youtube

11 September 2016

முதல் திருமுறை 36 வது திருப்பதிகம்

தலையின் தொடை மாலை அணிந்து
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வாம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே.

பாடல் விளக்கம்‬:

தலையோட்டினால் தொகுக்கப்பட்டுள்ள மாலையை அணிந்து மானைக் கையின்கண் கொண்டவராகிய சிவ பிரானது இடம், இறைவன் திருவடிக்கண் நிலைத்த மனமுடையவராகிய அடியவர் நாள்தோறும் மலர்கொண்டு தூவி வழிபாடு செய்யும் திருவையாறாகும்.
      -திருவையாறு திருமுறை பதிகம்,
திருமுறை : முதல் திருமுறை 36 வது திருப்பதிகம்,
அருளிச்செய்தவர் :திருஞானசம்பந்த சுவாமிகள்.

No comments: