youtube

6 January 2016

சப்த முனீஸ்வரர் அவதாரம்

சப்த முனீஸ்வரர் அவதாரம் :

உலகம் காக்கும் பொருட்டு ,உலகில் நீதி வளம்,மழை,தொழில் செழிக்க,
தீயசக்திகளை அழிக்க வீரபத்திரரின் அவதாரமாக சிவபெருமான் தன்னில் இருந்து சப்த முனிகளை தோற்றுவித்து அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி கட்டளை அருளி,உலக மக்களை காக்க படைத்தார்.இவர்களில்,

சிவமுனி :

சிவபெருமானின் முகத்தில் இருந்து தோன்றியதால் சிவாம்சம் பொருந்திய தெய்வமாக சிவமுனி .இவர் அபய மூர்த்தியாக வேண்டுதலை நிறைவேற்றி தருகிறார்.

மஹாமுனி :
அளவில்லாத தெய்வ சக்தியையுடையதால் தீயவைகளை அழித்து காக்கும் மஹாசக்தியாக,
தொழில் வளம் பெருக்கும் சக்தியாக மஹாமுனி விளங்குகிறார்.வியாபாரம்,
வாழ்வில் உள்ள தடைகளை விலக்கி,
நம்பிக்கையோடு வேண்டுபவர்க்கு வேண்டுதலை நிறைவேற்றி தரும் தங்கமுனி ஆவார்.

வாழமுனி :
வனங்களில் வசிக்கும் காபாலிகள் இனத்தவர் போற்றி வணங்கும் தெய்வமான வாழமுனி.

தவமுனி :
தேவர்கள்,ரிஷிகள்,யாத்திரீகர்கள் இவர்களின் வழியில் வரும் தீமைகள் விலக்கி காக்கும் தெய்வமாக தவமுனி.

தருமமுனி :
தருமச் செயல்களை காத்து,தீய செயல்களை அழித்து காக்கும் தெய்வம் தருமமுனி.

ஜடாமுனி :
வனங்களை காப்பவர்,ருத்ராட்ச மாலைகள் அணிந்து இருப்பவர்.
நூல்கள் ஓலைச்சுவடிகளை படைத்து காக்கும் தெய்வம் ஜடாமுனி.

நாதமுனி :
தேவகணங்களையும்,
பூதகணங்களையும் காத்து ரக்ஷிக்கும் தெய்வம் நாதமுனி.

சப்தமுனிகளில் இன்று நமது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்,சிவமுனியும்,
மஹாமுனியும் பலபெயர்களில் எல்லை காவல் தெய்வங்களாகவும் ஊர் தெய்வங்களாகவும் வழிபாடு செய்கின்றனர்

No comments: