youtube

29 August 2017

எழுத்துகளின் சக்தி

எழுத்துகளின் சக்தி

எழுத்துகளின் சக்தி

          
அநேக மந்த்ரங்களில் அம் ,ஆம் ,இம் ,ஈம் என்றுவரும் .இந்த ஒவ்வொரு எழுத்திற்கும் சக்தி உண்டு .
"ர"  என்ற எழுத்து அக்னி பீஜம் "ரம் " ர அழைப்பாகவும் பயன்படும் .
 "ய " என்பது  வாயு பீஜம் எங்கும் நிறைத்துள்ளது .நமசிவய , நாராயன .என்பதை காண்க .
இந்த சப்தங்களின் வலிமை கொண்டுதான் நியுமரலாஜி உருவானது .
சொல்லுக்கும் கொள்ளும் தன்மை உண்டு என்பதற்கு ஆதர நூல் "நந்திகலம்பகம் ".

       ஒருவனுக்கு பட்சி அரசாக இருந்து சூரிய நாடியும் நடக்கும்போது அவன் சொல்வது பலித்துவிடும் . இதற்கு நல்லவன் கெட்டவன் பேதம் கிடையது .
ஆகவேதான் குடியிருக்கும் வீட்டிலிருந்து அவச்சொற்களை பேசக்கூடாது என பெரியோர்கள் சொல்வர் .ஆகவே கோபத்தில் குழந்தைகளை திட் டுவதும் வேண்டாம் .

" மந்த்ரங்கள் சப்தங்களின் வடிவாக உள்ளன என என் குருநாதர் கூறுவார் ."
       ஆதியில் மந்திரங்களை வாய்மொழியாகத்தான் கூறுவார்கள் .அதை சீடர்கள் உச்சரிப்பை அறிந்து மனனம் செய்வார்கள் .
"க " என்னும் எழுத்து கஷ்டங்களை நீக்கும்
" ங" என்னும் எழுத்து சகல விஷங்களையும்  நீக்கும்.
" ச " என்னும் எழுத்து வசியம் தரும்
" ண  " என்னும் எழுத்து சித்திகளை தரும்
" ப " என்னும் எழுத்து பேய் பிசாசுகளை பந்தனம் பண்ணும்

இதைப்போல் எல்லா எழுத்துகளுக்கும் சக்தி உண்டு

நாவடக்க மந்த்ரம்

நாவடக்க மந்த்ரம்

நாவடக்க மந்த்ரம்

எதிரிகளின் நாவை அடக்க மந்த்ரம்

நம் மேல் கோபப்பட்டு பேசுபவர்களின் நவை அடக்கலாம் ,மேல் அதிகாரிகள் ,கணவன் , மனைவி ,பேசும் பேச்சுக்களை அடக்கும் மந்த்ரம்

" நாவு அடங்க நமசிவாயம் நயனம் அடங்க நமசிவாயம்
----------------------------------------------------------------------
---------------------------------------------------------------------

என்னோடு எதிர்த்தவர்கள் பலம் செத்து பலம் மாண்டு நாவு விழுந்து நாவு எழாமல் இருக்க சிவ "

இதற்குரிய எந்திரம் ,மந்திரத்தை வைத்துக்கொண்டால் எதிர்த்து பேசுபவர்களின் நாவு அடங்கும் .

இது அனுபவத்தில் செய்துபார்த்து நன்மை அடைத்தது

ஜாதகம் / ஜோதிடம்

ஜாதகம் / ஜோதிடம்

ஜாதகம் / ஜோதிடம் (தொடர்ச்சி)

ஜாதகம் உண்மையா ? பொய்யா ?

 சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து தெய்வ அருள் உள்ள ஒரு ஜோதிடர் 90 % சரியாகக கூறிவிடுவார் கூறிவிடுவார். பஞ்சாங்கத்தில்  வாக்கியம் , திருக்கணிதம் என இருக்கிறது, இரண்டிற்கும் கிரகப் பெயர்ச்சியில் வித்தியாசம் உள்ளது .ஒரு பெண்ணின் ஜாதகத்தில் வாக்கிய பஞ்சங்கப்படி ஒரு ஜோதிடர் புனர்பூச நட்சத்திரம்
மிதுன ராசி என குறித்திருக்கின்றார் . மற்றொருவர் கடக ராசி என    குறித்திருக்கின்றார். திருக்கணிதபடி பூசம் நட்சத்திரம் என குறித்திருக்கின்றார் . இப்படி ஜாதகம் இருந்தால் எப்படி பலன் சொல்வது ?. நடந்த சம்பவம் ஒன்றை கூறுகின்றேன்.

