youtube

18 October 2016

உருத்திராட்சமும் சித்தர்களும்!

உருத்திராட்ச மணி மாலைகள் சித்தர் பெருமக்களின் அடையாளங்களில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இன்றும் கூட நாம் உருவகப் படுத்தும் சித்தர் உருவங்களில் இந்த உருத்திராட்ச மாலைகள் இடம் பெறுவதை கவனித்திருப்பீர்கள். உருத்திராட்ச மணிகளைப் பற்றிய குறிப்புகள் பல்வேறு சித்தர்களின் பாடல்களில் நமக்கு காணக் கிடைக்கிறது. அந்த பாடல்களை எல்லாம் தொகுத்து இங்கே பகிர வேண்டுமெனில் இந்த தொடர் இரண்டு வாரஙக்ளுக்கு மேல் நீளும் என்பதால் திருமூலர் மற்றும் அகத்தியர் கூறியவைகளை மட்டும் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.


திருமூலர் உருத்திராட்ச மணிகளின் மகத்துவம் பற்றி பின்வருமாறு விளக்குகிறார்.உருத்திராட்ச மணிகள் எந்த அளவுக்கு மகத்துவமானவை என்பது இந்த பாடல்களின் மூலம் அறியலாம்.


"பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே"

- திருமூலர் -

"காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே"

- திருமூலர் -

அகத்தியரும் தனது பாடல்களில் உருத்திராட்ச மணி பற்றிய பல தகவல்களை கூறியிருக்கிறார். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது மிகவும் அரியதான ஒரு தகவல். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர் அல்லது துறவறம் மேற்கொண்டவர்கள் உருத்திராட்ச மணி மாலையினை உடலில் அணிந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அந்த மணி மாலைகள் எத்தகையதாக என்ன அளவுடன் இருத்தல் வேண்டும் என்பதை அகத்தியர் தனது சீடருக்கு அருளியிருக்கிறார். அந்த பாடல் பின்வருமாறு...


"துதிக்கவென்றால் புலத்தியனே இன்னங்கூர்வேன்
துப்புரவாய் செபமாலை பூணுங்காலம்
மதிக்கவே செபமாலை ருத்திரட்ச
மன்னவனே யாறுமுகந் தானெடுப்பாய்
பதிக்கவே செபமாலை முப்பதிரெண்டு
பாங்குடனே சடையதிலே யணியவேண்டும்
விதிப்படியே ருத்ராட்ச மன்பத்தொன்று
வேதவிதிப் பிரமாணம் செப்பக்கேளே"

- அகத்தியர் -

"கேளப்பா புலத்தியனே யின்னங்கூர்வேன்
கொடியான ருத்திராட்சம் மன்பத்தொன்று
மீளப்பா மாலயது களுத்திலேதான்
மிக்கவே தான்றரிக்க விதியேயாகும்
தாளப்பா கரகணுக்கில் செபமாலை
தகமையுட னுத்திராட்சம் பன்னிரெண்டாகும்
வேளப்பா ருத்திராட்சம் கங்கணந்தான்
நாதமுறைத் தான்படியே வட்டமாச்சே"

- அகத்தியர் -

"அட்டமாம் ருத்திராட்ச முழங்கைமேலே
அன்புடனே சரமதுவும் சோடசந்தான்
திட்டமுடன் சோடசமாம் பதினாறப்பா
தீர்க்கமுடன் முழங்கரமா மணியத்துள்ளே
நிட்டையிலே தான்பூண்டு மதியங்கொண்டு
நிஷ்களங்க மானசெப மாலைபூண்டு
சட்டமுட னசுவினியர் சொன்னநீதி
சடாட்சரனே யுந்தமக்கு சாற்றினேனே"

- அகத்தியர் -

மனதை ஒருநிலைப் படுத்தி செபம் செய்திடும் வேளையில் அணிந்திட வேண்டிய உருத்திராட்சங்கள் பற்றிய தகவலை தான் அசுவினி தேவரிடம் இருந்து அறிந்து கொண்டதாக கூறுகிறார். அதாவது இந்த உருத்திராட்சங்கள் அனைத்துமே ஆறு முகங்களை உடையதாக இருக்க வேண்டுமாம். முப்பதி இரண்டு மணிகளால் கோர்க்கப் பட்ட உருத்திராட்ச மாலையினை சடையிலும், ஐம்பத்தியோரு மணிகளால் கட்டப் பட்ட மாலையினை கழுத்திலும், பன்னிரெண்டு மணிகளால் கோர்க்கப் பட்ட மாலையினை மணிக்கரத்திலும், பதினாறு மணிகளால் கட்டப் பட்ட மாலையினை முழங்கைக்கு மேற்பட்ட பகுதியிலும் அணிய வேண்டுமென்கிறார்.


அடுத்த முறை துறவியர் அல்லது சிவனடியார் எவரையேனும் சந்திக்க நேர்ந்தால் அகத்தியர் அருளியபடி அணிந்திருக்கின்றனரா என்பதை அவதானியுங்கள்.


நாளைய பதிவில் உருத்திராட்ச மணிகளின் மருத்துவ குணங்க்ளைப் பற்றி பார்ப்போம்.

பாஷாணங்கள் என்றால் என்ன?

பாஷாணங்கள் என்றால் என்ன?பாஷாணங்கள் க்கான பட முடிவு

சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான் பாஷாணங்கள். ஆனால் பாஷாணம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பழநியில் அருள்பாலிக்கும் மூலவரான தண்டாயுதபாணியும், அவரை உருவாக்கிய சித்த புருஷரான போகரும்தான். ஒன்பது வகையான பாஷாணங்களை பிசைந்து பழனியில் உள்ள மூலவரை போகர் உருவாக்கியதாக கூறுவர். இந்த பதிவின் நோக்கம் நவபாஷாண சிலை பற்றியதன்று. இத்தனை சிறப்பானதாக கூறப் படும் பாஷாணங்களைப் பற்றியதே....

பாஷாணங்கள் அல்லது பாடாணங்கள் என அறியப் படும் இவற்றை சித்தர்கள், தங்களின் மருத்துவ முறையில், அடிப்படை மூலகங்களில் ஒன்றாக பயன் படுத்தினர். இரசவாதத்திலும் பாஷாணங்கள் பயனாகிறது. இவை உலோகத்தைப் போல கடினமான தன்மையையும், விஷத்தின் தீவிர குணங்களையும் கொண்ட திண்மப் பொருட்கள். பாஷாணம் என்பது பொதுப் பெயரே, இவற்றில் நிறைய வகைகள் இருக்கிறது.

இந்த பாஷாணங்கள் விஷத் தன்மையுடையவை ஆதலால், நேரடியாய் உட்கொண்டால் மரணம் விளையும், ஆனால் அன்றைக்கே சித்தர்கள் அவற்றை பக்குவப் படுத்தி விஷத்தையே மருந்தாக்கி பயன்படுத்தினர். இன்றைய நவீன அலோபதி மருத்துவ முறை, பெரும் செலவிலான ஆராய்ச்சிகளின் முடிவில் பாம்பின் விஷத்தை மருந்துகளாக மாற்றி பயன்படுத்துவது உங்கள் நினைவுக்கு வரலாம். சித்தர் பெருமக்கள் நமக்குத் தரும் ஏராளமான ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்று.

பாடாணங்கள் குறித்து மிகைப் படுத்தப் பட்ட செய்திகளே ஊடகத்தில் உலவுகின்றன. இந்த செய்திகள் எங்கிருந்து பெறப்படுகின்றது என்பதில் நிறைய கேள்விகளும், ஐயங்களும் இருக்கிறது. ”போகர் 12000” என்ற நூலில் போகர் பாடாணங்கள் குறித்து விளக்கமாய் கூறியிருக்கிறார். போகரின் கூற்றுப் படி பாஷாணங்கள் அடிப்படையில் இரு வகையாக பிரித்துக் கூறுகிறார். அவை “பிறவிப் பாஷாணங்கள்”,”வைப்புப் பாஷாணங்கள்” ஆகும்.

பிறவிப் பாஷாணங்கள் என்பவை இயற்கையாக கிடைக்கக் கூடியவை. வைப்புப் பாஷாணங்கள் என்பவை பல மூலகங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப் படுவது. இந்த இரு பிரிவுகளின் கீழ் பல வகையான பாஷாணங்கள் உள்ள்ள