youtube

14 November 2016

பேய் பிடித்த பெண்கள்

அகத்தியர் -

பேய் பிடித்த பெண்கள் தங்களின் இயல்புகளை இழந்து ஆண்களைப் போல முரட்டுத் தனமான இயல்புகளை வெளிக் காட்டுவர். இதைப் போல ஆண்களை பிடித்த பேய்கள் மோகக் கன்னியாய் வந்து அவர்களின் இந்திரியத்தை நஷ்டமாக்கும் என்கிறார். மேலும் கருவுற்ற பெண்ணின் கருவை அழிப்பதுடன், காய்ச்சலும், உடல் நடுக்கமும், பித்த உபரியும் தருமாம். ஆண்,பெண் கூடிவாழ விடாமல் செய்யுமாம். இப்படி கொடுமையான குணாம்சங்களைக் கொண்ட பேய், பிசாசு மற்றும் பிரம்ம ராட்சதர்களை விரட்டும் முறையையும் பின் வருமாறு சொல்லியிருக்கிறார்.



"கேளடா பிசாசினது பலத்தைப் பார்த்துக்
கிளர்பஞ்சா க்ஷரத்தினது கிருபைநோக்கி
ஆளடா கோழிபன்றி யாடுகாவு
ஆஇஅரிஓம் உருவைந் நூறுபோடு
தாளடா காரீயம் செம்புதங்கம்
தகடெழுதி யிடைக்கழுத்தில் சிரசில்கட்ட
பாழடா அலகையென்ற பேய்களெல்லாம்
பறக்குமடா பிரமராட்ச சும்பாரே."

- அகத்தியர் -

காரீயம் அல்லது செப்பு அல்லது தங்கத்திலான தகடுகளில் ஏதேனும் ஒன்றினை எடுத்து அதில் பஞ்சாட்சர மந்திரத்தை கீறி, அதனுடன் “அ, இ, அரி, ஓம்” என்கிற பீஜாட்சர மந்திரத்தையும் எழுதிட வேண்டுமாம். பிறகு பரமேஸ்வரனது திருவடிகளை தியானித்து பஞ்சாட்சர மந்திரத்தை 500 தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். அதன் பிறகு இந்த தகட்டை பாதிக்கப் பட்டவரின் இடுப்பு அல்லது கழுத்து அல்லது தலையில் கட்ட அவர்களை பீடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பிரம்மராட்சதர்கள் விலகி அவர்கள் சுகமாவார்கள் என்கிறார் அகத்தியர்.


எளிமையான தந்திரம்!, எவருக்கேனும் உதவிட நினைத்தால் குருவினை வணங்கி பயனபடுத்தலாம்.

No comments: