youtube

24 August 2016

குலதெய்வ கோவம் தணிய 200 வருடம் முன்புள்ள பரிகாரம் ஒன்று உள்ளது

குலதெய்வ கோவம் தணிய 200 வருடம் முன்புள்ள பரிகாரம் ஒன்று உள்ளது.
தேவையான பொருட்கள் ,
 எழுமிச்சை , தாமரைநூல், சாதா திரி, வேப்ப எண்ணெய்.. வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலில் மாலை 6.45க்கு மேல் அது சூரியன் முழுமையாக அஸ்தமனம் அடையும் நேரம்.கோவிலுக்கு சென்று எழுமிச்சை பழத்தை தரையில் வைத்து உருட்டிவிட்டு அதன் தலையில் சிறிதாக துளையிட்டு உள்ளிருக்கும் சாறு விதைகளை நீக்கிவிட்டு , இங்க் பில்லர் மூலமாக வேப்ப எண்ணையை அதில் நிரப்ப வேண்டும் , பின் சாதா திரியையும் தாமரைநூலையும் இணைத்து அந்த கனியின் உள்ளே செழுத்தி தீபம் ஏற்றி இரு கைகளிலும் வைத்துக்கொண்டு அம்மனிடம் குலதெய்வ கோபம் நீங்க அருள்புரியுமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்.. கோவில் பூட்டியிருந்தாலும் பரவாயில்லை.. தவறில்லை.. நீங்கள் வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் நீங்கள் ஏற்றிய அந்த தீபம் அம்மனிடம் பேசும் ..தொடர்ந்து 15 நாட்கள் இதை செய்ய வேண்டும் இடையில் தடை ஏற்ப்பட்டால் அதை செய்வதை நிறுத்திவிட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.. இதை செய்துகொண்டிருக்கும்போதே பல மாற்றங்களை உணரப்பெறலாம்...

No comments: