youtube

15 June 2016

விருட்ச சாஸ்திரம்

விருட்ச சாஸ்திரம்

விருட்ச சாஸ்திரம் 
பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.

உங்கள் நட்சத்திரத்துக்கு உரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்...

அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும்.

சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக தலங்களில் , ஒரு கோவில் சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி,திருச்செந்தூர்,திரு குற்றாலம், திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை போன்ற) தென் மேற்குப் பகுதியில் சூரியக் கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.

அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவ தானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவ தானியங்களையும் அந்த மரக் கன்றுக்கு உரமாகப் போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும்.
அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.

கர்மவினைகளை வெற்றி கொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

மாயமாய் மறையும் ஜாலம்

மாயமாய் மறையும் ஜாலம்
அழிஞ்சில் தைலத்தில் வெள்ளைக் கடுகை வைத்து மூன்று உலோகத்தில் சுற்றி அந்த தாயத்தை முகத்தில் வைத்து கொண்டால் அந்த ஆள் மாயமாய் மறைவான்

அக்னி சுடாமல் தடுக்க ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு

அக்னி சுடாமல் தடுக்க ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு

கிரகண வேலையில் ஓம் நமோ அக்னி ரூபாய மமரீரேஸ்தம்பனம் குரு குரு ஸ்வஹா மந்திரத்தை  108தடவை ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும் .பின்பு அக்ணி நெருப்பு சூடாது

தூக்கம் வராதிர்க்க ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு

தூக்கம் வராதிர்க்க  ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு
கிரகண வேலையில் ஓம் சிவாய நம மந்திரத்தை சித்து செய்து
பாப்பாராமுள்ளி – கட்டு இலுப்பை இவற்றின் வேரை எடுத்து
அரைத்துப் பொடி செய்து அந்துப் பொடியை மூக்கில் உறிஞ்ச தூக்கம் வராது. 

மேகத்தைத் தடுத்து நிறுத்துத்தல் ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு

மேகத்தைத் தடுத்து நிறுத்துத்தல் ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு
ஓம் ஹ்ரூம் ஹிரீம் சாஸம்
சாஸம் சாஸம் சாஸம் சாஸம்
செளம் ஹம் ஹம் ஹும்பட் சுவஹா
சாதகர் கிழக்கு முகமாக அமர்ந்து இதை ஒரு உரு தடவை ஜெபிக்க .அக்னியில்  முன்  நெய்யில் யாகம் செய்க  மந்திரம் சித்தியாகும்
மேகம் முன் மந்திரம் சொன்னால் மழை பொழியும், நீங்கள் நினத்தால் களையும்.

மேகத்தைத் தடுத்து நிறுத்துத்தல் ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு

மேகத்தைத் தடுத்து நிறுத்துத்தல் ஜாலம் வித்தை சித்துவிளையாட்டு
ஓம் ஹ்ரூம் ஹிரீம் சாஸம்
சாஸம் சாஸம் சாஸம் சாஸம்
செளம் ஹம் ஹம் ஹும்பட் சுவஹா
சாதகர் கிழக்கு முகமாக அமர்ந்து இதை ஒரு உரு தடவை ஜெபிக்க .அக்னியில்  முன்  நெய்யில் யாகம் செய்க  மந்திரம் சித்தியாகும்
மேகம் முன் மந்திரம் சொன்னால் மழை பொழியும், நீங்கள் நினத்தால் களையும்.

சுவாமி  சதுரகிரி ஸ்ரீ  சுந்தரமகாலிங்கம் பக்த  சேவா  அறக்கட்டளை 
சுவாமி  சதுரகிரி ஸ்ரீ  சுந்தரமகாலிங்கம் பக்த  சேவா  அறக்கட்டளை .    
சித்தர்கள்  குல தெய்வம்  சதுரகிரி   ஸ்ரீசுந்தரமகாலிங்கம்  ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்ரீ சந்தனமகாலிங்கம்    ஸ்ரீபிலாவாடி   
கருப்பசாமி  ஆகிய  தெய்வங்கள்  பெர்ணமி , அம்மாவாசை ஆகிய   தினங்கள்    
நடைபெறும்  அபிஷேக விபூதி ,குங்குமம் .வில்வம் ,பூ,   முதலிய சித்த, தெய்வம் பிரசாதங்கள்  
உங்கள் இல்லம்  வீடு , தேடி மாதம் மாதம்  தபாலில் அனுப்பி வைக்கபடும். சிவன்  அடியார்கள் , ஆன்மிக அன்பர்கள்  ஆகியோர்கள் , சித்தர்கள் சிவன்  அருள்பெற  அன்புடன்  கேட்டுகொள்கிறோம்.
கட்டணம்    ஏதும்   கிடையாது , தொலைபேசி, மின்ஞ்சல் தொடர்பு  கொண்டால்  போதும்      

இப்படிக்கு
சுவாமி  சதுரகிரி ஸ்ரீ  சுந்தரமகாலிங்கம் பக்த  சேவா  அறக்கட்டளை
ச .கணேச பாண்டியன்
செல் +91 9047899359
whatt apps  +91  8675426286 

சுவாமி சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் பக்த சேவா அறக்கட்டளை

சுவாமி  சதுரகிரி ஸ்ரீ  சுந்தரமகாலிங்கம் பக்த  சேவா  அறக்கட்டளை .    
சித்தர்கள்  குல தெய்வம்  சதுரகிரி   ஸ்ரீசுந்தரமகாலிங்கம்  ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்ரீ சந்தனமகாலிங்கம்    ஸ்ரீபிலாவாடி   
கருப்பசாமி  ஆகிய  தெய்வங்கள்  பெர்ணமி , அம்மாவாசை ஆகிய   தினங்கள்    
நடைபெறும்  அபிஷேக விபூதி ,குங்குமம் .வில்வம் ,பூ,   முதலிய சித்த, தெய்வம் பிரசாதங்கள்  
உங்கள் இல்லம்  வீடு , தேடி மாதம் மாதம்  தபாலில் அனுப்பி வைக்கபடும். சிவன்  அடியார்கள் , ஆன்மிக அன்பர்கள்  ஆகியோர்கள் , சித்தர்கள் சிவன்  அருள்பெற  அன்புடன்  கேட்டுகொள்கிறோம்.
கட்டணம்    ஏதும்   கிடையாது , தொலைபேசி, மின்ஞ்சல் தொடர்பு  கொண்டால்  போதும்      

இப்படிக்கு
சுவாமி  சதுரகிரி ஸ்ரீ  சுந்தரமகாலிங்கம் பக்த  சேவா  அறக்கட்டளை
ச .கணேச பாண்டியன்
செல் +91 9047899359
whatt apps  +91  8675426286 

13 June 2016

யந்திரங்களும் அதன் செயல்பாடுகளும் ....


இவற்றில் கூறியபடி யந்திரங்கள் வைத்து வழிபாடு செய்து வந்தால் கீழ்க்கண்ட துறைகளில் பலவித சாதனைகள் புரியலாம் இந்த யந்திரங்களை பயன்படுத்தி கீழ்க்கண்ட பிரச்சனைகள் சரியாகி வெற்றி அடைந்துள்ளனர் .
நடிகர்களுக்கு                    -சாரஸ்வதம் யந்திரம்
அரசியல்வாதிகளுக்கு   -வராகி யந்திரம்
வியாபாரிகளுக்கு            -சொர்ண ஆகர்சன பைரவர் யந்திரம்
திருமணமாக                     -சுயம்வர பார்வதி யந்திரம்
செய்வினை அகல           - ப்ருத்யங்கரா தேவி யந்திரம்
எதிரியை வெல்ல            -அகோர நரசிம்மர் யந்திரம்
வழக்கு வெற்றிக்கு         -விஜய துர்காயந்திரம்
மன நோய்                          -உன்மத்த பைரவர் யந்திரம்
பலவித நோய் நீங்க        -தன்வந்திரி பகவான் யந்திரம்
கல்விக்கு                             -மனோன்மணி யந்திரம்
வெளிநாடு செல்ல          -தாரா யந்திரம்
சர்வஜன வசியம்              -ராஜ சியாமளா யந்திரம்
கலைகளுக்கு                     -மாதங்கி யந்திரம்
இழந்ததை பெற               -கார்த்த வீரியம் யந்திரம்

வியாபர ஸ்தலங்களுக்கு உரிய யந்திரங்கள்

மளிகை கடைகளுக்கு    -அஷ்ட லக்ஷ்மி யந்திரம்
துணிக்கடை                       -சூலினி யந்திரம்
பெயின்ட் கடை               -பஞ்சாட்சர யந்திரம்
ஹோட்டல்                        -துர்க்கா யந்திரம்
மெடிக்கல்                           -தன்வந்திரி பகவான் யந்திரம்
பேன்சி                                 -ஸ்ரீ சக்ர யந்திரம்
இரும்பு கடை                    -பஞ்சாட்சர யந்திரம்

இந்த முறையில் யந்திரங்கள் கடைகளில் வைத்தால் வியாபாரம் மிகுந்த செழிப்படையும்
நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.

தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.

சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!

தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.

மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!

மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும்.

காது நன்கு கேட்க!

காதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த  ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!

மனம் மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா? அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.

இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!

இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!

உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.

கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!

நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.

காய்ச்சல் குணமாக லிங் முத்திரை!

இரண்டு உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக் கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங் முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.

நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரை

நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.

மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....

வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.

இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை

இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான முத்திரை என்று இதற்குப் பெயர்.

எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.
அசுரர்களை அழிக்க தோன்றியவர் பைரவர்
சிவ பெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்று சொல்லப்படுகிறது. ஐவரில் மகா பைரவர் பொதுவாக எல்லா ஆலங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக் கோலத்தினராய் நீல மேனியராய் நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் பைரவர் பெருமாள்.
காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்ய பூஜா விதி கூறுகிறது. அதேபோல ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டிச் சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் காசியம்பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர்.
சனியை சனீஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமைச் சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளைக் கொண்டவர். இவரைக் காலபைரவர், மார்த்தாண்ட பைரவர், க்ஷேத்ரபாலகர், சத்ரு சம்ஹார பைரவர், வடுக பைரவர், சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.
ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
ஆனால் தற்சமயம் தம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பரைவ யோகினிகள் யார், யார் என்பதைக் காண்போம். அசிதாங்க பைரவர் பிராம்ஹி, குரு பைரவர் மாகேஸ்வரி, சண்டபைரவர் கவுமாரி, குரோதான பைரவர், வைஷ்ணவி, உள் மத்த பைரவர், வாராஹி, கபால பைரவர், இந்திராணி, பீஷண பைரவர், சாமுண்டி, சம்ஹார பைரவர், சண்டிகா தேவி ஆகியோர் ஆவர்.
தாட்சாயிணி தேவி தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர்பாகத்தை தராது அவமதித்ததால் தச்சனின் மகளான பார்வதிதேவி யாக குண்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தபோது அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத் தாங்கி உலகமெல்லாம் சுற்றி அலைந்த போது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச் செய்தார் என்றும் தேவியின் உடலுறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களாயின என்றும் அவ்வாறு ஏற்பட்ட சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக பைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்
துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம்.
காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்ட வருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.