞ்சள், நொச்சி, வசம்பு மற்றும் பல மூலிகைகள் சேர்த்து பாதுகாப்பார்கள். அவ்வாறு பாதுகாத்த விதைகளை அடுத்தப் பருவத்தில் விதைப்பதற்கு முன் விதைகளின் முளைப்புத் திறனை சோதனை செய்த பிறகே விதைப்பது தமிழர்களின் பண்ணெடுங்கால வழக்கமாக இருந்திருக்கிறது. அப்படி நம் முன்னோர்கள் குழுவாக சேர்ந்து கூட்டு முயற்சியாக செய்ததுதான் முளைப்பாரி திருவிழாவாகும்.

பெரும்பாலும் மாசி,பங்குனி,சித்திரை மாதங்களில் கோடை சாகுபடிக்கான விதைகளை முளைப்பாரி சோதனை செய்து கோடை சாகுபடி மேற்கொள்வார்கள். இன்னும் சில பகுதிகளில் விதைக்கும் காலத்திற்கு முன்னர் சோதிப்பார்கள். வளர்பிறை நாட்களில் விதைகளை பாவி, ஒன்பதாம் நாள் ஊர்வலம் எடுத்து சென்று காட்சிப்படுத்துவார்கள். பின்னர் 10 ம் நாள் ஓடும் தண்ணீரில் கரைப்பார்கள். அந்த தொழில்நுட்பம்தான் காலப்போக்கில் மக்களின் பார்வையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக முளைப்பாரி திருவிழாவாகவும், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களின்போது பெண்கள் முளைப்பாரி சட்டிக்களை தூக்கி சுற்றும் நிகழ்வாகவும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.

கிராமங்களில் உள்ள நாட்டுப்புற பெண் தெய்வங்களுக்கு முளைப்பாரி இட்டு பொங்கல் வைத்து கொண்டாடப்படும். பெண்கள் வளமையின் குறியீடாக திகழ்வதால்,விதை முதல் ஜல்லிக்கட்டு காளை, முளைப்பாரி தேர்வு, பாதுகாப்பு வரை பெண்கள் வசம் தமிழர்களால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. வளர்பிறை காலங்களில் காப்புக்கட்டி முளைப்பாரிக்கான வேலை தொடங்கப்படும். அதற்கு குறியீடாக வீட்டின் நிலைப்பகுதியில் வேப்ப இலை தோரணம் கட்டி ஊருக்கு, 'இந்த வீட்டில் முளைப்பாரி போட்டுள்ளார்கள்' என்று அறிவிப்பு செய்யபட்டிருக்கிறது.Mulaipari போடுவதற்கு மண்பானை,பனை,மூங்கில் கூடைகள் எடுத்து ஆறு அல்லது குளத்தில் வண்டல் மண் எடுத்து வந்து அதனுடன் மக்கிய எடுக்கிலையை சேர்த்து,முளைப்பாரி சட்டி தயார் செய்யப்படும். பின் பாதுகாத்த விதைகளை சாணப்பால் அல்லது பஞ்சகவ்யம் போன்றவற்றில் ஊற வைத்து, விதை நேர்த்தி செய்திருக்கிறார்கள். பின் அந்த விதையை சணல் சாக்கில் வைக்கோல் சேர்த்து இரவில் முளைக்கட்டப்படும். முளைக்கட்டிய பின் விதைகளை மண் கலவைகள் நிரம்பிய தொட்டியில் விதைப்பார்கள். அதிக சூரிய ஒளிப்படாத இடங்களில் வைக்கப்பட்டு காலை,மாலை நேரங்களில் தண்ணீர் தெளிப்பார்கள். முளைப்பாரி போட்ட வீடுளில் மாமிசம் சமைப்பதில்லை. அனைவரும் சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். அந்நாட்களில் வெளிநபர் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.

மேலும் பெண்கள் மாதவிடாய் காலங்கலில் முளைப்பாரியின் அருகில் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த நேரங்களில் அவர்களின் உடம்பில் இருந்து அதிகப்படியான வெப்பம் மற்றும் தேவையில்லாத கழிவுகள் வெளியேறுவதால், அது பச்சிளம் குழந்தை போல் உள்ள முளைப்பாரியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று அனுமதிக்காமல் இருந்திருக்கிறார்கள். காலப்போக்கில்தான் அது பெண்களை இழிவுபடுத்தும் தீட்டு என்று திசைமாறிவிட்டது. முளைப்பாரி போட்ட மறுநாளில் இருந்து வீட்டின் முன்பு வட்டமாக நின்று கொண்டு பெண்கள் கும்மியடிப்பார்கள். இந்த கும்மி ஓசை எழுப்புவது போல் முளைப்பாரியும் முளைத்து வெளிவரும் என்று நம்பிக்கை. அதில் இருந்து ஒன்பதாம் நாளில் இவ்வாறு பாதுகாத்த முளைப்பாரியை ஊர் பொது இடத்தில் வைப்பார்கள். அப்போது ஊரின் அனுபவ விவசாயிகள், யாருடைய விதையின் முளைப்பாரி வீரியமாக வளர்ந்துள்ளதோ, அவருடைய முளைப்பாரியை சுட்டிக்காட்டி அனைவருக்கும் சிறந்த விதையாக அடையாளம் காட்டுவார்கள். அந்த விதை அந்த வருடத்தின் ஊரின் செழிப்பை நிர்ணயிக்கும் குறீயீடாக இருக்கும். அப்படி செழிப்பான விதை முளைப்பாரியை செய்து காட்ட ஒவ்வொரு விவசாயியும் அடுத்தடுத்த வருடங்களில் ஆர்வம் காட்டுவர்.

பின் அந்த முளைப்பாரிகளை சுற்றி வட்டமாக பெண்கள் நின்று பாடலுடன் கும்மி கொட்டுவர். இன்னொரு பக்கம், அனைவரும் பார்க்கும் வண்ணம் ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம் என்று பாரம்பரிய கலைகளை சிறுவர்களும், இளைஞர்களும் செய்து காட்டுவர். அந்த முளைப்பாரியை தூக்கியபடி இதே ஆரவாரத்துடன் ஊர் முழுக்க சுற்றி வருவார்கள். பின் ஊரே ஒன்றுகூடி பொங்கல் வைத்து, கொழுக்கட்டை, மாவிளக்கு, துள்ளுமாவு, இளநீர், பானகம், நீர்மோர், வேப்பிலை கரகம் வைத்து பெண் தெய்வத்திற்கு படைப்பர். இந்த சடங்கினால் கோடை காலங்களில் ஏற்படும் அம்மை போன்ற நோய்கள் தொற்றாமல் தடுக்கப்படும். பின்பு பத்தாம் நாளில் இந்த முளைப்பாரியை ஓடும் நீரில் கரைத்து, பயிர் போகும் இடமெல்லாம் செழிக்க பாட்டுடன் வழியனுப்பி வைத்து திருவிழாவை முடித்து வைப்பார்கள். இந்த முளைப்பாரி கரைப்பு நிகழ்வானது விவசாயிகளுக்கு துணை புரியும் நீர்நிலைகளின் அவசியத்தை நினைவில் நிறுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இப்படி வழிப்பாடு,திருவிழாவில் மட்டுமட்டுமல்லாது முளைப்பாரி அவசியத்தை அனைவரும் அறிந்தே இருக்க வேண்டும் என்பதற்காக திருமணம் உள்ளிட்ட முக்கிய சுப நிகழ்வுகளிலும் முளைப்பாரி வைபோகத்தை தவறாமல் இடம்பெற செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். கோவலன், கண்ணகி திருமணத்தின்போது தானிய முளைப்பாரி கொண்ட குடங்களை பெண்கள் ஏந்தி வந்தததை சிலப்பதிகாரம், 'விரித்தபாலிகை முளைக்குட நிரையினர்' என்று சுட்டுகிறது.

இப்படி,விதைநேர்த்தியின் முக்கிய அங்கமாக இருந்த முளைப்பாரி திருவிழாவையும் யாரும் இப்போது நடத்துவதில்லை. திருமண சுபநிகழ்ச்சிகளிலும் யாரும் முளைப்பாரி சட்டிகளை ஏந்தி சுற்றுவதில்லை. அதனால்தான்,நமது பாரம்பரிய விதைகளை நாம் இழந்து, இன்று ஹைபிரிட் விதைகளை முளைக்க வைத்து, அதை உண்டு ஹைஸ்பீடில் மேலே போகிறோம். நமது முன்னோர்கள் கண்டறிந்த அதிசய அட்சய விதைநேர்த்தி தொழில்நுட்பமான முளைப்பாரி நிகழ்வை மறுபடியும் செயல்படுத்து, பாரம்பரிய விதைகளை மீட்டெடுப்போம். புதையும் நமது விவசாயிகளின் வாழ்வை தெம்பூட்டுவோம்.