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

                                ஒரு பெரும் செல்வந்தரின் ஒரே மகனுக்கு திருமணம் முடிப்பதற்காக5 ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்ததில் ஐவரும் வெகு பிரமாதம்  . 
என்று கூறிவிட்டனர். திருமணத்திற்கு நாளும்  குறித்து  திருமணம் நடக்க ஒருவாரம் இருக்கும் போது , மாப்பிள்ளை விபத்தில் இறந்துவிட்டார். இது ஏன் நடந்தது ?
                                         ராமாயணத்தில் ராமருக்கு  பட்டாபிஷேகம் நடக்க நாள் குறித்தவர் வசிஷ்ட மகரிஷி . அவர் குறித்த நேரத்தில் பட்டாபிஷேகம் நடக்கவில்லை. ராமன்  காட்டிற்கு சென்றார் . இது ஏன் நடந்தது ?

                                        இயேசு அருள் நிறைந்தவர் , தேவகுமாரன் , மகாவல்லமை   உடைவர் , இறந்தவரை உயிர்பிக்க செய்தார் , குஷ்டரோகியை குணமாக்கினார் .பிற்காலத்தில்         நடக்கப்போவதை  உணர்ந்தவர் . அவர் கூறுகிறார் " எவனுடைய பாதத்தை
கழுவி நான் முத்தமிடுகிறேனோ அவன் என்னைக்  காட்டிக்கொடுப்பான் . பேதுரு என்ற சீடனை நோக்கி " பேதுரு கோழி கூவுவதற்கு முன் என்னை நீ 3 முறை மறுதலிப்பாய் ; நான் இறந்தவுடன் என் ஆடைகளை பங்கு போட்டுக்கொள்வார்கள் " என கூறினார் .அப்படியே நடந்தது ,பிதாவின் கட்டளை எதுவோ அது நடக்கட்டும் என  இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார் .

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )
                                எத்தனையோ மகான்களுக்கு துன்பன்களும் துயரங்களும் வந்தன, அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டனர் . ஆனால் சாதாரண மனிதனால் அப்படி இருக்க முடியது . நோய் வந்தால் மருத்துவம் பார்ப்பதும் ,கஷ்டங்கள் வந்தால்  பரிகாரங்கள் தேடுவதும் மனித மனம் .அதை தவறு என்று சொல்வதற்கில்லை .
எதைசெய்தாலும் ,தெய்வத்தின் அருளை வேண்டுங்கள் தெய்வத்திடம் சரணாகதி 
அடையுங்கள் அவன் காப்பாற்றுவான் ,அப்படி இல்லாவிட்டால் இறைவன் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் 
பரிகாரம் என்ற பெயரில் போலிகளிடம் ஏமாறவேண்டம்.ஆனால் பரிகாரம் பொய் இல்லை
அதைப்பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம் .

                            ஒரு தீக்குச்சியில் எரியும் நெருப்பை அணைத்துவிடலாம் .ஒரு வாளி தண்ணீரில்
அணையும் நெருப்பும் உண்டு ,தீயணைப்பு வண்டி வந்து அணைக்க வேண்டிய நெருப்பும் உண்டு .
அணைக்க முடியாத காட்டுத்தீயும் உண்டு .கனமாக மழை பெய்தால் காட்டுத்தீயும்
அணைத்துவிடும் . அதுபோலதான்   கடவுளின் அருள். நல்ல குருவின் உதவியுன் கடவுளை தேடுங்கள் ,அவரிடம் சரணடையுங்கள்
கடவுள் உங்களை கப்பார் .நீங்கள் எந்த மதத்தவராயினும் சரி ,அந்த மதத்தின் மீதும்
அந்த கடவுளின்  மீதும் நம்பிக்கை வையுங்கள் ,"இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று
சொல்லுவதில்லை

மந்த்ரம் என்றால் என்ன ?

மந்த்ரம் என்றால் என்ன ?

"நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்த்ரம் என்ப " என தொல்காப்பியம் கூறும். வையத்துள் வாழ்வாங்கு வாழும் உத்தம மனிதர்களின் வாயில் இருந்து வரும் சொல் எல்லாமே மந்திரங்கள் தான்!

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

மேஷம்,கடகம் ,சிம்மம் ,கன்னி ,துலாம் ,ஆகிய லக்கினம் அல்லது                ராசிகாரர்கள்.  லக்கினாதிபதி  ஆட்சி ,உச்சம் பெற்று கேந்திரம் ,திரிகோணம் பெறவேண்டும்.

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

லக்னாதிபதி, 4ஆம் வீட்டதிபதி, 9ஆம் வீட்டதிபதி,ஆகிய மூவரும் 3ஆம் இடத்தில் அமரவேண்டும். 4ஆம் இடத்தோன்   9ம் இடத்தில் அமர்த்து சுபர் பார்வை பெறல்.  லக்னாதிபதியும் ,7ஆம் இடத்தோனும் ஒரே இராசியில் இருக்கவேண்டும்.9ஆம்  வீட்டிற்குரியவர் 1,4,7,10 ல் ,நட்பு ,ஆட்சி .உச்சம் பெறுதல், 4,9 ஆம் அதிபர்களை சந்திரன் பார்த்தல் ,10 ஆம் அதிபதி ,லக்னாதிபதி இவர்களை ராகு பார்த்தல் .இவைகளில் ஏதாவது ஒரு அமைப்பு உள்ளவர்களுக்கே மந்த்ரம் பலிக்கும் " என ஜோதிட சிந்தாமணி என்னும் நூல் கூறுகிறது.
    

மந்திரங்கள் உண்மையா?

  மந்திரங்கள் உண்மையா?

எனது குருநாதர் கூறுவார் 'மந்த்ரங்கள் சப்தங்களின் வடிவாக இருக்கிறது' என்பார். முன்பு  ரஷ்யாவில் மந்த்ரங்கள் உண்மையா என ஆராய்ச்சி நடத்தினர்.ஒரு ஒலி நாடாவில் வேத மந்த்ரங்களை பதிவு செய்தனர் .அதே
 ஒலி நாடாவில் மனிதர்கள் பேசும் பேச்சுகளையும் பதிவு செய்து வானமண்டலத்தில் (காற்றில்லா இடத்தில் )ஒலிக்கச் செய்ததில் வேதமந்த்ரங்கள் பூமியில் ஒலித்த அதே சப்தத்தில் ஒலித்தது .ஆனால் சாதாரண
 சப்த்தங்கள் எதுவும் கேட்கவில்லை
              ஆதி காலத்தில் குருமார்கள் .வாய் மூலமே சரியான உச்சரிப்புடன்
சீடர்களுக்கு  உபதேசித்திதனர்.முறையாக வேதம் பயின்றவர்கள் சொல்லும்
மந்திரம்  பலிக்கிறது.அவர்களுக்கு சில நியமனங்கள் உள்ளன . அதை கடைபிடிக்கவிடில் அவர்கள் சொல்லும் மந்திரம் பலிக்காது .( தொடரும்)

மந்திரங்கள் உண்மையா? (தொடர்ச்சி)

  மந்திரங்கள் உண்மையா? (தொடர்ச்சி)

           மந்திர ஜெபம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆகார நியமனங்கள் , தித்திப்பு ,உப்பு புளிப்பு ,எண்ணெய் ஆகியவைகளை தள்ளி விடவேண்டும்.தாம்பூலம் , பித்தளை பாத்திர போஜனம் ,பகல்   போஜனம் ,ஸ்திரி சங்கமம் .அதை பற்றிய பேச்சு ,கூட்டம் ஆகியவற்றை விளக்க வேண்டும் .

                        தரையில் படுக்கை ,பிரமச்சரிய விரதம், மௌனம் குருசேவை ,நித்ய நித்ய பூஜை ,நித்ய தானம் ,தெய்வ ஸ்துதியும் ,கீர்த்தனமும் கீர்த்தனமும் ,மூன்று வேளை ஸ்நானம் ,தாழ்ந்த செயல்களை விளக்குதல் ,குரு ,தெய்வ பக்தி ஆகியவை மந்திர
சித்தி அளிக்கும் . 

சப்தமாறுகா மஹா மந்திரம்

சப்தமாறுகா மஹா மந்திரம்

சப்தமாறுகா  மஹா மந்திரம்.


 ஓம், ஹிரீம், க்லீம்,  ஐம் பிரம்மி ,மகேஸ்வரி ,கௌமாரி ,வைஷ்ணவி ,வாராஹி , இந்த்ராணி ,சாமுண்டே ,சித்தசாமுண்டேஸ்வரி  ,கணேஷ்வரி ,ஷேத்ரபால, நரஷிம்கி ,மகாலக்ஷ்மி சர்வதோ , துர்காயை ஹும்பட் சுவாஹா

மந்திரங்கள்

மந்திரங்கள்

மந்திரங்கள்

வாய்மையை  வாழ்க்கையில்  கடைபிடித்து வாழும் உத்தம மனிதரின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் மந்திரங்கள்  தான் .
தற்காலத்தில் புத்தகங்களிலும்  , இனணய தளதிலும் பலவிதமான மந்திரங்களை வெளியிடுகின்றனர்.இந்த மந்திரங்களை கூறினால் பலன் கிடைக்குமா? சந்தேகம்தான் ! மந்திரம்  யாருக்கு சித்தியாகும் ? என்பதை அவர்களின் ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை   முன் கட்டுரையில் பார்த்தோம் . அவ்வாறு இல்லா விட்டால் போலி வேடமிட்டு ,பிறர் பொருளை அபகரித்த பாவதிற்குரிய தண்டனையை அடைவார்கள் .இதைத்தான் மந்திரம் கால் மதி முக்கால்
என்பார்கள்.

மதி என்றால் சந்திரன்,  சந்திரன் மனதிற்குரியவன், மன வலிமை வேண்டும் .அடியேன் என் குருநாதரிடம் " சாமி பல லட்சம் உரு ஜெபித்தாலும் புத்தகத்தில் எழுதிருப்பதைப்  போல் பலன் நடைபெறவில்லையே   ஏன் ? என கேட்டேன் அதற்கு அவர் " அட்சரலட்சம் " என்றார் . மந்திரம்  ஜெபித்து சித்து அடைய சில நியமனங்கள் உள்ளன .  அவைகளில் ஒன்று  ஆகார  நியமணம். இதை பற்றி முன்  கட்டுரையில் கண்டோம் .

             மந்திரத்தை 1 லட்சம் உரு ஜெபித்தாலும் அதில் 10 ல் ஒரு பகுதி தர்ப்பணம் செய்யவேண்டும் ,10 ல் ஒரு பகுதி ஹோமம்  செய்யவேண்டும் .  அப்படி இல்லாவிட்டால் அதைபோல் 4 மடங்கு அதாவது 1 லட்சம் என்றால் 4 லட்சம் மொத்தம்  5 லட்சம் உரு நியமனத்துடன் ஜெபிக்கவேண்டும் .இவ்வளவு கஷ்டம் இருக்கும்போது "நீ பணத்தை கொடு நான் தெய்வத்தை காட்டுகிறேன் என்று ஒருவர் சொன்னால் எப்படி நம்புவது? அப்படி ஏமாந்த சிலரையும்  அடியேன் சந்தித்து இருகின்றேன்  .

 " மந்திரங்கள் 100 சதவீதம் உண்மை.மந்திரங்கள் பலிக்கவில்லை என்றால் அது ஜெபித்தவருடைய  தவறே  தவிர  மந்திரந்தின் தவறே அல்ல .

       மந்திரம் என்றால் மனதில் திறம் என கூறுவார்கள். மனதை ஒருநிலை படுத்தி சொல்லும்போது மந்திரம் நிச்சயமாக பலிக்கும் . உதாரணத்திற்கு   ஒரு மந்திரம் தருகிறேன்.இந்த மந்திரத்தை முறைப்படி ஜெபித்தால் பிறர் நம்மைக்கண்டு  வசியமாவதொடு, நம் கட்டளையை ஏற்று நடப்பார்கள் .

" ஓம் சக்தி ,உலக சக்தி, ஆதி சக்தி, ஆதார சக்தி, சிவ சக்தி ,சித்த சக்தி ,வாக்கு  சக்தி, வசிய சக்தி, எண்ணிய எண்ணம் எண்ணியபடியே ,என்னைக்கண்டோர் என்வசம் ஆகவும் ,என்னை நினைத்தோர்
என் வசம் ஆகவும் ,என்சொல் கேட்டு இசைந்தே நடக்க ,நானே நீயாய் ,நீயே நானாய் செய் " (இதற்குரிய செயல்முறை விளக்கத்தை வெளியிட்டால் சிலர் தவறாக பயன்படுத்துவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக செயல்முறை விளக்கம் வெளியிடவில்லை )

   " மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டம் "  

நலமே பெற்று! வளமாய் வாழ்க !

பேய்கள் ........பேய்களை பற்றிய நம்பிக்கை எல்லாநாடுகளிலும் உண்டு

பேய்கள் ........பேய்களை பற்றிய நம்பிக்கை எல்லாநாடுகளிலும் உண்டு அதை பற்றிய குறிப்புகள் சிலவற்றை கொடுக்கிறேன் நான் இதுவரையில் பேயாடுபவர்களை பார்திருக்கிறேன் .ஆனால்பேயை பார்த்தது இல்லை .
நம்பிக்கை என்பது அவரவர்களின் சொந்த அனுபவமாகும் .
ஆவிகள் ஆயுள் முடியாமல் துர்மரணங்கள் அடைந்தவர்கள் ,ஆவிகளாக பயந்தசுபாவம் உள்ளவர்களையும் சிலபெண்க ளையும் பிடிப்பதாக நம்புகிறார்கள்  அடுத்து .முனி  இதற்கு முனீஸ்வரர் என்ற பட்டத்தை கொடுத்து வணங்குகிறார்கள் .இவர் நல்லவரா கெட்டவரா என்பதை ,அவரவர்களின் சொந்தகருதுக்கே விட்டுவிடுகிறேன் .அல்லல்படுத்தும்
அடங்கா முனியும் ,பிள்ளைகள் தின்னும் புலக்கடை முனியும் ,என்று கந்தர் சஷ்டி கவசத்தால் உணர்க ..அடுத்து ரத்தகாட்டேரி ,இது கொஞ்சம் கொடுமையானது ,மனிதர்களின் ரத்தத்தை குடிக்கும் இதுதவிர  வூ  டோ  குய் ,
பா ஜீ  யூ என்பனபோன்ற சீன பேய் களும் உண்டு இதைபோன்ற எந்தபேய்களும் உங்களிடம் வராமல் இருக்க ,தெய்வ பக்தி உள்ளவர்களாய் இருங்கள்

பஜகோவிந்தம் [ஆதிசங்கரர் ]

பஜகோவிந்தம் [ஆதிசங்கரர் ]
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
1  செல்வம் சம்பாதிக்கும் வரைதான்  உன்னைசார்ந்தவர்கள் உன்னிடம் பற்று உடையவர்களாய் இருப்பார்கள் .அதன்பிறகு வயதான காலத்தில் உன்னிடம் ஒருவரும் பற்றுவைக்க மாட்டார்கள்
2   உன்னுடைய மனைவி யார்//?மகன்யார் ?நீயார் ? எங்கிருந்து வந்தாய் ?இதை எண்ணிப்பார்  ..
3  இளமை செல்வம் இவைகளை பற்றி அகந்தை கொள்ளாதே சிலநொடிகளில்
யமன் கொண்டுபோய் விடுவான் எண்ணிப்பார்த்து இறைவனை நாடு
4  சடை வளர்த்தவன் ,தலை மழித்தவன் ,காவிதுணி கட்டி வேடம் போடுபவன்
எல்லாம் வயிற்று பிழைப்புக்காகவே நடைபெறுகிரது
5  நான்யார் /  ?நீயார் ?எங்கிருந்து வந்தாய் உலகம் கனவு போன்றது .
[எனக்குத்தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு ,தனக்குத்தாய் நாடியே சென்றாள் ...அப்பன் எத்தனை அப்பனோ ? பிள்ளை எத்தனை பிள்ளையோ
முன்னமெத்தனை பிறவியோ ] பட்டினத்தார் ..
இரை தேடுவதோடு ,இறையையும் தேடு

ஸ்ரீவசிஷ்ட்ட முனிவரால் எழுதப்பட்ட தாரித்திரிய தஹன சிவ ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதால் கடன் ,வியாதி தீரும்

ஸ்ரீவசிஷ்ட்ட முனிவரால் எழுதப்பட்ட தாரித்திரிய தஹன சிவ ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதால் கடன் ,வியாதி தீரும் .

ஸ்காந்த புராணத்தில் உள்ள சுக்ராச்சாரியாரால் சொல்லப்பட்ட மங்கள ஸ்தோத்திரம் சொன்னாலும் கடன் தீரும் .

செல்வம் கிடைக்க ஸ்ரீ சூக்தம் ,கனகதாரா ஸ்தோத்திரம் ,லக்ஷ்மி ,நாராயண ஹிருதயம் ,மற்றும் லக்ஷ்மிகுபேர தனாகர்ஷண மந்திரம் இவைகளில்
ஏதாவது ஒன்றை ஜெபித்தாலும் நல்லபலன் உண்டு

கடன்விரைவாக தீர 3 ,5,,,7,,என்ற எண்ணிக்கையில் குதிரைகள் படத்தை வீட்டை விட்டு வெளியே ஓடுவது போல் அமைத்தால் விரைவில் கடன் தீரும்

கடைகளில் வியாபாரம் அதிகரிக்க கடையின் வடமேற்கு மூலையில் சஞ்சீவி மலையை தூக்கிசெல்லும் அனுமான் படம் வைத்தால் ,வியாபாரம் பெருகும்

வீட்டில் ,பருத்தி ,அகத்தி ,பனை ,நாவல் ,எருக்கு ,அத்தி ,ஆல் ,அரசு ,புளி
போன்ற மரங்கள் வளர்க்க கூடாது .

செல்வம் பெருக சில குறிப்புகள்

செல்வம் பெருக சில குறிப்புகள்

1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
29. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
37. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
38. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
39. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
41. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
42. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
43. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
44. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
47. திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
48. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
49. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.
50. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
51. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.
55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.
56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.
58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
59. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
60. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
61. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
62. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
64. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
65. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
66. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
67. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
68. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
69. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
71. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
73. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
74. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
76. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
79. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
81. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.

ஸ்ரீ முனீஸ்வரன் பகவான்னை அழைத்து அருள்வாக்கு கூறும்பூஜைகள் பயிற்சி முறைகள் செய்வது எப்படி ?


கணபதி மந்திரம்காரிய வெற்றிக்கு மிக சக்தி படைத்த அருகம்புல் பயன்படுத்தும் பயிற்சி முறைகள்


கைக் கருப்பு சித்துவிளையாட்டு என்றால் என்ன ?Block Magic


மகா மந்திரம் கடிக்க வரும் நாயின் வாயைக் கட்ட


சோழி பிரசன்னம் பயிற்சி முறைகள்


ராஜவசியம் நாய் உருவி செடி


மாந்திரீக கட்டு விலகும் மகா மந்திரம்


அருள்வாக்கு சொல்ல ஸ்ரீவாலை தெய்வம் உபாசனை மந்திரம்


https://www.youtube.com/watch?v=GnlbP8c8Z9g


வீட்டில் பணம் பெருகும் அதுக்கு நீங்க செய்ய வேண்டிய மிகச்சிறிய பரிகாரம் இதுதான்..


ராஜவசியம் செவ்வ அரளி பூ குங்குமம்


100% அரசு, தனியார், வேலைவாய்ப்புகள் பெற மந்திரம் வழிபாடு


திருஷ்டி உள்ளதை எப்படி உணருவது?