youtube

16 August 2017

வியாழக்கிழமை லட்டு தானம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்...

லட்டு க்கான பட முடிவு


வியாழக்கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்தால்
, வீட்டில் வியாழக்கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும்.

விஷ்ணு பகவானை வணங்குவது மிக அவசியம். வியாழக்கிழமை காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்துவிட்டு, விளக்கேற்றி, விஷ்ணு பகவானை வணங்க வேண்டும்.

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிறப் பொருட்களை தானம் கொடுக்கலாம்.

சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டு படைத்து வணங்கினால் அதிர்ஷ்டம் பெருகும். லட்டு தானம் செய்வது அவசியம்.

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற இனிப்புப் பலகாரம் வாழைமரத்துக்கு முன் வைத்துப் படைத்து, மஞ்சள் நிறப் பொருட்களை தானம் செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும்.

மற்ற தினங்களில் விரதங்கள் இருப்பதைவிடவும் வியாழக்கிழமையன்று விரதம் இருந்து, தானம் செய்தால் வீட்டில் செல்வம் நிலைபெற்றிருக்கும்.

வீட்டில் பணம் தங்கலையா?... அதுக்கு நீங்க செய்ய வேண்டிய மிகச்சிறிய பரிகாரம் இதுதான்..

பண
ம்பணம் க்கான பட முடிவு
இந்த பரிகாரங்களை எல்லா நாள்களிலும் செய்யலாம். இதற்கென தனியே கால நேரம் பார்க்கத்  தேவையில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி இடைவெளியில் இதைச் செய்தால் பலன் இரட்டிப்பாகும். ஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கின்னத்தை எடுத்துக் கொண்டு அதில் உப்பு, சர்க்கரை, அரிசி மூன்றையும் சமஅளவு எடுத்துக் கொண்டு அதற்கு நடுவில் ஒரு குத்தூசியை (safty pin) ஒன்றை மேல்நோக்கி இருக்கும்படி குத்தி வைக்க வேண்டும்.

இதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு, தங்களுடைய விருப்பக் கடவுளிடம் மனதைவிட்டு, துன்பங்களைப் போக்குமாறும் செல்வ வளம் தரும்படியும் வேண்டிக்கொண்டு, பின் அந்த கின்னத்தை மூடாமல், திறந்திருக்கும்படி வீட்டின் ஏதேனும் ஒரு மறைவான மூலையில் வைக்க வேண்டும்.

தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைத்தால் பலன் இரட்டிப்பாகும்.

இதை தினமும் 2 நிமிடமாவது தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். இதை தினமும் செய்து வந்தால், அன்றாடம் உங்கள் வீட்டுப் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் உண்டாவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

அந்த கின்னத்தில் தூசி படிந்தபின், அதை மாற்றிவிட்டு அதேபோல் வேறு ஒரு கின்னத்தை வைத்து வழிபட ஆரம்பிக்கலாம். இதை இத்தனை நாள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. வாழ்நாள் முழுவதும் கூட இதை கடைபிடிக்கலாம்.

இவ்வாறு செய்து வருவதால் வீட்டில் வளமும் செல்வமும் அதிகரிக்கும்.


ஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கின்னத்தை எடுத்துக் கொண்டு அதில் உப்பு, சர்க்கரை, அரிசி மூன்றையும் சமஅளவு எடுத்துக் கொண்டு அதற்கு நடுவில் ஒரு குத்தூசியை (safty pin) ஒன்றை மேல்நோக்கி இருக்கும்படி குத்தி வைக்க வேண்டும்.

இதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு, தங்களுடைய விருப்பக் கடவுளிடம் மனதைவிட்டு, துன்பங்களைப் போக்குமாறும் செல்வ வளம் தரும்படியும் வேண்டிக்கொண்டு, பின் அந்த கின்னத்தை மூடாமல், திறந்திருக்கும்படி வீட்டின் ஏதேனும் ஒரு மறைவான மூலையில் வைக்க வேண்டும்.

தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைத்தால் பலன் இரட்டிப்பாகும்.

இதை தினமும் 2 நிமிடமாவது தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். இதை தினமும் செய்து வந்தால், அன்றாடம் உங்கள் வீட்டுப் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் உண்டாவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

அந்த கின்னத்தில் தூசி படிந்தபின், அதை மாற்றிவிட்டு அதேபோல் வேறு ஒரு கின்னத்தை வைத்து வழிபட ஆரம்பிக்கலாம். இதை இத்தனை நாள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. வாழ்நாள் முழுவதும் கூட இதை கடைபிடிக்கலாம்.

இவ்வாறு செய்து வருவதால் வீட்டில் வளமும் செல்வமும் அதிகரிக்கும்.






யட்சிணிதேவி சித்தியாகும் கலசபூஜை செய்முறைகள்

கலச க்கான பட முடிவுயட்சிணிதேவி சித்தியாகும்  கலசபூஜை  செய்முறைகள்

விக்நேச்வர பூஜை :
(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)

கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
    கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
    ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||

    அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி
    மஹா கணபதிம் ஆவாஹயாமி

    மஹாகணாதிபதயே     ஆஸநம்           ஸமர்ப்பயாமி
    "    "    அர்க்யம்             "
    "    "    பாத்யம்                "
    "    "    ஆசமநீயம்             "
    "    "    ஔபசாரிகஸ்நாநம்        "
    "    "    ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம்    "
    "    "    வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந்        "
    "    "    யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந்    "
    "    "    கந்தாந் தாரயாமி            "
    "    "    கந்தஸ்யோபரி அக்ஷதாந்        "
    "    "    அலங்கரணார்த்தம் அக்ஷதாந்    "
    "    "    ஹரித்ரா குங்குமம்        "

    புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.)

    ஓம் ஸுமுகாய நம:    ஓம் தூமகேதவே நம:
     "   ஏகதந்தாய நம:     "   கணாத்யக்ஷாய நம:
     "   கபிலாய நம:     "   பாலசந்த்ராய நம:
     "   கஜகர்ணகாய நம:     "   கஜாநநாய நம:
     "   லம்போதராய நம:      "   வக்ரதுண்டாய நம:
     "   விகடாய நம:     "   ச்சூர்ப்ப கர்னாய நம:
     "   விக்நராஜாய நம:     "   ஹேரம்பாய நம:
     "   கணாதிபாய நம:     "   ஸ்கந்த பூர்வஜாய நம:

    ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

        தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.
    (வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.)
நிவேதந மந்த்ரங்கள் :
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.
அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.

    ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே
    குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி.
    மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

    அம்ருதாபிதாநமஸி - உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம்
    எடுத்து விடவும்)

    தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்)
    (கற்பூரம் ஏற்ற வேண்டும்.)
    நீராஜநம் ஸமர்ப்பயாமி.
    நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

பிரார்த்தனை :

    வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |
    அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும்
    நமஸ்காரமும் செய்யவும்)

    கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில்
    தரித்துக் கொள்ள வேண்டும்)

ப்ராணாயாமம் :

ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: -
ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந:
ப்ரசோதயாத்  - ஓமாப: - ஜ்யோதீரஸ: -
அம்ருதம் ப்ரஹ்ம - பூப்ர்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம் :

அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.

விக்நேஸ்வர உத்யாபநம் :

உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு,
"விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச"
என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.

ப்ரதாந பூஜை

பூஜா ஆரம்பம் :

    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
    ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||

ப்ராணாயாமம் :

    ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: -
    ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர்
    வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந:
    ப்ரசோதயாத்  - ஓமாபோ: - ஜ்யோதீ ரஸ: -
    அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ் ஸுவரோம்.
ஸங்கல்பம் :
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்த்தே, அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புர்ஷஸ்ய, ஸ்ரீவிஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய அத்யப்ரஹ்மண; த்விதீய பரார்த்தே ஸ்ரீச்வேத வராஹகல்பே வைவஸ்வத மந்வந்தரே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, சகாப்தே அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே --ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே-- . . . . . . . . .ஸம்வத்ஸரே . . . . . . . . அயநே. . . . . . . . . ருதௌ. . . . . . . . மாஸே. . . . . . . பக்ஷே. . . . . . . சுபதிதௌ இந்து வாஸர யுக்தாயாம். . . . . . . . நக்ஷத்ரயுக்தாயாம் சுபதிதௌ அஸ்மாகம் ஸகுடும்பநாம் க்ஷேம ஸ்த்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷஅர்த்த ஸித்த்யர்த்தம், ஸாம்ப பரமேச்வர ப்ரஸாத ஸித்த்யர்த்தம், ஸோமவார புண்ய காலே, ஸாம்ப பரமேச்வர பூஜாம் கரிஷ்யே | ததங்கம் கலச் பூஜாம் கரிஷ்யே |
விக்நேச்வர உத்யாபநம் 'யதாஸ்தாநம் ப்ரதிஷ்ட்டாபயாமி' என்று அக்ஷதை சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கு பக்கமாகச் சற்று நகர்த்தவும்.

கலச பூஜை :

    (கலசத்தை சந்தனம், குங்குமம், அக்ஷதை இவைகளால் அலங்கரித்து)

    கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : |
    மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: ||

    குக்ஷெள து ஸாகராஸ் ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா |
    ருக்வேதோத யஜுர்வேதஸ் ஸாமவேதோஸ் ப்யதர்வண : ||

    அங்கைச்ச ஸஹிதாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : |
    கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி ||
 
    நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ||
    
    (என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், தன்னையும்
ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)

கண்டா பூஜை :

    ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம் |
    கண்டாநாதம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்ச்சநம்;  
                என்று சொல்லி மணியை அடிக்கவும்.

ஷோடசோபசார பூஜை :

    உமயா ஸஹிதம் தேவம் ப்ரஸந்நம் பரமேச்வரம் |
    அங்காதிரோபித ஸ்கந்த ஹைரம்ப வ்ருஷவாஹநம் ||

    வ்யாக்ரசர்ம பரீதாங்கம் ஹரம் ஸோம விபூஷணம் |
    த்யாயேத் சதுர்ப்புஜம் தேவம் சந்த்ரமௌளிம் ஸதாசிவம் ||
            அஸ்மிந் பிம்பே ஸாம்ப பரமேச்வரம் த்யாயாமி

    ஆவாஹயாமி தேவேசம் ஆதி தேவம் ஸநாதநம் |
    ஸோமேச்வரம் சூலபாணிம் விரூபாக்ஷம் பிநாகிநம் ||
            அஸ்மிந் பிம்பே ஸாம்ப பரமேச்வரம் ஆவாஹயாமி
ப்ராண ப்ரதிஷ்டை :
(அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூத்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராணப்ரதிஷ்டை செய்ய வேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால் பஞ்ச கவ்யத்தால் அந்த ப்ரதிமையைச் சுத்தி செய்து ப்ராணப் பிரதிஷ்டை செய்யவேண்டும். படமாக இருந்தால் ப்ராண ப்ரதிஷ்டை மட்டும் செய்ய வேண்டும்.)

            ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
        ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய:, ருக் யஜுஸ் ஸாம
        அதர்வாணி ச்சந்தாம்ஸி || ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
        ஸம்ஹார காரிணீ ப்ராண சக்தி: பரா தேவதா |

            ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம், ப்ராண
        ப்ரதிஷ்டாபநே விநியோக:

            ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:, ஹ்ரீம் தர்ஜநீப்யாம்
        நம;, க்ரோம் மத்யமாப்யாம் நம:

            ஆம் அநாமிகாப்யாம் நம:, ஹ்ரீம் கநிஷ்ட்டிகாப்யாம்
        நம:, க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம:

        ஆம் ஹ்ருதயாய நம:, ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட்,
    ஆம் கவசாய ஹூம், ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட், க்ரோம் அஸ்த்ராய பட், பூர்ப்புவஸ்
    ஸுவரோமிதி திக்பந்த: ||

|| த்யாநம் ||

            ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ தருண
                ஸரோஜாதிரூடா கராப்ஜை:
            பாசம் கோதண்ட மிக்ஷூத்பவ மளிகுண-
                மப்யங்குசம் பஞ்சபாணாந் |
            பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிணயந லஸிதா
                பீந வக்ஷோ ருஹாட்யா
            தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுக்கரீ
                ப்ராணசக்தி: ப்ரா ந: ||

        ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் | க்ரோம் ஹ்ரீம் ஆம் | அம் யம் ரம் லம் வம் சம் ஷம்
    ஸம் ஹம் ளம் க்ஷம் அம் | ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ: |

        அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது. அஸ்யாம் மூத்தௌ ஸர்வேந்த்ரியாணி வாங்
    மநஸ் த்வக் சக்ஷுச் ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்த்தாநி இஹாகத்ய
    ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா |

        (புஷ்பம், அக்ஷதை இவைகளைத் தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்.)

        அஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி போகம் | ஜ்யோக் பச்யேம
    ஸூர்ய முச்சரந்த மநுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி ||

        ஆவாஹிதோ பவ | ஸ்த்தாபிதோ பவ | ஸந்நிஹிதோ பவ | ஸந்நிருத்தோ பவ | அவகுண்டிதோ
    பவ | ஸுப்ரீதோ பவ ஸுப்ரஸந்நோ பவ ஸுமுகோ பவ | வரதோ பவ | ப்ரஸீத ப்ரஸீத ||

        ஸ்வாமிந் ஸர்வஜகந்நாத யாவத் பூஜாவஸாநகம் | தாவத் த்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந்
    ஸந்நிதிம் குரு || என்று ப்ரார்த்தித்து, வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றை நிவேதநம் செய்யவும்.

        பிறகு கீழ்கண்டதைச் சொல்லி சரட்டைக் கலசத்தின் மீது வைக்கவும்.

        முக்தா வைடூர்ய கசிதம் ஜாம்பூநத பரிஷ்க்ருதம் |
        ஸிம்ஹாஸநம் மஹாதேவ ஸங்க்ருஹாண ஸுரேச்வர ||
                        ஆசநம் ஸமர்ப்பயாமி.

        ஸர்வதீர்த்த ஸமாநீதம் புஷ்பகந்தைஸ் ஸுவாஸிதம் |
        பாத்யம் க்ருஹாண தேவேச பக்தப்ரிய நமோஸ்து தே ||
                        பாத்யம் ஸமர்ப்பயாமி.

        கைலாஸ சிகராவாஸிந் ஸுராஸுர ஸுபூஜித |
        அர்க்யம் க்ருஹாண தேவேச பக்தாநா மபயங்கர ||
                        அர்க்யம் ஸமர்ப்பயாமி.

        நமஸ் துப்யம் த்ரிணயந ஸ்ருஷ்டி ஸ்த்தித்யந்த காரண |
        க்ருஹாண தேவ தேவேச ஜிதக்ரோத ஜிதேந்த்ரிய ||
                        ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

        பயஸா மதுநா தத்நா க்ருதேந ச ததைவ தே |
        மதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி தேவதேவ ஜகத்பதே ||
                        மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.

        ததிக்ஷீர க்ருதம் சம்போ கதலீ பல ஸம்யுதம் |
        பார்வதீச நமஸ்துப்யம் க்ராஹ்யம் பஞ்சாம்ருதம் த்வயா ||
                        பஞ்சாம்ருதஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

        சந்த்ரமௌளே ஜடாஜூட ஸோமஸூர்யாக்நி லோசந |
        பாஹி மாம் க்ருபயா சம்போ பசூநாம் பதயே நம : ||
                        சுத்தோதக ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

        துகூலம் தௌத தவளம் நாநா சித்ரமயம் யுகம் |
        வஸ்த்ரம் க்ருஹாண பகவந் காலகண்ட நமோஸ்து தே ||
                        வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி.

        காஞ்சநம் ப்ரஹ்மஸூத்ரஞ்ச ராஜதம் சோத்தரீயகம் |
        தந்துநா மிச்ரிதம் ஸூத்ரம் பவித்ரஞ்ச க்ருஹாண போ: ||
                        உபவீதம் ஸமர்ப்பயாமி.

        ஸ்ரீகந்தம் குங்குமையர் மிச்ரம் கர்ப்பூரேண மநோஹரம் |
        அந்யைஸ் ஸுகந்திபிர் யுக்தம் க்ருஹாண ஸ்வஜநப்ரிய ||
                        கந்தாந் தாரயாமி.

        அக்ஷதாந் தவளாந் திவ்யாந் அவ்ரணாம்ஸ் திலதண்டுலாந் |
        அஷ்டமூர்த்தே நமஸ்துப்யம் அக்ஷதாந் ஸங்க்ருஹாண போ: ||
                        அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.

        கேயூர கடகாதீநி கடிஸூத்ராங்குளீயகை: |
        நூபுராதிபி ரந்யைச்ச க்ருஹாணாப்ரணம் ப்ரபோ ||
                        ஆபரணம் ஸமர்ப்பயாமி.

        மால்யாநி ச ஸுகந்தீநி மாலதீ குஸுமாநி ச |
        மயா ஹ்ருதாநி பூஜார்த்தம் புஷ்பாணி ப்ரதிக்ருஹ்யதாம் ||
                        புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

|| அங்க பூஜா ||

        ஹராய நம:            பாதௌ        பூஜயாமி
        சங்கராய நம்             குல்பௌ           "
        சம்பவே நம:             ஜங்கே            "
        சிவாய நம:             ஜாநுநீ           "
        அகநாசிநே நம:             ஊரூ           "
        ஜகத்பதயே நம:             ஜகநம்           "
        ப்ரஜாபதயே நம:         மேட்ரம்        "
        ஸர்வாச்ரம பதயே நம:         கடிம்            "
        ஸர்வரக்ஷாய நம:         நாபிம்            "
        திக்வாஸஸே நம:         மத்யம்            "
        பார்வதீசாய நம:         பார்ச்வே        "
        உமாபதயே நம:             வக்ஷஸ்தலம்        "
        ஜகத்குக்ஷயே நம:         குக்ஷிம்            "
        நீலகண்டாய நம:         கண்டம்             "
        த்ரிபுராந்தகாய நம:         பாஹூந்        "
        தேவதேவாய நம:         கராந்            "
        வ்ருஷாங்காய நம:         கர்ணௌ           "
        க்ரதுபல ப்ரதாய நம:         முகம்            "
        நாகஹாராய நம:         நாஸிகே        "
        சந்த்ரார்க்க வஹ்நிநேத்ராய நம:    நேத்ராணி        "
        கபாலிநே நம:             லலாடம்        "  
        ஸோமேச்வராய நம:         சிர:            "
        கங்காதராய நம:         ஜடா:            "
        சுபதாயிநே நம: ஸர்வாண்யங்காநீ பூஜயாமி ||

        (பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)

|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி ||

        ஓம் சிவாய நம:            ஓம் மஹேச்வராய நம:        
         "   சம்பவே நம:          "   பிநாகிநே நம:         
         "   சசிசேகராய நம:          "   வாமதேவாய நம:        
         "   விரூபாக்ஷாய நம:          "   கபர்திநே நம:        
         "   நீலலோஹிதாய நம:      "   சங்கராய நம்:         (10)
         "   சூலபாணயே நம:          "   கட்வாங்கிநே நம:
         "   விஷ்ணுவல்லபாய நம:      "   சிபிவிஷ்டாய நம:
         "   அம்பிகாநாதாய நம:      "   ஸ்ரீ கண்ட்டாய நம:
         "   பக்தவத்ஸலாய நம:      "   பவாய நம:
         "   சர்வாய நம:          "   த்ரிலோகேசாய நம:     (20)
         "   சிதிகண்ட்டாய நம:          "   சிவப்ரியாய நம:
         "   உக்ராய நம:         "   கபர்திநே நம:
         "   காமாரயே நம:         "   அந்தகாஸுரஸூதநாய நம:
         "   கங்காதராய நம:         "   லலாடாக்ஷாய நம:
         "   காலகாலாய நம:          "   க்ருபாநிதிதயே நம :        (30)
         "   பீமாய நம:          "   பரசுஹஸ்தாய நம:         
         "   ம்ருக பாணயே நம:      "   ஜடாதராய நம:     
         "   கைலாஸ வாஸிநே நம:      "   கவசிநே நம:        
         "   கடோராய நம:          "   த்ரிபுராந்தகாய நம:
         "   வ்ருஷாங்காய நம:          "   வ்ருஷபாரூடாய நம்:      (40)
         "   பஸ்மோத்தூளித
            விக்ரஹாய நம:      "   ஸாமப்ரியாய நம:
         "   ஸ்வரமயாய நம:          "   த்ரயீமூர்த்தயே நம:
         "   அநீச்வராய நம:          "   ஸர்வஜ்ஞாய நம:
         "   பரமாத்மநே நம:          "   ஸோமஸூர்யாக்நி லோசநாய நம:
         "   ஹவிஷே நம:          "   யஜ்ஞமயாய நம:         (50)
         "   ஸோமாய நம:          "   பஞ்சவக்த்ராய நம:
         "   ஸதாசிவாய நம:          "   விச்வேச்வராய நம:
         "   வீரபத்ராய நம:          "   கணநாதாய நம:
         "   ப்ரஜாபதயே நம:          "   ஹிரண்யரேதஸே நம:
         "   துர்தர்ஷாய நம:          "   கிரீசாய நம:         (60)
         "   கிரிசாய நம:         "   அநகாய நம:
         "   புஜங்கபூஷ்ணாய நம:      "   பர்காய நம:
         "   கிரிதந்வநே நம:          "   கிரிப்ரியாய நம:
         "   க்ருத்திவாஸஸே நம:      "   புராராதயே நம:
         "   பகவதே நம:          "   ப்ரமதாதிபாய நம:         (70)
         "   ம்ருத்யுஞ்ஜயாய நம:      "   ஸூக்ஷமதநவே நம:
         "   ஜகத்வ்யாபிநே நம:          "   ஜதக்குரவே நம:
         "   வ்யோமகேசாய நம:         "   மஹாஸேநஜநகாய நம:
         "   சாருவிக்ரமாய நம:         "   ருத்ராய நம:
         "   பூதபதயே நம:         "   ஸ்த்தாணவே நம:        (80)
         "   அஹிர்புத்ந்யாய நம:     "   திகம்பராய நம:
         "   அஷ்டமூர்தயே நம:         "   அநேகாத்மநே நம:
         "   ஸாத்விகாய நம:         "   சுத்தவிக்ரஹாய நம:
         "   சாச்வதாய நம:         "   கண்டபரசவே நம:
         "   அஜாய நம:          "   பாசவிமோசகாய நம:     (90)
         "   ம்ருடாய நம:          "   பசுபதயே நம:
         "   தேவாய நம:          "   மஹாதேவாய நம:
         "   அவ்யயாய நம:         "   ஹரயே நம:
         "   பூஷதந்தபிதே நம:         "   அவ்யக்ராய நம:
         "   தக்ஷாத்வரஹராய நம:      "   ஹராய நம:        (100)
         "   பகநேத்ரபிதே நம:          "   அவ்யக்தாய நம:
         "   ஸஹஸ்ராக்ஷாய நம:     "   ஸஹஸ்ரபதே நம:
         "   அபவர்கப்ரதாய நம:      "   அநந்தாய நம:
         "   தாரகாய நம:          "   பரமேச்வராய நம:         (108)

