youtube

14 November 2016

சித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்”

சித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்”

நமது உடலானது பஞ்ச பூதங்களின்
சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச
சக்திகளான கோள்கள், அட்டதிக்கு
பாலகர்களுக்கு
கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான
மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின்
ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த
கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே
எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும்,
சுயமாகவும் செயல்பட முடியும் என
சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும்
தெளிவுகளுமே இந்த பதிவு...

பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து
உடலை வெளியேற்றுவது, வெளியேறிய
பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு
அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு
மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல்
கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது
அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர்
மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக
குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும்
என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும்,
அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும்
கூறப் பட்டிருக்கிறது.

இனி நவ கோள்களின் உடல் கட்டு
மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு
மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த
பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க
வேண்டும் என அகத்தியர் கூறுகிறார்.

அதாவது...
"பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய
மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன்
வகையோடே மந்திரத்தை தான் மைந்தா
தனி தனியாய் உருத்தான் போடு போடே"
- அகத்தியர் -

நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம்
நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம்

நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம்

மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும்
ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது

ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது

No comments: