youtube

30 December 2017

அழகிய பாம்பு நடனம் Snake Dance in my village live


சோழி பிரசன்னம் பயிற்சி சித்தியாகும் மந்திரம்Choli prasannam and prasanna traing mantra tamil


Amazing Top 10 Foods That Help You Lose Weight /Superfoods For Rapid Weight Loss Naturally


Relief from Joint Pains and Arthritis Naturally and Cabbage Treatment How to do cabbage treatment 1


வெற்றிலை ஆருடம் / தாம்பூல பிரசன்னம்/சோழி பிரசன்னம்CHOLI PRASANNAM


அரிதான சிங்கப்பூர்உணவு Wonderful Singapore Food Malay food Nasi Lemak Nazi Lemak


30 November 2017

Please support to all brother and sister



Please support to all brother and sister
Health food and success Life
Please support this Subscribe youtube chennal link
https://www.youtube.com/channel/UCzstbJEpmA159q_dSsDWGBw
Then click on Subscribe subscribe section
Regards
For many rare spiritual medicine astrology, click the link below to get the video and subscribe to everyon
health care tips, health news tips, astrology, spirituality, medicine, literature, culture, history of kings,anti power dis advantages,  Youtube channel  has begun ... Click here ... Ling click Subscribe to ease support this link Health food and success Life

வெஜிடபிள் ராகி சேமியா கிச்சடி! ! , சிறுதானிய உணவுகள்

வெஜிடபிள் ராகி சேமியா கிச்சடி! !
, சிறுதானிய உணவுகள்

                                         வெஜிடபிள் ராகி சேமியா கிச்சடி

தேவையானவை: ராகி சேமியா - 200 கிராம், மெல்லியதாக, நீளமாக நறுக்கிய கேரட், தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், குடமிளகாய் துண்டுகள் (சேர்த்து) - 2 கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு, முந்திரி, உலர் திராட்சை (கிஸ்மிஸ்) - தலா 10, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ராகி சேமியாவைச் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துத் தனியே வைக்கவும். கடாயைச் சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். காய்ந்ததும் காய்கறிகள், இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். வதக்கிய காய்கள் முக்கால் பதம் வெந்ததும் சேமியாவை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு கடுகு, சீரகம் சேர்த்து, பொரிந்ததும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்துக் கிளறி எடுத்து கிச்சடிக் கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

பல அரிதான ஆன்மீகம் மருத்துவம் ஜோதிடம் , வீடியோ பெற கிழே உள்ள link click செய்து அனைவரும் subscribe செய்யவும்

பல அரிதான ஆன்மீகம் மருத்துவம் ஜோதிடம் , வீடியோ பெற கிழே  உள்ள link click செய்து அனைவரும் subscribe செய்யவும்

lhealth care tips, health news,herbals,Astrology, Spirituality, Medicine, Literature, Culture, History of kings, Siddha Medicine, Rajapaksha,block magic  Sevaiyaaval Billy magnetism, anti power disadvantages, Prasannam astrology, Youtube channel has begun ... Click here ... Ling click  Subscribe to ease support this linkhttps://www.youtube.com/channel/UCzstbJEpmA159q_dSsDWGBwThen click on Subscribe subscribe sectionRegards

Health food and success Life

 is a group of devoteeshttps://www.youtube.com/channel/UCzstbJEpmA159q_dSsDWGBw

16 October 2017

ஸ்ரீகாலகர்ணிகா யட்சிணி தேவி மூலமந்திரம் சித்தியாக்கும் முறைSri Yakshini devi pooja yatcini devii


ஸ்ரீ சாமுண்டி யட்சிணி தேவி மூலமந்திரம் சித்தியாக்கும்முறை Sri ChamundeshwariYakshini devi pooja


ஸ்ரீதனதா யட்சிணி தேவி மூலமந்திரம் சித்தியாக்கும் முறை Thanatha Yakshini devi pooja yatcini devi


ஆஞ்சநேயர் அவதாரம் எப்படி நிகழ்ந்து ?


செவ்வாய் தோஷம் நீங்க எப்படி வழிபடுவது ?


வேலை மாதம் சம்பளம் ரூபாய் 50000 to 3 லட்சம் NDT job


9 October 2017

சகல காரியம் வெற்றிக்கு ஸ்ரீ வாராஹி அம்மன் சூட்சும வசிய மந்திரம்


குலதெய்வம் அறிந்துகொள்ளும் வழி மேஷம் லக்னம் அல்லது மேஷம் ராசிகாரர்கள்


சித்தர்கள் ஜாதகம் அமைப்பு இப்படிதான் இருக்கும்


தோல் வியாதி வெண்புள்ளி தோஷம் விலக எளிய பரிகாரம்


மாங்கல்யம் தோஷம் விலக எளிய பரிகாரம்


2:46 ஜாதகம் அமைப்பு -அடங்காபிடாரி மனைவி அமையும் தோஷம் யாருக்கு ?மாற்றும் எளிய பரிகாரம்


27 September 2017

திருவிளக்கு பூஜையின் பலனும் சிறப்பும்!

திருவிளக்கு பூஜையின் பலனும் சிறப்பும்!
இந்து சமயத்தில் திருவிளக்கு வழிபாடு உன்னதமானதான இடத்தைப் பிடித்துள்ளது. எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்தில் எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடாகும். ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபட்டனர். இந்த முறையே தற்போது தீப வழிபாடாக மாறியிருக்கிறது. விளக்கு வழிபாடு சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளை அகற்றுவதோடு நம் மனதின் இருளையும் அகற்றுகிறது. வீட்டின் வாசலை மெழுகி மாக்கோலம் இட்டு அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, பின் அதனை வீட்டு பூஜையறையில் வைத்தால் அவ்விளக்குடன் மகாலட்சுமியும் நம் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம். தற்போது பெண்கள் குழுவாக சேர்ந்து கோயில்களில் விளக்கு வழிபாடு செய்வது பிரபலமடைந்து வருகிறது. இந்த விளக்கு வழிபாட்டால், பல ஹோமங்களை நடத்துவதால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விளக்கை ஏற்றி வழிபடாதவர்கள் அவ்விளக்கு அணைந்து விடாமல் பாதுகாக்கவாவது செய்யலாம்.
விளக்குபூஜை எப்போது ?
பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன
சித்திரை - தானிய வளம் உண்டாகும்.
வைகாசி - செல்வம் செழிக்கும்.
ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும்.
ஆடி - ஆயுள்பலம் கூடும்.
ஆவணி - புத்தித்தடை நீங்கும்
புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும்
ஐப்பசி - நோய்கள் நீங்கும்
கார்த்திகை - நற்பேறு கிட்டும்
மார்கழி - ஆரோக்கியம் கூடும்.
தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.
மாசி - துன்பங்கள் நீங்கும்.
பங்குனி - தர்மசிந்தனை வளரும்.
விளக்கு பூஜையின்போது கவனிக்கவேண்டியவை
* விளக்குகளை நன்றாக கழுவி அதனை சுத்தமான தாம்பாளம் அல்லது பலகையில் மட்டுமே வைக்கவேண்டும். பூஜைக்கு உடைந்த, கீறல் விழுந்த விளக்குகளை பயன்படுத்தக் கூடாது. திரி ஏற்றியபின்பு விளக்கு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு பூமாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்டலாம். சுடரில் இருந்து பத்தி, சூடத்தை கண்டிப்பாக கொளுத்தக் கூடாது.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு பக்கம் பார்த்து வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்குகளை தீக்குச்சியால் நேராக பற்ற வைக்காமல் துணைவிளக்கின் உதவியோடு மட்டுமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை எல்லோரும் சேர்ந்து ஒரே மாதிரியான குரலில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
ராஜயோகம் தரும் வழிபாடு
வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாக எரிந்ததால் அது அணையும் நிலையில் மிகக்குறைவான சுடருடன் எரிந்தது. அவ்விளக்கில் இருந்த நெய்யை உண்பதற்காக ஒரு எலி தீபத்தை நோக்கி தாவியது. அப்போது எலி தன்னை அறியாமலேயே திரியை தூண்டிவிட்டது. இந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி மன்னனாக பிறந்தது. வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தால் மோட்சமும் அடைந்தது. தெரியாமல் திரியை தூண்டிவிட்டதற்கே ஒரு எலிக்கு ராஜயோகம் கிடைத்தது என்றால் நாம் இறைவனை எண்ணி ஏற்றும் விளக்கிற்கு என்ன பலன் கிடைக்கும்.
ஐந்து முக விளக்குகள் ஏன் ?
நாம் வாழும் உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலும் ஐம்பொறிகளால்தான் இயங்குகிறது. பெண்கள் வைத்திருக்க வேண்டிய நற்குணங்களும் ஐந்து. இவ்வாறு, ஐந்து என்ற எண் நம் வாழ்க்கையில் பிரதானமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் விதமாகத்தான் குத்து விளக்கை ஐந்து திரியுடன் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டது.
எதற்காக எட்டு?
திருவிளக்கு பூஜைக்கு பயன்படும் குத்துவிளக்கின் மீது எட்டு இடங்களில் பொட்டு வைக்கவேண்டும் என்பது நியதி. இதற்கு காரணம் இருக்கிறது. உச்சியில் ஒன்று, அதற்கு கீழ் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுகள், அதனையடுத்து கைகளாக கருதி இரண்டு மற்றும் திருவடியில் ஒன்று என பொட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குபூஜை பரிபூரணமானதாய் இருக்கும் என்பதாக ஐதீகம்.
பூஜைக்கு தயாராவோம்!
முதலில் பூஜை செய்யும் இடத்தை மெழுகியும், விளக்கை நன்கு துலக்கியும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பூஜை செய்வதற்கு முன்பு அவ்விடத்தில் தலைவாழை இலையை விரித்து, அதில் முனை முறியாத அரிசியை (அட்சதை) பரப்பி, அதன் மீது விளக்கை வைத்து சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து மலர்களாக அலங்கரிக்க வேண்டும். பின்பு துணை விளக்கினால் திரியை ஏற்ற வேண்டும். எச்செயலைச் செய்யும் முன்பும் விநாயகரை வழிபடவேண்டும் என்பதால் மஞ்சளில் சிறிய விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையில் வைத்து அவரையும் அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜைக்கு தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, விளக்கை வணங்கி விட்டு அமரவேண்டும். பின் ஓம் ஒளிர்வளர் விளக்கே போற்றி என்று சொல்லிக்கொண்டே திரியை ஏற்ற வேண்டும். பின் தொடர்ந்து அம்பாள் துதிப்பாடல்களை பாடியபடி பூஜையை துவங்கிவிடலாம்.
திரிகளும், பயன்களும்
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.
விளக்கு பூஜைக்கான விதிகள்
* திருவிளக்கு பூஜைக்கு எவர்சில்வர் விளக்குகள் உகந்தது அல்ல என்பதால் பித்தளை, வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* பூஜையின்போது, தலைவாழை இலை மீது குத்து விளக்கை வைக்க வேண்டும். இதனால் குடும்பம் வாழையடி வாழையாக தழைக்கும் என்பதாக ஐதீகம்.
* விளக்கின்மீது எட்டு இடங்களில் சந்தனம், குங்குமப்பொட்டு வைக்க வேண்டும்.
* ஒரு திரி கொளுத்துவதனால் கிழக்கு முகமாக மட்டுமே கொளுத்த வேண்டும்.
* கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் அணைக்கலாம்.
விளக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள்
விளக்கு பூஜைக்கு தயாராகும் முன்பு கீழ்கண்ட பொருட்களை முன்னதாகவே தயாராக வைத்துக்கொள்ளுங்கள். திருவிளக்கு, தேவையான எண்ணெய், சாம்பிராணி, கற்பூரம், கோலமிடுவதற்கு பச்சரிசி மாவு, வாழை இலை, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, மாலை, அட்சதை அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கிழங்கு, நைவேத்திய பொருட்கள், துணை விளக்கு, தீர்த்த பாத்திரம், தாம்பாளம் மற்றும் அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு.
கணபதி பாடல்
விளக்கு துதிப்பாடல் பாடுவதற்கு முன்பு மஞ்சளால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையாரை கீழ்க்கண்ட பாடலைப்பாடி பூஜை செய்ய வேண்டும்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துப் போற்றுகின்றேனே.
எண்ணெயும் பலன்களும்
குத்துவிளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கேற்ப பலன்களும் மாறுபடுகிறது. சுடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும்.
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
திருவிளக்கில் எத்தனை பொட்டு வைப்பது?
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
விளக்கேற்றும் பலன்கள்
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்
யாருக்கு என்ன எண்ணெய்
கணபதி - தேங்காய் எண்ணெய்
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
ருத்திரர் - இலுப்பெண்ணெய்
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்
விளக்கேற்றும் திசைகள்
கிழக்கு - துன்பங்கள் நீங்கி குடும்பம் விருத்தி பெறும்
மேற்கு - கடன், தோஷங்கள் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
நல்ல நாளில் விதிவிலக்கு
விளக்கை செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் துலக்க கூடாது என்றாலும் விசேஷ நாட்களான பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை தீபம், குடும்பத்தில் நடத்தப்படும் சுபநிகழ்ச்சிகள் மற்றும் இதர விழாக்களின்போது, பரிசுத்தமான நீரால் விளக்கை துலக்கி, சுத்தமான புதிய துணியால் துடைத்து விபூதியால் விளக்கை தேய்க்க வேண்டும். விசேஷ நாட்களில் துலக்க விதிவிலக்கு உண்டு.
விளக்கு துலக்கும் பலன்கள்
* ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கு துலக்கி தீபமேற்றினால் கண் தொடர்பான நோய்கள் குணமாகும், பார்வை பிரகாசமடையும்.
* திங்களன்று விளக்கு துலக்கினால் மனசஞ்சலங்கள், குழப்பங்கள் நீங்கி மனதில் அமைதி ஏற்படும். தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளரும்.
* வியாழக்கிழமை துலக்கினால் குருபார்வை கிடைத்து கோடி நன்மைகள் உண்டாகும், கவலைகள் நீங்கி மனம் நிம்மதியடையும்.
* சனிக்கிழமையன்று விளக்கை கழுவினால் வாகனங்களில் பாதுகாப்பான பயணம் கிட்டும்.
விளக்கு துலக்க வேண்டிய நாட்கள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது.
திங்கள் வியாழக்கிழமைகளில் விளக்கேற்றி குளிர வைத்த பிறகு (சுமார் இரவு 9 - 9.30 மணிக்குள்) விளக்கை துலக்குவது நல்லது. வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநதியட்சணி குடியேறுகிறாள். எனவே விளக்குகளை திங்கள் மற்றும் வியாழன் முன்னிரவிலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் துலக்குவதே நல்லது.
திருவிளக்கு வழிபாடு
விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே!ஜோதி மணிவிளக்கே! சீதேவி பொன்மணியே!அந்தி விளக்கே! அலங்கார நாயகியே!காந்தி விளக்கே! காமாட்சித் தாயாரே!பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய்விட்டு
கோலமுடன் ஏற்றிவைத்தேன்;ஏற்றினேன் நெய்விளக்கு
எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு
மாளிகையும் தான்விளங்க
மாளிகையில் ஜோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன்!யான் தரணியிலே ஜோதியுள்ள
தாயாரைக் கண்டுவந்தேன்!மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா!சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!பெட்டி நிறையப் பூஷணங்கள் தாருமம்மா!பட்டி நிறையப் பால் பசுவைத் தாருமம்மா!கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாருமம்மா!புகழுடம்பைத் தாருமம்மா!பக்கத்தில் நில்லுமம்மா!அல்லும்பகலும் எந்தன்
அண்டையிலே நில்லுமம்மா!சேவித்து எழுந்திருந்தேன்;தேவி வடிவங்கண்டேன்
வச்சிரக் கிரீடங்கண்டேன்;வைடூர்ய மேனி கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்;முழுப்பச்சை மாலை கண்டேன்
சவுரி முடி கண்டேன்
தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்;பிறைபோல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்;தாயார் வடிவம் கண்டேன்
குறுக்கிடும் நெற்றி கண்டேன்;கோவைக்கனி வாயும் கண்டேன்
கமலத் திருமுகத்தில்
கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன
மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகல என
கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென
ஜொலிக்கக் கண்டேன்
காலிற் சிலம்புகண்டேன்;காலணி பீலி கண்டேன்
மங்கள நாயகியை
மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன்
அடியாள் நான்
அன்னையே அருந்துணையே!அருகிருந்து காருமம்மா!வந்தவினையகற்றி
மகாபாக்கியம் தாருமம்மா!தாயாகும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவேயுன்றன் மலரடியில் நான் பணிந்தேன்.இந்த அகவலைப் பாடி முடித்த பின்னர் தீபாராதனை செய்து வேண்டிய வரங்களைத் தந்தருளும்படி பிரார்த்திக்க வேண்டும்.
திருவிளக்கு போற்றி
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
ஓம் முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
ஓம் மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
ஓம் வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
ஓம் இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
ஓம் ஈரேழுலகும் ஈன்றாய் போற்றி
ஓம் பிறர் வயமாகா பெரியோய் போற்றி
ஓம் பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
ஓம் பேரருட் கடலாம் பொருளே போற்றி
ஓம் முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
ஓம் மூவூலகுந் தொழ மூத்தோய் போற்றி
ஓம் அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
ஓம் இருள் கெடுத்து இன்பருள் ஈந்தாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே மாமணி போற்றி
ஓம் வளமை நல்கும் வல்லியே போற்றி
ஓம் அறம் வளர்நாயகி அம்மையே போற்றி
ஓம் மின் ஒளியம்மையாம் விளக்கே போற்றி
ஓம் மண் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் தையல் நாயகித் தாயே போற்றி
ஓம் தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
ஓம் முக்கட் சுடரின் முதல்வி போற்றி
ஓம் ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
ஓம் சூளாமணியே சுடரொளி போற்றி
ஓம் இருள் ஒளித்து இன்பமும் ஈவோய் போற்றி
ஓம் அருள் மொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி
ஓம் அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
ஓம் இல்லக விளக்காம் இறைவி போற்றி
ஓம் சுடரே விளக்காம் தூயாய் போற்றி
ஓம் இடரைக் களையும் இயல்வினாய் போற்றி
ஓம் இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
ஓம் எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
ஓம் ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
ஓம் அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
ஓம் தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
ஓம் ஜோதியே போற்றி சுடரே போற்றி
ஓம் ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
ஓம் இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
ஓம் சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
ஓம் பலா காண் பல்லக விளக்கே போற்றி
ஓம் நல்லக நமசிவாய விளக்கே போற்றி
ஓம் உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
ஓம் உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றி
ஓம் உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
ஓம் உள்ளத் தகளி விளக்கே போற்றி
ஓம் உயிரெணும் திரிமயக்கு விளக்கே போற்றி
ஓம் இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
ஓம் நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
ஓம் ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
ஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
ஓம் ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
ஓம் தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
ஓம் கற்பனை கடந்த ஜோதி போற்றி
ஓம் கருணை உருவாம் விளக்கே போற்றி
ஓம் அற்புத கோல விளக்கே போற்றி
ஓம் அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
ஓம் சிற்பர வியோம விளக்கே போற்றி
ஓம் பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி
ஓம் உள்ளத் திருளை ஒழிப்பாய் போற்றி
ஓம் கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
ஓம் உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
ஓம் பெருகுஅருள் சுரக்கும் பெரும போற்றி
ஓம் இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
ஓம் அருவே உருவே அருவுருவே போற்றி
ஓம் நந்தா விளக்கே நாயகி போற்றி
ஓம் செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
ஓம் தீப மங்கள ஜோதி போற்றி
ஓம் மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி
ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி
ஓம் ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஏகமும் நடஞ்செய் எம்மான் போற்றி
ஓம் ஊழி ஊழி உள்ளோய் போற்றி
ஓம் ஆழியான் காணா அடியோய் போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
ஓம் அந்தமில் இன்பம் அருள்வாய் போற்றி
ஓம் முந்தை வினையை முடிப்போய் போற்றி
ஓம் பொங்கும் கீர்த்தி பூரண போற்றி
ஓம் தன்னருள் சுரக்கும் தாயே போற்றி
ஓம் அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
ஓம் இருநில மக்கள் இறைவி போற்றி
ஓம் குருவென ஞானம் கொடுப்போய் போற்றி
ஓம் ஆறுதல் எமக்கிங் களிப்போய் போற்றி
ஓம் தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
ஓம் பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
ஓம் எத்திக்குந் துதி ஏய்ந்தாய் போற்றி
ஓம் அஞ்சலென் றருளும் அன்பே போற்றி
ஓம் தஞ்சமென் றவரைச் சார்வோய் போற்றி
ஓம் ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
ஓம் ஓங்காரத் துள்ளொழி விளக்கே போற்றி
ஓம் எல்லா உலகமும் ஆனாய் போற்றி
ஓம் பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் புகழ் சேவடி என்மேல் வைத்தோய் போற்றி
ஓம் செல்வாய செல்வம் தருவாய் போற்றி
ஓம் பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
ஓம் உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
ஓம் உயிர்களின் பசிப்பிணி ஒளித்தருள் போற்றி
ஓம் செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
ஓம் நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
ஓம் விளகிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
ஓம் நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
ஓம் தாயே நின்னருள் தந்தாய் போற்றி
ஓம் தூய நின்திருவடி தொழுதனம் போற்றி
ஓம் போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
ஓம் போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
ஓம் போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
ஓம் போற்றி போற்றி திருவிளக்கே போற்ற
மங்கல விளக்கே மாதா போற்ற
மங்கையர் போற்றும் மாமணி போற்றி
குங்குமம் மஞ்சள் கொடுப்பாய் போற்றி
குலநலம் காக்கும் கோமகள் போற்றி
சங்கடம் எல்லாம் சரிப்பாய் போற்றி
சந்தோஷம் என்றும் தருவாய் போற்றி
பொங்கிப் பெருகும் பொலிவே போற்றி
புன்னகை மிளிரும் பூவே போற்றி
செந்தாமரை வாழ் திருவே போற்றி
சிந்தா குலந்தீர் சிவையே போற்றி
வந்தா தரிக்கும் வாணி போற்றி
கொந்தார் மலர்ப்பூங்குழலீ போற்றி
அந்தாதி இல்லா அன்னையே போற்றி
அன்பும் அறிவும் அளிப்பாய் போற்றி
இன்பம் தீர்க்கும் துணையே போற்றி
அன்பர் அகத்தில் அமர்வாய் போற்றி
அழியா ஆன்ம அழகே போற்ற
வழியாய் வந்து வாழ்த்துவாய் போற்றி
பழியாவும் களைத்தருள் பாலிப்பாய் போற்றி
விழியாய்த் திகழ்திரு விளக்கே போற்றி
அண்டம் அனைத்தும் ஈன்றாய் போற்றி
தெண்டர்க் கென்றும் சுகம்நீ போற்றி
கண்டார் உள்ளம் கவர்வாய் போற்றி
வண்டார் பூங்குழல் வஞ்சீ போற்றி
பூவும் பொட்டும் காப்பாய் போற்றி
தேவை அனைத்தும் தெரிவாய் போற்றி
ஆவல் மிகுந்தார் அகத்தாய் போற்றி
காவல் நிற்கும் கருணையே போற்றி
பொன்னும் மெய்பொருளும் பொழிவாய் போற்றி
புலமைத் திறம்நீ புகட்டுவாய் போற்றி
துன்னும் இருளைத் துரத்துவாய் போற்றி
மன்னும் புகழில் மகிழ்வாய் போற்றி
நீராய் நெருப்பாய் நிறைந்தாய் போற்றி
ஆரா அமுதம் அனையாய் போற்ற
சீராய் ஞானம் சேர்ப்பாய் போற்றி
பேரா வினைகளைப் பேர்ப்பாய் போற்றி
பொன்னே மணியே பூவே போற்றி
அன்னே அழியா அன்பே போற்றி
முன்னும் பின்னும் இல்லாய் போற்றி
மின்னும் மகுடம் மிளிர்வாய் போற்றி
சுடரே போற்றி ஜோதியே போற்றி
இடரைக் களையும் இன்னொளி போற்றி
ஊனில் உயிராய் ஒளிர்வாய் போற்றி
தேனில் இனிப்பாய் திகழ்வாய் போற்றி
பொற்றா மரையில் பொலிவாய் போற்றி
வற்றாச் செல்வம் வழங்குவாய் போற்ற
மூலப் பொருளாம் முதல்வீ போற்றி
காலக் கடலின் களிப்பே போற்றி
கோலக் கிளியாம் குமரீ போற்றி
மாலுக் கினியநல் மனைவியே போற்றி
வரந்தர விரைந்தே வருவாய் போற்றி
நிரந்தர சுகந்தரும் நிமலீ போற்ற
இகபர சுகந்தரும் இறைவீ போற்றி
ஈடொன் றில்லா ஈசையை போற்றி
அம்மா தாயே அபயம் போற்றி
செம்மா துளம்பூ நிறத்தாய் போற்றி
பெம்மான் இடத்தமர் பிறைநுதல் போற்றி
இம்மா நிலத்தை ஈன்றாய் போற்ற
அக இருள் அகற்றும் விளக்கே போற்றி
ஆன்ம சுகந்தரும் விளக்கே போற்றி
ஆய கலைதரும் விளக்கே போற்றி
தூய நிலை தரும் விளக்கே போற்றி
ஏகம் ஆன என்தாய் போற்றி
மோகம் தீர்க்கும் மோகினி போற்றி
யாகம் வளர்க்கும் யாமினி போற்றி
யோகம் வளர்க்கும் உமையவள் போற்றி
கண்ணே கண்ணின் மணியே போற்றி
பண்ணே பண்ணின் சுவையே போற்றி
நங்காய் நந்தா விளக்கே போற்றி
தங்க மேனி விளக்கே போற்றி
வேதப்பொருளாம் விளக்கே போற்றி
நாதக் கனலாம் நாரீ போற்றி
இல்லக விளக்காம் எழிலே போற்றி
சொல்லக விளக்காம் சுடரே போற்றி
தொல்லக விளக்காம் ஜோதீ போற்றி
நல்லக விளக்காம் நாயகீ போற்றி
கற்பனைக் கெட்டாக் கவினொளி போற்றி
காரிருள் அகற்றும் கதிரொளி போற்ற
சொற்பதம் கடந்த தூயொளி போற்றி
அற்புதம் பலசெய்யும் அருளொளி போற்றி
நற்பதம் வழங்கும் நாயகீ போற்றி
பற்பல வடிவாம் நாயகி போற்றி
கற்பகத் தருவே கண்ணொளி போற்றி
விற்பனர் போற்றும் வியனொளி போற்றி
இருவினை இடர்தீர் இன்னொளி போற்றி
கருவினை களைந்தருள் தண்ணொளி போற்றி
அடிமுடி காணா அனலே போற்றி
கடிமலர்ப் பாதப் புனலே போற்ற
அம்மா அன்னபூரணி போற்றி
அன்பே ஆதி காரணி போற்றி
ஞால விளக்கே நடனீ போற்றி
கோல விளக்கே கோமதீ போற்றி
மூலவிளக்கே மூகாம்பிகை போற்றி
மோன விளக்கே முத்தே போற்றி
ஞான விளக்கே நலமே போற்றி
கருணை விளக்கே காமாட்சி போற்றி காருண்ய விளக்கே மீனாட்சி போற்றி
அறிவொளி யூட்டும் விளக்கே போற்ற
உறவென வளர்க்கும் விளக்கே போற்றி
பேரின்பக் கடலே பேரொளி போற்றி
பேரருட் கடலாம் பெண்மயில் போற்றி
இல்லற விளக்காம் இறைவீ போற்றி
நல்லறம் வளர்க்கும் நாயகீ போற்றி
கண்கண்ட தெய்வக் கலைவிளக்கே போற்றி
மாங்கல்யம் காக்கும் மணிவிளக்கே போற்றி
தீங்கனைத்தும் போக்கும் திருவிளக்கே போற்ற
அஷ்டலட்சுமி அஷ்டோத்திரம
ஓம் அகில லட்சுமியை நம
ஓம் அன்ன லட்சுமியை நம
ஓம் அலங்கார லட்சுமியை நம
ஓம் அஷ்ட லட்சுமியை நம

சுபகாரியம் எந்த நட்சத்திரத்தில் செய்யலாம் ? வெற்றி நிச்சயம்

சுபகாரியம் எந்த நட்சத்திரத்தில் செய்யலாம் ? வெற்றி நிச்சயம்

1, அசுவினி நட்சத்திரத்தில் சூரியனை வணங்கிவிட்டு தன்னை விட உயர்ந்தவர்களை ,உயர் அதிகாரிகளை சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும் .
2, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவனை வணங்கி விட்டு வாகனம் வாங்கினால் விருத்தியாகும் .
3, அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு பெண் பார்க்கச் சென்றால் திருமணம் உடனடியாக நிச்சயமாகும்.கிருஷ்ண பகவான் இதே நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு சத்யபாமாவை பெண் பார்க்க சென்றாராம்.இதனாலயே சத்யபாமாவை தடங்கலின்றி மணந்தாராம் .
4, அனுஷம் நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரும்பு இயந்திரங்கள் ,தளவாடச் சாமான்கள் முதலியவை வாங்கினால் தொழில் நன்கு வளர்ச்சியுறும் .
5, திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கிவிட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம் .நிலம் வாங்குவதற்கும் இது பொருந்தும் .
6, அவிட்டம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கிவிட்டு வெளியில் சென்றால் விபத்துக்கள் நேராது .அவ்வாறு ஏற்பட்டால் காயமின்றி தப்பிக்கலாம் .
7, பூசம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும் .அறுவை சிகிச்சை செய்வதற்கும் ,டாக்டரை அணுகி வைத்தியம் செய்வதற்கும் இந்த விதி பொருந்தும் .
8,மருத்துவர்கள் புனர்பூச நட்சத்திரத்தில் ஶ்ரீரங்கநாதரை வழிபட்டு வந்தால் கைராசிக்காரன் என்ற பெயரை எளிதாகப் பெற்றுவிடலாம் .
9, மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி அர்ச்சனை செய்தால் படிப்பறிவு அதிகமாக வளரும் .தேர்வுகளில் எளிதாக வெற்றி கிடைக்கும் .
10, மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் மூலம் நட்சத்திரம் உத்தம நட்சத்திரம் ஆகும் .இந்த நட்சத்திரத்தில் அருகம்புல் மாலை கட்டி விநாயகரை வணங்கிவிட்டு மேற்கொள்ளும் பயணம் யாவும் வெற்றியை தரும் .
.

29 August 2017

எழுத்துகளின் சக்தி

எழுத்துகளின் சக்தி

எழுத்துகளின் சக்தி

          
அநேக மந்த்ரங்களில் அம் ,ஆம் ,இம் ,ஈம் என்றுவரும் .இந்த ஒவ்வொரு எழுத்திற்கும் சக்தி உண்டு .
"ர"  என்ற எழுத்து அக்னி பீஜம் "ரம் " ர அழைப்பாகவும் பயன்படும் .
 "ய " என்பது  வாயு பீஜம் எங்கும் நிறைத்துள்ளது .நமசிவய , நாராயன .என்பதை காண்க .
இந்த சப்தங்களின் வலிமை கொண்டுதான் நியுமரலாஜி உருவானது .
சொல்லுக்கும் கொள்ளும் தன்மை உண்டு என்பதற்கு ஆதர நூல் "நந்திகலம்பகம் ".

       ஒருவனுக்கு பட்சி அரசாக இருந்து சூரிய நாடியும் நடக்கும்போது அவன் சொல்வது பலித்துவிடும் . இதற்கு நல்லவன் கெட்டவன் பேதம் கிடையது .
ஆகவேதான் குடியிருக்கும் வீட்டிலிருந்து அவச்சொற்களை பேசக்கூடாது என பெரியோர்கள் சொல்வர் .ஆகவே கோபத்தில் குழந்தைகளை திட் டுவதும் வேண்டாம் .

" மந்த்ரங்கள் சப்தங்களின் வடிவாக உள்ளன என என் குருநாதர் கூறுவார் ."
       ஆதியில் மந்திரங்களை வாய்மொழியாகத்தான் கூறுவார்கள் .அதை சீடர்கள் உச்சரிப்பை அறிந்து மனனம் செய்வார்கள் .
"க " என்னும் எழுத்து கஷ்டங்களை நீக்கும்
" ங" என்னும் எழுத்து சகல விஷங்களையும்  நீக்கும்.
" ச " என்னும் எழுத்து வசியம் தரும்
" ண  " என்னும் எழுத்து சித்திகளை தரும்
" ப " என்னும் எழுத்து பேய் பிசாசுகளை பந்தனம் பண்ணும்

இதைப்போல் எல்லா எழுத்துகளுக்கும் சக்தி உண்டு

நாவடக்க மந்த்ரம்

நாவடக்க மந்த்ரம்

நாவடக்க மந்த்ரம்

எதிரிகளின் நாவை அடக்க மந்த்ரம்

நம் மேல் கோபப்பட்டு பேசுபவர்களின் நவை அடக்கலாம் ,மேல் அதிகாரிகள் ,கணவன் , மனைவி ,பேசும் பேச்சுக்களை அடக்கும் மந்த்ரம்

" நாவு அடங்க நமசிவாயம் நயனம் அடங்க நமசிவாயம்
----------------------------------------------------------------------
---------------------------------------------------------------------

என்னோடு எதிர்த்தவர்கள் பலம் செத்து பலம் மாண்டு நாவு விழுந்து நாவு எழாமல் இருக்க சிவ "

இதற்குரிய எந்திரம் ,மந்திரத்தை வைத்துக்கொண்டால் எதிர்த்து பேசுபவர்களின் நாவு அடங்கும் .

இது அனுபவத்தில் செய்துபார்த்து நன்மை அடைத்தது

ஜாதகம் / ஜோதிடம்

ஜாதகம் / ஜோதிடம்

ஜாதகம் / ஜோதிடம் (தொடர்ச்சி)

ஜாதகம் உண்மையா ? பொய்யா ?

 சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து தெய்வ அருள் உள்ள ஒரு ஜோதிடர் 90 % சரியாகக கூறிவிடுவார் கூறிவிடுவார். பஞ்சாங்கத்தில்  வாக்கியம் , திருக்கணிதம் என இருக்கிறது, இரண்டிற்கும் கிரகப் பெயர்ச்சியில் வித்தியாசம் உள்ளது .ஒரு பெண்ணின் ஜாதகத்தில் வாக்கிய பஞ்சங்கப்படி ஒரு ஜோதிடர் புனர்பூச நட்சத்திரம்
மிதுன ராசி என குறித்திருக்கின்றார் . மற்றொருவர் கடக ராசி என    குறித்திருக்கின்றார். திருக்கணிதபடி பூசம் நட்சத்திரம் என குறித்திருக்கின்றார் . இப்படி ஜாதகம் இருந்தால் எப்படி பலன் சொல்வது ?. நடந்த சம்பவம் ஒன்றை கூறுகின்றேன்.

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

                                ஒரு பெரும் செல்வந்தரின் ஒரே மகனுக்கு திருமணம் முடிப்பதற்காக5 ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்ததில் ஐவரும் வெகு பிரமாதம்  . 
என்று கூறிவிட்டனர். திருமணத்திற்கு நாளும்  குறித்து  திருமணம் நடக்க ஒருவாரம் இருக்கும் போது , மாப்பிள்ளை விபத்தில் இறந்துவிட்டார். இது ஏன் நடந்தது ?
                                         ராமாயணத்தில் ராமருக்கு  பட்டாபிஷேகம் நடக்க நாள் குறித்தவர் வசிஷ்ட மகரிஷி . அவர் குறித்த நேரத்தில் பட்டாபிஷேகம் நடக்கவில்லை. ராமன்  காட்டிற்கு சென்றார் . இது ஏன் நடந்தது ?

                                        இயேசு அருள் நிறைந்தவர் , தேவகுமாரன் , மகாவல்லமை   உடைவர் , இறந்தவரை உயிர்பிக்க செய்தார் , குஷ்டரோகியை குணமாக்கினார் .பிற்காலத்தில்         நடக்கப்போவதை  உணர்ந்தவர் . அவர் கூறுகிறார் " எவனுடைய பாதத்தை
கழுவி நான் முத்தமிடுகிறேனோ அவன் என்னைக்  காட்டிக்கொடுப்பான் . பேதுரு என்ற சீடனை நோக்கி " பேதுரு கோழி கூவுவதற்கு முன் என்னை நீ 3 முறை மறுதலிப்பாய் ; நான் இறந்தவுடன் என் ஆடைகளை பங்கு போட்டுக்கொள்வார்கள் " என கூறினார் .அப்படியே நடந்தது ,பிதாவின் கட்டளை எதுவோ அது நடக்கட்டும் என  இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார் .

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )
                                எத்தனையோ மகான்களுக்கு துன்பன்களும் துயரங்களும் வந்தன, அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டனர் . ஆனால் சாதாரண மனிதனால் அப்படி இருக்க முடியது . நோய் வந்தால் மருத்துவம் பார்ப்பதும் ,கஷ்டங்கள் வந்தால்  பரிகாரங்கள் தேடுவதும் மனித மனம் .அதை தவறு என்று சொல்வதற்கில்லை .
எதைசெய்தாலும் ,தெய்வத்தின் அருளை வேண்டுங்கள் தெய்வத்திடம் சரணாகதி 
அடையுங்கள் அவன் காப்பாற்றுவான் ,அப்படி இல்லாவிட்டால் இறைவன் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் 
பரிகாரம் என்ற பெயரில் போலிகளிடம் ஏமாறவேண்டம்.ஆனால் பரிகாரம் பொய் இல்லை
அதைப்பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம் .

                            ஒரு தீக்குச்சியில் எரியும் நெருப்பை அணைத்துவிடலாம் .ஒரு வாளி தண்ணீரில்
அணையும் நெருப்பும் உண்டு ,தீயணைப்பு வண்டி வந்து அணைக்க வேண்டிய நெருப்பும் உண்டு .
அணைக்க முடியாத காட்டுத்தீயும் உண்டு .கனமாக மழை பெய்தால் காட்டுத்தீயும்
அணைத்துவிடும் . அதுபோலதான்   கடவுளின் அருள். நல்ல குருவின் உதவியுன் கடவுளை தேடுங்கள் ,அவரிடம் சரணடையுங்கள்
கடவுள் உங்களை கப்பார் .நீங்கள் எந்த மதத்தவராயினும் சரி ,அந்த மதத்தின் மீதும்
அந்த கடவுளின்  மீதும் நம்பிக்கை வையுங்கள் ,"இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று
சொல்லுவதில்லை

மந்த்ரம் என்றால் என்ன ?

மந்த்ரம் என்றால் என்ன ?

"நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மந்த்ரம் என்ப " என தொல்காப்பியம் கூறும். வையத்துள் வாழ்வாங்கு வாழும் உத்தம மனிதர்களின் வாயில் இருந்து வரும் சொல் எல்லாமே மந்திரங்கள் தான்!

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

மேஷம்,கடகம் ,சிம்மம் ,கன்னி ,துலாம் ,ஆகிய லக்கினம் அல்லது                ராசிகாரர்கள்.  லக்கினாதிபதி  ஆட்சி ,உச்சம் பெற்று கேந்திரம் ,திரிகோணம் பெறவேண்டும்.

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

மந்த்ரம் யாருக்கு பலிக்கும் ?

லக்னாதிபதி, 4ஆம் வீட்டதிபதி, 9ஆம் வீட்டதிபதி,ஆகிய மூவரும் 3ஆம் இடத்தில் அமரவேண்டும். 4ஆம் இடத்தோன்   9ம் இடத்தில் அமர்த்து சுபர் பார்வை பெறல்.  லக்னாதிபதியும் ,7ஆம் இடத்தோனும் ஒரே இராசியில் இருக்கவேண்டும்.9ஆம்  வீட்டிற்குரியவர் 1,4,7,10 ல் ,நட்பு ,ஆட்சி .உச்சம் பெறுதல், 4,9 ஆம் அதிபர்களை சந்திரன் பார்த்தல் ,10 ஆம் அதிபதி ,லக்னாதிபதி இவர்களை ராகு பார்த்தல் .இவைகளில் ஏதாவது ஒரு அமைப்பு உள்ளவர்களுக்கே மந்த்ரம் பலிக்கும் " என ஜோதிட சிந்தாமணி என்னும் நூல் கூறுகிறது.
    

மந்திரங்கள் உண்மையா?

  மந்திரங்கள் உண்மையா?

எனது குருநாதர் கூறுவார் 'மந்த்ரங்கள் சப்தங்களின் வடிவாக இருக்கிறது' என்பார். முன்பு  ரஷ்யாவில் மந்த்ரங்கள் உண்மையா என ஆராய்ச்சி நடத்தினர்.ஒரு ஒலி நாடாவில் வேத மந்த்ரங்களை பதிவு செய்தனர் .அதே
 ஒலி நாடாவில் மனிதர்கள் பேசும் பேச்சுகளையும் பதிவு செய்து வானமண்டலத்தில் (காற்றில்லா இடத்தில் )ஒலிக்கச் செய்ததில் வேதமந்த்ரங்கள் பூமியில் ஒலித்த அதே சப்தத்தில் ஒலித்தது .ஆனால் சாதாரண
 சப்த்தங்கள் எதுவும் கேட்கவில்லை
              ஆதி காலத்தில் குருமார்கள் .வாய் மூலமே சரியான உச்சரிப்புடன்
சீடர்களுக்கு  உபதேசித்திதனர்.முறையாக வேதம் பயின்றவர்கள் சொல்லும்
மந்திரம்  பலிக்கிறது.அவர்களுக்கு சில நியமனங்கள் உள்ளன . அதை கடைபிடிக்கவிடில் அவர்கள் சொல்லும் மந்திரம் பலிக்காது .( தொடரும்)

மந்திரங்கள் உண்மையா? (தொடர்ச்சி)

  மந்திரங்கள் உண்மையா? (தொடர்ச்சி)

           மந்திர ஜெபம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆகார நியமனங்கள் , தித்திப்பு ,உப்பு புளிப்பு ,எண்ணெய் ஆகியவைகளை தள்ளி விடவேண்டும்.தாம்பூலம் , பித்தளை பாத்திர போஜனம் ,பகல்   போஜனம் ,ஸ்திரி சங்கமம் .அதை பற்றிய பேச்சு ,கூட்டம் ஆகியவற்றை விளக்க வேண்டும் .

                        தரையில் படுக்கை ,பிரமச்சரிய விரதம், மௌனம் குருசேவை ,நித்ய நித்ய பூஜை ,நித்ய தானம் ,தெய்வ ஸ்துதியும் ,கீர்த்தனமும் கீர்த்தனமும் ,மூன்று வேளை ஸ்நானம் ,தாழ்ந்த செயல்களை விளக்குதல் ,குரு ,தெய்வ பக்தி ஆகியவை மந்திர
சித்தி அளிக்கும் . 

சப்தமாறுகா மஹா மந்திரம்

சப்தமாறுகா மஹா மந்திரம்

சப்தமாறுகா  மஹா மந்திரம்.


 ஓம், ஹிரீம், க்லீம்,  ஐம் பிரம்மி ,மகேஸ்வரி ,கௌமாரி ,வைஷ்ணவி ,வாராஹி , இந்த்ராணி ,சாமுண்டே ,சித்தசாமுண்டேஸ்வரி  ,கணேஷ்வரி ,ஷேத்ரபால, நரஷிம்கி ,மகாலக்ஷ்மி சர்வதோ , துர்காயை ஹும்பட் சுவாஹா

மந்திரங்கள்

மந்திரங்கள்

மந்திரங்கள்

வாய்மையை  வாழ்க்கையில்  கடைபிடித்து வாழும் உத்தம மனிதரின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் மந்திரங்கள்  தான் .
தற்காலத்தில் புத்தகங்களிலும்  , இனணய தளதிலும் பலவிதமான மந்திரங்களை வெளியிடுகின்றனர்.இந்த மந்திரங்களை கூறினால் பலன் கிடைக்குமா? சந்தேகம்தான் ! மந்திரம்  யாருக்கு சித்தியாகும் ? என்பதை அவர்களின் ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை   முன் கட்டுரையில் பார்த்தோம் . அவ்வாறு இல்லா விட்டால் போலி வேடமிட்டு ,பிறர் பொருளை அபகரித்த பாவதிற்குரிய தண்டனையை அடைவார்கள் .இதைத்தான் மந்திரம் கால் மதி முக்கால்
என்பார்கள்.

மதி என்றால் சந்திரன்,  சந்திரன் மனதிற்குரியவன், மன வலிமை வேண்டும் .அடியேன் என் குருநாதரிடம் " சாமி பல லட்சம் உரு ஜெபித்தாலும் புத்தகத்தில் எழுதிருப்பதைப்  போல் பலன் நடைபெறவில்லையே   ஏன் ? என கேட்டேன் அதற்கு அவர் " அட்சரலட்சம் " என்றார் . மந்திரம்  ஜெபித்து சித்து அடைய சில நியமனங்கள் உள்ளன .  அவைகளில் ஒன்று  ஆகார  நியமணம். இதை பற்றி முன்  கட்டுரையில் கண்டோம் .

             மந்திரத்தை 1 லட்சம் உரு ஜெபித்தாலும் அதில் 10 ல் ஒரு பகுதி தர்ப்பணம் செய்யவேண்டும் ,10 ல் ஒரு பகுதி ஹோமம்  செய்யவேண்டும் .  அப்படி இல்லாவிட்டால் அதைபோல் 4 மடங்கு அதாவது 1 லட்சம் என்றால் 4 லட்சம் மொத்தம்  5 லட்சம் உரு நியமனத்துடன் ஜெபிக்கவேண்டும் .இவ்வளவு கஷ்டம் இருக்கும்போது "நீ பணத்தை கொடு நான் தெய்வத்தை காட்டுகிறேன் என்று ஒருவர் சொன்னால் எப்படி நம்புவது? அப்படி ஏமாந்த சிலரையும்  அடியேன் சந்தித்து இருகின்றேன்  .

 " மந்திரங்கள் 100 சதவீதம் உண்மை.மந்திரங்கள் பலிக்கவில்லை என்றால் அது ஜெபித்தவருடைய  தவறே  தவிர  மந்திரந்தின் தவறே அல்ல .

       மந்திரம் என்றால் மனதில் திறம் என கூறுவார்கள். மனதை ஒருநிலை படுத்தி சொல்லும்போது மந்திரம் நிச்சயமாக பலிக்கும் . உதாரணத்திற்கு   ஒரு மந்திரம் தருகிறேன்.இந்த மந்திரத்தை முறைப்படி ஜெபித்தால் பிறர் நம்மைக்கண்டு  வசியமாவதொடு, நம் கட்டளையை ஏற்று நடப்பார்கள் .

" ஓம் சக்தி ,உலக சக்தி, ஆதி சக்தி, ஆதார சக்தி, சிவ சக்தி ,சித்த சக்தி ,வாக்கு  சக்தி, வசிய சக்தி, எண்ணிய எண்ணம் எண்ணியபடியே ,என்னைக்கண்டோர் என்வசம் ஆகவும் ,என்னை நினைத்தோர்
என் வசம் ஆகவும் ,என்சொல் கேட்டு இசைந்தே நடக்க ,நானே நீயாய் ,நீயே நானாய் செய் " (இதற்குரிய செயல்முறை விளக்கத்தை வெளியிட்டால் சிலர் தவறாக பயன்படுத்துவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக செயல்முறை விளக்கம் வெளியிடவில்லை )

   " மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டம் "  

நலமே பெற்று! வளமாய் வாழ்க !

பேய்கள் ........பேய்களை பற்றிய நம்பிக்கை எல்லாநாடுகளிலும் உண்டு

பேய்கள் ........பேய்களை பற்றிய நம்பிக்கை எல்லாநாடுகளிலும் உண்டு அதை பற்றிய குறிப்புகள் சிலவற்றை கொடுக்கிறேன் நான் இதுவரையில் பேயாடுபவர்களை பார்திருக்கிறேன் .ஆனால்பேயை பார்த்தது இல்லை .
நம்பிக்கை என்பது அவரவர்களின் சொந்த அனுபவமாகும் .
ஆவிகள் ஆயுள் முடியாமல் துர்மரணங்கள் அடைந்தவர்கள் ,ஆவிகளாக பயந்தசுபாவம் உள்ளவர்களையும் சிலபெண்க ளையும் பிடிப்பதாக நம்புகிறார்கள்  அடுத்து .முனி  இதற்கு முனீஸ்வரர் என்ற பட்டத்தை கொடுத்து வணங்குகிறார்கள் .இவர் நல்லவரா கெட்டவரா என்பதை ,அவரவர்களின் சொந்தகருதுக்கே விட்டுவிடுகிறேன் .அல்லல்படுத்தும்
அடங்கா முனியும் ,பிள்ளைகள் தின்னும் புலக்கடை முனியும் ,என்று கந்தர் சஷ்டி கவசத்தால் உணர்க ..அடுத்து ரத்தகாட்டேரி ,இது கொஞ்சம் கொடுமையானது ,மனிதர்களின் ரத்தத்தை குடிக்கும் இதுதவிர  வூ  டோ  குய் ,
பா ஜீ  யூ என்பனபோன்ற சீன பேய் களும் உண்டு இதைபோன்ற எந்தபேய்களும் உங்களிடம் வராமல் இருக்க ,தெய்வ பக்தி உள்ளவர்களாய் இருங்கள்

பஜகோவிந்தம் [ஆதிசங்கரர் ]

பஜகோவிந்தம் [ஆதிசங்கரர் ]
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
1  செல்வம் சம்பாதிக்கும் வரைதான்  உன்னைசார்ந்தவர்கள் உன்னிடம் பற்று உடையவர்களாய் இருப்பார்கள் .அதன்பிறகு வயதான காலத்தில் உன்னிடம் ஒருவரும் பற்றுவைக்க மாட்டார்கள்
2   உன்னுடைய மனைவி யார்//?மகன்யார் ?நீயார் ? எங்கிருந்து வந்தாய் ?இதை எண்ணிப்பார்  ..
3  இளமை செல்வம் இவைகளை பற்றி அகந்தை கொள்ளாதே சிலநொடிகளில்
யமன் கொண்டுபோய் விடுவான் எண்ணிப்பார்த்து இறைவனை நாடு
4  சடை வளர்த்தவன் ,தலை மழித்தவன் ,காவிதுணி கட்டி வேடம் போடுபவன்
எல்லாம் வயிற்று பிழைப்புக்காகவே நடைபெறுகிரது
5  நான்யார் /  ?நீயார் ?எங்கிருந்து வந்தாய் உலகம் கனவு போன்றது .
[எனக்குத்தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு ,தனக்குத்தாய் நாடியே சென்றாள் ...அப்பன் எத்தனை அப்பனோ ? பிள்ளை எத்தனை பிள்ளையோ
முன்னமெத்தனை பிறவியோ ] பட்டினத்தார் ..
இரை தேடுவதோடு ,இறையையும் தேடு

ஸ்ரீவசிஷ்ட்ட முனிவரால் எழுதப்பட்ட தாரித்திரிய தஹன சிவ ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதால் கடன் ,வியாதி தீரும்

ஸ்ரீவசிஷ்ட்ட முனிவரால் எழுதப்பட்ட தாரித்திரிய தஹன சிவ ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதால் கடன் ,வியாதி தீரும் .

ஸ்காந்த புராணத்தில் உள்ள சுக்ராச்சாரியாரால் சொல்லப்பட்ட மங்கள ஸ்தோத்திரம் சொன்னாலும் கடன் தீரும் .

செல்வம் கிடைக்க ஸ்ரீ சூக்தம் ,கனகதாரா ஸ்தோத்திரம் ,லக்ஷ்மி ,நாராயண ஹிருதயம் ,மற்றும் லக்ஷ்மிகுபேர தனாகர்ஷண மந்திரம் இவைகளில்
ஏதாவது ஒன்றை ஜெபித்தாலும் நல்லபலன் உண்டு

கடன்விரைவாக தீர 3 ,5,,,7,,என்ற எண்ணிக்கையில் குதிரைகள் படத்தை வீட்டை விட்டு வெளியே ஓடுவது போல் அமைத்தால் விரைவில் கடன் தீரும்

கடைகளில் வியாபாரம் அதிகரிக்க கடையின் வடமேற்கு மூலையில் சஞ்சீவி மலையை தூக்கிசெல்லும் அனுமான் படம் வைத்தால் ,வியாபாரம் பெருகும்

வீட்டில் ,பருத்தி ,அகத்தி ,பனை ,நாவல் ,எருக்கு ,அத்தி ,ஆல் ,அரசு ,புளி
போன்ற மரங்கள் வளர்க்க கூடாது .

செல்வம் பெருக சில குறிப்புகள்

செல்வம் பெருக சில குறிப்புகள்

1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
29. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
37. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
38. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
39. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
41. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
42. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
43. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
44. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
47. திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
48. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
49. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.
50. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
51. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.
55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.
56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.
58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
59. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
60. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
61. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
62. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
64. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
65. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
66. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
67. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
68. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
69. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
71. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
73. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
74. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
76. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
79. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
81. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.

ஸ்ரீ முனீஸ்வரன் பகவான்னை அழைத்து அருள்வாக்கு கூறும்பூஜைகள் பயிற்சி முறைகள் செய்வது எப்படி ?


கணபதி மந்திரம்காரிய வெற்றிக்கு மிக சக்தி படைத்த அருகம்புல் பயன்படுத்தும் பயிற்சி முறைகள்


கைக் கருப்பு சித்துவிளையாட்டு என்றால் என்ன ?Block Magic


மகா மந்திரம் கடிக்க வரும் நாயின் வாயைக் கட்ட


சோழி பிரசன்னம் பயிற்சி முறைகள்


ராஜவசியம் நாய் உருவி செடி


மாந்திரீக கட்டு விலகும் மகா மந்திரம்


அருள்வாக்கு சொல்ல ஸ்ரீவாலை தெய்வம் உபாசனை மந்திரம்


https://www.youtube.com/watch?v=GnlbP8c8Z9g


வீட்டில் பணம் பெருகும் அதுக்கு நீங்க செய்ய வேண்டிய மிகச்சிறிய பரிகாரம் இதுதான்..


ராஜவசியம் செவ்வ அரளி பூ குங்குமம்


100% அரசு, தனியார், வேலைவாய்ப்புகள் பெற மந்திரம் வழிபாடு


திருஷ்டி உள்ளதை எப்படி உணருவது?


16 August 2017

வியாழக்கிழமை லட்டு தானம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்...

லட்டு க்கான பட முடிவு


வியாழக்கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்தால்
, வீட்டில் வியாழக்கிழமைகளில் என்னென்ன காரியங்களைச் செய்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும்.

விஷ்ணு பகவானை வணங்குவது மிக அவசியம். வியாழக்கிழமை காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்துவிட்டு, விளக்கேற்றி, விஷ்ணு பகவானை வணங்க வேண்டும்.

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிறப் பொருட்களை தானம் கொடுக்கலாம்.

சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டு படைத்து வணங்கினால் அதிர்ஷ்டம் பெருகும். லட்டு தானம் செய்வது அவசியம்.

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற இனிப்புப் பலகாரம் வாழைமரத்துக்கு முன் வைத்துப் படைத்து, மஞ்சள் நிறப் பொருட்களை தானம் செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும்.

மற்ற தினங்களில் விரதங்கள் இருப்பதைவிடவும் வியாழக்கிழமையன்று விரதம் இருந்து, தானம் செய்தால் வீட்டில் செல்வம் நிலைபெற்றிருக்கும்.

வீட்டில் பணம் தங்கலையா?... அதுக்கு நீங்க செய்ய வேண்டிய மிகச்சிறிய பரிகாரம் இதுதான்..

பண
ம்பணம் க்கான பட முடிவு
இந்த பரிகாரங்களை எல்லா நாள்களிலும் செய்யலாம். இதற்கென தனியே கால நேரம் பார்க்கத்  தேவையில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி இடைவெளியில் இதைச் செய்தால் பலன் இரட்டிப்பாகும். ஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கின்னத்தை எடுத்துக் கொண்டு அதில் உப்பு, சர்க்கரை, அரிசி மூன்றையும் சமஅளவு எடுத்துக் கொண்டு அதற்கு நடுவில் ஒரு குத்தூசியை (safty pin) ஒன்றை மேல்நோக்கி இருக்கும்படி குத்தி வைக்க வேண்டும்.

இதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு, தங்களுடைய விருப்பக் கடவுளிடம் மனதைவிட்டு, துன்பங்களைப் போக்குமாறும் செல்வ வளம் தரும்படியும் வேண்டிக்கொண்டு, பின் அந்த கின்னத்தை மூடாமல், திறந்திருக்கும்படி வீட்டின் ஏதேனும் ஒரு மறைவான மூலையில் வைக்க வேண்டும்.

தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைத்தால் பலன் இரட்டிப்பாகும்.

இதை தினமும் 2 நிமிடமாவது தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். இதை தினமும் செய்து வந்தால், அன்றாடம் உங்கள் வீட்டுப் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் உண்டாவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

அந்த கின்னத்தில் தூசி படிந்தபின், அதை மாற்றிவிட்டு அதேபோல் வேறு ஒரு கின்னத்தை வைத்து வழிபட ஆரம்பிக்கலாம். இதை இத்தனை நாள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. வாழ்நாள் முழுவதும் கூட இதை கடைபிடிக்கலாம்.

இவ்வாறு செய்து வருவதால் வீட்டில் வளமும் செல்வமும் அதிகரிக்கும்.


ஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கின்னத்தை எடுத்துக் கொண்டு அதில் உப்பு, சர்க்கரை, அரிசி மூன்றையும் சமஅளவு எடுத்துக் கொண்டு அதற்கு நடுவில் ஒரு குத்தூசியை (safty pin) ஒன்றை மேல்நோக்கி இருக்கும்படி குத்தி வைக்க வேண்டும்.

இதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு, தங்களுடைய விருப்பக் கடவுளிடம் மனதைவிட்டு, துன்பங்களைப் போக்குமாறும் செல்வ வளம் தரும்படியும் வேண்டிக்கொண்டு, பின் அந்த கின்னத்தை மூடாமல், திறந்திருக்கும்படி வீட்டின் ஏதேனும் ஒரு மறைவான மூலையில் வைக்க வேண்டும்.

தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைத்தால் பலன் இரட்டிப்பாகும்.

இதை தினமும் 2 நிமிடமாவது தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். இதை தினமும் செய்து வந்தால், அன்றாடம் உங்கள் வீட்டுப் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் உண்டாவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

அந்த கின்னத்தில் தூசி படிந்தபின், அதை மாற்றிவிட்டு அதேபோல் வேறு ஒரு கின்னத்தை வைத்து வழிபட ஆரம்பிக்கலாம். இதை இத்தனை நாள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. வாழ்நாள் முழுவதும் கூட இதை கடைபிடிக்கலாம்.

இவ்வாறு செய்து வருவதால் வீட்டில் வளமும் செல்வமும் அதிகரிக்கும்.






யட்சிணிதேவி சித்தியாகும் கலசபூஜை செய்முறைகள்

கலச க்கான பட முடிவுயட்சிணிதேவி சித்தியாகும்  கலசபூஜை  செய்முறைகள்

விக்நேச்வர பூஜை :
(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)

கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
    கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
    ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||

    அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி
    மஹா கணபதிம் ஆவாஹயாமி

    மஹாகணாதிபதயே     ஆஸநம்           ஸமர்ப்பயாமி
    "    "    அர்க்யம்             "
    "    "    பாத்யம்                "
    "    "    ஆசமநீயம்             "
    "    "    ஔபசாரிகஸ்நாநம்        "
    "    "    ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம்    "
    "    "    வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந்        "
    "    "    யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந்    "
    "    "    கந்தாந் தாரயாமி            "
    "    "    கந்தஸ்யோபரி அக்ஷதாந்        "
    "    "    அலங்கரணார்த்தம் அக்ஷதாந்    "
    "    "    ஹரித்ரா குங்குமம்        "

    புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.)

    ஓம் ஸுமுகாய நம:    ஓம் தூமகேதவே நம:
     "   ஏகதந்தாய நம:     "   கணாத்யக்ஷாய நம:
     "   கபிலாய நம:     "   பாலசந்த்ராய நம:
     "   கஜகர்ணகாய நம:     "   கஜாநநாய நம:
     "   லம்போதராய நம:      "   வக்ரதுண்டாய நம:
     "   விகடாய நம:     "   ச்சூர்ப்ப கர்னாய நம:
     "   விக்நராஜாய நம:     "   ஹேரம்பாய நம:
     "   கணாதிபாய நம:     "   ஸ்கந்த பூர்வஜாய நம:

    ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

        தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.
    (வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.)
நிவேதந மந்த்ரங்கள் :
ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.
அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.

    ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே
    குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி.
    மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

    அம்ருதாபிதாநமஸி - உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம்
    எடுத்து விடவும்)

    தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்)
    (கற்பூரம் ஏற்ற வேண்டும்.)
    நீராஜநம் ஸமர்ப்பயாமி.
    நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

பிரார்த்தனை :

    வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |
    அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும்
    நமஸ்காரமும் செய்யவும்)

    கணபதி ப்ரஸாதம் சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில்
    தரித்துக் கொள்ள வேண்டும்)

ப்ராணாயாமம் :

ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: -
ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந:
ப்ரசோதயாத்  - ஓமாப: - ஜ்யோதீரஸ: -
அம்ருதம் ப்ரஹ்ம - பூப்ர்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம் :

அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.

விக்நேஸ்வர உத்யாபநம் :

உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு,
"விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச"
என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.

ப்ரதாந பூஜை

பூஜா ஆரம்பம் :

    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
    ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||

ப்ராணாயாமம் :

    ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: -
    ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர்
    வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோ ந:
    ப்ரசோதயாத்  - ஓமாபோ: - ஜ்யோதீ ரஸ: -
    அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ் ஸுவரோம்.
ஸங்கல்பம் :
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்த்தே, அஸ்ய ஸ்ரீபகவத: மஹா புர்ஷஸ்ய, ஸ்ரீவிஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய அத்யப்ரஹ்மண; த்விதீய பரார்த்தே ஸ்ரீச்வேத வராஹகல்பே வைவஸ்வத மந்வந்தரே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, சகாப்தே அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே --ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே-- . . . . . . . . .ஸம்வத்ஸரே . . . . . . . . அயநே. . . . . . . . . ருதௌ. . . . . . . . மாஸே. . . . . . . பக்ஷே. . . . . . . சுபதிதௌ இந்து வாஸர யுக்தாயாம். . . . . . . . நக்ஷத்ரயுக்தாயாம் சுபதிதௌ அஸ்மாகம் ஸகுடும்பநாம் க்ஷேம ஸ்த்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷஅர்த்த ஸித்த்யர்த்தம், ஸாம்ப பரமேச்வர ப்ரஸாத ஸித்த்யர்த்தம், ஸோமவார புண்ய காலே, ஸாம்ப பரமேச்வர பூஜாம் கரிஷ்யே | ததங்கம் கலச் பூஜாம் கரிஷ்யே |
விக்நேச்வர உத்யாபநம் 'யதாஸ்தாநம் ப்ரதிஷ்ட்டாபயாமி' என்று அக்ஷதை சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கு பக்கமாகச் சற்று நகர்த்தவும்.

கலச பூஜை :

    (கலசத்தை சந்தனம், குங்குமம், அக்ஷதை இவைகளால் அலங்கரித்து)

    கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித : |
    மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: ||

    குக்ஷெள து ஸாகராஸ் ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா |
    ருக்வேதோத யஜுர்வேதஸ் ஸாமவேதோஸ் ப்யதர்வண : ||

    அங்கைச்ச ஸஹிதாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : |
    கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி ||
 
    நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ||
    
    (என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், தன்னையும்
ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)

கண்டா பூஜை :

    ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம் |
    கண்டாநாதம் கரோம்யாதௌ தேவதாஹ்வாந லாஞ்ச்சநம்;  
                என்று சொல்லி மணியை அடிக்கவும்.

ஷோடசோபசார பூஜை :

    உமயா ஸஹிதம் தேவம் ப்ரஸந்நம் பரமேச்வரம் |
    அங்காதிரோபித ஸ்கந்த ஹைரம்ப வ்ருஷவாஹநம் ||

    வ்யாக்ரசர்ம பரீதாங்கம் ஹரம் ஸோம விபூஷணம் |
    த்யாயேத் சதுர்ப்புஜம் தேவம் சந்த்ரமௌளிம் ஸதாசிவம் ||
            அஸ்மிந் பிம்பே ஸாம்ப பரமேச்வரம் த்யாயாமி

    ஆவாஹயாமி தேவேசம் ஆதி தேவம் ஸநாதநம் |
    ஸோமேச்வரம் சூலபாணிம் விரூபாக்ஷம் பிநாகிநம் ||
            அஸ்மிந் பிம்பே ஸாம்ப பரமேச்வரம் ஆவாஹயாமி
ப்ராண ப்ரதிஷ்டை :
(அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூத்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராணப்ரதிஷ்டை செய்ய வேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால் பஞ்ச கவ்யத்தால் அந்த ப்ரதிமையைச் சுத்தி செய்து ப்ராணப் பிரதிஷ்டை செய்யவேண்டும். படமாக இருந்தால் ப்ராண ப்ரதிஷ்டை மட்டும் செய்ய வேண்டும்.)

            ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
        ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய:, ருக் யஜுஸ் ஸாம
        அதர்வாணி ச்சந்தாம்ஸி || ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
        ஸம்ஹார காரிணீ ப்ராண சக்தி: பரா தேவதா |

            ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம், ப்ராண
        ப்ரதிஷ்டாபநே விநியோக:

            ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:, ஹ்ரீம் தர்ஜநீப்யாம்
        நம;, க்ரோம் மத்யமாப்யாம் நம:

            ஆம் அநாமிகாப்யாம் நம:, ஹ்ரீம் கநிஷ்ட்டிகாப்யாம்
        நம:, க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம:

        ஆம் ஹ்ருதயாய நம:, ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட்,
    ஆம் கவசாய ஹூம், ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட், க்ரோம் அஸ்த்ராய பட், பூர்ப்புவஸ்
    ஸுவரோமிதி திக்பந்த: ||

|| த்யாநம் ||

            ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ தருண
                ஸரோஜாதிரூடா கராப்ஜை:
            பாசம் கோதண்ட மிக்ஷூத்பவ மளிகுண-
                மப்யங்குசம் பஞ்சபாணாந் |
            பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிணயந லஸிதா
                பீந வக்ஷோ ருஹாட்யா
            தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுக்கரீ
                ப்ராணசக்தி: ப்ரா ந: ||

        ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் | க்ரோம் ஹ்ரீம் ஆம் | அம் யம் ரம் லம் வம் சம் ஷம்
    ஸம் ஹம் ளம் க்ஷம் அம் | ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ: |

        அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது. அஸ்யாம் மூத்தௌ ஸர்வேந்த்ரியாணி வாங்
    மநஸ் த்வக் சக்ஷுச் ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்த்தாநி இஹாகத்ய
    ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா |

        (புஷ்பம், அக்ஷதை இவைகளைத் தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்.)

        அஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி போகம் | ஜ்யோக் பச்யேம
    ஸூர்ய முச்சரந்த மநுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி ||

        ஆவாஹிதோ பவ | ஸ்த்தாபிதோ பவ | ஸந்நிஹிதோ பவ | ஸந்நிருத்தோ பவ | அவகுண்டிதோ
    பவ | ஸுப்ரீதோ பவ ஸுப்ரஸந்நோ பவ ஸுமுகோ பவ | வரதோ பவ | ப்ரஸீத ப்ரஸீத ||

        ஸ்வாமிந் ஸர்வஜகந்நாத யாவத் பூஜாவஸாநகம் | தாவத் த்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந்
    ஸந்நிதிம் குரு || என்று ப்ரார்த்தித்து, வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றை நிவேதநம் செய்யவும்.

        பிறகு கீழ்கண்டதைச் சொல்லி சரட்டைக் கலசத்தின் மீது வைக்கவும்.

        முக்தா வைடூர்ய கசிதம் ஜாம்பூநத பரிஷ்க்ருதம் |
        ஸிம்ஹாஸநம் மஹாதேவ ஸங்க்ருஹாண ஸுரேச்வர ||
                        ஆசநம் ஸமர்ப்பயாமி.

        ஸர்வதீர்த்த ஸமாநீதம் புஷ்பகந்தைஸ் ஸுவாஸிதம் |
        பாத்யம் க்ருஹாண தேவேச பக்தப்ரிய நமோஸ்து தே ||
                        பாத்யம் ஸமர்ப்பயாமி.

        கைலாஸ சிகராவாஸிந் ஸுராஸுர ஸுபூஜித |
        அர்க்யம் க்ருஹாண தேவேச பக்தாநா மபயங்கர ||
                        அர்க்யம் ஸமர்ப்பயாமி.

        நமஸ் துப்யம் த்ரிணயந ஸ்ருஷ்டி ஸ்த்தித்யந்த காரண |
        க்ருஹாண தேவ தேவேச ஜிதக்ரோத ஜிதேந்த்ரிய ||
                        ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

        பயஸா மதுநா தத்நா க்ருதேந ச ததைவ தே |
        மதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி தேவதேவ ஜகத்பதே ||
                        மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.

        ததிக்ஷீர க்ருதம் சம்போ கதலீ பல ஸம்யுதம் |
        பார்வதீச நமஸ்துப்யம் க்ராஹ்யம் பஞ்சாம்ருதம் த்வயா ||
                        பஞ்சாம்ருதஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

        சந்த்ரமௌளே ஜடாஜூட ஸோமஸூர்யாக்நி லோசந |
        பாஹி மாம் க்ருபயா சம்போ பசூநாம் பதயே நம : ||
                        சுத்தோதக ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

        துகூலம் தௌத தவளம் நாநா சித்ரமயம் யுகம் |
        வஸ்த்ரம் க்ருஹாண பகவந் காலகண்ட நமோஸ்து தே ||
                        வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி.

        காஞ்சநம் ப்ரஹ்மஸூத்ரஞ்ச ராஜதம் சோத்தரீயகம் |
        தந்துநா மிச்ரிதம் ஸூத்ரம் பவித்ரஞ்ச க்ருஹாண போ: ||
                        உபவீதம் ஸமர்ப்பயாமி.

        ஸ்ரீகந்தம் குங்குமையர் மிச்ரம் கர்ப்பூரேண மநோஹரம் |
        அந்யைஸ் ஸுகந்திபிர் யுக்தம் க்ருஹாண ஸ்வஜநப்ரிய ||
                        கந்தாந் தாரயாமி.

        அக்ஷதாந் தவளாந் திவ்யாந் அவ்ரணாம்ஸ் திலதண்டுலாந் |
        அஷ்டமூர்த்தே நமஸ்துப்யம் அக்ஷதாந் ஸங்க்ருஹாண போ: ||
                        அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.

        கேயூர கடகாதீநி கடிஸூத்ராங்குளீயகை: |
        நூபுராதிபி ரந்யைச்ச க்ருஹாணாப்ரணம் ப்ரபோ ||
                        ஆபரணம் ஸமர்ப்பயாமி.

        மால்யாநி ச ஸுகந்தீநி மாலதீ குஸுமாநி ச |
        மயா ஹ்ருதாநி பூஜார்த்தம் புஷ்பாணி ப்ரதிக்ருஹ்யதாம் ||
                        புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

|| அங்க பூஜா ||

        ஹராய நம:            பாதௌ        பூஜயாமி
        சங்கராய நம்             குல்பௌ           "
        சம்பவே நம:             ஜங்கே            "
        சிவாய நம:             ஜாநுநீ           "
        அகநாசிநே நம:             ஊரூ           "
        ஜகத்பதயே நம:             ஜகநம்           "
        ப்ரஜாபதயே நம:         மேட்ரம்        "
        ஸர்வாச்ரம பதயே நம:         கடிம்            "
        ஸர்வரக்ஷாய நம:         நாபிம்            "
        திக்வாஸஸே நம:         மத்யம்            "
        பார்வதீசாய நம:         பார்ச்வே        "
        உமாபதயே நம:             வக்ஷஸ்தலம்        "
        ஜகத்குக்ஷயே நம:         குக்ஷிம்            "
        நீலகண்டாய நம:         கண்டம்             "
        த்ரிபுராந்தகாய நம:         பாஹூந்        "
        தேவதேவாய நம:         கராந்            "
        வ்ருஷாங்காய நம:         கர்ணௌ           "
        க்ரதுபல ப்ரதாய நம:         முகம்            "
        நாகஹாராய நம:         நாஸிகே        "
        சந்த்ரார்க்க வஹ்நிநேத்ராய நம:    நேத்ராணி        "
        கபாலிநே நம:             லலாடம்        "  
        ஸோமேச்வராய நம:         சிர:            "
        கங்காதராய நம:         ஜடா:            "
        சுபதாயிநே நம: ஸர்வாண்யங்காநீ பூஜயாமி ||

        (பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)

|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி ||

        ஓம் சிவாய நம:            ஓம் மஹேச்வராய நம:        
         "   சம்பவே நம:          "   பிநாகிநே நம:         
         "   சசிசேகராய நம:          "   வாமதேவாய நம:        
         "   விரூபாக்ஷாய நம:          "   கபர்திநே நம:        
         "   நீலலோஹிதாய நம:      "   சங்கராய நம்:         (10)
         "   சூலபாணயே நம:          "   கட்வாங்கிநே நம:
         "   விஷ்ணுவல்லபாய நம:      "   சிபிவிஷ்டாய நம:
         "   அம்பிகாநாதாய நம:      "   ஸ்ரீ கண்ட்டாய நம:
         "   பக்தவத்ஸலாய நம:      "   பவாய நம:
         "   சர்வாய நம:          "   த்ரிலோகேசாய நம:     (20)
         "   சிதிகண்ட்டாய நம:          "   சிவப்ரியாய நம:
         "   உக்ராய நம:         "   கபர்திநே நம:
         "   காமாரயே நம:         "   அந்தகாஸுரஸூதநாய நம:
         "   கங்காதராய நம:         "   லலாடாக்ஷாய நம:
         "   காலகாலாய நம:          "   க்ருபாநிதிதயே நம :        (30)
         "   பீமாய நம:          "   பரசுஹஸ்தாய நம:         
         "   ம்ருக பாணயே நம:      "   ஜடாதராய நம:     
         "   கைலாஸ வாஸிநே நம:      "   கவசிநே நம:        
         "   கடோராய நம:          "   த்ரிபுராந்தகாய நம:
         "   வ்ருஷாங்காய நம:          "   வ்ருஷபாரூடாய நம்:      (40)
         "   பஸ்மோத்தூளித
            விக்ரஹாய நம:      "   ஸாமப்ரியாய நம:
         "   ஸ்வரமயாய நம:          "   த்ரயீமூர்த்தயே நம:
         "   அநீச்வராய நம:          "   ஸர்வஜ்ஞாய நம:
         "   பரமாத்மநே நம:          "   ஸோமஸூர்யாக்நி லோசநாய நம:
         "   ஹவிஷே நம:          "   யஜ்ஞமயாய நம:         (50)
         "   ஸோமாய நம:          "   பஞ்சவக்த்ராய நம:
         "   ஸதாசிவாய நம:          "   விச்வேச்வராய நம:
         "   வீரபத்ராய நம:          "   கணநாதாய நம:
         "   ப்ரஜாபதயே நம:          "   ஹிரண்யரேதஸே நம:
         "   துர்தர்ஷாய நம:          "   கிரீசாய நம:         (60)
         "   கிரிசாய நம:         "   அநகாய நம:
         "   புஜங்கபூஷ்ணாய நம:      "   பர்காய நம:
         "   கிரிதந்வநே நம:          "   கிரிப்ரியாய நம:
         "   க்ருத்திவாஸஸே நம:      "   புராராதயே நம:
         "   பகவதே நம:          "   ப்ரமதாதிபாய நம:         (70)
         "   ம்ருத்யுஞ்ஜயாய நம:      "   ஸூக்ஷமதநவே நம:
         "   ஜகத்வ்யாபிநே நம:          "   ஜதக்குரவே நம:
         "   வ்யோமகேசாய நம:         "   மஹாஸேநஜநகாய நம:
         "   சாருவிக்ரமாய நம:         "   ருத்ராய நம:
         "   பூதபதயே நம:         "   ஸ்த்தாணவே நம:        (80)
         "   அஹிர்புத்ந்யாய நம:     "   திகம்பராய நம:
         "   அஷ்டமூர்தயே நம:         "   அநேகாத்மநே நம:
         "   ஸாத்விகாய நம:         "   சுத்தவிக்ரஹாய நம:
         "   சாச்வதாய நம:         "   கண்டபரசவே நம:
         "   அஜாய நம:          "   பாசவிமோசகாய நம:     (90)
         "   ம்ருடாய நம:          "   பசுபதயே நம:
         "   தேவாய நம:          "   மஹாதேவாய நம:
         "   அவ்யயாய நம:         "   ஹரயே நம:
         "   பூஷதந்தபிதே நம:         "   அவ்யக்ராய நம:
         "   தக்ஷாத்வரஹராய நம:      "   ஹராய நம:        (100)
         "   பகநேத்ரபிதே நம:          "   அவ்யக்தாய நம:
         "   ஸஹஸ்ராக்ஷாய நம:     "   ஸஹஸ்ரபதே நம:
         "   அபவர்கப்ரதாய நம:      "   அநந்தாய நம:
         "   தாரகாய நம:          "   பரமேச்வராய நம:         (108)

        ஸாம்ப பரமேச்வராய நம:, நாநாவித பரிமளபத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ||
    என்று சொல்லி புஷ்பம் சேர்க்கவும்.

|| ஏகாதச (11) கலச பூஜை ||

        1) சிவாய நம:         2) ருத்ராய நம:         3) பசுபதயே நம:
        4) நீலகண்டாய நம:     5) மஹேச்வராய நம:     6) சர்வாய நம:
        7) ஈசாநாய நம:     8) பிநாகிநே நம:     9) வ்ருஷபத்வஜாய நம:
        10)சங்கராய நம:     11) மஹாதேவாய நம: ||

உத்தராங்க பூஜை :

        தசாங்கம் குக்குலும் தூபம் ஸுகந்தம் ஸுமநோஹரம் |
        தூபம் க்ருஹாண தேவேச விரூபாக்ஷ நமோஸ்து தே ||
                    தூபம் ஆக்ராபயாமி.

        ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா |
        தீபம் க்ருஹாண தேவேச த்ரைலோக்ய திமிராபஹம் ||
                    தீபம் தர்சயாமி.

        ஷட்ரஸைச்ச ஸமோபேதம் நாநாபக்ஷ்ய ஸமந்விதம் |
        நைவேத்யம் து மயா தத்தம் க்ருஹாண பரமேச்வர ||

        ஸாம்ப பரமேச்வராய நம:, சால்யந்நம், க்ருதகுள பாயஸம்,
        பலாநி, ஏதத் ஸர்வம் மஹாநைவேத்யம் நிவேதயாமி.
                    ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

        கர்ப்பூர பாடலிர் யுக்தம் ஏலோசீர ஸமந்விதம் |
        சம்பகோத்பல ஸம்யுக்தம் பாநீயம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
                    பாநீயம் ஸமர்ப்பயாமி.

        கங்கா யமுநயோஸ் தோயை: சாதகும்பகடைர் ஹ்ருதை: |
        ஹஸ்த ப்ரக்ஷாளநம் தேவ சுத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
                    ஹஸ்தப்ரக்ஷாளநம் ஸமர்ப்பயாமி.

        பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர் யுதம் |
        கர்ப்பூர சூர்ணஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
                    தாம்பூலம் ஸமர்ப்பயாமி.

        நீராஜநம் மஹாதேவ கோடிஸூர்ய ப்ரகாசக |
        பக்த்யாஹம் தே ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ தயாநிதே ||
                    மர்ப்பூரநீராஜநம் தர்ஸயாமி.

        யஸ்யாஜ்ஞபா ஜகத்ஸ்ரஷ்டா விரிஞ்ச: பாலகோ ஹரி: |
        ஸம்ஹர்த்தா காலருத்ராக்ய: நமஸ்தஸ்மை பிநாகிநே ||
                    மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி.

        நாநாரத்ந ஸமாயுக்தம் வஜ்ரநாள ஸமந்விதம் |
        முக்தாகேஸர ஸம்யுக்தம் ஸ்வர்ண புஷ்பம் ததாம்யஹம் ||
                    ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி.

        யாநி காநி ச பாபாநி ஜந்மாந்தர க்ருதாநி ச |
        தாநி தாநி ப்ரணச்யந்தி ப்ரதக்ஷிணபதே பதே ||

        ஸோமேச்வர விரூபாக்ஷ ஸோமரூப ஸதாசிவ |
        ப்ரதக்ஷிணம் கரோமீச ப்ரஸீத பரமேச்வர ||

        நமஸ்தே ஸர்வலோகேச நமஸ்தே புண்யமூர்த்தயே |
        நமோ வேதாந்த வேத்யாய சரண்யாய நமோ நம: ||

            ஸாம்ப சிவாய நம:, அநந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காராந் ஸமர்ப்பயாமி.
        (பஞ்சாக்ஷரஜபம் செய்யவும்.)

அர்க்ய ப்ரதாநம் :

            அத்ய பூர்வோக்த - ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம. . .
        சுபதிதௌ, ஸோமவார புண்யகாலே ஸாம்ப பரமேச்வர
        பூஜாந்தே அர்க்யப்ரதாநம் உபாயநதாநம் ச கரிஷ்யே ||

        ஸோமவாரே திவா ஸ்த்தித்வா நிராஹாரோ மஹேச்வர |
        நக்தம் போக்ஷ்யாமி தேவேச அர்ப்பயாமி ஸதாசிவ ||
            ஸாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        நக்தே ச ஸோமவாரே ச ஸோமநாத ஜகத்பதே |
        அநந்தகோடி ஸௌபாக்யம் அக்ஷய்யம் குரு சங்கர ||
            சாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        நமஸ் ஸோம விபூஷாய ஸோமாயாமித தேஜஸே |
        இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸோமோ யச்சது மே சிவம் ||
            ஸாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        ஆகாச திக்சரீராய க்ரஹநக்ஷத்ர மாலிநே |
        இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ ||
            ஸாம்பசிவாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        அம்பிகாயை நமஸ்துப்யம் நமஸ்தே தேவி பார்வதி |
        அம்பிகே வரதே தேவி க்ருஹ்ணீதார்க்யம் ப்ரஸீத மே ||
            பார்வத்யை நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        ஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்த்திகேய ஸுரேச்வர |
        இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ ||
            ஸுப்ரஹ்மண்யாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        நந்திகேச மஹாபாக சிவத்யாந பராயண |
        சைலாதயே நமஸ்துப்யம் க்ருஹ்ணீதார்க்ய மிதம் ப்ரபோ ||
            நந்திகேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

        அநேந அர்க்யப்ரதாநேந பகவாந் ஸர்வாத்மக: ஸர்வம் ஸாம்பசிவ:
        ப்ரீயதாம்.

            || தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து ||

        யஸ்ய ஸ்ம்ருத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதிஷு |
        ந்யூநம் ஸம்பூர்ணதாம் யாதி ஸத்யோ வந்தே ஸதாசிவம் ||

        ஸோமவார வ்ரதம் பக்த்யா க்ருதம் கல்யாண தாயகம் |
        ப்ரஸீத பார்வதீநாத ஸாயுஜ்யம் தேஹி மே ப்ரபோ ||

        ஸோமநாதா ஜகத்வந்த்ய பக்தாநா மிஷ்டதாயக |
        ஆயுஷ்யம் சைவ ஸௌபாக்யம் தேஹாந்தே முக்திதோ பவ ||
                    (ப்ராத்தனை செய்து கொள்ளவும்)

உபாயந தாநம் :


        ஸாம்பசிவ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம் |
        கந்தாதி ஸகலாராதநை: ஸ்வர்ச்சிதம் ||

        ஸோமேச: ப்ரதிக்ருஹ்ணாதி ஸோமேசோ வை ததாதி ச |
        ஸோமேசஸ் தாரகோ த்வாப்யாம் ஸோமேசாய நமோ நம: ||

            இதமுபாயனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசிவ பூஜா
        பல ஸாத்குண்யம் காமயமாந: ஸாம்ப பரமேச்வர ஸ்வரூபாய
        ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம ||

                (தீர்த்தம், ப்ரஸாதம் பெற்றுகொள்ளவும்)

                    உமாமஹேச்வர பூஜை முற்றும்