youtube

20 February 2016

பொருளாதாரம், வியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்

பொருளாதாரம், வியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்


"ஓம் கம் கணபதயே, உத்யோகலாபம், வித்யா லாபம் குருதே நமக''

- என்று 108 தடவை ஜபம் செய்தபின் கையில் மலர்கள் எடுத்துக் கொண்டு தன்னையே சுற்றி வருகின்ற ஆத்ம பிரதட்சிணம் செய்து- கலசம் மற்றும் வைக்கப்படும் சிறு சிலை மேல் (பிரதீமை என்றும் சொல்வர்) போட்டு விழுந்து வணங்குதல் வேண்டும்.

அடுத்தபடியாக, விநாயகருக்கு மங்கள ஆரத்தியை செய்யலாம்.

ஓம் தத்புருஷாய வித்மகே வக்ர துண்டாய தீமகி
தந்தோ கணேச ப்ரசோதயாத்- கற்பூர ஜோதிம் தர்சயாமி

- என்றோ அல்லது அழகு தமிழில்

ஜோதி ரூபனே கணேஸ்வரா ஜோதி மைந்தனே சர்வேசா! ஆனை முகத்தவா கணேஸ்வரா ஆனந்த ஜோதி கணேஸ்வரா!
அழகன் அண்ணா கணேஸ்வரா!
ஆதி நாதனே ஆனைமுக! மங்கள ஜோதி கணேஸ்வரா!
பணிந்தோம் ஏகதந்தேஸ்வரா! தீப மங்கள் கணேஸ்வரா!
என்றும் மங்களம் கணேஸ்வரா!

பிறகு ஆரத்தி, விபூதி, குங்குமம் எடுத்துக் கொண்டு வந்திருப்பவர்கள் யாராயினும் இருந்தால் கொடுக்கவும். முதல் விரத பூஜை காலத்தில் ஒரு 7 வயது சிறுவனை மனைப் பலகையில் அமர வைத்து மஞ்சள், சந்தனம் கொடுத்து தட்டில் மூன்று பழங்கள், பாயாசம் தாம்பூலம் முடிந்த அளவு 5, 10 ரூபாய் காசுகள் வைத்து

- விநாயகராக அந்த சிறுவனை நினைத்து வணங்கி தானம் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரத பூஜையில் தவறு இருந்தால் அவர் ஏற்றுக் கொள்வதாக ஜதிகம்.

மஹா ம்ருத்யுஞ்ஜய’ மந்திரம்

மஹா ம்ருத்யுஞ்ஜய’ மந்திரம்

     
‘ஓம் த்ரையம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்!
உர்வாருக மிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!!’

இம்மந்திரத்தை தினமும் 108 அல்லது 48 என்ற எண்ணிக்கையில் கூறி வந்தால், ஆரோக்கியமான வாழ்வை நிச்சயமாக அடையலாம். ஜபத்தின் எண்ணிக்கைக்கு ருத்ராட்ச மாலையைப் பயன்படுத்த வேண்டும். இதிலும் வழக்கம் போல அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும்.

இம்மந்திரத்தை காலை, மாலை உச்சாடணம் செய்து வருவது விரைவான பலன்களை அளிக்கவல்லது. இந்த மந்திரத்தை சுத்தத் திருநீற்றில் 48 முறை பிரயோகம் செய்து அணிந்து கொள்வது மிகவும் விசேஷமானதாகும். உடலின் எந்தப் பகுதி பாதிப்படைந்திருக்கிறதோ அந்தப் பகுதியில் மந்திர உச்சாடணம் செய்த விபூதியைப் பூசலாம்.

அத்தகைய விபூதி சர்வ ரோக நிவாரணியாகச் செயல்படுவதால் உடல் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பூசலாம். சிறிது விபூதியை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மேற்கண்ட மந்திரத்தை குறிப்பிட்ட அளவு  ஜபம் செய்து விட்டு அந்தத் திருநீற்றினை வெள்ளி அல்லது செம்பு டம்ளரில் வைக்கப்பட்ட சுத்த ஜலத்தில் போட்டு அதை அருந்தி விடலாம். இதற்கு மிக நல்ல பலன் கிடைக்கும். ஆனால், திருநீறு சுத்தமான பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்

மந்திரங்கள் - பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பி

மந்திரங்கள் - பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்

      ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த வரலாறு:- 
    இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர். தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து பிச்சை ஏற்கப் புறப்படுவார். மற்றவர் இட்டதை உண்டு தம் இறைப்பணியைத் தொடருவார்.அம்முறைப்படி ஒரு நாள் ஸ்ரீசங்கரர் சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்குச் சென்று "பவதி பிஷாந்தேஹி" என மும்முறை உச்சரித்தார். சோமதேவர் அப்போது இல்லத்தில் இல்லை. அவருடைய துணைவியார் தருவசீலை ஆங்கிருந்தார். பிச்சைக்கு வியப்பு மூண்டது. பாலசங்கரரைப் பார்த்த வுடனே, பரவேஸ்வரனே பிச்சைக்கு வந்துவிட்டாரே என்று அதிசயித்தார். ஆனால் அவரிடத்தில் பிச்சை இடுவதற்கான பொருள் ஏதும் இல்லை. 

கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த சோம தேவர் வறுமையிலும் தேர்ச்சி அடைந்திருந்தார். அவரும் சங்கரரைப் போலவே பிச்சை கேட்கச் சென்றிருந்தார். வீட்டில் ஒன்றும் இல்லை. எனவே, மிகுந்த வருத்தத்துடன் அம்மையார் சங்கரரைப் பார்த்து, "நான் கொடிய பாவம் செய்தவள். பகவானே பிச்சைக்கு வந்திருக்கும் போது, கொடுப்பதற்கு ஒன்று மில்லையே என ஏங்குகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்" என இறைஞ்சினார். ஆனால் சங்கரரோ, "அன்னையே! அடியேனுக்குக் கொடுக்க ஏதும் இல்லை எனக் கலங்க வேண்டாம். அன்னமிடவழி இல்லை என்றால் பரவாயில்லை. அன்னத்திற்குத் துணையாக இருக்கும் உண்ணக்கூடிய பொருள் எதுவானாலும், எவ்வளவு சிறிதளவேனும் அன்போடு தாருங்கள்" என வேண்டினார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்த தர்வசீலை அம்மையாருக்கு ஒன்றும் கிடைக்காமல் ஒரு பழைய பாத்திரத்தில் நெடுநாட்களுக்கு முன்பு செய்த நெல்லிக்காய் ஊருகாய் ஒன்று மீதமிருந்தது. அந்த நெல்லிக்காயை மிகுந்த மனத்தயக்கமுடன் மகான் சங்கரரின் பிச்சைப் பாத்திரத்தில் அம்மையார் இட்டார்.

இதனால் மனம் மகிழ்ந்த ஆதிசங்கரர், " அன்னையே! அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்காயைவிடச் சிறந்த பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது. இது என் தாயாருக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். அதிதிக்கு அளித்த இந்த உணவால் உங்களைப் பிடித்திருந்த வறுமை இன்றோடு அழிந்துவிட்டது. இனிமேல் உங்கள் கணவர் பிச்சைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை" எனக்கூறிவிட்டு, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமஹாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து இந்த "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஸ்ரீலட்சுமி தேவியாரை வழிப்பட்டார்.

உடனே தேவி, சங்கரர் முன் எழுந்தருளி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேரசம்பந்தைப் பெற்றனர். வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை, ஆசார அநுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப்பிடியில் சிக்கித்தவிக் கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலட்சுமி தேவி புலப்படுத்தினார். இருப்பினும் வறுமையிலும் திட மனதுடன் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலட்சுமி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோலப் பொழிந்தார். அது மட்டுமில்லாமல், இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உருதி மொழிந்தார்.

எனவே, நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால். நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.

பொன்மொழி பொழியச் செய்த அந்த கனகதாரா ஸ்தோத்திரங்களை ஒவ்வொன்றாக விளக்கவுரையுடன் பின்வருமாறு காண்போம்.

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்:-
  அங்கம் ஹரே:புனகபூஷன
      மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகலாபரணம்
      தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதி
      ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம
      மங்கல தேவதாயா: 1

மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.
  முக்தா முஹீர்விதததீ
      வதனே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி
      கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ
      மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது
      ஸாகர ஸம்பவாயா: 2

ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.
  ஆமீலிதாட்ச மதிகம்ய
      முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ
      மனங்கதந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக
      பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம
      பூஜங்க சயாங்கனாயா 3

ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.
  பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித
      கெளஸ்துபே யா
ஹாராவலீவஹரி நீலமயி
      விபாதி
காமப்ரதா பகவதோபி
      கடாட்ச மாலா
கல்யாண மாவஹதுமே
      கமலாலயாயா: 4

மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.
  காலாம்புதாலி லலிதோரஸி
      கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா
      தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம்
      மஹனீய மூர்த்தி
பத்ராணி மேதிசது
      பார்கவநந்தனாயா: 5

மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.
  ப்ராப்தம் பதம் ப்ரதமத:
      கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி
      மன் மதேன
மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்
      மந்தாலஸம் சமகராலய கன்யகாயா: 6

ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.
  விச்வாம ரேந்த்ர பதவீ
      ப்ரமதான தட்சம்
ஆனந்த ஹேதுரதிகம்
      முரவித்விஷோ அபி
ஈஷன் நிஷீ தது மயிக்ஷண
      மீக்ஷணார்த்தம்
இந்தீவரோதர ஸஹோதர
      மிந்திராயா 7

அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.
  இஷ்டா விசிஷ்ட மதயோபி
      யயா தயார்த்ர
திருஷ்ட்யாத்ரி விஷ்டப
      பதம் ஸ லபம் லபந்தே
திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர
      திப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட
      மம புஷ்கர விஷ்டராயா 8

எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.
  தத்யாத் தயானுபவனோ
      த்ரவிணாம் புதாராம்
அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க
      சிசெள விஷன்ணே
துஷ்கர்ம தர்மமபனீய
      சிராயதூரம்
நாராயண ப்ரணயனீ
      நயனாம் புவாஹ: 9

எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.
  கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
      சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய
      மேலிஷீ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரி புவனைக
      குரோஸ்தருண்யை! 10

திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.
  ஸ்ருத்யை நமோஸ்து
      சுபகர்ம பலப்ரஸீத்யை
ரத்யை நமோஸ்துரமணீய
      குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து
      சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து
      புருஷோத்தம வல்லபாயை 11

நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.
  நமோஸ்து நாலீக நிபானனாயை
      நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
      நமோஸ்து நாராயண வல்லபாயை: 12

பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.
  நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை
      நமோஸ்து பூ மண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
      நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.
  நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை
      நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
      நமோஸ்து தாமோதர வல்லபாயை 14

சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.
  நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை
      நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
      நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15

சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.
  ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய
      நந்தனானி
ஸாம்ராஜ்யதான
      விபவானி ஸரோருஹாணி
த்வத் வந்தனானி துரிதா
      ஹரணோத்யதானி
மாமேவ மாதரனிசம்
      கலயந்து மான்யே 16

எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.
  யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
      ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
ஸந்தனோதி வசனாங்க மானஸை
      த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17

தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.
  ஸரஸிஜ நிலயே ஸரோஜ
      ஹஸ்தே
தவல தராம்சுக
      கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே
      மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி
      ப்ரஸீத மஹ்யம் 18

சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.
  திக்தஸ்திபி கனக கும்ப
      முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு
      ஜலாம்னு தாங்கீம
ப்ராதர் நமாமி ஜகதாம்
      ஜனனீம் அக்ஷே
லோகாதி நாதக்ரு ஹிணீம்
      அம்ருதாப்தி புத்ரீம் 19

பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.
  கமலே கமலாட்ச வல்லபேத்வம்
      கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
      ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20

எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.
  ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்
      த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குரிதர பாக்ய பாகினோ
      பவந்தி தே புவி புத பாவிதாசயா 21

மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்
.

ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திரம்

ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திரம்




 
அர்ச்சனை
  அர்சுத்தியான தியானந்தீம் த்ரீலோதனம்
ஹாரந்தீம் லக்ஷ்மீம் தேவி விதிந்தேம்


இது வேதத்தில் உள்ள அதி சூட்சுமமான ரகசியம்.
ஓம் ஸ்ரீ பார்வதி சரஸ்வதி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ விஷ்ணு ப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ கமலே விமலேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ காருண்ய நிலையேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தாரித்திர துக்க சமனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஸ்ரீதேவி நித்ய கல்யாணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சமுத்திரா தனயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ வீர லக்ஷ்மி, விஸ்வ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ மோக மந்த்ரீ மந்த்ர ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ மஹிசாசுர சம்கர்த்தீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ வைகுண்ட ஹிருதய வாசே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ பக்ஷ்சேந்திர வாகனே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ தான்ய ரூபே, தான்ய லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ரூபே ஸ்வர்ண லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ வித்ய ரூபே வித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஹரிப்ரியே வேத ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ பல ரூபே பல ஹாத்திரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ நிஷ் குல்லே நிர்மலே நித்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ரத்ன ரூபே ரத்ன லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சீதரூபே சீதா லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ வேத ரூபியே நாத ரூபியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ பிராண ரூபே பிராண மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ பிராணமானந்த மகஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ பிரம்ம ரூபியே பிரம்ம தாத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஜாத வேத சொரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஆதார ஹர்ஸ நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஸூஸ்மாந்த்ரா சுசிலாந்தஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ யோகானந்த பிரதாயின்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ செளந்தரியே ரூபிணி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி சித்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத் ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ துசிதே புசிதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ராஜ ராஜார்த்திய பதயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சார சொரூபே திவ் யாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ தாரித்திர திவ்ய சுத்தாக்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ வேத குஹே சுபே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ தர்மார்த்த காம ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ மோட்ச சாம்ராஜ்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சர்வகமே சர்வ ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ மோகினி மோக ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ பஞ்ச பூதாந்திரஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ நாராயண ப்யதமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ காருணி கார்ய ரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஆனந்த சர்ப்ப சயனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ லோகைக ஜனனீ வந்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சம்பு ரூபே சம்பு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரூபே ப்ரம்ம முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபே விஷ்ணு மாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஆக்ஞ்யா சக்ராப்த்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஆகார ரேக சக்ராம்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஹிருதய பூஜ தீபாத்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஆதார மூல நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ப்ரம்ம கிரந்தி பிரகாசாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ குண்டலினி சயனா நந்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஜீவாத்மா ரூபிணி மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஸ்தூல சூசும பிரகாஸ் சித்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ப்ரம்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ அஸ்வத்தா ப்ரஷ சந்துஷ்டே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ காரிண்ய பூர்ணே ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ மூர்த்தித்தியே சொருபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சூர்ய ப்ரகாச ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சந்திர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ வஹி மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ பீதாம்பர தர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ திவ்ய ஆபரண சோபாடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ப்ராமண ஆராதனா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ நரசிம்ஹக்ரவா சிந்தோ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ வரதே மங்களே மன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ பட் மாடவி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ வியாசாதி திவ்ய சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஜெய லக்ஷ்மி சித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ராஜ்ய முத்ரே விஷ்ணு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சர்வார்த்த சாதகி நித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஹனுமன் பக்தி சந்துஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ மகநீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ரதி ரூபே ரம்ய ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ காமத்மி காம ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சுதா பூர்ணே சுதா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ இந்திர வன்யே தேவ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ தர்ம ராஜ சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ரட்சோவர புரி லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ரத்னாகர ப்ரபாகரமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ மருது புர மஹானந்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ குபேர லக்ஷ்மி மாதாங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஈசான லக்ஷ்மி சர்வேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ப்ரம்ம பீடே மஹா பீடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ மாயா பீடஸ்திதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சக்ர வாசினி கன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ அஷ்ட பைரவ சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ அஸ்திதானந்த பூரி நாதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சித்த லட்சுமி மஹா வித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ புத்தீந்திராதி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ லோக தாரித்ர சமனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ மிருத்யூ சந்தாப நாசினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ பதி ப்ரியே பதி விரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சதுர் புஜே கோமாளங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ பட்ச ரூபே முக்தி தாத்நீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஜனா நந்த மயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ பக்தி ப்ரியே பக்தி கமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமே ராமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ராம நாம ப்ரிய தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ கங்காப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ விஷ்வ பர்த்தி விஷ்வ மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரியே க்ருஷ்ணரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ கீத ரூபியே ராக மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சாவித்ரீ பூத சாவித்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ காயத்ரீ ப்ரம்ம காயத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ப்ரம்மே சரஸ்வதி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சுகாலினி சுத்தாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர ஹமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ அஃஞாதரி ப்ருக்ஞானே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ வேதாந்த வன சாராங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ நாதாந்த ரஷ புயஸ்ஸே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ திவ்ய சக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ந்ருத்த புரியே நிருத்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ சதுர் சஷ்டி கலா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ திவ்ய சுந்தாகரங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ முக்திதே முக்தி தேகஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ யக்ஞ சாரார்த்த சுத்தாக்னீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ அஷ்ட லஷ்மியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள சம்பூர்ணே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி

ஸ்ரீ சரஸ்வதி அஸ்டோத்திரம்

ஸ்ரீ சரஸ்வதி அஸ்டோத்திரம்

          ஓம் ஸரஸ்வத்யை நமஹ ஓம் மஹாபத்ராயை நமஹ ஓம் மஹாமாயாயை நமஹ ஓம் வரப்ரதாயை நமஹ ஓம் ஸ்ரீப்ரதாயை நமஹ ஓம் பத்மநிலயாயை நமஹ
ஓம் பத்மாக்ஷ்யை நமஹ ஓம் பத்ம வக்த்ராயை நமஹ ஓம் சிவானுஜாயை நமஹ ஓம் புஸ்தகப்ருதே நமஹ ஓம் ஜ்ஞாந முத்ராயை நமஹ ஓம் ரமாயை நமஹ ஓம் பராயை நமஹ ஓம் காமரூபாயை நமஹ ஓம் மஹாவித்யாயை நமஹ ஓம் மஹாபாதக நாசின்யை நமஹ ஓம் மஹாச்ரயாயை நமஹ ஓம் மாலிந்யை நமஹ ஓம் மஹாபோகாயை நமஹ ஓம் மஹாபுஜாயை நமஹ ஓம் மஹாபாகாயை நமஹ ஓம் மஹோத்ஸாஹாயை நமஹ ஓம் திவ்யாங்காயை நமஹ ஒம் ஸூரவந்திதாயை நமஹ ஓம் மஹாகாள்யை நமஹ ஓம் மஹாபாஷாயை நமஹ ஓம் மஹாகாராயை நமஹ ஓம் மஹாங்குஸாயை நமஹ ஓம் பீதாயை நமஹ ஓம் விமலாயை நமஹ ஓம் விஸ்வாயை நமஹ ஓம் வித்யுந்மாலாயை நமஹ ஓம் வைஷ்ணவ்யை நமஹ ஓம் சந்த்ரிகாயை நமஹ ஓம் சந்த்ரவதநாய நமஹ ஓம் சந்த்ரலோகா விபூஷிதாயை நமஹ ஓம் ஸாவித்ர்யை நமஹ ஓம் ஸூரஸாயை நமஹ ஓம் தேவ்யை நமஹ ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நமஹ ஓம் வாக்தேவ்யை நமஹ ஓம் வஸூதாயை நமஹ ஓம் தீவ்ராயை நமஹ ஓம் மஹாபத்ராயை நமஹ ஓம் மஹாபலாயை நமஹ ஓம் போகதாயை நமஹ ஓம் பாரத்யை நமஹ ஓம் பாமாயை நமஹ ஓம் கோவிந்தாயை நமஹ ஓம் கோமத்யை நமஹ ஓம் சிவாயை நமஹ ஓம் ஜடிலாயை நமஹ ஓம் விந்த்யவாஸாயை நமஹ ஓம் விந்த்யாசலவிராஜிதாயை நமஹ ஓம் சண்டிகாயை நமஹ ஓம் வைஷ்ணவ்யை நமஹ ஓம் ப்ராஹ்மீயை நமஹ ஓம் ப்ரஹ்மஜ்ஞாஸாதநாயை நமஹ ஓம் ஸூதாமூர்த்யை நமஹ ஓம் ஸூபத்ராயை நமஹ ஓம் ஸெளதாமன்யை நமஹ ஓம் ஸூரபூஜிதாயை நமஹ ஓம் ஸூவாஸின்யை நமஹ ஓம் ஸூநாஸாயை நமஹ ஓம் விந்த்ராயை நமஹ ஓம் பத்மலோசனாயை நமஹ ஓம் வித்யாரூபாயை நமஹ ஓம் விசாலாக்ஷ்யை நமஹ ஓம் ப்ரம்ஹஜாயாயை நமஹ ஓம் மஹாபலாயை நமஹ ஓம் த்ரயீமூர்த்யே நமஹ ஓம் த்ரிகாலஜ்ஞாயை நமஹ ஓம் த்ரிகுணாயை நமஹ ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நமஹ ஓம் கம்பாஸூரப்ரமதிந்மையை நமஹ ஓம் சுபதாயை நமஹ ஓம் ஸ்வராத்மிகாயை நமஹ ஓம் ரக்த பீஜ நிஹந்த்ர்யை நமஹ ஓம் சாமுண்டாயை நமஹ ஓம் அம்பிகாயை நமஹ ஓம் முண்டகாயப்ரஹரணாயை நமஹ ஓம் தூம்ரலோசன மர்தனாயை நமஹ ஓம் ஸர்வதேவ ஸ்துதாயை நமஹ ஓம் ஸெளம்யாயை நமஹ ஓம் ஸீராஸீர நமஸ்க்ருதாயை நமஹ ஓம் காளராத்ர்யை நமஹ ஓம் கலாதாராயை நமஹ ஓம் ரூபஸெள பாக்யதாயின்யை நமஹ ஓம் வாக்தேவ்யை நமஹ ஓம் வராரோஹாயை நமஹ ஓம் வாராஹ்யை நமஹ ஓம் வாரிஜாஸனாயை நமஹ ஓம் சித்ராம்பராயை நமஹ ஓம் சித்ரகந்தாயை நமஹ ஓம் சித்ரமால்ய விபூஷிதாயை நமஹ ஓம் காந்தாயை நமஹ ஓம் காமப்ரதாயை நமஹ ஓம் வித்யாயை நமஹ ஓம் வித்யாதர ஸுபூஜிதாயை நமஹ ஓம் ஸ்வேதாநநாயை நமஹ ஓம் நீலபுஜாயை நமஹ ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நமஹ ஓம் சதுராநநஸாம் ராஜ்யாயை நமஹ ஓம் ரக்தமத்யாயை நமஹ ஓம் நிரஞ்ஜனாயை நமஹ ஓம் ஹம்ஸாஸனாயை நமஹ ஓம் நீலஜங்க்காயை நமஹ ஓம் பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நமஹ ஓம் துர்காலஷ்மி ஸரஸ்வதீப்யோ நமஹ ஓம் நானாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி!

ஆதிசங்கரர் அருளிய ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்

ஆதிசங்கரர் அருளிய ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்


      ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி - 1

ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் - 2 

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்
மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோகபா லம் - 3

யதா ஸந்நிதானம் கதாமானவா மே
பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் - 4

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத ஸந்நிதெள ஸேவதாம் மே
இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் - 5

கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா
இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து - 6

மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் - 7

லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸுமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே
ஸமுத்யஸ் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம் - 8

ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே
மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே - 9

ஸுவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் - 10.

புளிந்தேச கன்யாக நாபோக துங்க
ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீரராகம்
நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர
ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் - 11

விதெளக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தே பசுண்டான் த்விஷத்காலதண்டான்
ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண செளண்டான்
ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் - 12

ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா
ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் - 13

ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்
கடாக்ஷரவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி
ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ
தவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி - 14

விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணேஷு
மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்
பவேத்தே தயாசீல கா நாமஹானி - 15

ஸுதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்
ஜகத்பாரப்ருத்யோ ஜகந்நாத தேப்ய
கிர£டோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய - 16

ஸ்புரத்ரத் ன கேயூரஹாராபிராம ..
ஸ்சலத் குண்டல ச்ரூலஸத் கண்டபாக
கடெள பீதவாஸா கரே சாருசக்தி
புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ - 17

இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா
ஹவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்
ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் - 18

குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா
பதே சக்தி பாணே மயூரா திரூட
புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் - 19

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் - 20

க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷுகோபா
த்தஹச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு
மயூரம் ஸமாருஹ்ய மா¨பரிதி த்வம்
புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் - 21

ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம்
நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே
நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷர - 22

ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா
ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி - 23

அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே
பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம் - 24

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே - 25

த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா - 26

முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே - 27

களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா
நரோவாத நாரீக்ருஹே யே மதீயா
யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார - 28

ம்ருகா பக்ஷிணோ தம்சகாயே சதுஷ்டா
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா ஸுதூரே
விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல - 29

ஜநித்ரீபிதாச ஸ்வபுத்ரா பராதம்
ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத
அஹம் சாதிபாலோ பவான் லோக தாத
க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச - 30

நம கேகினே சக்தயே சாபி துப்யம்
நமச்சாக துப்யம் நம குக்குடாய
நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து - 31

ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே
ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ
ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ - 32

புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய
படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய
ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்
லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ.

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸஹஸ்ர நாமாவளி

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸஹஸ்ர நாமாவளி

    1. ஓம் அசிந்த்யஸக்தயே நம:
2. ஓம் அநகாய நம:
3. ஓம் அக்ஷோப்யாய நம:
4. ஓம் அபராஜிதாய நம:
5. ஓம் அநாதவத்ஸலாய நம:
6. ஓம் அமோகாய நம:
7. ஓம் அஸோகாய நம:
8. ஓம் அஜராய நம:
9. ஓம் அபயாய நம:
10. ஓம் அத்யுதாராய நம:

11. ஓம் அகஹராய நம:
12. ஓம் அக்ரகண்யாய நம:
13. ஓம் அத்ரிஜாஸுதாய நம:
14. ஓம் அநந்தமஹிம்நே நம:
15. ஓம் அபாராய நம:
16. ஓம் அநந்தஸௌக்யப்ரதாய நம:
17. ஓம் அவ்யயாய நம:
18. ஓம் அநந்தமோக்ஷதாய நம:
19. ஓம் அநாதயே நம:
20. ஓம் அப்ரமேயாய நம:

வாழ்வில் ஏற்றம் தரும் நந்தி ஸ்லோகம்

வாழ்வில் ஏற்றம் தரும் நந்தி ஸ்லோகம்


தருமத்தின் வடிவமாய் திகழும் நந்திதேவர் பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். பிரமன், இந்திரன், திருமால் மற்றும் முனிவர்களால் போற்றி துதிக்கப்படுபவர். நந்தி தேவரிடம் கீழ்க்கண்ட சுலோகத்தை பக்தியுடனும், வணக்கத்துடனும் கூறி செல்லும் போது அளவிலாது மகிழ்வு கொண்டு அருள்வார். 

நந்திகேசி மஹாயாக 
சிவதயா நபராயண கௌரீ 
சங்கரஸேவர்த்தம் 
அனுக்ராம் தாதுமாஹஸ!! 

என்று போற்றிய பிறகே, சிவனை வழிபடுதல் வேண்டும். 

பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

)
     ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக| 
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய|| 

- பிரதோஷ காலத்தில் இந்த ஸ்லோகத்தை 18 முறை காலை, மாலை - இருவேளையும் பாராயணம் செய்து வந்தால் சிவன் அருள் கிட்டி நினைத்தது நிறைவேறும்

அம்பிகை தியான சுலோகம்

அம்பிகை தியான சுலோகம்

       பூரணி புராதனி சுமங்கலை சுந்தரி  புராந்தகி த்ரியம்பகி எழில் 
புங்கவி விளங்குசிவ சங்கரி சுகஸ்ரதள 
புஷ்பமிசை வீற்றிருக்கும் 
நாரணி மனதீத நாயகி குணாதீத 
நாதாந்த சக்தி என்றுன் 
நாமமே உச்சரித்திடுமடியர் நாமமே 
நானுச்ச ரிக்வசமோ 
ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப் புகழ் 
அகிலாண்ட கோடி ஈன்ற 
அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும் 
ஆனந்த ரூப மயிலே 
வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ் 
வளமருவு தேவை அரசே 
வரை ராஜனுக்கிருகண் மணியாய் உதித்தமலை 
வளர்காத லிப்பெண் உமையே 
ஓம்கார பஞ்சரசுகீம் 
உபநிஷத் துத்யான கேளிகலகண்டீம் 
ஆகமவிபின மயூரீம் 
ஆர்யாமந்தர்விபாவயேத் கௌரீம்

கேட்ட வரம் தரும் காளிகா தேவி ஸ்லோகம்

கேட்ட வரம் தரும் காளிகா தேவி ஸ்லோகம்

   ஓம் காளிகாயை ச வித்மஹே  ஸ்மசான வாசின்யை தீமஹி 
தன்னோ கோரா ப்ரசோதயாத் 

- இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் கேட்ட வரத்தை அளிப்பால் காளிகா தேவி.

சூலினி துர்காவின் மந்திர

சூலினி துர்காவின் மந்திரம்

       ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்  ஜ்வல ஜ்வல சூலினிதுஷ்ட 
க்ரஹ ஸும் பட் ஸ்வாஹா 

இந்த ஸ்லோகத்தை பெண்கள் தினமும் சொல்லி வந்தால் வாழ்க்கையில் எல்லா விதமான நன்மைகளையும் பெறலாம்

லட்சுமி கடாட்சம் தரும் ஸ்ரீசக்கரம்

லட்சுமி கடாட்சம் தரும் ஸ்ரீசக்கரம்

     
நான் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு 

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி 
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி 
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி 
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி 
சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய 
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய 
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு 
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ 
பாஹிமாம்  ஸ்ரீதேவி துப்யம் நமஹ 
பாஹிமாம்  ஸ்ரீதேவி துப்யம் நமஹ

மாங்கல்ய பிராப்தம் கிடைக்க கன்னிகா பரமேஸ்வரி ஸ்லோகம்

மாங்கல்ய பிராப்தம் கிடைக்க கன்னிகா பரமேஸ்வரி ஸ்லோகம்

   ஓம் பாலாரூபிணி வித்மஹே  பரமேஸ்வரி தீமஹி 
தன்னோ கந்யா ப்ரசோதயாத் 
ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே 
கந்யாரூபிணீ தீமஹி 
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

வேங்கடாசலபதி துதிப்பாடல்

வேங்கடாசலபதி துதிப்பாடல்

வேங்கடாசலபதி துதிப்பாடல்     அலர்மேல் மங்கை யுறைமார் பனே அ மரர்க்கு அரசே
நிலமேல் மாமலை யில் நின்று எல்லோர்க்கும் அருள்பவனே
பலகல் வியையளித் துபுலவராய்ஆக் குபவனே
கலியு கவரத வாழ்க நீ வேங்க டவாஎம்மானே.

அமர ரும்நர ரும்முனி வரும் வணங்குபவரே
இமயோ ரும் புவி யோரும் வந்தென்றும் வணங்குபவரே
யமன்அசன் வந்துன்னை என்றும் மலரால் போற்றுபவரே
சமம்தரும் விருடகி ரீசவேங் கடவா எம்மானே.

வேத சப்த மஹிமை

வேத சப்த மஹிமை
நடமாடும் தெய்வம் பரமாசார்யாளின் எளிமையான விளக்கம்


த்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம். பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான். அவனுக்கு வேதம் தெரியாது. ’என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த கோஷ்டி. இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே’ என்று கூறினானாம். இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது.

நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம். வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது, "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்

அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார். ’இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்" என்று கூறினார். அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணமுணத்துக் கொண்டே போனான். இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. "ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணமுணத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?" என்றான் அந்த பிராம்மணன்.

நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார். "அவன் என்ன முணமுணத்தான் என்று தெரியுமா?" என்று. "அது காதில் விழவில்லை. ஆனால் முணமுணத்ததுகாதில் நன்றாக விழுந்தது" என்றான் பிராம்மணன். "அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணமுணப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணமுணப்பு சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால், வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணமுணப்பு, அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகய உயர்ந்த ரியாக்ஷன் ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை போலிருக்கு" என்று சொன்னார்.

சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை, ஆசார்யாள் சொல்லுகிறமாதிரி யார் நமக்கு மனதில் பதியும்படி சொல்லமுடியப்போகிறது!

அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை இகழ்ந்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், அவனுக்கும், அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, அதுதான் "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணம்.

அந்த பரமாசார்யாளின் பாததூளி பாக்யம் எத்துணை உயர்ந்ததாக இருக்கும் என்று கூறவும் வேண்டுமோ?
ஓஷோ என்ன சொல்றார் தெரியுமா ?

" நீ பிறந்த பொது மௌனத்தை தான் உலகத்துக்கு கொண்டு வந்தாய் . மொழி உனக்கு தரப்பட்டது .சமூகத்துடன் பழகுவதற்கு அது ஓர் அன்பளிப்பு . அது ஓர் கருவி . அது ஓர் சாதனம் . ஆனால் மௌனம் இந்த உலகத்துக்கு நீ கொண்டு வந்தது . அந்த மௌனத்தை நீ மீண்டும் அடைய முயற்சி செய் .... அதுதான் நீ மீண்டும் குழந்தை ஆவதற்கு வழி....

மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா ? உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள் . அந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள் கற்று கொள்ள வேண்டிய மொழி மௌனம் . இதுதான் மகான்கள் தங்கள் அனுபவத்தில் உணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிற உண்மை . இதை பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியது நமது கடமை .
------------------------------------------------------
நம்ம ஆள் ஒருத்தர் கடவுளை பார்க்கணும்னு ஆசைப்பட்டார்

நான் உங்களுக்கு கடவுளை காட்றேன்னு சொன்னங்க அவங்க மனைவி .

நாலு நாள் பட்டினி போட்டாங்க ...கணவனுக்கு சாப்பாடே கிடையாது

அஞ்சாவது நாள் அவரை உக்கார வச்சி இலையை போட்டு சாப்பாடு போட்டாங்க ... பட்டினி கிடந்தவர் சாப்பாட்டை பார்த்தார் .

" நான் கடவுளை பார்த்திட்டேன் ! னு கத்தினார் .

எங்கே ? ன்னாங்க அந்த அம்மா .

"இதோ இந்த சாப்பாடு தான் இப்ப எனக்கு கடவுள் !" அப்படின்னு சொல்லிபுட்டு அவசர அவசரமா சாப்பிட ஆரம்பிச்சார் அவர்

சர்வம்சிவமயம் அம்பாள்

சர்வம்சிவமயம்

அம்பாள்

     விநாயகனைச் சிவப்பரம் பொருளின் மூத்த மகன் என்றும் முருகனை அப்பரம்பொருளின் இளைய மகன் என்றும் கூறுவதுபோல் அம்பாளை அல்லது சக்தியை அப்பரம்பொருளின் மனைவி என்று சிலர் உண்மை அறியாமல் கூறுவர். அம்மை அல்லது அம்பாள் என்கின்ற வடிவம் சிவப்பரம்பொருளின் மனைவியோ அல்லது விநாயகன் முருகன் என்ற கடவுளர்களுக்கு அன்னையோ அல்ல.

    எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவம் என்கின்ற பரம்பொருள் ஓசை வடிவம் தாங்கி வந்த போது விநாயகர் என்றும் அறிவு வடிவம் தாங்கி வந்தபோது முருகன் என்றும் அழைக்கப்படுவதாய் அறிவோம். அதைப்போன்றுதான் தன் சிறப்பு நிலையில் உண்மை, அறிவு, இன்ப வடிவாய் இருக்கின்ற பரம்பொருள் பொதுநிலைக்கு உயிர்களுக்கு அருள்புரிவதற்காக எடுத்த இன்னொரு  வடிவம் அம்பாள் வடிவம்.

     தமிழர்களைப்போன்று பெண்களுக்கு உயரிய இடத்தைக் கொடுத்த பெருமை வேறு யாருக்கும் கிடையாது. தமிழர்கள், கங்கை, யமுனை, காவிரி, சரசுவதி என்று ஆறுகளுக்கெல்லாம் பெண்களின் பெயர்களைக் கொடுத்தார்கள். பிறந்த மண்ணுக்குத் தாய் நாடு என்று சொன்னார்கள். ஈன்ற தாய் பேசும் மொழியைத் தாய்மொழி என்றார்கள். அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததுபோல பரம்பொருளின் ஆற்றலுக்கு, பலத்திற்கு, சக்திக்கு, அருளுக்கு அம்மை, அம்பாள் என்று பெண்வடிவம் கொடுத்திருக்கிறார்கள் தனித்தன்மை வாய்ந்த தமிழர்கள்.
சிவப்பரம்பொருள் தன் இயற்கையான நிலையிலிருந்து முதலில் தன் அருளை வெளிப்படுத்தியே பின்பு ஓசையாகவும் ஒளியாகவும் முதலில் தன் அருளை வந்து நமக்கு அருள் பாலிக்கின்றது என்பதனைச் சைவ நூல்கள் கூறும்.

    அப்படி இறைவனிடமிருந்து வெளிப்படும் அருள் ஒரு நல்ல அம்மாவைப் போன்று கருணையே வடிவாய் இருந்ததினாலே அவ்வருளுக்கும், ஆற்றலுக்கு, சக்திக்கு அம்மை அல்லது அம்பாள் என்று பெயரிட்டு வழிபட்டனர் நம் முன்னோர். அவ்வருளுக்குப் பெண் வடிவமும் கொடுத்தனர். இதனாலேயே மணிவாசகப் பெருமான் இறைவன் திருவருளை, “பால் நினந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என்று இறைவன் திருவருளை தாயினுக்கு ஒப்பிடுவார். “அருளது அரன் தனக்குச் சக்தியாகும்” என்று சாத்திர நூல்கள் குறிப்பிடும்.

     இறைவன் அன்பு என்றால் அவன் ஆற்றல் அருள். இறைவன் சுடர் என்றால் அவன் அருள் அச்சுடரின்  வெம்மை ஆகும். எனவே இறைவனின் திருவருள் அல்லது அம்பாள் என்பது இறைவனின் ஒரு கூறே தவிர வேறு ஒருபொருள் அல்ல.
நாம் நினைப்பதுபோல இறைவனும் இறைவியும் வேறு அல்ல! அவை ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரியாதவை. எனவேதான் சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவமில்லை என்ற வழக்கு  உண்டாயிற்று. சிவத்திற்கும் சக்திக்கும் இல்லறத்தில் வருவதுபோல், கணவன் மனைவிக்கு இடையில் சண்டைகள் வருவதுபோல் சண்டைகள் வருவதில்லை. சிவப்பரம்பொருளின் எண்ணப்படி அதன் திருவருள் செயல்களை நிகழ்த்தும். அதனாலேயே, “எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்” என்று சாத்திர நூலான சிவஞானசித்தியார் குறிப்பிடும்.

        அம்பாள் எனப்படுபவள் தத்துவமாகவும், பாமர மக்கள் விளங்கிக் கொள்ளவுமே இவ்வாறு மனைவியாகவும், மகளாகவும், தாயாகவும் இறைவனுக்குச் சொல்லப்படுகிறாள் என்பதைத் திருமூலர் பின்வருமாறு அழகாகக் குறிப்பிடுவார். “அரனுக்கு மனோன்மனி தாயும், அரனுக்கு மனோன்மனி மகளும், அரனுக்கு மனோன்மனி நல்தாரமுமாமே”. மேலும் தாரமும் ஆகுவாள் தத்துவமாய் நிற்பாள், காரண காரியம் ஆகும் கலப்பினள்” என்றும் குறிப்பிடுவார். எனவே நம்மில் பலர் நினைப்பது போல் அம்பாள் எனப்படுபவள் இறைவனுக்குத் தாயோ, மனைவியோ கிடையாது. அம்பாளாகப்பட்டவள் சிவப்பரம்பொருளான இறைவருடன் மேலுலகத்தில் இல்லறமும் நடத்தவில்லை. அடியார்களுக்காக அவ்வப்போது இறைவனும் அவர் திருவருளும் அம்மை அப்பராய்க் காட்சித் தந்து மறைவர்.

    உண்மை, அறிவு, இன்பமாய் இருக்கின்ற சிவப்பரம்பொருளின் திருவருளே சிவசக்தியாகவும், பராசக்தியாகவும், ஆதிபராசக்தியாகவும் உலகைப் படைத்து உயிர்களைச் செயல்படுத்த வருகின்றது. இப்படிச் சிவப்பரம்பொருளிலிருந்து வேறுபடாத திருவருளே பல்வேறு சக்தி வடிவங்களில் வருகின்றது. இதனை உணர்த்துவதே நவராத்திரிப் பண்டிகை. சிவப்பரம்பொருளின் ஆற்றல் அல்லது சக்தி அருள்திருவுருவாய் நவசக்திகளாய் வருகின்றது. இவற்றை மாணிக்கவாசகப் பெருமான் திருவெம்பாவையிருவ தமிழ் விரகர் திருஞானசம்பந்தப் பெருமான்,

“சினமலி கரியுரி செய்த சிவன்,
உறைதரு திருமிழலையை,
மிகு தனமனர் சிரபுர நகர் இறை,
தமிழ்விரகனது உரை ஒருபதும்
மனமகிழ்வோடு பயில்பவர்,
எழில்   மலர்மகள், கலைமகள், சயமகள்
இனமலி புகழ்மகள் இசைதர
இருநிலன் இடைஇனிது அமர்வரே”
– திருமுறை : 1 என்றும் குறிப்பிடுகின்றார். இதில் அவர் திருவீழிமிழலை எனும் தலத்திலுள்ள சிவப்பரம்பொருளைப் போற்றிப்பாடிய எம்பாடல்களைப் பாடினால் சரசுவதி, இலட்சுமி, உமை அல்லது துர்க்கை என்று சொல்லும் சக்திகளின் அருளைப் பெறுவர், காரணம் அவை சிவத்தின் திருவருள் என்று குறிப்பிடுகிறார்.

    மேலும் இறைவனின் திருவருளான அம்பாளானது ஒன்பது வகையில் நின்று செயலாற்றுகின்றது என்று சற்று விளக்கமாகச் சைவ சித்தாந்த  சாத்திர நூலான சிவஞானசித்தியார் கூறுகின்றது. அதாவது சிவப்பரம்பொருள் தன் சிறப்பு நிலையில் உண்மை அறிவு இன்பமாய் இருக்கின்றபோது சக்தியானது சிவத்தில் ஒடுங்கியதாயும் உருப்பெற்று வெளிப்படாதநிலையில் இருப்பதாயும் நான்கு நிலைகளில் பரமசிவம், பராசக்தி, நாதம் அல்லது ஓசை, விந்து அல்லது ஒளி என்ற நிலையில் இருக்கின்றது என்கிறது. பின்பு இறைவன் சதாசிவம் வடிவம் கொள்ளும்போது அவனது சக்தி மனோன்மனியாகவும், இறைவன் மகேசுவர வடிவம் கொள்கின்றபோது மகேசுவரியாகவும், இறைவன் உருத்திரன் வடிவம் கொள்கின்றபோது உமையாகவும், இறைவன் திருமால் வடிவம் கொள்கின்றபோது திருமகளாகவும், இறைவன் பிரமனின் வடிவம் கொள்கின்ற போது சரசுவதியாகவும் நம்மிடம் வந்து அருள்பாலிக்கின்றது என்று கூறுகிறது.

 “சக்தியாய் விந்து சக்தியாய் மனோன்மனி தானாகி
ஏத்துறு மகேசையாகி உமை திரு வாணியாகி
வைத்துறும் சிவாஆதிக்கு இங்ஙன் வரும்சக்தி ஒருத்தியாகும்
ஏத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்”
– சிவஞானசித்தியார்.

        இப்பாடல்வழி நமக்குக் கிடைக்கக்கூடிய செய்தி என்னவெனில் சிவப்பரம்பொருளின் ஆற்றலாய் இருக்கக் கூடிய அவ்வொரு சக்தியே வெவ்வேறு வடிவங்களில் வருகின்றது என்கின்ற உண்மைதான். இறைவரும் அந்த அந்த தொழிலுக்கும் இயல்புக்கும் ஏற்ப வெவ்வேறு பெயர்களைக்  கொள்கிறார். இதையறியாமல் நம்மில் பலர் நமக்குப் பல கடவுள்கள் பல சக்திகள், பல ஆண் தெய்வங்கள் பல பெண் தெய்வங்கள் என்று மயங்குகின்றனர்.
இப்படி உண்மை, அறிவு, இன்பமாய் இருக்கும் கடவுளின் அருளைச் சக்தியைப் பாமரரும் புரிந்து கொள்ள பல புராணங்களை நம் முன்னோர் இயற்றினர்.

     இதில் சைவநெறிக்கு முரணானதை நாம் ஏற்றுக்கொண்டோமானால் பல குழப்பங்கள் ஏற்படும். அம்பாளுக்குத் தருகின்ற பல பெயர்களும் அச்சக்தியின் இயல்பை ஒட்டியேயாகும். திருவருளைப் போர்க்களத்தில் துர்க்கை எனவும், சினமிகுந்த கோலமாய் காளி என்றும் அனைத்துச் செல்வங்களை வழங்குகின்றபோது பவானி என்றும், புவனத்திற்கு அரசியாக புவனேஸ்வரி என்றும், அகிலத்திற்கு அரசியாய் அகிலாண்டேசுவரி என்றும், எல்லா உலகங்களுக்கும் பேரரசியாய் இராசராசேசுவரி என்றும், செகத்திற்கு ஈஸ்வரியாய் செகதீசுவரி என்றும், ஓம்கார பிரணவமாய் ஓங்காரி என்றும் ஆங்காரம் உடையவளாய் ஆங்காரி என்றும் அழகுமிக்கவளாய் சிங்காரி என்றும் சுந்தரம் மிக்கவளாய்ச் சுந்தரி என்றும் பலவாகக் கூறுகிறோம்.

        சிவப்பரம்பொருளின் அருள்நோக்கமே அம்பாள் என்பதனால் அவளின் கண்ணைக் குறித்து மீனைப்போன்ற கண்களை உடையவளாக மீனாட்சி என்றும் விசாலமான கண்களை உடையவளாக விசாலாட்சி என்றும் சிவனைக் காமிக்கின்ற கண்களை உடையவளாக சிவகாமி என்றும் ஏகம்பநாதரை காதல் கொள்வதினால் காஞ்சியில் காமாட்சி என்றும் அவளின் திருவருள் வடிவங்களில் சிலவற்றைக் கூறுவோம்.

     நம்முன்னோர்கள் உழவுத் தொழிலில் மழை அல்லது மாரியை நம்பி வாழ்ந்ததினால் இறைவன் திருவருளை மழையாகவே பார்த்தனர். எனவே அச்சிவப் பரம்பொருளின் பெண்வடிவம் கொடுக்கப்பட்டத் திருவருளை மாரி அல்லது மாரியம்மா என்று வழங்கினார்கள். மழை முத்து முத்தாகப் பெய்வதனால் முத்துமாரியம்மா என்றார்கள். கருமேகம் திரண்டு மழை பெய்வதனாலும் உயிர்களுக்குச் சதா அருள் வழங்குவதற்கு அருளைச் சூழ் போல் கருவாகக் கொண்டிருப்பதனால் கருமாரியம்மன் என்று சொன்னார்கள். இறைவன் திருவருள் நிறைந்திருக்கின்ற கோயில் மூலட்டானத்தையும் நாம் கருவறை என்று சொல்வதன் வழி இதனைப் புரிந்து கொள்ளலாம்.

     இறைவனைத் தந்தையாகவும் அவன் திருவருளைத் தாயாகவும் கொண்டு காணுகின்றபோது உயிர்கள் இன்னும் நெருக்கமாக உறவுகொண்டு பக்தி செலுத்த வாயில் இருக்கின்றது என்பதனாலேயே நம் முன்னோர்கள் இப்படியெல்லாம் சொல்லி வைத்தார்கள். சிவப்பரம்பொருளை அடைவதற்கு முதலில் அவரின் திருவருளை நாட வேண்டும் என்பதனால் தான் நாவுக்கரசு சுவாமிகளும், “தாயும் நீயே தந்தை நீயே” என்பார். சிவப்பரம்பொருளும் அவன் திருவருளான அம்பாளும் வேறல்ல என்று காட்டத்தான் அம்பாளுக்கும் இறைவனின் திருக்கோலத்திலிருக்கின்ற உடுக்கை, சூலம், மான், மழு, திருநீறு, நிலவு போன்றவை எல்லாம் அமைக்கப் பெற்றிருக்கும்.

     இதைத்தான் மாணிக்கவாசக சுவாமிகள் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” என்றார். வள்ளற்பெருமான், “தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம், அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்” என்றார். இதனால்தான் இறைவன் திருமேனியில் இறைவி சரிபாதியாய் இருக்கின்றாள் என்று அருளாளர்கள் அம்பாளை அல்லது இறைவனின் திருவருளைப் பிரித்து பார்க்க முடியாது பாடினார்கள்.

    இதுவரை பார்த்தவற்றில் அம்பாள் என்பது சிவம் என்கின்ற பரம்பொருளின் அருள் வடிவம். அது அப்பரம்பொருளின் அன்னையோ மனைவியோ அல்ல. அவ்வருள் ஒருபோதும் உண்மை, அறிவு, இன்பமாய் இருக்கின்ற சிவம் என்கின்ற பரம்பொருளுக்கு வேறுபட்டோ அல்லது மாறுபட்டோ இருக்காது என்பதனை 

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம்

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம்

பொதுவாக ஆஞ்சநேயர் படம் வீட்டில் வைக்க கூடாது என்று சொல்லுவார்கள் .

குருநாதர் ( சாய்பாபா உபாசகர் ) சொன்ன தகவல்

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம் வீட்டில் வைக்கலாம்

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம் வீட்டில் இருந்தாலே தீய சக்திகள் , தீய விஷயங்கள் உள்ளே இருக்காது என்று கூறினார் .

வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபடலாம் மற்றும் பூஜிக்கலாம் எனவும் கூறினார்

ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்

ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம் 

ஷீரடி சாயிபாபாவின் காயத்ரி

ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
ஸர்வ தேவாய தீமஹி
தந்தோ ஸர்வப்ரசோதயாத்

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தந்நோ சாய் ப்ரசோதயாத்

ஷீரடி சாயிபாபாவின் த்யான ஸ்லோகம்

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி :

ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்

"ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி"

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா தியானச்செய்யுள்

சாயிநாதர் திருவடி

ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத் தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்த தளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வை யளிக்கும் திருவடியே

ஓம் சாய் ராம்

முருகன் சிலையின் சிறப்பு

முருகன் சிலையின் சிறப்பு

முருகன் சிலையின் சிறப்பு

முருகன் சிலையின்நாபாஷாணத்தல் வடிக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வமுருகனின் சிலை நவகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை பழுதுபட்டுள்ளது. சில காலங்களுக்கு முன் இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்பட்டது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் :பாரதப் போர் முடிந்தபின் தருமன் கண்ணனிடம் கேட்டான் ."கண்ணா, இவ்வளவு பாவங்களைப் புரிந்து இந்தப பாரதப் போரில் வெற்றிபெற்று நாட்டுக்கு மன்னனாகியுள்ளேனே. என் பாவங்களைப் போக்கிக் கொள்ள வழி சொல்."கண்ணனும் சொன்னான்."போர்க்களத்தில் கடும்போர் புரிந்து அம்பு பட்டு உத்தராயண புண்யகாலத்துக்காகக் காத்திருக்கிறாரே உன் தாத்தா பீஷ்மர்.அவரிடம்செல். அவர் வார்த்தைகளைக் கேள் பாவங்கள் விலக அவர் வழி சொல்வார்."என்றுகூறி தருமனை பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும்போர்க்களத்திற்கு அழைத்து வந்தான்.அங்கே பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறு இறைவனைத் துதித்துக் கொண்டிருந்தார்.அங்கே சென்ற தருமன் தன் பாவங்கள் தொலைய வழி கேட்டான். "அவனிடம் நீ செய்தவை பாவங்கள் என்றா எண்ணுகிறாய். இறைவனை உடன் வைத்துக் கொண்டிருக்கும் உனக்கு சந்தேகம் வரலாமா? அல்லது கண்ணன் உன் அருகிலிருப்பதால் அவன் இறைவன் என்ற எண்ணம் உனக்குத் தோன்றவில்லையா? என்று சொல்லி கண்ணனின் பெருமைகளைக் கூற ஆரம்பித்தார். அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமம் என்றாயிற்று. இந்த நாமத்தைச் சொன்னால் சகல பாவங்களும் தீரும் என்று அவர் வாக்கிலேயே கேட்டான் தருமன். அத்துடன் பீஷ்மர் கூறிய இந்த சஹஸ்ரநாமத்தைக் கண்ணன் பீஷ்மரின் அருகே அமர்ந்து கேட்டான்.ஒரு சுலோகம் "சங்க ப்ருந் நந்தகி சக்ரி சார்ங்க தன்வா கதாதரஹா"என்று பீஷ்மர் கூறியவுடன் கண்ணன் தன கைகளில் சங்கு, நந்தகி என்ற வாள், சக்கரம், சார்ங்கம் என்றவில், கதை என்ற ,பஞ்சாயுதங்களை ஏந்தி பீஷ்மருக்கு ஒரு போர்வீரனைப்போல்தரிசனம் கொடுத்தார்.அந்தவிஸ்வரூப தரிசனத்தைப் பார்த்தவாறே அந்த வீரன் தன உயிரை விட்டான். இது ஒரு உண்மையான க்ஷத்ரிய வீரனுக்கு அவனது இறுதிக்காலம் முடியும்போது அளிக்கும் இராணுவ மரியாதை என்பதை நாம் புரிந்து கொள்ளவே இந்தக் காட்சியைக் காட்டி பீஷ்மருக்கு அருள் புரிந்தான் கண்ணன்.
போரில் உயிர்நீத்த வீரனுக்கு மரியாதை செய்வதைக் கண்ணன் அன்றே நடத்திக் காட்டியுள்ளான்.

விருட்ச சாஸ்திரம்

விருட்ச சாஸ்திரம்

விருட்ச சாஸ்திரம் 
பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.

உங்கள் நட்சத்திரத்துக்கு உரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்...

அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும்.

சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக தலங்களில் , ஒரு கோவில் சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி,திருச்செந்தூர்,திரு குற்றாலம், திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை போன்ற) தென் மேற்குப் பகுதியில் சூரியக் கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.

அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவ தானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவ தானியங்களையும் அந்த மரக் கன்றுக்கு உரமாகப் போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும்.
அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.

கர்மவினைகளை வெற்றி கொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்...

விருட்ச சாஸ்திரம்

விருட்ச சாஸ்திரம்

விருட்ச சாஸ்திரம் 
பாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.

உங்கள் நட்சத்திரத்துக்கு உரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்...

அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும்.

சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக தலங்களில் , ஒரு கோவில் சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி,திருச்செந்தூர்,திரு குற்றாலம், திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை போன்ற) தென் மேற்குப் பகுதியில் சூரியக் கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.

அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவ தானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவ தானியங்களையும் அந்த மரக் கன்றுக்கு உரமாகப் போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.

அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத் துவங்கும்.
அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.

கர்மவினைகளை வெற்றி கொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:

அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு

கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை

திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்...

கோயிலுக்குச் செல்கிறபோது இறைவனின் அருளை வேண்டுகிறோம்

கோயிலுக்குச் செல்கிறபோது இறைவனின் அருளை வேண்டுகிறோம்



கோயிலுக்குச் செல்கிறபோது இறைவனின் அருளை வேண்டுகிறோம். அங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்குகிறோம். ஆனால் ஆலய அமைப்பு முறையில் ஓர்அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை.

கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். .

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

என்பது திருமூலர் அருட்பாடல்.

அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை 'க்ஷேத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்கிறது ஆகமச் சொற்றொடர்.

உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.

கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.

உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் போலக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான ஆறு நிலைகள் உள்ளன.

கருவறை சிரமெனப்பட்டது. அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி, இடச்செவி சண்டிகேசுவரர், புருவமத்தி லிங்கம், மூக்கு ஸ்தபந மண்டபம், வாய் ஸ்தபந மண்டப வாசல், கழுத்து நந்தி தலையின் உச்சி விமானம் என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது.

ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.

மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது நமது சாத்த்஢ரங்கள்.

கோயில் என்பதை கோஇஇல் எனப் பிரித்து 'கோ' என்றால் இறைவன். இல் என்றால் இருப்பிடம் என்கிறார்கள். ஆக, கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்றும் ஆலயம் என்பதை 'ஆ' ஆன்மா என்றும் லயம் சேருமிடம் என்றும் பொருள்படுகிறது.

மனிதனின் வடிவமாகச் சிவாலயத்தை ஒப்பிடும்போது (1) கருவறை இ தலை, (2) அர்த்த மண்டபம் இ கழுத்து, (3) மகா மண்டபம் இ மார்பு, (4) யாகசாலை இ நாடி, (5) கோபுரம் இ பாதம் என்றும் கூறுவர்.

அதே போல் (1) ஆலயம் - உடல், (2) கோபுரம் - வாய், (3) நந்தி - நாக்கு, (4) துவஜஸ்தம்பம் (கொடிமரம்) - உள்நாக்கு, (5) தீபங்கள் - பஞ்சேந்திரியங்கள், (6) கருவறை - இதயம், (7) சிவலிங்கம் - உயிர் என்றும் கூறுவர்.

கோபுரம் :

கோயில் வாசலில் அமைக்கப்படும் கோபுரமே மற்ற கோபுரங்களை விட உயரமாக இருக்கும்.இதற்கு ராஜகோபுரம் என்று பெயர்.நெடுந்தொலைவிலிருந்து பார்த்தாலே இது கம்பீரமாகத் தெரியும்.இதை ஒரு லிங்கமாக எண்ணி வணங்குவதும் உண்டு.இதனை ஸ்தூல லிங்கம் என்பது ஐதீகம். இதையும் தெய்வ உருவமாக எண்ணி வணங்குவது நம் வழக்கம்.'கோபுர தரிசனம் பாப விமோசனம்' என்பது பழமொழி.

கோபுரத்தில் தேவகணஙகள், தெய்வ உருவங்கள், பறவைகள், விலங்குகள், புராண, இதிகாசக்காட்சிகள், மனிதர்கள், தேவியர்கள், மெய்யடியார்கள் எனப் பலவகை சிற்பங்கள் இருக்கும். உலகில் பிரபஞ்ச அமைப்பில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு.சிற்றுயிர்கள், பேருயிர்கள், விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் எல்லோரும் பிரபஞ்சத்தில் உள்ளனர்.அதிலும் இது உண்டு இ இது எல்லை என்ற பாகுபாடே கிடையாது என்பதை அவை விளக்குகிறது.

ராஜகோபுரத்தின் மேல் நிலைகள் பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும்.அவை மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்பனவாகயிருக்கும். மூன்று நிலைகள் இ ஜாக்கிரத், ஸ்வப்பன, சுஷுப்தி என்பவற்றைக் குறிக்கும். ஐந்து நிலைகள் இ ஐம்பொறிகளைக் குறிக்கும்.ஏழு நிலைகள்இ ஐம்பொறிகளோடு மனம், புத்தி என இரண்டும் சேரும். ஒன்பது நிலைகள் இ அந்த ஏழினொடு சித்தம், அங்காரம் என இரண்டும் சேரும்.

பஞ்சேந்திரியங்களைக் கொண்டும் மனம், புத்தி முதலியவைகளைக் கொண்டும் புறவுலகை அறிகிறோம். புறவுலகை அறிகிற செயலை அப்படியே நிறுத்திவிட்டு, மனைத்துணையாகக் கொண்டு பரம்பொருளிடத்துப் பயணம் போக வேண்டும் என்கிற கோட்பாட்டையே ராஜகோபுர வாசல் பிரவேசம் நமக்கு உணர்த்துகிறது.

பலிபீடம் :

ராஜகோபுரத்தை அடுத்துள்ளது பலிபீடம். அதன் அருகில் சென்று வீழ்ந்து வணங்கும்போது பக்தன் மனதில் எழும் எண்ணமே மிக முக்கியமானது. அங்கு அவனது கீழான எண்ணங்கள், இச்சைகள் அனைத்தும் வணங்கும்போது பலிபீடத்தில் பலி கொடுக்கப்படுகிறது.அப்படி பலியிட்ட பின் தூய சிந்தனை, மேலான எண்ணத்துடன் அவன் எழ வேண்டும். அப்பொழுது மனிதத்தன்மை வாய்ந்த மனிதன் எழுந்திருக்கிறான் என்ற எண்ணம் வலுப்படும்.அந்த எண்ணத்தின் சக்தி, அவனைப் புதியபிறவி எடுக்க வைப்பதற்குச் சமமானது.

கொடிமரம் :

பலிபீடத்தை அடுத்துள்ளது கொடிமரம். இதை வடமொழியில் துவஜஸ்தம்பம் என்கின்றனர். இது உயரமாக இருக்கும். நந்தி இதற்கு முன்போ பின்போ அமைக்கப்பட்டிருக்கும். கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன ஒரே நேர் கோட்டில் மூலவரை நோக்கி இருக்கும்.

கொடிமரம் நேராக உள்ளது போல் உடல் நேராக இருக்க வேண்டும் என்பது சாத்திரம். இதன் உயரம் மூலவரின் விமானத்திற்குச் சமமாகவோ அல்லது மண்டபங்களின் மேல் தளத்திற்குச் சமமாகவோ இருக்கும்.இதன் அதி தேவதை சிவன்.அதுவே சிவனைக் குறிப்பதாக உள்ளது.

இது மூன்று பாகமாகவுள்ளது. முதல் பாகம் சதுரமானது. அடிப்பகுதி இது பிரம்மாவையும், இரண்டாவது பாகம் எண் கோணவேதி அமைப்பு. இது விஷ்ணுவையும், மூன்றாவது பாகம் உருளை போன்ற தடித்த உயரமான மேல் பகுதி ருத்ரனையும் குறிக்கும் என்கிறது ஆகமங்கள்.

உச்சியில் உள்ள மூன்று குறுக்குக்கட்டைகள்இ இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியைக் குறிக்கின்றன. அதிலுள்ள இரு குறுக்குத்தண்டுகள் சூரிய, சந்திரனைக் குறிக்கின்றன.

விழாக்காலங்களில் கொடி ஏற்றம் நடைபெறும்.அதில் கொடிக்கயிறு அனுக்கிரக சக்தியையும், கொடிஇவாயுவையும், கொடியில் வரையப்பட்டுள்ள நந்திஇ நந்தி பகவானையும் குறிக்கிறது.

இந்தக் கொடிமரத்தடியில்தான் கீழே விழுந்து வணங்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்யலாம். அஷ்டாங்கம் என்பது தலை, கைகள், காதுகள், முழங்கால்கள் ஆகிய ஒன்பதும் தரையில்படுமாறு விழுந்து வணங்குதல், பஞ்சாங்கம் என்பது கைகள், முழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் தரையில் படுமாறு குனிந்து வணங்குதல்.

கொடிமரத்தின் முன் மும்முறை விழுந்து வணங்க வேண்டும்.அதற்குக் குறையக் கூடாது.கிழக்கு நோக்கிய சந்நிதி எனில் வடக்கில் தலைவைத்துத் தெற்கில் கால் நீட்டி வணங்க வேண்டும். வடக்கில் சந்நிதி எனில் கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.

யாக சாலை :

இது ஒரு தத்துவ வடிவமாகவும், சிவனது 9 மூர்த்த வடிவாகவும் கூறப்படுகிறது. யாசசாலையில் 9 குண்டங்களில் அக்னி வளர்க்கப்படும். அவை நாற்கோணம், முக்கோணம், அர்த்தசந்திரம் முதலான வடிவங்களில் காணப்படும். குண்டங்களைச் சுற்றிப் பசுந்தர்ப்பைகளைப் பரப்பி ஆல், அரசு முதலான சமித்துகளைக் குண்டத்தில் இட்டு அக்னி வளர்த்து மந்திரங்களைச் சொல்லி தெய்வங்களை தியானித்து, சிருக்கு, சிருவம் என்ற கருவிகளால் நெய் ஊற்றி, மந்திரம், கிரியை, பாவனை என்ற மூன்றாலும் வழிபாடு நடக்கும். ஓமகுண்டப் புகை அருட் சக்தியைத் தூண்டி உலகெங்கும் பரவச் செய்யும் என்பதும் ஐதீகம்.

நந்தி :

கருவறையிலுள்ள சிவனை நோக்கி இருப்பது நந்தி. இது சிவனின் வாகனம்.சிவன் பரமாத்மா என்றால் நந்தி ஜீவாத்மா. பரமாத்மாவை நோக்கி அதில் கலக்கவே ஜீவாத்மா அதை நோக்கியுள்ளது. கோயிலுக்குச் செல்வோர் நந்திக்கும், சிவனுக்கும் குறுக்கே செல்லலாகாது.

கோயிலுக்குள் போகும்போது நந்தி தேவனை வழிபட்ட பின்னரே உள்ளே உள்ள சந்நிதிகலுக்குள் செல்ல வேண்டும்.

பிராகாரம் :

கோயிலில் வழிபடுவோர் மூன்று முறை அல்லது ஐந்து முறை பிரகாரங்களை வலம் வர வேண்டும். மூவகை உடம்பையும், ஐந்து வித கோசங்களையும் கடந்து இறைவனை வணங்கு என்பதை இது நினைவூட்டும்.

கோயில் பிராகாரங்களைக் காலையில் வலம் வந்தால் நோய் நீங்கும். பகலில் வலம் வந்தால் விருப்பமளிக்கும். மாலையில் வலம் வந்தால் எல்லாப் பாவங்களும் போகும். அர்த்தசாமத்தில் வலம் வந்தால் மோட்சம் கிட்டும்.

மூலவர் :

கருவறையில் உள்ள சிவலிங்கமே மூலவர்.லிங்கம் என்பது ஓர் அடையாளமே.லிங்கம் என்பதை லிம் + கம் எனப் பிரிப்பர். லிம் என்றால் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்குமிடம் என்றும் கம் என்றால் ஒடுங்கிய பொருள் மீண்டும் தோன்றுமிடம் என்றும் பொருள்.காண முடியாத இறைவனைக் காணும் ஒரு அடையாளமே சிவலிங்கம்.

லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம் என்றும், ஆவுடையார் (நடுப்பாகம்) விஷ்ணுபாகம் என்றும், பானம் (மேல் குவளை) ருத்ரபாகம் என்றும் அழைப்பர். சிவலிங்கம் பல வகைப்படும்.தானே தோன்றியது சுயம்புலிங்கம். விநாயகர், ராமன், முருகன் போன்ற கணங்களால் ஸ்தாபிக்கப்பட்டது கணலிங்கம். இருடிகள் ஸ்தாபித்தது தைவீக லிங்கம், மனிதர்கள் செய்து வைத்தது மானுடலிங்கம் எனப்படும்.

சிவலிங்கத்தை வழிபட்டால் யாவற்றையும் வழிபட்டதாகப் பொருள் கொள்ளப்படும். நினைத்தாலும், தரிசித்தாலும் அப்படியே.சிவலிங்க வழிபாட்டுப் பெருமையை 28 ஆகமங்கள் விரிவாகப் பேசுகின்றன.இக் கலியுகத்தில் சிவனுடைய சக்தியை அறியப் பாரெங்கும் பல இலட்சக்கணக்கான சிவத்தலங்கள் உள்ளன. ஒரே தலத்தில் பல விதமான லிங்கங்கள் உள்ளன.கலியுகத்திற்கு சிவஞானமே சிறந்த ஞானம்.

ஆலய வழிபாட்டின் நோக்கம் மிருகத்தன்மை ஒழிய வேண்டும். மனிதத் தன்மையும் அடங்க வேண்டும். தெய்வத் தன்மையை ஒளி வீசச் செய்ய வேண்டும் என்பதே.