youtube

23 June 2016

மதமத்தை வேர் வசியம்

மதமத்தை வேர் வசியம்
மதமத்தை (பொன்னூமத்தை வேர்)

வசிகரமாம் மதமத்தை மூலம் வாங்க
     மந்திரத்தை கேள் சொல்வோம் மைந்தாநீதான்
வசிகரஞ்சேர் கீறிணி வருணியாரே
     மதர்னாமீ சீவி வசியம் பவ்வே
வசிகரங்க்கான் சாக்காயுப் பருவம் நோக்க
     வந்து நிற்கும் பருவமதில் சமூலம் வாங்கி
வசீகரமாய் நிழலுலர்த்தி தைலம் வாங்கி
     மைந்தனே குப்பிலே அடைத்திட்டாயே
அடைத்ததற்கு வகைகேளு பணந்தான் வாங்கி
      அதிற்பாதி கற்பூரம் போட்டு தேய்த்து
படையடைத்து புருவமத்தி திலந்தீட்டு
      போதுவாறே நினைத்த பெண்கள் வந்து சேரும்
                                                                                                      -கருவூரார்

பொருள்:
            மதமத்தை மூலிகையை எடுப்பதற்கு "கீறிணி வருணீ மதர் நாமீ சீவீ
வசியம் பவ்வே "

 என்று மந்திரம் ஜெபித்து மதமத்தை காயாக இருக்கும் பருவத்தில் மூலமாக எடுத்து நிழலில் உலர்த்தி குழித்தைலம் எடுத்து குப்பியில் அடைத்துகொள் . மேற்படி மதமத்தை தைலத்தை பணவெடை எடுத்து அரை பணவெடை பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து புருவ மத்தியில் போட்டிட்டு கொண்டு எந்த பெண்ணை நினைத்தாலும் அவள் வசியமாகி உன்னிடத்தில் வந்து சேர்வாள் 

No comments: