youtube

2 April 2016

நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..!
1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது .
2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் .
3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது
4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது .
5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது .
6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது
7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .
8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது .
9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது .
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ...
1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)
3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது .
4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.
5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.
6. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும் .
7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது
8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது,அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் )பாதிப்பு அடையும் .
9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போககூடாது .
10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது
11. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

1 April 2016

ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையா சோ அவர்கள் விளக்கம்..

கேள்வி : இந்த ராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையாகவே நடந்தனவா? எல்லாம் வெறும் கற்பனைதானே?

சோ அவர்கள் பதில் : கற்பனை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

கேள்வி கேட்பவர் : அப்படித்தான் சொல்கிறார்கள்.

பதில் : அப்படிச் சொல்பவர்கள் எல்லாம்தான் இதில் அத்தாரிட்டியா? அவர்கள் சொல்வதே இறுதி முடிவா? இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களுடைய தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தா என்று ஒருவர் இருந்தார் அல்லவா?

கேள்வி கேட்பவர் : ஆமாம்.

பதில் : அவர் நல்ல மனிதரா?

கேள்வி கேட்பவர் : ரொம்ப நல்ல மனிதர். நேர்மையானவர்.

பதில் : உங்களுக்கு அது எப்படித் தெரியும்?

கேள்வி கேட்பவர் : என்னுடைய தாத்தா சொல்லியிருக்கிறார். அவருக்கு அவருடைய தாத்தா சொல்லியிருக்கலாம்.

பதில் : உங்கள் தாத்தா சொன்னதை உண்மை என்று நம்புகிறீர்கள். வியாஸர், வால்மீகி இவர்கள் எல்லோருக்கம் முன்னால் வாழ்ந்தவர்கள். எல்லோருக்கும் தாத்தா. அவர்கள் சொன்னால் நம்ப மாட்டீர்களா?

கேள்வி கேட்பவர் : இதையெல்லாம் விடுங்கள். இந்தப் புராணம், இதிஹாசம் இவையெல்லாம் பிராமணர்கள் மற்றவர்களை டாமினேட் செய்வதற்காக எழுதி வைத்த விஷயங்கள்தானே?

சோ அவர்கள் பதில் :

பிராமணர்கள் எழுதி வைத்தது என்று சொல்கிறீர்கள். மஹாபாரதத்தை எழுதிய வியாஸரோ, ராமாயணத்தை எழுதிய வால்மீகியோ பிராமணர்கள் அல்ல. வியாஸர் ஒரு மீனவப் பெண்மணிக்குப் பிறந்தவர். வால்மீகி ஒரு வேடுவர். சரி. பிராமணரில்லாத இவர்கள், யாரைப் பற்றி எழுதி வைத்தார்கள்?

வால்மீகி சொன்னது – ராமரைப் பற்றி. ராமரோ ஒரு க்ஷத்ரியன். வியாஸர் சொன்னது – கிருஷ்ணரைப் பற்றி. கிருஷ்ணரோ இடையர் குலத்தைச் சார்ந்தவர்.

இப்படி பிராமணரல்லாத ராமர், கிருஷ்ணர் இவர்களைப் பற்றி, பிராமணரல்லாத வால்மீகியும், வியாஸரும் எழுதி வைத்ததுதான் ராமாயணமும், மஹாபாரதமும்.

சொன்னவர்களும் பிராமணர்களில்லை; சொல்லப்பட்டவர்களும் பிராமணர்கள் இல்லை. இப்படிப்பட்ட விஷயத்தை பிராமணர்கள், மற்றவர்களை டாமினேட் செய்வதற்காக எழுதி வைத்தது என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

சரி, வியாஸரோ, வால்மீகியோ கூட பிராமணர்கள் இல்லா விட்டாலும், அவர்களுடைய எண்ணம் ‘பிராமணர்களை உயர்த்திக் காட்ட வேண்டும்’ என்று இருந்திருந்தால், அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? ஒரு பிராமண கதாபாத்திரத்தை அல்லவா அவர்கள் மிக உயர்ந்ததாகக் காட்டியிருக்க வேண்டும்? ‘ஒரு பிராமணர்; அவர் சக்ரவர்த்தியாக இருந்தார்; அவரை மாதிரி ஒரு அரசர் இருந்ததே கிடையாது; மிகப் பெரிய வீரர்; அது மட்டுமல்ல, நியாயம் தவறாதவர்; எல்லோரிடமும் கருணை காட்டுபவர்…’ என்றல்லவா எழுதியிருக்க வேண்டும்? அப்படிச் சொல்லவில்லையே அவர்கள்?....
மனம் - மந்திரம் - வாயு - வாசி பற்றி அகத்தியர்

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே

இன்று யோக சாதனை பயிலும் பலர் மூச்சை பிரணாயாமத்தால் பிராணனை கட்டுப்படுத்தி ஆற்றலை பெறுவது சித்தி என்று முயற்சிக்கின்றனர். எனினும் பிராணனை கையாள்வது என்பது வாகனத்தின்  எரிபொருளாகிய fuel இனை கையாள்வது போன்றது. இவற்றை எல்லாம் அறிவதற்கு ஆன்மாவின் பிரதிநிதியாகிய மனம் சரியாக இருக்க வேண்டும். மனம் ஆன்மாவினை சார்ந்து இயங்கினால் அது ஞானம், புறப்பொருளை சார்ந்து இயங்கினால் அஞ்ஞானம்!

இனி பாடலிற்கு வருவோம்!

மந்திரம் என்பது ஒருவனது ஆத்ம சக்தியை ஒருங்கிணைத்து மனதிற்கும் பிராணனுக்கு ஆற்றல் தரும் கருவி. மனம் செம்மையாக இருந்தால் மனதில் ஆத்ம சக்தி பிரவாகிக்கும். ஆகவே மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவியில்லை!

மனம் செம்மை இல்லை என்றால் பிராணனி ஸ்தூல மாகிய வாயு சலனிக்கும் வாயு சலனித்தால் பிராணன் சலனிக்கும், மனதின் எண்ணங்கள் கீழானால் பிராணனின் அதிர்வு குறையும், பிராணனின் அதிர்வு குறைந்தால் ஆன்ம பரிணாமம் குறையும், இப்படி குறையும் ஆன்ம பரிணாமத்தை தடுக்க வாயுவை உயர்த்தி பிரணாயமம் செய்ய வேண்டும். மனதை செம்மையாக தெரிய வேண்டும். ஆக மனது செம்மையாக இருந்தால் வாயுவை உயர்த்த தேவையில்லை.

பிராணனின் ஒழுகாகி பிரபஞ்ச சக்தியை குறித்த அதிர்வலையில் உடலில் ஏற்க தெரிந்தால் அந்த நிலை வாசி, அப்படி பிரபஞ்ச சக்தியை ஈர்த்து உடலில் ஆறாதார சக்கரங்களில் வாசியை நிறுத்தினால் ஆன்ம பரிணாமம் உயரும். இப்படியான உயர்வை தடுப்பதும் மனதே, இந்த மனது செம்மையாக இருந்தால் வாசியை நிறுத்தி கஷ்டப்பட தேவையில்லை.

மனது செம்மையாக இருந்தால் அந்த மனதில் உதிக்கும் எதுவும் மந்திரம் போன்று ஆன்ம சக்தியை விழிப்பிக்கும் தன்மை உடையதாக இருக்கும்.

ஆக சாதனையின் நோக்கம் ஞானம், அதனை பெறுவதற்கு மனது  செம்மை அற்று இருப்பது ஒரு தடை!  அதுவே மூல காரணமும் கூட! ஆக மனதினை செம்மைப்படுத்துவதே சிறந்த யோக சாதனையும் கூட.....

யானை சக்தி அடைய





யானை சக்தி அடைய

அழிஞ்சில் விதையை எடுத்து  குரு வாரத்தில் யானையின் முகத்தில் போட்டுப் பூமியில் புதைக்கவும். அதற்குத் தினம் நீர் ஊற்றவுவும். முளைத்து, மரமாகி பழம் வந்ததும் அதன் ஒரு விதையை மூன்று உலோகங்களில் சுற்றி முகத்தில் வைத்துக் கொண்டால் ஒருவன் மதம் பிடித்த யானை நிகர் சம பலம் உடையவராக காற்றுருக்குச் சமமான பராக்கிரசாலியாக ஆவார்.


முற்காலத்தில் ஊரில் கோயில்

முற்காலத்தில் ஊரில் கோயில்
கோபுரத்தை விட உயரமாக எந்தக்
கட்டிடமும் இருக்கக் கூடாது
என்று ஒரு எழுதாத சட்டம்
இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான
கோபுரங்களையும் அதன் மேல்
இருக்கும் கலசங்களையும்
பார்த்திருப்பீர்கள். அதன் பின்
ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை
தெரியவில்லை. ஆனால் அதன்
பின் எவ்வளவு பெரிய அறிவியல்
ஒளிந்திருக்கிறது என
இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம்,
வெள்ளி செம்பு(அ)
ஐம்பொன்னால் செய்யப்பட்ட
கலசங்கள் இருக்கும்.
இக்கலசங்களிலும் அதில்
கொட்டப்படும் தானியங்களும்,
உலோகங்களும் மின் காந்த
அலைகளை ஈர்க்கும் சக்தியை
கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
நெல், உப்பு, கேழ்வரகு, தினை,
வரகு, சோளம், மக்கா சோளம்,
சலமை, எள் ஆகியவற்றைக்
கொட்டினார்கள். குறிப்பாக வரகு
தானியத்தை அதிகமாகக்
கொட்டினார்கள். காரணத்தைத்
தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக
இருக்கிறது. வரகு மின்னலைத்
தாங்கும் அதிக ஆற்றலைப்
பெற்றிருப்பது என இப்போதைய
அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை,
பன்னிரெண்டு வருடங்களுக்கு
ஒரு முறை குடமுழுக்கு விழா
என்ற பெயரில் கலசங்களில்
இருக்கும் பழைய தானியங்கள்
நீக்கப்பட்டு புதிய தானியங்கள்
நிரப்பப்படுகிறது. அதை
இன்றைக்கு சம்பிரதாயமாகவே
மட்டும் கடைபிடிக்கிறார்கள்.
காரணத்தைத் தேடினால், அந்த
தானியங்களுக்குப்
பன்னிரெண்டு வருடங்களுக்குத்
தான் அந்த
சக்தி இருக்கிறது. அதன் பின் அது
செயல் இழந்து விடுகிறது!! இதை
எப்படி அப்போது அறிந்திருந்தார்
கள்..?!
ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா
அதுவும் இல்லை. இன்றைக்குப்
பெய்வதைப் போன்று மூன்று
நாட்களா மழை பெய்தது அன்று?
தொடர்ந்து மூன்று மாதங்கள்
பெய்தது. ஒரு வேளை
தானியங்கள் அனைத்தும் நீரில்
மூழ்கி அழிந்து போனால்,
மீண்டும் எதை வைத்துப் பயிர்
செய்வது? இவ்வளவு உயரமான
கோபுரத்தை நீர் சூழ
வாய்ப்பில்லை. இதையே மீண்டும்
எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான
இடத்தில் அமைந்த இடி தாங்கியோ
அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.
மேலும் அது எத்தனை பேரைக்
காப்பாற்றும் என்பது அதன்
உயரத்தைப் பொறுத்தது.
அடிப்படையில் கலசங்கள்
இடிதாங்கிகள். உதாரணமாக
கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர்
என்றால் நூறு மீட்டர் விட்டம்
வரைக்கும் பரப்பில் எத்தனை பேர்
இருந்தாலும் அவர்கள் இடி
தாங்காமல் காக்கப்படுவார்கள்.
அதாவது சுமார் 75008 மீட்டர்
பரப்பளவிலிருக்கும் மனிதர்கள்
காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு
வாயில்கள் உள்ளன. அது
நாலாபுறமும் 75000சதுர மீட்டர்
பரப்பளவைக் காத்து நிற்கிறது!
இது ஒரு தோராயமான கணக்கு
தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள்
இதை விட அதிகமான பணிகளை
சத்தமில்லாமல் செய்து
வருகின்றன.
"கோயில் இல்லா ஊரில்
குடியிருக்க
வேண்டாம்" என்ற பழமொழி
நினைவுக்கு வருகிறது....🌺🌺🌺🌺

இந்துக்கள் அனைவரும் தம் இல்லத்திலோ அல்லது கோவில்களிலோ பூஜை செய்வதற்க்கு முண்னதாக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில



இந்துக்கள் அனைவரும் தம் இல்லத்திலோ அல்லது கோவில்களிலோ பூஜை செய்வதற்க்கு முண்னதாக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில, . . .
~

1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாஸங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாஸங்கள்(3).
~~~~~~~~~~~~~~~~~~

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம் முதலில் . . .

1.தமிழ் வருடங்கள்:-

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
~

2.அயணங்கள்:-

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.


3.ருதுக்கள்:-

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது(ஆனி,ஆடி)
3.வர்ஷருது(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது(மார்கழி,தை)
6.சிசிரருது(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~

4.மாஸங்கள்:-

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
~~~~~~~~~~~~~~~~~~

5.பக்ஷங்கள்:-

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
~~~~~~~~~~~~~~~~~~

6.) திதிக்கள்:-

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
~~~~~~~~~~~~~~~~~~

7.வாஸரங்கள்:-

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
~~~~~~~~~~~~~~~~~~

8.நட்சத்திரங்கள்:-

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
~~~~~~~~~~~~~~~~~~

9.கிரகங்கள்:-

கிரகங்கள் ஒன்பது ஆகும்
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
~~~~~~~~~~~~~~~~~~

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:-

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொருT நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .

நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
~~~~~~~~~~~~~~~~~~

11.நவரத்தினங்கள்:-

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
~~~~~~~~~~~~~~~~~~

12.பூதங்கள்:-
பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
 நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
~~~~~~~~~~~~~~y~~~~
y
13.மஹா பாதகங்கள்:-
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
~~~~~~~~~~~~~~~~~~

14.பேறுகள்
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.
~~~~~~~~~~~~~~~~~~

15.புராணங்கள்:-
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.c
~~~~~~~~~~~~~~~~~~

16.இதிகாஸங்கள்:-
இதிகாஸங்கள் மூண்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.



சிவன் 1000 தமிழ்ப் பெயர்கள்

சிவன் 1000 தமிழ்ப் பெயர்கள்

Adaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான்
Adaivarkkamudhan - அடைவார்க்கமுதன்
Adaivorkkiniyan - அடைவோர்க்கினியன்
Adalarasan - ஆடலரசன்
Adalazagan - ஆடலழகன்
Adalerran - அடலேற்றன்
Adalvallan - ஆடல்வல்லான்
Adalvidaippagan - அடல்விடைப்பாகன்
Adalvidaiyan - அடல்விடையான்
Adangakkolvan - அடங்கக்கொள்வான்
Adarchadaiyan - அடர்ச்சடையன்
Adarko - ஆடற்கோ
Adhaladaiyan - அதலாடையன்
Adhi - ஆதி
Adhibagavan - ஆதிபகவன்
Adhipuranan - ஆதிபுராணன்
Adhiraiyan - ஆதிரையன்
Adhirthudiyan - அதிர்துடியன்
Adhirunkazalon - அதிருங்கழலோன்
Adhiyannal - ஆதியண்ணல்
Adikal - அடிகள்
Adiyarkkiniyan - அடியார்க்கினியான்
Adiyarkkunallan - அடியார்க்குநல்லான்
Adumnathan - ஆடும்நாதன்
Agamabodhan - ஆகமபோதன்
Agamamanon - ஆகமமானோன்
Agamanathan - ஆகமநாதன்
Aimmukan - ஐம்முகன்
Aindhadi - ஐந்தாடி
Aindhukandhan - ஐந்துகந்தான்
Ainniraththannal - ஐந்நிறத்தண்ணல்
Ainthalaiyaravan - *ஐந்தலையரவன்
Ainthozilon - ஐந்தொழிலோன்
Aivannan - ஐவண்ணன்
Aiyamerpan - ஐயமேற்பான்
Aiyan - ஐயன்
Aiyar - ஐயர்
Aiyaranindhan - ஐயாறணிந்தான்
Aiyarrannal - ஐயாற்றண்ணல்
Aiyarrarasu - ஐயாற்றரசு
Akandan - அகண்டன்
Akilankadandhan - அகிலங்கடந்தான்
Alagaiyanrozan - அளகையன்றோழன்
Alakantan - ஆலகண்டன்
Alalamundan - ஆலாலமுண்டான்
Alamarchelvan - ஆலமர்செல்வன்
Alamardhevan - ஆலமர்தேன்
Alamarpiran - ஆலமர்பிரான்
Alamidarran - ஆலமிடற்றான்
Alamundan - ஆலமுண்டான்
Alan - ஆலன்
Alaniizalan - ஆலநீழலான்
Alanthurainathan - ஆலந்துறைநாதன்
Alappariyan - அளப்பரியான்
Alaramuraiththon - ஆலறமுறைத்தோன்
Alavayadhi - ஆலவாய்ஆதி
Alavayannal - ஆலவாயண்ணல்
Alavilan - அளவிலான்
Alavili - அளவிலி
Alavilpemman - ஆலவில்பெம்மான்
Aliyan - அளியான்
Alnizarkadavul - ஆல்நிழற்கடவுள்
Alnizarkuravan - ஆல்நிழற்குரவன்
Aluraiadhi - ஆலுறைஆதி
Amaivu - அமைவு
Amaiyanindhan - ஆமையணிந்தன்
Amaiyaran - ஆமையாரன்
Amaiyottinan - ஆமையோட்டினன்
Amalan - அமலன்
Amararko - அமரர்கோ
Amararkon - அமரர்கோன்
Ambalakkuththan - அம்பலக்கூத்தன்
Ambalaththiisan - அம்பலத்தீசன்
Ambalavan - அம்பலவான்
Ambalavanan - அம்பலவாணன்
Ammai - அம்மை
Amman - அம்மான்
Amudhan - அமுதன்
Amudhiivallal - அமுதீவள்ளல்
Anaiyar - ஆனையார்
Anaiyuriyan - ஆனையுரியன்
Anakan - அனகன்
Analadi - அனலாடி
Analendhi - அனலேந்தி
Analuruvan - அனலுருவன்
Analviziyan - அனல்விழியன்
Anandhakkuththan - ஆனந்தக்கூத்தன்
Anandhan - ஆனந்தன்
Anangkan - அணங்கன்
Ananguraipangan - அணங்குறைபங்கன்
Anarchadaiyan - அனற்சடையன்
Anarkaiyan - அனற்கையன்
Anarrun - அனற்றூண்
Anathi - அனாதி
Anay - ஆனாய்
Anban - அன்பன்
Anbarkkanban - அன்பர்க்கன்பன்
Anbudaiyan - அன்புடையான்
Anbusivam - அன்புசிவம்
Andakai - ஆண்டகை
Andamurththi - அண்டமூர்த்தி
Andan - அண்டன்
Andan - ஆண்டான்
Andavan - ஆண்டவன்
Andavanan - அண்டவாணன்
Andhamillariyan - அந்தமில்லாரியன்
Andhivannan - அந்திவண்ணன்
Anekan - அனேகன்/அநேகன்
Angkanan - அங்கணன்
Anip Pon - ஆணிப் பொன்
Aniyan - அணியன்
Anna - அண்ணா
Annai - அன்னை
Annamalai - அண்ணாமலை
Annamkanan - அன்னம்காணான்
Annal - அண்ணல்
Anthamillan - அந்தமில்லான்
Anthamilli - அந்தமில்லி
Anthanan - அந்தணன்
Anthiran - அந்திரன்
Anu - அணு
Anychadaiyan - அஞ்சடையன்
Anychadiyappan - அஞ்சாடியப்பன்
Anychaikkalaththappan - அஞ்சைக்களத்தப்பன்
Anychaiyappan - அஞ்சையப்பன்
Anychezuththan - அஞ்செழுத்தன்
Anychezuththu - அஞ்செழுத்து
Appanar - அப்பனார்
Araamuthu - ஆராஅமுது
Aradharanilayan - ஆறாதாரநிலயன்
Araiyaniyappan - அறையணியப்பன்
Arakkan - அறக்கண்
Arakkodiyon - அறக்கொடியோன்
Aran - அரன்
Aranan - ஆரணன்
Araneri - அறநெறி
Aranivon - ஆறணிவோன்
Araravan - ஆரரவன்
Arasu - அரசு
Araththurainathan - அரத்துறைநாதன்
Aravachaiththan - அரவசைத்தான்
Aravadi - அரவாடி
Aravamudhan - ஆராவமுதன்
Aravan - அறவன்
Aravaniyan - அரவணியன்
Aravanychudi - அரவஞ்சூடி
Aravaraiyan - அரவரையன்
Aravarcheviyan - அரவார்செவியன்
Aravaththolvalaiyan - அரவத்தோள்வளையன்
Aravaziandhanan - அறவாழிஅந்தணன்
Aravendhi - அரவேந்தி
Aravidaiyan - அறவிடையான்
Arazagan - ஆரழகன்
Arccithan - அர்ச்சிதன்
Archadaiyan - ஆர்சடையன்
Areruchadaiyan - ஆறேறுச்சடையன்
Areruchenniyan - ஆறேறுச்சென்னியன்
Arikkumariyan - அரிக்குமரியான்
Arivaipangan - அரிவைபங்கன்
Arivan - அறிவன்
Arivu - அறிவு
Arivukkariyon - அறிவுக்கரியோன்
Ariya Ariyon - அரியஅரியோன்
Ariya Ariyon - அறியஅரியோன்
Ariyan - ஆரியன்
Ariyan - அரியான்
Ariyasivam - அரியசிவம்
Ariyavar - அரியவர்
Ariyayarkkariyan - அரியயற்க்கரியன்
Ariyorukuran - அரியோருகூறன்
Arpudhak Kuththan - அற்புதக்கூத்தன்
Arpudhan - அற்புதன்
Aru - அரு
Arul - அருள்
Arulalan - அருளாளன்
Arulannal - அருளண்ணல்
Arulchodhi - அருள்சோதி
Arulirai - அருளிறை
Arulvallal - அருள்வள்ளல்
Arulvallal Nathan - அருள்வள்ளல்நாதன்
Arulvallan - அருள்வல்லான்
Arumalaruraivan - அறுமலருறைவான்
Arumani - அருமணி
Arumporul - அரும்பொருள்
Arunmalai - அருண்மலை
Arunthunai - அருந்துணை
Aruran - ஆரூரன்
Arurchadaiyan - ஆறூர்ச்சடையன்
Arurmudiyan - ஆறூர்முடியன்
Arut Kuththan - அருட்கூத்தன்
Arutchelvan - அருட்செல்வன்
Arutchudar - அருட்சுடர்
Aruththan - அருத்தன்
Arutperunychodhi - அருட்பெருஞ்சோதி
Arutpizambu - அருட்பிழம்பு
Aruvan - அருவன்
Aruvuruvan - அருவுருவன்
Arvan - ஆர்வன்
Athikunan - அதிகுணன்
Athimurththi - ஆதிமூர்த்தி
Athinathan - ஆதிநாதன்
Athipiran - ஆதிபிரான்
Athisayan - அதிசயன்
Aththan - அத்தன்
Aththan - ஆத்தன்
Aththichudi - ஆத்திச்சூடி
Atkondan - ஆட்கொண்டான்
Attugappan - ஆட்டுகப்பான்
Attamurthy - அட்டமூர்த்தி
Avanimuzudhudaiyan -
அவனிமுழுதுடையான்
Avinasi - அவிநாசி
Avinasiyappan - அவிநாசியப்பன்
Avirchadaiyan - அவிர்ச்சடையன்
Ayavandhinathan - அயவந்திநாதன்
Ayirchulan - அயிற்சூலன்
Ayizaiyanban - ஆயிழையன்பன்
Azagukadhalan - அழகுகாதலன்
Azakan - அழகன்
Azal Vannan - அழல்வண்ணன்
Azalarchadaiyan - அழலார்ச்சடையன்
Azalmeni - அழல்மேனி
Azarkannan - அழற்கண்ணன்
Azarkuri - அழற்குறி
Azicheydhon - ஆழிசெய்தோன்
Azi Indhan - ஆழி ஈந்தான்
Azivallal - ஆழிவள்ளல்
Azivilan - அழிவிலான்
Aziyan - ஆழியான்
Aziyar - ஆழியர்
Aziyarulndhan - ஆழியருள்ந்தான்
Bagampennan - பாகம்பெண்ணன்
Bagampenkondon - பாகம்பெண்கொண்டோன்
Budhappadaiyan - பூதப்படையன்
Budhavaninathan - பூதவணிநாதன்
Buvan - புவன்
Buvanankadandholi - புவனங்கடந்தொளி
Chadaimudiyan - சடைமுடியன்
Chadaiyan - சடையன்
Chadaiyandi - சடையாண்டி
Chadaiyappan - சடையப்பன்
Chalamanivan - சலமணிவான்
Chalamarchadaiyan - சலமார்சடையன்
Chalanthalaiyan - சலந்தலையான்
Chalanychadaiyan - சலஞ்சடையான்
Chalanychudi - சலஞ்சூடி
Chandhavenpodiyan - சந்தவெண்பொடியன்
Changarthodan - சங்கார்தோடன்
Changarulnathan - சங்கருள்நாதன்
Chandramouli - சந்ரமௌலி
Chargunanathan - சற்குணநாதன்
Chattainathan - சட்டைநாதன்
Chattaiyappan - சட்டையப்பன்
Chekkarmeni - செக்கர்மேனி
Chemmeni - செம்மேனி
Chemmeni Nathan - செம்மேனிநாதன்
Chemmeniniirran - செம்மேனிநீற்றன்
Chemmeniyamman - செம்மேனியம்மான்
Chempavalan - செம்பவளன்
Chemporchodhi - செம்பொற்சோதி
Chemporriyagan - செம்பொற்றியாகன்
Chemporul - செம்பொருள்
Chengkankadavul - செங்கன்கடவுள்
Chenneriyappan - செந்நெறியப்பன்
Chenychadaiyan - செஞ்சடையன்
Chenychadaiyappan - செஞ்சடையப்பன்
Chenychudarchchadaiyan - செஞ்சுடர்ச்சடைய
ன்
Cherakkaiyan - சேராக்கையன்
Chetchiyan - சேட்சியன்
Cheyizaibagan - சேயிழைபாகன்
Cheyizaipangan - சேயிழைபங்கன்
Cheyyachadaiyan - செய்யச்சடையன்
Chirrambalavanan - சிற்றம்பலவாணன்
Chiththanathan - சித்தநாதன்
Chittan - சிட்டன்
Chivan - சிவன்
Chodhi - சோதி
Chodhikkuri - சோதிக்குறி
Chodhivadivu - சோதிவடிவு
Chodhiyan - சோதியன்
Chokkalingam - சொக்கலிங்கம்
Chokkan - சொக்கன்
Chokkanathan - சொக்கநாதன்
Cholladangan - சொல்லடங்கன்
Chollarkariyan - சொல்லற்கரியான்
Chollarkiniyan - சொல்லற்கினியான்
Chopura Nathan - சோபுரநாதன்
Chudalaippodipusi - சுடலைப்பொடிபூசி
Chudalaiyadi - சுடலையாடி
Chudar - சுடர்
Chudaramaimeni - சுடரமைமேனி
Chudaranaiyan - சுடரனையான்
Chudarchadaiyan - சுடர்ச்சடையன்
Chudarendhi - சுடரேந்தி
Chudarkkannan - சுடர்க்கண்ணன்
Chudarkkozundhu - சுடர்க்கொழுந்து
Chudarkuri - சுடற்குறி
Chudarmeni - சுடர்மேனி
Chudarnayanan - சுடர்நயனன்
Chudaroli - சுடரொளி
Chudarviduchodhi - சுடர்விடுச்சோதி
Chudarviziyan - சுடர்விழியன்
Chulaithiirththan - சூலைதீர்த்தான்
Chulamaraiyan - சூலமாரையன்
Chulappadaiyan - சூலப்படையன்
Dhanu - தாணு
Dhevadhevan - தேவதேவன்
Dhevan - தேவன்
Edakanathan - ஏடகநாதன்
Eduththapadham - எடுத்தபாதம்
Ekamban - ஏகம்பன்
Ekapathar - ஏகபாதர்
Eliyasivam - எளியசிவம்
Ellaiyiladhan - எல்லையிலாதான்
Ellamunarndhon - எல்லாமுணர்ந்தோன்
Ellorkkumiisan - எல்லோர்க்குமீசன்
Emperuman - எம்பெருமான்
Enakkomban - ஏனக்கொம்பன்
Enanganan - ஏனங்காணான்
Enaththeyiran - ஏனத்தெயிறான்
Enavenmaruppan - ஏனவெண்மருப்பன்
Engunan - எண்குணன்
Enmalarchudi - எண்மலர்சூடி
Ennaththunaiyirai - எண்ணத்துனையிறை
Ennattavarkkumirai - எந்நாட்டவர்க்குமிறை
Ennuraivan - எண்ணுறைவன்
Ennuyir - என்னுயிர்
Enrumezilan - என்றுமெழிலான்
Enthai - எந்தை
Enthay - எந்தாய்
En Tholar - எண் தோளர்
Entolan - எண்டோளன்
Entolavan - எண்டோளவன்
Entoloruvan - எண்டோளொருவன்
Eramarkodiyan - ஏறமர்கொடியன்
Ereri - ஏறெறி
Eripolmeni - எரிபோல்மேனி
Eriyadi - எரியாடி
Eriyendhi - எரியேந்தி
Erran - ஏற்றன்
Erudaiiisan - ஏறுடைஈசன்
Erudaiyan - ஏறுடையான்
Erudheri - எருதேறி
Erudhurvan - எருதூர்வான்
Erumbiisan - எரும்பீசன்
Erurkodiyon - ஏறூர்கொடியோன்
Eruyarththan - ஏறுயர்த்தான்
Eyilattan - எயிலட்டான்
Eyilmunreriththan - எயில்மூன்றெரித்தான்
Ezhaipagaththan - ஏழைபாகத்தான்
Ezukadhirmeni - எழுகதிமேனி
Ezulakali - ஏழுலகாளி
Ezuththari Nathan - எழுத்தறிநாதன்
Gangaichchadiayan - கங்கைச்சடையன்
Gangaiyanjchenniyan - கங்கையஞ்சென்னிய
ான்
Gangaichudi - கங்கைசூடி
Gangaivarchadaiyan - கங்கைவார்ச்சடையன்
Gnanakkan - ஞானக்கண்
Gnanakkozunthu - ஞானக்கொழுந்து
Gnanamurththi - ஞானமூர்த்தி
Gnanan - ஞானன்
Gnananayakan - ஞானநாயகன்
Guru - குரு
Gurumamani - குருமாமணி
Gurumani - குருமணி
Idabamurvan - இடபமூர்வான்
Idaimarudhan - இடைமருதன்
Idaiyarrisan - இடையாற்றீசன்
Idaththumaiyan - இடத்துமையான்
Ichan - ஈசன்
Idili - ஈடிலி
Iirottinan - ஈரோட்டினன்
Iisan - ஈசன்
Ilakkanan - இலக்கணன்
Ilamadhichudi - இளமதிசூடி
Ilampiraiyan - இளம்பிறையன்
Ilangumazuvan - இலங்குமழுவன்
Illan - இல்லான்
Imaiyalkon - இமையாள்கோன்
Imaiyavarkon - இமையவர்கோன்
Inaiyili - இணையிலி
Inamani - இனமணி
Inban - இன்பன்
Inbaniingan - இன்பநீங்கான்
Indhusekaran - இந்துசேகரன்
Indhuvaz Chadaiyan - இந்துவாழ்சடையன்
Iniyan - இனியன்
Iniyan - இனியான்
Iniyasivam - இனியசிவம்
Irai - இறை
Iraivan - இறைவன்
Iraiyan - இறையான்
Iraiyanar - இறையனார்
Iramanathan - இராமநாதன்
Irappili - இறப்பிலி
Irasasingkam - இராசசிங்கம்
Iravadi - இரவாடி
Iraviviziyan - இரவிவிழியன்
Irilan - ஈறிலான் -
Iruvareththuru - இருவரேத்துரு
Iruvarthettinan - இருவர்தேட்டினன்
Isaipadi - இசைபாடி
Ittan - இட்டன்
Iyalbazagan - இயல்பழகன்
Iyamanan - இயமானன்
Kadaimudinathan - கடைமுடிநாதன்
Kadalvidamundan - கடல்விடமுண்டான்
Kadamba Vanaththirai - கடம்பவனத்திறை
Kadavul - கடவுள்
Kadhir Nayanan - கதிர்நயனன்
Kadhirkkannan - கதிர்க்கண்ணன்
Kaichchinanathan - கைச்சினநாதன்
Kalabayiravan - காலபயிரவன்
Kalai - காளை
Kalaikan - களைகண்
Kalaippozudhannan - காலைப்பொழுதன்னன்
Kalaiyan - கலையான்
Kalaiyappan - காளையப்பன்
Kalakalan - காலகாலன்
Kalakandan - காளகண்டன்
Kalarmulainathan - களர்முளைநாதன்
Kalirruriyan - களிற்றுரியன்
Kalirrurivaipporvaiyan - களிற்றுரிவைப்போ
ர்வையான்
Kallalnizalan - கல்லால்நிழலான்
Kalvan - கள்வன்
Kamakopan - காமகோபன்
Kamalapathan - கமலபாதன்
Kamarkayndhan - காமற்காய்ந்தான்
Kanaladi - கனலாடி
Kanalarchadaiyan - கனலார்ச்சடையன்
Kanalendhi - கனலேந்தி
Kanalmeni - கனல்மேனி
Kanalviziyan - கனல்விழியன்
Kananathan - கணநாதன்
Kanarchadaiyan - கனற்ச்சடையன்
Kanchumandhanerriyan - கண்சுமந்தநெற்றியன்
Kandan - கண்டன்
Kandthanarthathai - கந்தனார்தாதை
Kandikaiyan - கண்டிகையன்
Kandikkazuththan - கண்டிக்கழுத்தன்
Kangkalar - கங்காளர்
Kangkanayakan - கங்காநாயகன்
Kani - கனி
Kanichchivanavan - கணிச்சிவாணவன்
Kanmalarkondan - கண்மலர்கொண்டான்
Kanna - கண்ணா
Kannalan - கண்ணாளன்
Kannayiranathan - கண்ணாயிரநாதன்
Kannazalan - கண்ணழலான்
Kannudhal - கண்ணுதல்
Kannudhalan - கண்ணுதலான்
Kantankaraiyan - கண்டங்கறையன்
Kantankaruththan - கண்டங்கருத்தான்
Kapalakkuththan - காபாலக்கூத்தன்
Kapali - கபாலி
Kapali - காபாலி
Karaikkantan - கறைக்கண்டன்
Karaimidarran - கறைமிடற்றன்
Karaimidarrannal - கறைமிடற்றண்ணல்
Karanan - காரணன்
Karandthaichchudi - கரந்தைச்சூடி
Karaviiranathan - கரவீரநாதன்
Kariyadaiyan - கரியாடையன்
Kariyuriyan - கரியுரியன்
Karpaganathan - கற்பகநாதன்
Karpakam - கற்பகம்
Karraichchadaiyan - கற்றைச்சடையன்
Karraivarchchadaiyan - கற்றைவார்ச்சடைய
ான்
Karumidarran - கருமிடற்றான்
Karuththamanikandar - கறுத்தமணிகண்டர்
Karuththan - கருத்தன்
Karuththan - கருத்தான்
Karuvan - கருவன்
Kathalan - காதலன்
Kattangkan - கட்டங்கன்
Kavalalan - காவலாளன்
Kavalan - காவலன்
Kayilainathan - கயிலைநாதன்
Kayilaikkizavan - கயிலைக்கிழவன்
Kayilaimalaiyan - கயிலைமலையான்
Kayilaimannan - கயிலைமன்னன்
Kayilaippadhiyan - கயிலைப்பதியன்
Kayilaipperuman - கயிலைபெருமான்
Kayilaivendhan - கயிலைவேந்தன்
Kayilaiyamarvan - கயிலையமர்வான்
Kayilaiyan - கயிலையன்
Kayilaiyan - கயிலையான்
Kayilayamudaiyan - கயிலாயமுடையான்
Kayilayanathan - கயிலாயநாதன்
Kazarchelvan - கழற்செல்வன்
Kedili - கேடிலி
Kediliyappan - கேடிலியப்பன்
Kezalmaruppan - கேழல்மறுப்பன்
Kezarkomban - கேழற்கொம்பன்
Kiirranivan - கீற்றணிவான்
Ko - கோ
Kodika Iishvaran - கோடிக்காஈச்வரன்
Kodikkuzagan - கோடிக்குழகன்
Kodukotti - கொடுகொட்டி
Kodumudinathan - கொடுமுடிநாதன்
Kodunkunrisan - கொடுங்குன்றீசன்
Kokazinathan - கோகழிநாதன்
Kokkaraiyan - கொக்கரையன்
Kokkiragan - கொக்கிறகன்
Kolachchadaiyan - கோலச்சடையன்
Kolamidarran - கோலமிடற்றன்
Koliliyappan - கோளிலியப்பன்
Komakan - கோமகன்
Koman - கோமான்
Kombanimarban - கொம்பணிமார்பன்
Kon - கோன்
Konraialangkalan - கொன்றை அலங்கலான்
Konraichudi - கொன்றைசூடி
Konraiththaron - கொன்றைத்தாரோன்
Konraivendhan - கொன்றைவேந்தன்
Korravan - கொற்றவன்
Kozundhu - கொழுந்து
Kozundhunathan - கொழுந்துநாதன்
Kudamuzavan - குடமுழவன்
Kudarkadavul - கூடற்கடவுள்
Kuduvadaththan - கூடுவடத்தன்
Kulaivanangunathan - குலைவணங்குநாதன்
Kulavan - குலவான்
Kumaran - குமரன்
Kumaranradhai - குமரன்றாதை
Kunakkadal - குணக்கடல்
Kunarpiraiyan - கூனற்பிறையன்
Kundalachcheviyan - குண்டலச்செவியன்
Kunra Ezilaan - குன்றாஎழிலான்
Kupilan - குபிலன்
Kuravan - குரவன்
Kuri - குறி
Kuriyilkuriyan - குறியில்குறியன்
Kuriyilkuththan - குறியில்கூத்தன்
Kuriyuruvan - குறியுருவன்
Kurram Poruththa Nathan - குற்றம்பொருத்தந
ாதன்
Kurran^Kadindhan - கூற்றங்கடிந்தான்
Kurran^Kayndhan - கூற்றங்காய்ந்தான்
Kurran^Kumaiththan - கூற்றங்குமத்தான்
Kurrudhaiththan - கூற்றுதைத்தான்
Kurumpalanathan - குறும்பலாநாதன்
Kurundhamarguravan - குருந்தமர்குரவன்
Kurundhamevinan - குருந்தமேவினான்
Kuththan - கூத்தன்
Kuththappiran - கூத்தபிரான்
Kuvilamakizndhan - கூவிளமகிழ்ந்தான்
Kuvilanychudi - கூவிளஞ்சூடி
Kuvindhan - குவிந்தான்
Kuzagan - குழகன்
Kuzaikadhan - குழைகாதன்
Kuzaithodan - குழைதோடன்
Kuzaiyadu Cheviyan - குழையாடுசெவியன்
Kuzarchadaiyan - குழற்ச்சடையன்
Machilamani - மாசிலாமணி
Madandhaipagan - மடந்தைபாகன்
Madavalbagan - மடவாள்பாகன்
Madha - மாதா
Madhavan - மாதவன்
Madhevan - மாதேவன்
Madhimuththan - மதிமுத்தன்
Madhinayanan - மதிநயனன்
Madhirukkum Padhiyan - மாதிருக்கும்
பாதியன்
Madhivanan - மதிவாணன்
Madhivannan - மதிவண்ணன்
Madhiviziyan - மதிவிழியன்
Madhorubagan - மாதொருபாகன்
Madhupadhiyan - மாதுபாதியன்
Maikolcheyyan - மைகொள்செய்யன்
Mainthan - மைந்தன்
Maiyanimidaron - மையணிமிடறோன்
Maiyarkantan - மையார்கண்டன்
Makayan Udhirankondan - மாகாயன்
உதிரங்கொண்டான்
Malaimadhiyan - மாலைமதியன்
Malaimakal Kozhunan - மலைமகள் கொழுநன்
Malaivalaiththan - மலைவளைத்தான்
Malaiyalbagan - மலையாள்பாகன்
Malamili - மலமிலி
Malarchchadaiyan - மலர்ச்சடையன்
Malorubagan - மாலொருபாகன்
Malvanangiisan - மால்வணங்கீசன்
Malvidaiyan - மால்விடையன்
Maman - மாமன்
Mamani - மாமணி
Mami - மாமி
Man - மன்
Manakkuzagan - மணக்குழகன்
Manalan - மணாளன்
Manaththakaththan - மனத்தகத்தான்
Manaththunainathan - மனத்துணைநாதன்
Manavachakamkadandhar - மனவாசகம்கடந்தவர்
Manavalan - மணவாளன்
Manavazagan - மணவழகன்
Manavezilan - மணவெழிலான்
Manchumandhan - மண்சுமந்தான்
Mandharachchilaiyan - மந்தரச்சிலையன்
Mandhiram - மந்திரம்
Mandhiran - மந்திரன்
Manendhi - மானேந்தி
Mangaibagan - மங்கைபாகன்
Mangaimanalan - மங்கைமணாளன்
Mangaipangkan - மங்கைபங்கன்
Mani - மணி
Manidan - மானிடன்
Manidaththan - மானிடத்தன்
Manikantan - மணிகண்டன்
Manikka Vannan - மாணிக்கவண்ணன்
Manikkakkuththan - மாணிக்கக்கூத்தன்
Manikkam - மாணிக்கம்
Manikkaththiyagan - மாணிக்கத்தியாகன்
Manmarikkaraththan - மான்மறிக்கரத்தான்
Manimidarran - மணிமிடற்றான்
Manivannan - மணிவண்ணன்
Maniyan - மணியான்
Manjchan - மஞ்சன்
Manrakkuththan - மன்றக்கூத்தன்
Manravanan - மன்றவாணன்
Manruladi - மன்றுளாடி
Manrulan - மன்றுளான்
Mapperunkarunai - மாப்பெருங்கருணை
Maraicheydhon - மறைசெய்தோன்
Maraikkattu Manalan -
மறைக்காட்டு மணாளன்
Maraineri - மறைநெறி
Maraipadi - மறைபாடி
Maraippariyan - மறைப்பரியன்
Maraiyappan - மறையப்பன்
Maraiyodhi - மறையோதி
Marakatham - மரகதம்
Maraniiran - மாரநீறன்
Maravan - மறவன்
Marilamani - மாறிலாமணி
Marili - மாறிலி
Mariyendhi - மறியேந்தி
Markantalan - மாற்கண்டாளன்
Markaziyiindhan - மார்கழிஈந்தான்
Marrari Varadhan - மாற்றறிவரதன்
Marudhappan - மருதப்பன்
Marundhan - மருந்தன்
Marundhiisan - மருந்தீசன்
Marundhu - மருந்து
Maruvili - மருவிலி
Masarrachodhi - மாசற்றசோதி
Masaruchodhi - மாசறுசோதி
Masili - மாசிலி
Mathevan - மாதேவன்
Mathiyar - மதியர்
Maththan - மத்தன்
Mathuran - மதுரன்
Mavuriththan - மாவுரித்தான்
Mayan - மாயன்
Mazavidaippagan - மழவிடைப்பாகன்
Mazavidaiyan - மழவிடையன்
Mazuppadaiyan - மழுப்படையன்
Mazuvalan - மழுவலான்
Mazuvalan - மழுவாளன்
Mazhuvali - மழுவாளி
Mazhuvatpadaiyan - மழுவாட்படையன்
Mazuvendhi - மழுவேந்தி
Mazuvudaiyan - மழுவுடையான்
Melar - மேலர்
Melorkkumelon - மேலோர்க்குமேலோன்
Meruvidangan - மேருவிடங்கன்
Meruvillan - மேருவில்லன்
Meruvilviiran - மேருவில்வீரன்
Mey - மெய்
Meypporul - மெய்ப்பொருள்
Meyyan - மெய்யன்
Miinkannanindhan - மீன்கண்ணணிந்தான்
Mikkarili - மிக்காரிலி
Milirponnan - மிளிர்பொன்னன்
Minchadaiyan - மின்சடையன்
Minnaruruvan - மின்னாருருவன்
Minnuruvan - மின்னுருவன்
Mudhalillan - முதலில்லான்
Mudhalon - முதலோன்
Mudhirappiraiyan - முதிராப்பிறையன்
Mudhukattadi - முதுகாட்டாடி
Mudhukunriisan - முதுகுன்றீசன்
Mudivillan - முடிவில்லான்
Mukkanmurthi - முக்கண்மூர்த்தி
Mukkanan - முக்கணன்
Mukkanan - முக்கணான்
Mukkannan - முக்கண்ணன்
Mukkatkarumbu - முக்கட்கரும்பு
Mukkonanathan - முக்கோணநாதன்
Mulai - முளை
Mulaimadhiyan - முளைமதியன்
Mulaivenkiirran - முளைவெண்கீற்றன்
Mulan - மூலன்
Mulanathan - மூலநாதன்
Mulaththan - மூலத்தான்
Mullaivananathan - முல்லைவனநாதன்
Mummaiyinan - மும்மையினான்
Muni - முனி
Munnayanan - முன்னயனன்
Munnon - முன்னோன்
Munpan - முன்பன்
Munthai - முந்தை
Muppilar - மூப்பிலர்
Muppuram Eriththon - முப்புரம் எறித்தோன்
Murramadhiyan - முற்றாமதியன்
Murrunai - முற்றுணை
Murrunarndhon - முற்றுணர்ந்தோன்
Murrunychadaiyan - முற்றுஞ்சடையன்
Murththi - மூர்த்தி
Murugavudaiyar - முருகாவுடையார்
Murugudaiyar - முருகுடையார்
Muthaliyar - முதலியர்
Muthalvan - முதல்வன்
Muththan - முத்தன்
Muththar Vannan - முத்தார் வண்ணன்
Muththilangu Jodhi - முத்திலங்குஜோதி
Muththiyar - முத்தியர்
Muththu - முத்து
Muththumeni - முத்துமேனி
Muththuththiral - முத்துத்திரள்
Muvakkuzagan - மூவாக்குழகன்
Muvameniyan - மூவாமேனியன்
Muvamudhal - மூவாமுதல்
Muvarmudhal - மூவர்முதல்
Muvilaichchulan - மூவிலைச்சூலன்
Muvilaivelan - மூவிலைவேலன்
Muviziyon - மூவிழையோன்
Muyarchinathan - முயற்சிநாதன்
Muzudharindhon - முழுதறிந்தோன்
Muzudhon - முழுதோன்
Muzhumudhal - முழுமுதல்
Muzudhunarchodhi - முழுதுணர்ச்சோதி
Muzudhunarndhon - முழுதுணர்ந்தோன்
Nadan - நடன்
Nadhichadaiyan - நதிச்சடையன்
Nadhichudi - நதிசூடி
Nadhiyarchadaiyan - நதியார்ச்சடையன்
Nadhiyurchadaiyan - நதியூர்ச்சடையன்
Naduthariyappan - நடுத்தறியப்பன்
Naguthalaiyan - நகுதலையன்
Nakkan - நக்கன்
Nallan - நல்லான்
Nallasivam - நல்லசிவம்
Nalliruladi - நள்ளிருளாடி
Namban - நம்பன்
Nambi - நம்பி
Nanban - நண்பன்
Nandhi - நந்தி
Nandhiyar - நந்தியார்
Nanychamudhon - நஞ்சமுதோன்
Nanychanikantan - நஞ்சணிகண்டன்
Nanycharththon - நஞ்சார்த்தோன்
Nanychundon - நஞ்சுண்டோன்
Nanychunkantan - நஞ்சுண்கண்டன்
Nanychunkarunaiyan - நஞ்சுண்கருணையன்
Nanychunnamudhan - நஞ்சுண்ணமுதன்
Nanychunporai - நஞ்சுண்பொறை
Narchadaiyan - நற்ச்சடையன்
Naripagan - நாரிபாகன்
Narravan - நற்றவன்
Narrunai - நற்றுணை
Narrunainathan - நற்றுணைநாதன்
Nasaiyili - நசையிலி
Nathan - நாதன்
Nathi - நாதி
Nattamadi - நட்டமாடி
Nattamunron - நாட்டமூன்றோன்
Nattan - நட்டன்
Nattavan - நட்டவன்
Navalan - நாவலன்
Navalechcharan - நாவலேச்சரன்
Nayadi Yar - நாயாடி யார்
Nayan - நயன்
Nayanachchudaron - நயனச்சுடரோன்
Nayanamunran - நயனமூன்றன்
Nayananudhalon - நயனநுதலோன்
Nayanar - நாயனார்
Nayanaththazalon - நயனத்தழலோன்
Nedunychadaiyan - நெடுஞ்சடையன்
Nellivananathan - நெல்லிவனநாதன்
Neri - நெறி
Nerikattunayakan - நெறிகாட்டுநாயகன்
Nerrichchudaron - நெற்றிச்சுடரோன்
Nerrikkannan - நெற்றிக்கண்ணன்
Nerrinayanan - நெற்றிநயனன்
Nerriyilkannan - நெற்றியில்கண்ணன்
Nesan - நேசன்
Neyyadiyappan - நெய்யாடியப்பன்
Nidkandakan - நிட்கண்டகன்
Niilakantan - நீலகண்டன்
Niilakkudiyaran - நீலக்குடியரன்
Niilamidarran - நீலமிடற்றன்
Niilchadaiyan - நீள்சடையன்
Niinerinathan - நீனெறிநாதன்
Niiradi - நீறாடி
Niiranichemman - நீறணிச்செம்மான்
Niiranichudar - நீறணிசுடர்
Niiranikunram - நீறணிகுன்றம்
Niiranimani - நீறணிமணி
Niiraninudhalon - நீறணிநுதலோன்
Niiranipavalam - நீறணிபவளம்
Niiranisivan - நீறணிசிவன்
Niirarmeniyan - நீறர்மேனியன்
Niirchchadaiyan - நீர்ச்சடையன்
Niireruchadaiyan - நீறேறுசடையன்
Niireruchenniyan - நீறேறுசென்னியன்
Niirran - நீற்றன்
Niirudaimeni - நீறுடைமேனி
Nirupusi - நீறுபூசி
Nikarillar - நிகரில்லார்
Nilachadaiyan - நிலாச்சடையன்
Nilavanichadaiyan - நிலவணிச்சடையன்
Nilavarchadaiyan - நிலவார்ச்சடையன்
Nimalan - நிமலன்
Ninmalan - நின்மலன்
Ninmalakkozhunddhu - நீன்மலக்கொழுந்து
Nimirpunchadaiyan - நிமிர்புன்சடையன்
Niramayan - நிராமயன்
Niramba Azagiyan - நிரம்பஅழகியன்
Niraivu - நிறைவு
Niruththan - நிருத்தன்
Nithi - நீதி
Niththan - நித்தன்
Nokkamunron - நோக்கமூன்றோன்
Nokkuruanalon - நோக்குறுஅனலோன்
Nokkurukadhiron - நோக்குறுகதிரோன்
Nokkurumadhiyon - நோக்குறுமதியோன்
Nokkurunudhalon - நோக்குறுநுதலோன்
Noyyan - நொய்யன்
Nudhalorviziyan - நுதலோர்விழியன்
Nudhalviziyan - நுதல்விழியன்
Nudhalviziyon - நுதல்விழியோன்
Nudharkannan - நுதற்கண்ணன்
Nunnidaikuran - நுண்ணிடைகூறன்
Nunnidaipangan - நுண்ணிடைபங்கன்
Nunniyan - நுண்ணியன்
Odaniyan - ஓடணியன்
Odarmarban - ஓடார்மார்பன்
Odendhi - ஓடேந்தி
Odhanychudi - ஓதஞ்சூடி
Olirmeni - ஒளிர்மேனி
Ongkaran - ஓங்காரன்
Ongkaraththudporul - ஓங்காரத்துட்பொருள்
Opparili - ஒப்பாரிலி
Oppili - ஒப்பிலி
Orraippadavaravan - ஒற்றைப்படவரவன்
Oruthalar - ஒருதாளர்
Oruththan - ஒருத்தன்
Oruthunai - ஒருதுணை
Oruvamanilli - ஒருவமனில்லி
Oruvan - ஒருவன்
Ottiichan - ஓட்டீசன்
Padarchadaiyan - படர்ச்சடையன்
Padhakamparisuvaiththan - பாதகம்பரிசுவைத்
தான்
Padhimadhinan - பாதிமாதினன்
Padikkasiindhan - படிகாசீந்தான்
Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த
பரமன்
Padiran - படிறன்
Pagalpalliruththon - பகல்பல்லிறுத்தோன்
Pakavan - பகவன்
Palaivana Nathan - பாலைவனநாதன்
Palannaniirran - பாலன்னநீற்றன்
Palar - பாலர்
Palichchelvan - பலிச்செல்வன்
Paliithadhai - பாலீதாதை
Palikondan - பலிகொண்டான்
Palinginmeni - பளிங்கின்மேனி
Palitherchelvan - பலித்தேர்செல்வன்
Pallavanathan - பல்லவநாதன்
Palniirran - பால்நீற்றன்
Palugandha Iisan - பாலுகந்தஈசன்
Palvanna Nathan - பால்வண்ணநாதன்
Palvannan - பால்வண்ணன்
Pambaraiyan - பாம்பரையன்
Pampuranathan - பாம்புரநாதன்
Panban - பண்பன்
Pandangkan - பண்டங்கன்
Pandaram - பண்டாரம்
Pandarangan - பண்டரங்கன்
Pandarangan - பாண்டரங்கன்
Pandippiran - பாண்டிபிரான்
Pangkayapathan - பங்கயபாதன்
Panimadhiyon - பனிமதியோன்
Panimalaiyan - பனிமலையன்
Panivarparru - பணிவார்பற்று
Paraayththuraiyannal - பராய்த்துறையண்ணல்
Paramamurththi - பரமமூர்த்தி
Paraman - பரமன்
Paramayoki - பரமயோகி
Paramessuvaran - பரமேச்சுவரன்
Parametti - பரமேட்டி
Paramparan - பரம்பரன்
Paramporul - பரம்பொருள்
Paran - பரன்
Paranjchothi - பரஞ்சோதி
Paranjchudar - பரஞ்சுடர்
Paraparan - பராபரன்
Parasudaikkadavul - பரசுடைக்கடவுள்
Parasupani - பரசுபாணி
Parathaththuvan - பரதத்துவன்
Paridanychuzan - பாரிடஞ்சூழன்
Paridhiyappan - பரிதியப்பன்
Parrarran - பற்றற்றான்
Parraruppan - பற்றறுப்பான்
Parravan - பற்றவன்
Parru - பற்று
Paruppan - பருப்பன்
Parvati Manalan - பார்வதி மணாளன்
Pasamili - பாசமிலி
Pasanasan - பாசநாசன்
Pasuveri - பசுவேறி
Pasumpon - பசும்பொன்
Pasupathan - பாசுபதன்
Pasupathi - பசுபதி
Paththan - பத்தன்
Pattan - பட்டன்
Pavala Vannan - பவளவண்ணன்
Pavalach Cheyyon - பவளச்செய்யோன்
Pavalam - பவளம்
Pavan - பவன்
Pavanasan - பாவநாசன்
Pavanasar - பாவநாசர்
Payarruraran - பயற்றூரரன்
Pazaiyan - பழையான்
Pazaiyon - பழையோன்
Pazakan - பழகன்
Pazamalainathan - பழமலைநாதன்
Pazanappiran - பழனப்பிரான்
Pazavinaiyaruppan - பழவினையறுப்பான்
Pemman - பெம்மான்
Penbagan - பெண்பாகன்
Penkuran - பெண்கூறன்
Pennagiyaperuman - பெண்ணாகியபெருமா
ன்
Pennamar Meniyan - பெண்ணமர் மேனியன்
Pennanaliyan - பெண்ணாணலியன்
Pennanmeni - பெண்ணாண்மேனி
Pennanuruvan - பெண்ணானுருவன்
Pennidaththan - பெண்ணிடத்தான்
Pennorubagan - பெண்ணொருபாகன்
Pennorupangan - பெண்ணொருபங்கன்
Pennudaipperundhakai -
பெண்ணுடைப்பெருந்தகை
Penparrudhan - பெண்பாற்றூதன்
Peralan - பேராளன்
Perambalavanan - பேரம்பலவாணன்
Perarulalan - பேரருளாளன்
Perayiravan - பேராயிரவன்
Perchadaiyan - பேர்ச்சடையன்
Perezuththudaiyan - பேரெழுத்துடையான்
Perinban - பேரின்பன்
Periyakadavul - பெரியகடவுள்
Periyan - பெரியான்
Periya Peruman - பெரிய பெருமான்
Periyaperumanadikal - பெரியபெருமான்
அடிகள்
Periyasivam - பெரியசிவம்
Periyavan - பெரியவன்
Peroli - பேரொளி
Perolippiran - பேரொளிப்பிரான்
Perrameri - பெற்றமேறி
Perramurthi - பெற்றமூர்த்தி
Peruman - பெருமான்
Perumanar - பெருமானார்
Perum Porul - பெரும் பொருள்
Perumpayan - பெரும்பயன்
Perundhevan - பெருந்தேவன்
Perunkarunaiyan - பெருங்கருணையன்
Perunthakai - பெருந்தகை
Perunthunai - பெருந்துணை
Perunychodhi - பெருஞ்சோதி
Peruvudaiyar - பெருவுடையார்
Pesarkiniyan - பேசற்கினியன்
Picchar - பிச்சர்
Pichchaiththevan - பிச்சைத்தேவன்
Pidar - பீடர்
Pinjgnakan - பிஞ்ஞகன்
Piraichchenniyan - பிறைச்சென்னியன்
Piraichudan - பிறைசூடன்
Piraichudi - பிறைசூடி
Piraikkanniyan - பிறைக்கண்ணியன்
Piraikkirran - பிறைக்கீற்றன்
Piraiyalan - பிறையாளன்
Piran - பிரான்
Pirapparuppon - பிறப்பறுப்போன்
Pirappili - பிறப்பிலி
Piravapperiyon - பிறவாப்பெரியோன்
Piriyadhanathan - பிரியாதநாதன்
Pitha - பிதா
Piththan - பித்தன்
Podiyadi - பொடியாடி
Podiyarmeni - பொடியார்மேனி
Pogam - போகம்
Pokaththan - போகத்தன்
Pon - பொன்
Ponmalaivillan - பொன்மலைவில்லான்
Ponmanuriyan - பொன்மானுரியான்
Ponmeni - பொன்மேனி
Ponnambalak Kuththan - பொன்னம்பலக்கூத்தன்
Ponnambalam - பொன்னம்பலம்
Ponnan - பொன்னன்
Ponnarmeni - பொன்னார்மேனி
Ponnayiramarulvon - பொன்னாயிரமருள்வ
ோன்
Ponnuruvan - பொன்னுருவன்
Ponvaiththanayakam - பொன்வைத்தநாயகம்
Poraziyiindhan - போராழிஈந்தான்
Porchadaiyan - பொற்சசையன்
Poruppinan - பொருப்பினான்
Poyyili - பொய்யிலி
Pugaz - புகழ்
Pugazoli - புகழொளி
Pulaichchudi - பூளைச்சூடி
Puliththolan - புலித்தோலன்
Puliyadhaladaiyan - புலியதலாடையன்
Puliyadhalan - புலியதளன்
Puliyudaiyan - புலியுடையன்
Puliyuriyan - புலியுரியன்
Pulkanan - புள்காணான்
Punachadaiyan - புனசடையன்
Punalarchadaiyan - புனலார்சடையன்
Punalchudi - புனல்சூடி
Punalendhi - புனலேந்தி
Punanular - பூணநூலர்
Punarchadaiyan - புனற்சடையன்
Punarchip Porul - புணர்ச்சிப் பொருள்
Punavayilnathan - புனவாயில்நாதன்
Punchadaiyan - புன்சடையன்
Pungkavan - புங்கவன்
Punidhan - புனிதன்
Punniyamurththi - புண்ணியமூர்த்தி
Punniyan - புண்ணியன்
Puramaviththan - புரமவித்தான்
Purameriththan - புரமெரித்தான்
Purameydhan - புரமெய்தான்
Puramureriththan - புரமூரெரித்தான்
Puranamuni - புராணமுனி
Puranan - புராணன்
Puranycherran - புரஞ்செற்றான்
Puranychuttan - புரஞ்சுட்டான்
Purathanan - புராதனன்
Purichadaiyan - புரிசடையன்
Purinunmeni - புரிநூன்மேனி
Purameriththan - புரமெரித்தான்
Puranan - பூரணன்
Purari - புராரி
Purridankondar - புற்றிடங்கொண்டார்
Pusan - பூசன்
Puthanathar - பூதநாதர்
Puthanayakan - பூதநாயகன்
Puthapathi - பூதபதி
Puthiyan - புதியன்
Puthiyar - பூதியர்
Puththel - புத்தேள்
Puuvananaathan - பூவனநாதன்
Puuvananaathan - பூவணநாதன்
Puyangan - புயங்கன்
Rajeshwaran- ராஜேஸ்வரன்
Saivan - சைவன்
Saivar - சைவர்
Sakalasivan - சகலசிவன்
Samavethar - சாமவேதர்
Sampu - சம்பு
Sangkaran - சங்கரன்
Santhirasekaran - சந்திரசேகரன்
Saranan - சாரணன்
Sathasivan - சதாசிவன்
Sathikithavarththamanar - சாதிகீதவர்த்தமானர்
Saththan - சத்தன்
Sathuran - சதுரன்
Sayampu - சயம்பு
Sedan - சேடன்
Seddi - செட்டி
Selvan - செல்வன்
Semman - செம்மான்
Sempon - செம்பொன்
Senneri - செந்நெறி
Sevakan - சேவகன்
Sevalon - சேவலோன்
Seyyan - செய்யன்
Shivan - சிவன்
Silampan - சிலம்பன்
Silan - சீலன்
Singkam - சிங்கம்
Siththan - சித்தன்
Siththar - சித்தர்
Sittan - சிட்டன்
Sivakkozundhu - சிவக்கொழுந்து
Sivalokan - சிவலோகன்
Sivamurththi - சிவமூர்த்தி
Sivan - சிவன்
Vaithishwaran-வைதிஸ்வரன்
etc......

எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது

4. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்;-

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

4.திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

திருநீறை (விபூதி) மூன்று கோடுகளாக போடுவதன் தத்துவம்;-

மும்மலங்கலான ஆணவம் கன்மம் மாயை மூன்றையும் ஞானத்தினால் சுட்டெரித்து
நிர்மல நிலையினை அடைந்தவர் என்பதன் வெளிப்பாடாக மூன்று கோடுகள் போடப் படுகின்றன. மேலும் சூரிய கலை சந்திர கலை அக்னி கலை மூன்றையும் கடந்து மூச்சற்ற சுத்த நிலையினில் அருள் அனுபவம் பெற்றவர் என்பதையும் உணர்த்தும்.

நோய் தீர்க்கும் மலை:

நோய் தீர்க்கும் மலை:

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது.

இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.

சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம் * மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும்.

பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.

சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது.

உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும்.

24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

சதுரகிரி தல வரலாறு :

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான்.

இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி.

மனைவி சடைமங்கை.

இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள்.

ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார்.

பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.

தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார்.

மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான்.

சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது.

ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார்.

இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான்.

அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன்.

நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார்.

அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார்.

இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது.

இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும்.

செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன.

இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம்.

சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம்.

அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.

இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது.

இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம்.

இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது.

கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம். இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம்.

சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது.

இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.

பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம்.

மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

இரட்டை லிங்கம்:
ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர்.

இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். ""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார்.

அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பிலாவடி கருப்பு:
வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

பெரிய மகாலிங்கம்:
நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை:
மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம்.

இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம்.

பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது. தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது.

குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும்.

இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள்.

இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும்.

தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது.

அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது. சுந்தரமூர்த்தி கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும்.

சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை'
என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது.

அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர்.

சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது.
இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் :
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள்.

தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது.

பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.

பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.

இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது. லிங்க வடிவ அம்பிகை சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள்.

சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

சதுரகிரியில் தீர்த்தங்கள் சந்திர தீர்த்தம் சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம். சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு. சந்தன மகாலிங்கம் தீர்த்தம். இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது.

இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.

மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன.

இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது. இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்த விருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்.

கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள்.

சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ஆராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது.

இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

கனவு சொல்லும் சகுனங்களும் அதன் பலன்களும்-

கனவு சொல்லும் சகுனங்களும் அதன் பலன்களும்-

எந்த கனவுகளும் விருப்பத்திற்கு உட்பட்டு வருபவை அல்ல. அவை தன்னிச்சையாக நிகழும் மனதின் உள்ளுணர்வு வெளிப்பாடுகள். அவற்றுக்கும் பலன்கள் உண்டு. இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும். சுப சொப்பனங்கள் பசு, எருது, யானை தேவாலயங்கள, அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல்? ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும். வெண்ணிறப் பாம்பு கடித்தல் தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு நீர் நிலை கனவுகள் நீர் நிலைகளை கனவில் பார்த்தால் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடல் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போல கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும். நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப்போகிறார் என்பதை இந்த கனவு தெரிவிக்கிறது. குருவிக் கனவுகள் குருவிகளைக் கனவில் காண்பது நன்மையானது. கஷ்டமான நிலை விலகும். வம்புவழக்கு இருப்பின் வெற்றி கிட்டும்; நோயுற்றிருப்பின் நோய் அகலும். குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும். குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு. ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம். குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும். குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும். குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன். பல தொல்லைகள் உண்டாகும். அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும். பாம்பு ஒருவர் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால், அவருக்கு இருந்த கண்டம் அல்லது கெட்ட நேரம் விலகிச் சென்று விட்டதாகக் கருதலாம். எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும். அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும். பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ, உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாகும். நல்ல கனவுகளைக் கண்டால் என்றுமே உறக்கம் வராது. அதுபோல தீய கனவுகளைக் கண்டால் கடவுளை வணங்கிவிட்டு உறங்குவது நல்லது.

நோய் தீர்க்கும் மலை:

நோய் தீர்க்கும் மலை:

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது.

இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.

சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம் * மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும்.

பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.

சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது.

உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும்.

24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

சதுரகிரி தல வரலாறு :

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான்.

இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி.

மனைவி சடைமங்கை.

இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள்.

ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார்.

பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.

தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார்.

மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான்.

சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது.

ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார்.

இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான்.

அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன்.

நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார்.

அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார்.

இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது.

இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும்.

செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன.

இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம்.

சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம்.

அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.

இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது.

இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம்.

இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது.

கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம். இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம்.

சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது.

இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.

பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம்.

மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

இரட்டை லிங்கம்:
ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர்.

இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். ""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார்.

அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பிலாவடி கருப்பு:
வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

பெரிய மகாலிங்கம்:
நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை:
மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம்.

இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம்.

பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது. தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது.

குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும்.

இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள்.

இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும்.

தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது.

அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது. சுந்தரமூர்த்தி கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும்.

சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை'
என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது.

அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர்.

சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது.
இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் :
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள்.

தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது.

பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.

பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.

இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது. லிங்க வடிவ அம்பிகை சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள்.

சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

சதுரகிரியில் தீர்த்தங்கள் சந்திர தீர்த்தம் சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம். சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு. சந்தன மகாலிங்கம் தீர்த்தம். இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது.

இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.

மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன.

இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது. இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்த விருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்.

கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள்.

சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ஆராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது.

இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
செய்யும் காரியங்களில் தடைகள் விலக

மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;

இளவயது மரணங்கள் எதனால் சம்பவிக்கின்றன?

இளவயது மரணங்கள் எதனால் சம்பவிக்கின்றன?

இளவயது மரணங்களுக்கு பாலாரிஷ்டம் என்று பெயர். பாலா என்றால் குழந்தை என்றும் அரிஷ்டம் என்றால் மரணம் என்றும் வடமொழியில் பொருளாகும். மரணம் இன்ன காலத்தில் உறுதியாக நேர்ந்துவிடும் என்று எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. மிகவும் வெகுசிலரால் மட்டுமே, அதாவது தெய்வாம்சமாகக் கருதப்படுபவர்களால் மட்டுமே இன்னாருக்கு இன்ன காலத்தில் இது நடக்கும் என்று கூறமுடியும். இத்தகையோரால் எதிர்வரும் இன்னல்களையும் கெடுதல்களையும் மாற்ற முடியும். நம் பாரதத் திருநாட்டில் இத்தகைய பல மகான்களும் அவதாரப் புருஷர்களும் சித்தர்களும் வாழ்ந்தார்கள். இவர்கள் மரணம் உட்பட பல விஷயங்களிலும் அதிசயம் செய்து காட்டினார்கள். சிவபெருமானின் அருளைப் பெற்று சிவத்தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் போன்ற ஆன்றோர்களுக்கு இறைவன், இறந்தவர்களையும் உயிர்பிக்கும் தன்னுடைய ஆற்றலையும் வழங்கினார்.

ஒருசமயம், அப்பூதியடிகளின் மகன் பாம்பு கடித்து இறந்து விட்டான். அந்த குழந்தையை சிவபெருமானின் அருளால் திருநாவுக்கரசர் உயிர்ப்பித்தார். இத்தகையோருக்கு நவக்கோள்களும் (ஒன்பது கிரகங்களும்) கட்டுப்பட்டன என்றால் மிகையாகாது. நம் கர்ம வினைகள், பாவங்கள் அனைத்தும் தீர, திருஞான சம்பந்தர் கோளறு திருப்பதிகம் என்கிற பத்து பாக்களை இயற்றி வழங்கியுள்ளார். இதில் இந்த பதிகத்தைப் படித்து சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு சூரிய பகவான் முதலான ஒன்பது கிரகங்களும் நல்லனவே செய்யும் என்று உறுதியாகக் கூறுகிறார்.

அறுபத்து நான்கு அருங்கலைகளில் ஜோதிடமும் ஒன்றாகும். இதில் மரணம் எப்பொழுது சம்பவிக்கும்? எந்த விதத்தில் சம்பவிக்கும்? என்பவைகள் பற்றி பல இடங்களில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பிள்ளைகளின் ஜாதகங்களில் இத்தகைய கிரக நிலைகள் வந்தால் தந்தைக்கு மரணம், தாய்க்கு மரணம், உடன்பிறந்தோருக்கு மரணம் என்று எல்லாம் வருகிறது. அதனால் ஜோதிட கணிதத்தின்மூலம் ஆயுள் பற்றிய விஷயங்களை ஓரளவு அறிந்து கொள்ளமுடியும். இறைவன் விரும்பும்வரையில் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்பதே எங்களின் எண்ணமாகும்.

இது கர்மவினையின் பலனா? என்றும் கேட்கலாம். ஆம். நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்தும் கர்ம வினைப்பலன்கள் தான் என்பதே உண்மை. நாம் இந்த பிறவியில் அனுபவிக்கும் நல்லது கெட்டது அனைத்தையும் காட்டும் கண்ணாடி போன்றதுதான் நம் ஜனன ஜாதகமாகும். ஜோதிடம் என்பது கடலைப் போன்றது. எப்படி கடலிலிருந்து அள்ள அள்ள செல்வங்கள் குறையாதோ அதுபோன்று ஜோதிடத்திலும் ஆராய்ச்சி செய்யச் செய்ய புதுப்புது விஷயங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். பொதுவாக அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டாலோ அல்லது குடும்பத்தில் அகால மரணங்கள் சம்பவித்தாலோ அதற்கு காரணம் பித்ரு தோஷம் என்று கூறவேண்டும். அதோடு பித்ரு தோஷமானது குடும்பத்தில் வழிவழியாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். சில குடும்பங்களில் ஒரு குறிப்பிட்ட வியாதி அல்லது நிகழ்ச்சி தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். கஷ்டங்களிலும் துன்பங்களிலும் அசாதாரண நிகழ்வுகளிலும் நோய்களும் நம்மை பாதிக்கின்றன என்றால் மிகையாகாது. நம் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் எதுவும் விபத்தாக நடக்கிறது என்று கூறமுடியாது. அனைத்தும் அந்தந்த காலங்களில் நம்மைத் தேடி வருகிறது. இதனைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுதூம் என்பதூம்” என்கிறார். அதாவது ஊழ்வினை தேடிப்பிடித்து அதனுடைய செயல்களைச் செய்யும் என்பது இதன்பொருள். ஊழ்வினைகளிலிருந்து மகான்களும் தப்புவது இல்லை. உதாரணத்திற்கு பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி புற்று நோயால் பாதிக்கப்பட்டார் என்பதும் இங்கே ஒப்பு நோக்கத்தக்கது.

ஜாதகங்களில் இத்தகைய விஷயங்கள், சூரிய பகவான், சனி பகவான், ராகு/ கேது பகவான்களின் நிலைமையை பார்த்து ஒருவருக்கு பித்ருதோஷம் உள்ளதா அல்லது இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும். பொதுவாக சூரிய பகவான் மற்றும் ராகு பகவான்களின் சேர்க்கை அல்லது பார்வை, இந்த கிரகங்கள் பெற்றுள்ள காரகத்துவங்கள், சாரம் ஆகியவை சுபமாக அமையாவிட்டால் இடர்கள் உண்டாகலாம். இப்படி அசுபத் தன்மை பெற்றிருந்தால் மட்டும் கஷ்டம் வந்துவிடும் என்று எடுத்துக்கொள்ள கூடாது. அந்த ஜாதகரின் குடும்பப் பின்னணியில் நடந்த விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் பிறந்த இருவருக்கு ஜாதகப்படி பித்ரு தோஷம் உண்டாக காரணிகள் இருந்தாலும் அவர்களின் பாரம்பரியத்திற்கு ஏற்ப வித்தியாசமான பலன்கள் அல்லது பாதிப்புகள் ஏற்படலாம் என்பதையும் அனுபவத்தில் பார்க்கிறோம். இப்படி பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு ஜாதகத்தில் இருப்பது பித்ரு தோஷமா அல்லது பித்ரு சாபமா என்று பார்க்க வேண்டும். இதற்கேற்ப பரிகாரங்களைச் செய்தால் தோஷங்கள் குறைந்து, கஷ்டங்கள் கட்டுக்குள் இருக்கும். அனைத்து பரிகாரங்களுக்கும் மேலாக குலதெய்வ வழிபாடு என்பது அவசியமானது. இப்படி வழிபாடுகளைத் தவறாமல் செய்து வந்தால் குறைகள் மறைந்து நிறைகள் பெருகும் என்பது அனுபவ உண்மை.

இத்தகைய நிலைமைகளைக் கருத்தில் கொண்ட பிறகு பூர்வபுண்ய ஸ்தானம் (ஜந்தாம்வீடு) மற்றும் பாக்கிய ஸ்தானம் (ஒன்பதாம் வீடு) ஆகிய இரண்டு ராசிகள் அந்த ராசி அதிபதிகள் அந்த ராசிகளில் அமர்ந்துள்ள கிரகங்கள் நமக்கு எந்த அளவுக்கு பித்ருதோஷம் வேலை செய்யும் என்பதை அறிவித்துவிடும். இதோடு பித்ரு சாபம் என்பது சற்று கூடுதலான அசுபப் பலன்களைத் தரும். ஷட் பலன்களில் சூரிய, சந்திர, சனி பகவான்கள் பெற்றிருக்கும் ரூப பலத்திலிருந்து இந்த கிரகங்கள் ஜாதகருக்கு சாதகமாக உள்ளதா அல்லது பாதகமாக உள்ளதா என்றும் இந்த பலத்தினால் பித்ருதோஷம் பரிகாரங்களால் தீர்ந்து விடுமோ என்பதையும் அளவளாவ வேண்டும். இவைகளுக்கும் மேலாக பதினாறு வித அம்ச ஜாதகங்களையும் அலசி ஆராய்ந்து ஜாதகம் எந்த அளவுக்கு அனைத்து விஷயங்களிலும் (ஆயுள் உட்பட) பலம் பெற்றுள்ளது என்கிற முழுமையான முடிவுக்கு வர வேண்டும்.

இங்கனம்

31 March 2016

மஹாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்

மஹாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்

நெல்லி மரத்தில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
வில்வ மரத்தில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
பெண்களின் தலைமுடியின் முன் வகிட்டில் வசிக்கிறாள்.அதனால்தான் பெண்கள் வகிட்டில் குங்குமம் இடவேண்டும்.
...
துளசி மணி மாலையில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
பசுவின் பால்,தயிர்,நெய்,கோமியம்,சாணம், பசுவின் பின் புறம் இவற்றில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
மா,வாழை,எலுமிச்சை,வெற்றிலை,தாமரை,செவ்வந்தி இவற்றில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
கருந் துளசியில் விஷ்னுவும் மஹாலட்சுமியும் வசிக்கிறார்கள். இதனால்தான் வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குகிறோம்.
...
தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பு எண்ணெய் ஸ்நானம் செய்வது சிறப்பு.ஏனென்றால் அன்று மட்டுமே எண்ணெய்யில் மஹாலட்சுமி வசிக்கிறாள்.
...
கஸ்தூரி மஞ்சள், சந்தணம்,இவற்றில் மஹாலட்சுமி வசிக்கிறாள். அதனால்தான் மஞ்சள், சந்தனம் இல்லாத சுப காரியங்களே இல்லை.
...
-சிவம்

30 March 2016

தீபிகா ஜோதி சொரூபணி யட்சிணி தேவி

அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.
108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி  தீபிகா ஜோதி சொரூபணி
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா
சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத்  தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்…
 இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும் .


தடைப்பட்ட பண வரவு

தடைப்பட்ட பண வரவு   கிடைக்க பிரச்சனைகள்  தீர
சூரியனின் ஆதிக்க சக்தி கொண்ட குங்குமப்பூவை சிறிது பன்னீரில்

குழைத்து தினசரி நெற்றியில் திலகமாக இட்டு செல்ல, மேற்கண்ட நிலை மாறி பணவரவு உண்டாகும்  அனைத்திலும் வெற்றி உண்டாகும் எல்லாம் சிவன் அருள்....

29 March 2016

வீட்டில் தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க

வீட்டில் தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க !

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்கஃவாங்க வேண்டும்.

வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது. துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.

உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக:

இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒழித்தால், அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்க்ஷ்ம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால், நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம். காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் ப