youtube

5 January 2013

பிரதோஷ மகிமை பகுதி:3

பிரதோஷம்  மகிமை பகுதி1,  பிரதோஷம்  மகிமை பகுதி 2 படிக்காதவர்கள் அதை படித்துவிட்டு இப்பகுதிக்கு வரவும்.

பகுதி ஒன்றிலும், இரண்டிலும் பிரதோஷத்தை பற்றி பார்த்தோம். இப்போது பிரதோச நேரத்தை பற்றி பார்போம்.

பௌர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் வரும் திதி த்ரயோதசி திதியாகும். அந்த திதி வரும் நாளை தான் நாம் பிரதோஷம் என்று அழைப்போம்.ஆக ஒரு மாதத்திருக்கு தேய்பிறை பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம் என்று இரண்டு வரும். ஒரு வருடத்திற்கு 24  பிரதோஷம் வரும். 
அதிலும் குறிப்பாக 4.30 மணியில் இருந்து 6 மணிக்கான இடைப்பட்ட நேரம் பிரதோஷம் ஆகும். இது த்ரயோதசி திதி அல்லாத நாட்களிலும் 4.30 மணியில் இருந்து 6 மணிக்கான இடைப்பட்ட நேரம் பிரதோஷம் நேரமாகவே கருத படுகிறது. இந்த இடை பட்ட நேரத்தில் நாம் எத்தையும் உண்ணாமல் பஞ்சாக்ஷரமும்  பன்னிரு திருமுறைகளும் ஓத  வேண்டும்.

ஞானிகளும் ரிஷிகளும்  பிரதோச விரதத்தை கடை பிடித்து சிவபாதம் அடைந்தார்கள்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரதோச விரதத்தை முறை படி கடை பிடித்து, உங்கள் ஜன்ம பாவங்களை போக்கி, இறை அருள் பெருக

No comments: