youtube

23 March 2017

வெண்டைக்காய்யை ஆண்மை சக்தி அதிகரிக்கும்


செய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? அதற்கான அறிகுறிகள் இவைகள் தான்


செய்வினை ,ஏவல் ,பில்லி ,சூனியம் ,கண்கோளா று , நீங்க மிக எளிய வழிமுறைகள்


சுவாச நிலையின் சூட்சமத்தைப் பற்றி" திருமூலர் வெளிப்படுத்திய பாட


செய்வினையை முறிக்க எளிய வழிகள்


22 March 2017

எந்த பிரச்சினைனையும் தீர்க்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம்

எந்த பிரச்சினைனையும் தீர்க்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம். உங்கள் ஜாதகப்படி நீங்கள் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்திற்குரிய நட்சத்திர காயத்ரி மந்திரம் சொல்லுங்கள். 1 மண்டலம் தினமும் (அதிகாலை) தொடர்ந்து சொல்லிவர கைமேல் பலன் கிடைக்கும்... தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து  சொல்லுங்கள். நீங்கள் இன்பங்கள் நிறைய பெற்று, வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

1) அஸ்வினி

 ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

2) பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்

3) கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

4) ரோஹிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

5) மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

6) திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

7) புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

8) பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

9) ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

10)  மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்

11) பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

12) உத்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

13) அஸ்தம்

 ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ

ஹஸ்தா ப்ரசோதயாத்

14) சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

15)  சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

16) விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்

17) அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

18) கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

19) மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

20) பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

21) உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

22) திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

23) அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

24)  சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

25) பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

26) உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

27)  ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

சுவாச நிலையின் சூட்சமத்தைப் பற்றி" திருமூலர் வெளிப்படுத்திய பாடல்

"சுவாச நிலையின் சூட்சமத்தைப் பற்றி" திருமூலர் வெளிப்படுத்திய பாடல்

வாசிவா வென்று வாசியில் ஊடாடி
வாசியை அங்கங்கே வைத்து நீசாதித்தால்
வாசியும் ஈசனும் மருவியே ஒன்றாகும்
வாசியை போல்சித்தி மற்றொன்றும் இல்லையே
-- திருமூலர்

1. வாசிவா வென்று வாசியில் ஊடாடி

கண்ணின் (புறக்கண்) நினைவைப் புருவமத்தியில் வைத்து, அகக்கண்ணான உயிரோடு ஒன்றி நினைவாற்றலை விண்ணிலே செலுத்தி விண்ணிலிருந்து வரும் பேராற்றலை
உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும்.

அதாவது, விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களைக் கவர்ந்து இழுத்து நாம் சுவாசிக்க வேண்டும்.

அங்கிருந்து வரும் உணர்வலைகள் உயிரிலே மோதும் பொழுது பேரொளியாக அது மாறுகின்றது.

நம் சுவாசமானது இப்படி பூமி சமைத்ததை ஈர்க்காதபடி.., "நேரடியாக.., விண்ணிலிருந்து வருவதைச் சுவாசமாக்க வேண்டும்".

2. வாசியை அங்கங்கே வைத்து நீசாதித்தால்

அப்படி விண்ணிலிருந்து வரும் அருள் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை உயிர் வழியாகச் சுவாசித்து.., நம் உடலில் இருக்கும் அனைத்து அங்கங்களிலும் "கண்ணின் நினைவைக் கொண்டு" அந்த ஆற்றலை இணையச் செய்யவேண்டும்.

நம் உடலிலுள்ள அங்கங்கள்:
1. சிறு குடல், பெருகுடல்
2. கணையங்கள்
3. கல்லீரல், மண்ணீரல்
4. நுரையீரல்
5. சிறுநீரகங்கள்
6. இதயம்
7. சிறு மூளை, பெருமூளை
8. கண்களில் உள்ள கருமணிகள்
9. நரம்பு மண்டலம்
10. எலும்பு மண்டலம்
11. விலா எலும்புகள்
12. குருத்தெலும்பு
13. எலும்புக்குள் உறைந்துள்ள ஊன்
14. தசை மண்டலம்
15. தோ மண்டலம்

மேலும்.., நம் உடல் அங்கங்கள் அனைத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் "அணுக்களிலும்", உயிர் வழியாகச் சுவாசித்த அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டும்.

3. வாசியும் ஈசனும் மருவியே ஒன்றாகும்

நம் உயிர் "ஓ.." என்று ஜீவனாகி "ம்..." என்று உடலாக மாற்றுகின்றது.

அதாவது, ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம்.

உயிர் வழி சுவாசித்த அந்த அருள் சக்தி உயிரால் உருவாக்கப்பட்ட நம் உடலில் உள்ள கோடிக் கணக்கான அணுக்களிலும் சேர்கின்றது.

அப்பொழுது, அனைத்து அணுக்களும் உயிரைப் போன்றே ஒளியாக மாறும் சந்தர்ப்பம் வருகின்றது.

நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களும்
"உயிருடன் ஒன்றுகின்றது".

இது பேரருளாக, பேரொளியாக மாறுகின்றது.

4. வாசியை போல்சித்தி மற்றொன்றும் இல்லையே

இப்படி, உயிர் வழியாக நம் சுவாசநிலை அமைந்து, அண்டத்திலிருக்கும் ஆற்றலை, இந்தப் பிண்டத்திற்குள் சேர்த்திடல் வேண்டும்

அப்பொழுது, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையமுடியும்.

பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும். அழியா ஒளிச் சரீரம் பெறமுடியும்.

"உயிர் வழி சுவாசம் ஒன்றுதான்" மனிதனைத் தெய்வீக நிலை அடையச் செய்யும்.

மனிதன் முழுமை அடைய.., விண் செல்ல "இதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை".