youtube

3 February 2014

அசைவ கைக்கருப்பு தயாரிக்கும் முறை

அசைவ  கைக்கருப்பு  தயாரிக்கும் முறை

1.பன்றிய்ன் கரு
2.பிண்டம்தீன்  கரு
3.புது மண்பானை  
3 மை பொ ருள்ளைய் சேர்த்து   மை   செய்து ஓம் சிவாயா நாம வா வா கைக்கருப்பு வசிய வசிய சுவாக என்று 1008 உரு முறை

அக்னி மூலை

தென்கிழக்கு மூலையே “அக்னி மூலை” ஆகும்…
பஞ்சபூதங்களில் முக்கிய கூறாக கருதப்படும் நெருப்பு, மனித வாழ்வின் அடிப்படை தேவையாக இருக்கிறது.
கற்காலம் முதலே நெருப்பின் பயன்பாடு மனிதனிடம் அதிகமாக காணப்பட்டு வந்தது. அவ்வாறு நெருப்பை வசமாக கொண்ட
மூலை “தென்கிழக்கு” மூலையாகும். இதனை “அக்னி மூலை” என்றும் கூறுவர். ஒரு வீட்டிலோ/ தொழில் நிறுவனங்களிலோ தென்கிழக்கு மூலை பாதிப்படைந்தால் அந்த இடதிற்குக் தொடர்புடைய பெண்களின் உடல் நலம் மற்றும் மனவளம் கட்டாயம் பாதிப்படையும் என்பதினை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.
தென்கிழக்கு மூலையில் வரக்கூடியவை ;
• சமையலறை கிழக்கு பார்த்தவாறு அமைக்கவேண்டும்
• பூஜை அறை
தென்கிழக்கு மூலையில் வரகூடாதவைக்; (உள் மற்றும் வெளி மூலைகள்)
• குடும்ப தலைவன்/தலைவி படுக்கையறை
• பள்ளம் / கிணறு / ஆழ்துளை கிணறு
• கழிவுநீர் தொட்டி
• கார் போர்டிகோ
• குளியலறை / கழிவறை
• உள்மூலை படிக்கட்டு
• வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்டு
• மேல்நிலை தண்ணீர் தொட்டி (Over Head Tank).

வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்

வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்?

நி  லம் ... நீர்.... நெருப்பு... காற்று .... ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டது வாஸ்து சாஸ்திரம். பஞ்ச பூதங்களை எந்த விகிதாச்சாரத்தில் பிரித்து அமைக்கிறோமோ அது சரியாக இருந்தால் நம் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். அதில் குற்றம் குறைகள் இருந்தால் அது நம் வாழ்க்கையை பாதிக்கிறது.
வீடு கட்டி என்னிடம் வாஸ்து பற்றிக் கேட்க வருகிறார்கள். அப்போது வீட்டில் உள்ள குறைகளை மட்டும் நிவர்த்தி செய்ய முடியும். முழுக்க, முழுக்க நூறு சதவீதம் நன்றாக அமைக்க முடியாது. இடத்தை வாங்கி விட்டு என்னிடம் பிளான் போட்டுத்தர சொல்கிறார்கள். அதுவே இரண்டாம் பட்சமானதுதான். இடத்தை தேர்வு செய்யும் போது வாஸ்து நிபுணரிடம் கலந்து ஆலோசித்து வாங்கினால் தான் முழுமையான 'ஸ்தானபலம்' உள்ள இடத்தை உருவாக்கி சௌபாக்கியங்களை பெற முடியும்.
மனை தேர்வு என்பது மிக முக்கியமான விஷயம் ஒரு மனைக்கு தெரு... ரோடு முக்கியம் சாலை மனைக்கு ஒரு பக்கம் ... இரண்டு பக்கம்...... மூன்று பக்கம் சில மனைக்கு நான்கு பக்கமே ரோடுகள் இருக்கும். கிழக்கு தெரு உள்ள மனை கிழக்கு மனை என்றும், இது போல மேற்கு மனை, வடக்கு மனை, தெற்கு மனை என்றும் குறி;க்கப்படுகிறது. வடக்கும், கிழக்கும் ரோடு உள்ளதை இரண்டு பக்கமும் ரோடு இருப்பதை 'ஈசானிய கார்னர் பிளான்' என்கிறோம்.
தெற்கும், கிழக்கும் சந்திக்கும் இடத்தை 'ஆக்கினேய கார்னர் பிளாக்' என்கிறோம். வடக்கும், மேற்கும் சந்திக்கும் இடத்தை ;'வாய விய கார்னர் பிளாக்' என்கிறோம். திசை காட்டும் கருவி வைத்துப்பார்த்தால் பல வீடுகள் கிழக்கு என்பார்கள். ஆனால் அவர்கள் ரோடு உள்ள திசை தென் கிழக்கு அல்லது வடகிழக்காக இருக்கும்.
காம்பஸில் தென் கிழக்கு அவர்கள் வாசல் பகுதி காட்டினால் அது 'ஆக்கினேய பிளாக்' என்கிறோம். அது ஈசானியத்தைக் காட்டினால் 'ஈசானிய பிளாக்' என்கிறோம். நைருதியை காட்டினால் நைருதி பிளாக். வாயவியத்தைக் காட்டினால் வாயவிய பிளாக் என்கிறோம். மேற்கு மூலையில் இரண்டு ரோடுகள் வந்தால் 'மேற்கு கார்னர் பிளாக்' என்கிறோம். கிழக்குப்பக்கம் ;இரண்டு ரோடு வந்து சேர்ந்தால் 'கிழக்கு கார்னர் பிளாக்' என்கிறோம். இது போல 'தெற்கு கார்னர் பிளாக்' ... வடக்கு கார்னர் பிளாக் உள்ளது

தொழில் செய்வோர் வாஸ்து

வியாபாரத்தை ஆரம்பித்து பெரிய அளவில் விருத்தியடைந்து நம்பர் ஒன் ஆனவரும் உண்டு. பிரம்மாண்ட தொழிலை தொடங்கி நஷ்டத்தை சந்தித்தவர்களும் அதிகம். வியாபார இடம் நல்ல பஜாரில் இருந்து பொருள் தரமாக, விலை நியாயமாக இருந்தும் தொழில் நசிவது வாஸ்து குறையால்தான். வாஸ்து பலம் உள்ள வியாபார நிலையங்களுக்கு வெற்றி நிச்சயம். புதிதாக தொடங்கும் முன் நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து வாஸ்துப்படி கடையை அமைத்து வியாபாரத்தைத் தொடங்க வேண்டும். ஏற்கெனவே தொழில் செய்வோர் வாஸ்துவை கடைபிடித்து வியாபாரத்தில் வெற்றிக்கொடி நாட்டலாம்.
பிரதான வாயில்
வாடிக்கையாளர் நுழைவு வாயில் எந்தத் திசையில் சாலை உள்ளதோ அத்திசையிலேயே அமைக்க வேண்டும். இரண்டு பக்க சாலை உள்ள கடைகளுக்கு திசை பலம் அறிந்தே வாயில் அமைக்க வேண்டும். வடகிழக்கு கார்னர் கடைக்கு இருபக்க வாசல் அவசியம். இரு பக்கமும் ரோட்டின் தரைமட்ட உயரம் மாறுபட்டாலோ திசை 10 °, 20 °, PC, PAC ஆனாலோ ஆராய்ந்து அமைக்க வேண்டும். வடமேற்கு கார்னர் கடைக்கு மேற்கு ;வாசலும், தென் கிழக்கு கார்னர் கடைக்கு தெற்கு வாசலும் சிறந்தது. தென்மேற்கு கார்னர் கடை சிறியதானால் இரு பக்கமும் திறந்தால் நல்ல வியாபாரம் உண்டாகும்.
ஷட்டர்
இரண்டு ஷட்டர்கள் உள்ள கடைகளில் வியாபாரம் செய்வோர் ஒரு பக்கம் திறந்து வைத்து, மறுபக்கம் ஸ்டாக் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் கிழக்கு திசையில் ஈசான்ய ஷட்டரையும், மேற்கு திசையில் வாயு ஷட்டரையும் வடக்கு திசையில் ஈசான்ய ஷட்டரையும், தெற்கு திசையில் ஆக்கினேய ஷட்டரையும் திறந்து வைத்து வியாபாரம் செய்வது நல்ல விருத்தியைத் தரும்.
ஷோகேஸ்
ஜவுளிக்கடை, மோட்டார் சாதனங்க்ள எலக்ட்ரிக் கொருட்கள் வியாபாரம் செய்யும் கடைகளுக்கு ஷோரூம் சிறிய அளவில் வாசலுக்கு அருகிலிலேயே ரோட்டில் போவோர், வருவோர் பார்க்கும் வண்ணம் அமைப்துண்டு. வாஸ்து சாஸ்திரப்படி மேற்குப்பார்த்த கடைக்கு நைருதியிலும், கிழக்குப் பார்த்த கடைக்கு தென்கிழக்கிலும், வடக்குப் பார்த்த வாசலுக்கு வாயு மூலையிலும், தெற்குப் பார்த்த கடைக்கு தென் மேற்கிலும், ஷோஸே; அமைத்தால் நடை உச்சத்துக்கு மாறி, உச்சப்பகுதி பாரமின்றி இருந்தால் வியாபாரம் செழிக்கும்.
கடை விரிவாக்கம்
வியாபாரம் சூடுபிடித்து பெருமளவு சாத்தியம் உருவான உடன் கடையை விரிவுபடுத்தினால் வாஸ்து முறைப்படியே செய்ய வேண்டும். வடக்கு, கிழக்கு, வடகிழக்கு திசையில் விரிவு படுத்தலாம். ஆனால் விரிவுபடுத்தும் இடத்திற்கு ஈசான்யம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தெற்கு, மேற்கு திசையில் சேர்க்க வேண்டி வந்தால் வாஸ்து நிபுணர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்.
வாஸ்து நிபுணர்
மருத்துவத்தில் சுய வைத்தியம் செய்வது பக்க விளைவுகளை தந்து எவ்வளவு கெடுதல் செய்யுமொ அதே போல சயின்டிபிக் வாஸ்து, பென்ஃசூயி, சைக்கோ, சிம்பாலஜி போன்ற வாஸ்து நுட்பங்கள் அறிந்த நிபுணரின் ஆலோசனைப்படி கேஷ் கவுண்டர், பொருட்கள் வைக்கும் முறை, வியாபார கவுன்டர், போர்டு அமைப்பு, கோணங்கள், போன்ற அமைப்பு முறைகளை உருவாக்கி நியூமராலஜிப்படி நல்ல ஐஸ்வரியமுள்ள பெயரும் அமைந்தால் தொழில் வெற்றி நிச்சியம்

விநாயகர் ஜாதகம் மகிமை

விநாயகர் ஜாதகம் மகிமை
 
விநாயகர் ஜாதகம் மகிமைவிநாயகர் ஜாதகம் மகிமை


சனிபகவான் ஒரு முறை விநாயகரைப் பார்த்து  உங்களை  நாளை வந்து பிடிக்க வேண்டும். நாளைக்கு வருகிறேன். என்றார். சனீஸ்வரனே எனக்கும் கணேசபுரியில் வேலைப்பளு அதிகம், உமக்கும் அதிக வேலை இருக்கும். என்னைப் பிடிக்க வரும் நீங்கள் என் முதுகில், நாளைக்கு வருகிறேன் என்று எழுதி விட்டுப் போங்கள் என்று முதுகைக் காட்டினார் விநாயகர்.

அதில் நாளை மறவாமல் வருகிறேன் என்று எழுதினார். சனீஸ்வரன் போய்விட்டு மறு நாள் வந்த போது முதுகைக் காட்டி என்ன எழுதி உள்ளீர் என்று கேட்க, சனீஸ்வரன் அவரிடம் அடி பணிந்தார். என்னை வணங்குபவர்களைப் பிடித்தால் உமக்கும் இது போல சங்கடம் ஏற்படும் என்றார்.

விநாயகர்  கணேசப்பிரபுவே தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன் என்றார். உங்கள் ஜாதகத்தில் சனியின் பிடிப்புக் காலம் வந்தால் விநாயகர் ஜாதகத்தை ஒரு அட்டையில் எழுதி செவ்வாய் சனிக்கிழமைகளில் வணங்கி வாருங்கள் சனி தசையும், யோக தசை காலமாக அமைந்து விடும். இதுவே விநாயகரின் ஜாதகத்தின் மகிமை

 ஈசான்ய மூலை என்பது எது?

s
இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்களாக கருதப்படும் ஓரறிவு தாவரங்கள் முதல் பகுத்தறிவு கொண்ட மனிதன் வரை அனைத்துமே பஞ்சபூதங்களின் கூட்டாகும். உயிரற்ற பொருட்களிலும் பஞ்சபூதங்களின் செயல்பாடுகள் இருக்கும். இதன் அடிப்படையில் இயற்கையோடு ஒத்து நாம் ஒரு கட்டிடம் கட்ட நினைக்கும்போது பஞ்சபூதங்களின் தன்மைக்கு ஒப்பும் வகையில் அதனை நாம் நம் வசப்படுத்திக் கொள்ளுமாறு அமைக்க வேண்டும். அந்த வகையில் வாஸ்துவின் மூலைகளில் பிரதானமானது வடகிழக்கு மூலையாகும். இம்மூலை பஞ்சபூதங்களின் முதல் கூறான நீரின் இருப்பிடமாகும். வடகிழக்கு மூலையை “ஈசான்ய மூலை” என்றும் கூறுவர்.
ஈசான்ய மூலை என்றதும் இது ஈசனுக்குரிய மூலை என்று பலரால் கூறப்படுகின்றது. இது தவறான கருத்து என்பதே அறிவியல் கூறும் உண்மையாகும். வடகிழக்கு மூலை ஒரு இடத்தின் ஆற்றல் வரும் இடமாக கருதப்படுவதால். இந்த மூலையை ஒரு இடத்தின் வெற்றியை தீர்மானிக்க கூடிய மூலையாக கருதலாம். அது மட்டுமல்லாமல் இந்த மூலை நீரின் ஆதாரம் என்பதால், வடகிழக்கு வெளி மூலையில் ஆழ்துளை கிணறு, நீர் தேக்கும் தொட்டி, கிணறு போன்றவற்றை அமைத்துக்கொள்ளவது சால சிறந்தது. மேலும் வடகிழக்கு மூலை அறையை குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றவாறு நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும் மற்றும் வடகிழக்கு அறையை தியானம் செய்வதற்கும், குழந்தைகள் / பெரியவர்கள் படுத்து உறங்கும் அறையாகவும் பயன்படுத்தலாம்