        ஸாம்ப பரமேச்வராய நம:, நாநாவித பரிமளபத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ||
    என்று சொல்லி புஷ்பம் சேர்க்கவும்.

|| ஏகாதச (11) கலச பூஜை ||

        1) சிவாய நம:         2) ருத்ராய நம:         3) பசுபதயே நம:
        4) நீலகண்டாய நம:     5) மஹேச்வராய நம:     6) சர்வாய நம:
        7) ஈசாநாய நம:     8) பிநாகிநே நம:     9) வ்ருஷபத்வஜாய நம:
        10)சங்கராய நம:     11) மஹாதேவாய நம: ||

உத்தராங்க பூஜை :

        தசாங்கம் குக்குலும் தூபம் ஸுகந்தம் ஸுமநோஹரம் |
        தூபம் க்ருஹாண தேவேச விரூபாக்ஷ நமோஸ்து தே ||
                    தூபம் ஆக்ராபயாமி.

        ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா |
        தீபம் க்ருஹாண தேவேச த்ரைலோக்ய திமிராபஹம் ||
                    தீபம் தர்சயாமி.

        ஷட்ரஸைச்ச ஸமோபேதம் நாநாபக்ஷ்ய ஸமந்விதம் |
        நைவேத்யம் து மயா தத்தம் க்ருஹாண பரமேச்வர ||

        ஸாம்ப பரமேச்வராய நம:, சால்யந்நம், க்ருதகுள பாயஸம்,
        பலாநி, ஏதத் ஸர்வம் மஹாநைவேத்யம் நிவேதயாமி.
                    ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

        கர்ப்பூர பாடலிர் யுக்தம் ஏலோசீர ஸமந்விதம் |
        சம்பகோத்பல ஸம்யுக்தம் பாநீயம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
                    பாநீயம் ஸமர்ப்பயாமி.

        கங்கா யமுநயோஸ் தோயை: சாதகும்பகடைர் ஹ்ருதை: |
        ஹஸ்த ப்ரக்ஷாளநம் தேவ சுத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
                    ஹஸ்தப்ரக்ஷாளநம் ஸமர்ப்பயாமி.

        பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர் யுதம் |
        கர்ப்பூர சூர்ணஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
                    தாம்பூலம் ஸமர்ப்பயாமி.

        நீராஜநம் மஹாதேவ கோடிஸூர்ய ப்ரகாசக |
        பக்த்யாஹம் தே ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ தயாநிதே ||
                    மர்ப்பூரநீராஜநம் தர்ஸயாமி.

        யஸ்யாஜ்ஞபா ஜகத்ஸ்ரஷ்டா விரிஞ்ச: பாலகோ ஹரி: |
        ஸம்ஹர்த்தா காலருத்ராக்ய: நமஸ்தஸ்மை பிநாகிநே ||
                    மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி.

        நாநாரத்ந ஸமாயுக்தம் வஜ்ரநாள ஸமந்விதம் |
        முக்தாகேஸர ஸம்யுக்தம் ஸ்வர்ண புஷ்பம் ததாம்யஹம் ||
                    ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி.

        யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி ச |
        தாநி தாநி ப்ரணச்யந்தி ப்ரதக்ஷிணபதே பதே ||

        ஸோமேச்வர விரூபாக்ஷ ஸோமரூப ஸதாசிவ |
        ப்ரதக்ஷிணம் கரோமீச ப்ரஸீத பரமேச்வர ||

        நமஸ்தே ஸர்வலோகேச நமஸ்தே புண்யமூர்த்தயே |
        நமோ வேதாந்த வேத்யாய சரண்யாய நமோ நம: ||

            ஸாம்ப சிவாய நம:, அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி.
        (பஞ்சாக்ஷரஜபம் செய்யவும்.)

அர்க்ய ப்ரதாநம் :

            அத்ய பூர்வோக்த - ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம. . .
        சுபதிதௌ, ஸோமவார புண்யகாலே ஸாம்ப பரமேச்வர
        பூஜாந்தே அர்க்யப்ரதாநம் உபாயநதாநம் ச கரிஷ்யே ||

        ஸோமவாரே திவா ஸ்த்தித்வா நிராஹாரோ மஹேச்வர |
        நக்தம் போக்ஷ்யாமி தேவேச அர்ப்பயாமி ஸதாசிவ ||
            ஸாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        நக்தே ச ஸோமவாரே ச ஸோமநாத ஜகத்பதே |
        அநந்தகோடி ஸௌபாக்யம் அக்ஷய்யம் குரு சங்கர ||
            சாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        நமஸ் ஸோம விபூஷாய ஸோமாயாமித தேஜஸே |
        இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸோமோ யச்சது மே சிவம் ||
            ஸாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        ஆகாச திக்சரீராய க்ரஹநக்ஷத்ர மாலிநே |
        இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ ||
            ஸாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        அம்பிகாயை நமஸ்துப்யம் நமஸ்தே தேவி பார்வதி |
        அம்பிகே வரதே தேவி க்ருஹ்ணீதார்க்யம் ப்ரஸீத மே ||
            பார்வத்யை நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        ஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்த்திகேய ஸுரேச்வர |
        இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ ||
            ஸுப்ரஹ்மண்யாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        நந்திகேச மஹாபாக சிவத்யாந பராயண |
        சைலாதயே நமஸ்துப்யம் க்ருஹ்ணீதார்க்ய மிதம் ப்ரபோ ||
            நந்திகேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        அநேந அர்க்யப்ரதாநேந பகவாந் ஸர்வாத்மக: ஸர்வம் ஸாம்பசிவ:
        ப்ரீயதாம்.

            || தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து ||

        யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு |
        ந்யூநம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே ஸதாசிவம் ||

        ஸோமவார வ்ரதம் பக்த்யா க்ருதம் கல்யாண தாயகம் |
        ப்ரஸீத பார்வதீநாத ஸாயுஜ்யம் தேஹி மே ப்ரபோ ||

        ஸோமநாதா ஜகத்வந்த்ய பக்தாநா மிஷ்டதாயக |
        ஆயுஷ்யம் சைவ ஸௌபாக்யம் தேஹாந்தே முக்திதோ பவ ||
                    (ப்ராத்தனை செய்து கொள்ளவும்)

உபாயந தாநம் :


        ஸாம்பசிவ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம் |
        கந்தாதி ஸகலாராதநை: ஸ்வர்ச்சிதம் ||

        ஸோமேச: ப்ரதிக்ருஹ்ணாதி ஸோமேசோ வை ததாதி ச |
        ஸோமேசஸ் தாரகோ த்வாப்யாம் ஸோமேசாய நமோ நம: ||

            இதமுபாயனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசிவ பூஜா
        பல ஸாத்குண்யம் காமயமாந: ஸாம்ப பரமேச்வர ஸ்வரூபாய
        ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம ||

                (தீர்த்தம், ப்ரஸாதம் பெற்றுகொள்ளவும்)

                    உமாமஹேச்வர பூஜை முற்றும்

யட்சிணிதேவி பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

பூஜை முறைகள் க்கான பட முடிவுயட்சிணிதேவி  பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?
மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை வைக்கக் கூடாது.
பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப்பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.
சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும் படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

யட்சிணிதேவி பூஜை முறைகள்

பூஜை முறைகள் க்கான பட முடிவு1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.
4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.
6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.
7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.
8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.
11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.
13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.
14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.
20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.
21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.
24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.
26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும் போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.
32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.
33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.
34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவது தான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.
35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.
37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.
38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.
39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.
40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.
41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜெபங்கள் செய்யக்கூடாது.
42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.
43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.
46. தெய்வப் படம், குத்து விளக்குகள் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.
47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.
48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப் பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.
49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும் போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப் படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.
53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.
57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில் தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.
59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.
60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில் தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.
61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.
65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.
66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.
68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.
70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.
72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும் போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.
பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?