youtube

28 January 2014

ஆல்ஃபா

ஆல்ஃபா நிலையில் ஒரு இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதித்தால் அது நம் வாழ்க்கையில் சுலபமாக நிறைவேறும் என்பதை பார்த்தோம். அந்தக் காட்சியை சரியான முறையில் அமைப்பது மிகவும் முக்கியம். அது எப்படி என்பதை பார்ப்போம்.
நமது மூளையின் ஆல்ஃபா நிலை என்பது மிக அற்புதமான, சுகமான நிலையாகும். மூனையின் வேகம் வினாடிக்கு 7லிருந்து 14 வரை இருக்கும் நிலை ஆல்ஃபா நிலை. நாம் சற்று அமைதியாக இருக்கும் நிலை இது. தியானத்தின் மூலம் இந்த நிலையை அடைகிறோம். இதற்கு பயிற்சி தேவை. ஆல்ஃபா நிலையை நாம் அடைந்தவுடன் நமக்குள் இருக்கும் ஆழ்மனம் திறக்கிறது. அங்கிருக்கும் வியக்கத்தக்க சக்தியை அந்த நேரத்தில் நாம் பயன்படுத்த முடிகிறது.
நமது இலட்சியங்களை ஆல்ஃபா நிலையில் மனத்திரையில் ஒரு காட்சியாகப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் காட்சி, ஆழ்மனத்தில் பதிந்து அங்கிருந்து பிரபஞ்ச சக்திக்கே ஒரு செய்தியாகப் போய் சேர்ந்துவிடுகிறது. பிரபஞ்ச சக்தி பல விதத்தில் செயல்பட்டு நமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறது. தகுந்த சூழ் நிலைகளை நமது வாழ்க்கையில் உருவாக்கி, தகுந்த மனிதர்களைச் சந்திக்க செய்து அந்த இலட்சியம் நிறைவேற வழி வகுக்கிறது.
இப்படி ஆல்ஃபா நிலையில், இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதிக்கும் பொழுது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது அந்தக் காட்சிகளின் அமைப்புதான். இலட்சியத்தை மனத் திரையில் உருவாக்கும் பொழுது அந்த இலட்சியம் நிறைவேறிவிட்ட காட்சியை மட்டும் கண்டால் போதும். இதை எப்படி அடையப்போகிறோம், வழிமுறைகள் என்ன, என்பதைப் பற்றி தியானத்தில் யோசிக்க வேண்டாம். வழிமுறைகளை யோசிக்கும் பொழுது நமது மனம் பல இடங்களில் செயல்பட முடியாமல் தடுமாறும்.
சுரேந்திரனின் அனுபவத்தைப் பார்ப்போம். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒருமுறை என்னைச் சந்தித்து தன் பிரச்னையைப் பற்றிச் சொன்னார்.
"குடும்பத்தில் செலவு மிகவும் அதிகமாகிவிட்டது. என்னால் சமாளிக்க முடியவில்லை. எப்படியாவது எனக்கு பிரமோஷன் கிடைத்து சம்பளம் உயர வேண்டும் என்று பல மாதங்களாக ஆல்ஃபா தியானம் செய்து வருகிறேன். ஆனால், இதுவரை நடக்கவில்லை. என்ன செய்வது?'
"சரி. உங்கள் நிறுவனத்தின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?'
"அதுதான் மேடம் பிரச்னை. எனக்கு மேல் உயர் பதவி எதுவும் இல்லை. எம்.டி. தான் இருக்கிறார். இருந்தாலும் வேறு எப்படி தியானம் செய்வது என்று எனக்கு புரியவில்லை. அதனால்தான் இந்த வழிமுறையை யோசித்தேன்.'
"நீங்கள் இந்த பிரமோஷன் என்கின்ற வழிமுறையை விட்டுவிட்டு குடும்ப வருமானம் பெருகுவது போல் பார்த்து வாருங்கள். நிச்சயம் நடக்கும்.' என்றேன்.
நாமாக யோசிக்கும் பொழுது நமது இலட்சியம் நிறைவேற ஏதேனும் ஒருவழிதான் நமக்கு புலப்படும். ஆனால் வழிமுறைகளை பிரபஞ்சத்திடம் விட்டுவிட்டோமானால் நம் கண்ணுக்குத் தெரியாத பல கதவுகள் திறக்கும். பல வழிகள் பிறக்கும்.
நான் சொன்னபடி சுரேந்திரன், தியானம் செய்து வந்தார். சில மாதங்கள் கழித்து சுரேந்திரன் தன் மனைவியுடன் என்னை சந்திக்க வந்தார். இருவர் முகத்திலும் பிரகாசமான புன்னகை.
"நீங்கள் சொன்னபடி இருவருமே தியானம் செய்து வந்தோம். அதன் பிறகு என் மனைவி செய்த சில கைவினைப் பொருட்கள், ஒரு கண்காட்சியில் வைத்து விற்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று அதுவே அவளுக்கு மிகப் பெரிய ஒரு தொழிலாக அமைந்துவிட்டது. இன்று அதன் மூலம் எங்களது குடும்ப வருமானம் பெருகி மிகவும் சௌகரியமாக இருக்கிறோம்.'
இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும். பிரபஞ்ச சக்தி ஒரு தாய் போன்றது. நமக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு குழந்தையைப் போல் காண்பித்தால் போதும். அந்தத் தாய் அதை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பாள். வழிமுறைகளை நாம் தியானத்தில் செல்லும் பொழுது பல சமயம் அது நமக்கு சரியான வழியாக இல்லாமல் போகலாம். அப்பொழுது பிரபஞ்ச சக்தியால் கூட நமது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம். அதனால்தான் இலட்சியம் நிறைவேறும் காட்சியை மட்டும் காண வேண்டும். எந்த நிபந்தனைகளும் இன்றிக் காண வேண்டும். அப்படிச் செய்தால் நமது இலட்சியங்கள் ஒவ்வொன்றாக நாம் நினைத்ததைவிட மிகவும் சுலபமாக நடைபெறுவதை நாம் காண முடியும்.
பிரபஞ்ச சக்தி நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. அவற்றை குறைவின்றிப் பெற்றுக் கொள்ள நாம் தான் தயாராக வேண்டும்.

குண்டலினி என்றால் என்ன?

குண்டலினி என்றால் என்ன?

குண்டலினி ஒரு நுட்பமான ப்ராண சக்தி. இது கண்ணினால் பார்க்கக் கூடிய உடலுறுப்பு அல்ல.
குண்டலினி சூட்சும பௌதிக சக்தி.
இதன் உறைவிடம் முதுகில் உள்ள தண்டுவடம் என்கின்றனர் சில யோகிகள் 
தொப்புளுக்கும், தண்டுவட ( முதுகெலும்பு ) அடிபாகத்துக்கும் நடுவே உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
குண்டலினி எல்லோருக்கும் கைவசப்படும் மாந்திரீகம் அல்ல. அது ஒரு ப்ராண சக்தி.
யோகிகள் முதுகெலும்பில் ( தண்டுவடத்தில் ) 3 'நாடிகள்' ( பாதைகள் ) உள்ளன. இவை - சூர்ய, சந்திர, சூட்சும நாடிகள். குண்டலினி சக்தி இந்த 3 நாடிகளில் மூலமாக இயங்குகிறது என்கின்றனர். நாடிகளின் வழியே பிராண வாயு இயங்குகிறது. 
மூலாதாரம்
நமது மூளையில் உள்ள "சஹஸ்ராமம்" என்னும் ஒரு துருவம். கீழே ஆண்குறிக்கும், குதத்திற்கும் இடைப்பட்ட மூலாதாரம் இன்னொரு துருவம். கீழ் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தி மேலெழும்பி, மேல் மூலாதாரத்தை அடைகிறது என்கின்றனர் யோகிகள்.
குண்டலினியின் வடிவம்
குண்டலம் என்றால் வட்டம் என்று பொருள். எல்லா மனிதர்களின் உடல்களில் உறங்கிக் கொண்டிருக்கும் சக்தி. பாம்பு வடிவில் சுருண்டு படுத்திருக்கும். மூன்று குணங்களான சத்துவ, ரஜோ, தமோ குணத்துக்கு அடங்கி நடக்கும் ஆற்றல் என்பதால், குண்டலினி முக்கோண வடிவிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
குண்டலினி பிரபஞ்ச சக்தியாக கூறப்படுகிறது. அண்டமும் (உலகமும்) பிண்டமும் (உடல்) குண்டலினியே. பிரபஞ்சத்தில் உள்ள அணுக்களுக்கு மாபெரும் சக்தி உள்ளது. இந்த அணு சக்தி மாபெரும் ஆற்றலுடையது - இதனால் அணு குண்டுகள் செயல்படுகின்றன. இந்த சக்தி அணுவை 'பிரிக்கும்' போது உண்டாகும் சக்தி பிரபஞ்சத்தை போல், உடலும் 'அணுக்கள்' நிறைந்தது. யூரேனியம் போன்ற குறிப்பிட்ட சில பொருட்களிலிருந்து அணு சக்தி அடையப்படுவது போல, உடலில் ஒரு புள்ளியில் மையம் கொண்டுள்ள குண்டலினியை எழுப்பினால், அது கீழ் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு தலையில் உள்ள உச்சி மூலாதாரத்தை அடைந்து விட்டால் பல சித்துக்கள், ஆற்றல்கள் கைவசப்படும் என்று யோகிகள் நம்புகின்றனர்.

குண்டலினி மேலெழும்பும் பாதைகள் 
உசுப்பி எழுப்பப்பட்ட குண்டலினி, சூட்சும நாடி மூலம் அல்லது முதுகெலும்பு மையப் பகுதியின் வழியே மூளையை அடைகிறது. இங்கு எது பரம்பொருளுடன் சேர்கிறது. ஒரே தடவையாக உடனேயே குண்டலினி கீழிருந்து மேல் தாவி விடாது. வழியில் ஒவ்வொன்றாக 6 சக்கரங்கள் உள்ளன. இவற்றை கடக்க வேண்டும். முன்பே இரண்டு மூலாதாரங்கள் கூறப்பட்டன. கீழ் மூலாதாரத்திலிருந்து எழுப்பப்பட்ட குண்டலினி, ஆறு 'சக்கரங்கள்' வழியே மேல் நோக்கி பயணிக்கிறது. இந்த 'சக்கரங்கள்' தாமரை மலராக கருதப்படுகின்றன. மேலெழும்பும் பாதையிலுள்ள ஒவ்வொரு தாமரையும், ஒரு ஆன்மீக படியை தாண்டி வருவதை குறிக்கும். ஒரு அடையாளமாக, கற்பனையில் உருவகப்படுத்தப்படுகின்றன.
ஆறு மலர்கள்
அடி மூலாதாரத்திலிருப்பது (தண்டுவடத்தின் அடிபாகம்) சிகப்பு நிற தாமரை, சிகப்பு வண்ணமாக, 4 இதழ்கள் உடையதாக நினைக்கப்படுகிறது. இந்த நிலையை அடைந்த மனிதருக்கு ஞாபக சக்தியும், உள்மனதை கட்டுப்படுத்தும் திறனும் கிட்டும். இந்த நிலை அடைந்தவுடன் மொட்டு போலிருக்கும் தாமரை மலரும்.
இரண்டாவது சக்கரத்தில் 6 இதழ்கள் உள்ள குங்கும சிவப்பு மலர். இங்கு இருப்பது மனிதரின் மிருக வெறி - பிறப்புறுப்புகளில் உறைவது. இந்த 'வெறியை' ஆன்மிக சக்தியாக மாற்றும் சக்தி, இரண்டாவது சக்கரத்தை அடைந்தவர்களுக்கு ஏற்படும்.
தொப்புளில் இருப்பது மூன்றாவது சக்கரம். இது தாமரை மிகுந்த சிவப்பு வண்ணத்துடன் 10 இதழ்களாக இருக்கும். இந்த இடம் வந்தவுடன் உலகின் இன்பங்கள், லௌகிக சாதனைகள் நமக்கு முழுதிருப்தியை தராது என்ற உண்மை புலப்படும். இந்த மூன்றாவது இடத்தில் தான் குண்டலினி சாதகர்கள் கவனமாக இருக்க வேண்டும். இங்கு கீழே தள்ளும் வாயு பலமாக இருப்பதால் குண்டலினி முறைகளை சரியாக கடைப்பிடிக்காதவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். இதற்கு மேல் 4 வது கட்டத்தை அடைந்து விட்டால் இந்த பயம் இல்லை. அதன் பிறகு மேல்நோக்கி பயணம் தான்.
இதயமே நான்காவது சக்கரம். 12 இதழ்கள் உள்ள நீல நிற தாமரை இதன் அடையாளம். இந்த நிலையில் அமைதி, உலகத்தில் உள்ள அனைவரின் மேல் அன்பு இவை ஏற்படும்.
ஐந்தாவது சக்கரம் கழுத்து 16 இதழ்களுடைய பழுப்பு தாமரை இதன் சின்னம். அழகு, நல்லகுணம், உண்மை இந்த குணங்கள் இந்த இடத்தை அடைந்த யோகிகளுக்கு உண்டாகும். இந்த நிலை தூய்மையான நிலை.
ஆறாவது நிலை, கண் புருவங்கள். இந்த சக்கர தாமரை 2 இதழ்கள் உள்ள வெண் தாமரை. இங்கு யோகிகளுக்கு முழுமையான ஞானம் ஏற்படும்.
இந்த ஆறு சக்கரங்களுக்கு அப்பால் உள்ளது, முன்பு சொன்ன "சஹஸ்ராரம்" என்ற மூலாதாரம். சஹஸ்ராரம் என்றால் ஆயிரம் தாமரைகள், தூய்மையான, சிறந்த வெண்மை நிறத்தை உடையவை. இங்கு தான் குண்டலினி பரம் பொருளுடன் சேர்ந்து சமாதியடைகிறது. ஒவ்வொரு யோகியின் லட்சியம் இந்த சமாதி தான். இந்த நிலை அனுபவிக்க வேண்டியது. வார்த்தைகளால் விவரிக்க முடியாது

லக்கினத்தில் சூரியன்-சுக்கிரன் இருந்தால்

லக்கினத்தில் சூரியன்-சுக்கிரன் இருந்தால், உடல்நலனில் சற்று பாதிப்பை உண்டாக்குகிறது. கௌரவம் கெடும்படி ஏதாவது செய்ய வைக்கிறது. லக்கினத்திற்கு 2-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவு. கண் பார்வையில் குறை தரும். தேவை இல்லாமல் விரையம் செய்கிறது. கோபம் அதிகரிப்பதால் வார்த்தைகள் தாறுமாறாக வந்து, மற்றவர்களின் மனம் புண்படும்படி பேசுவார்கள். லக்கினத்திற்கு 3-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், சகோதரர்களின் ஒற்றுமை குறையும். அதிக அலைச்சலை கொடுக்கும். பயணம் அதிகம் உண்டு. தற்பெருமை பேச வைக்கும். மகாதைரியம் தரும். லக்கினத்திற்கு 4-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், வாகனம் விஷயத்தில் கவனம் தேவை. வீடு-மனை நிதானமாக அமையும். கல்வி தடை ஏற்பட வாய்ப்புண்டு. வயிற்று சம்மந்தப்பட்ட தொல்லை கொடுக்கும். தாயாருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படுத்தும். லக்கினத்திற்கு 5-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், புத்திரபேறு நிதானமாக காலங்கடந்து கொடுக்கும். மனஉலைச்சல் உண்டாகும். நித்திரையை கெடுக்கும். தண்ணீரில் கரைந்த உப்புபோல கையில் உள்ள பணம் கரையும். லக்கினத்திற்கு 6-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், வீண் விவாதம் உண்டாக்கும். தேவை இல்லா கடன் பெருக செய்யும். ஜாமீன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அடிக்கடி உடலில் நோய் உபாதை உண்டாக்கும். எதிரிகளை உருவாக்கும். கவனமும், நிதானமும் தேவை. லக்கினத்திற்கு 7-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், திருமணம் வாழ்க்கை சிரமபட்டு நடக்கும். கல்யாணம், காலங்கடந்து நடக்கும். நண்பர்களால் விரையங்கள் உண்டு. அரசாங்க விஷயத்தில் கவனம் தேவை. கூட்டுதொழில் நஷ்டத்தை கொடுக்கும். லக்கினத்திற்கு 8-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், கண்டங்கள் போல் நோய் நொடி கொடுக்கும். ஆனால் ஆயுளுக்கு பயமில்லை. வழக்கு வீண் விவாதங்கள் உண்டாக்கும். எச்சரிக்கை தேவை. மறைமுக தொல்லைகள் வரும். லக்கினத்திற்கு 9-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், சொத்து விஷயத்தில் பிரச்சினை உருவாக்கும். சொத்து வாங்கும் விஷயத்தில் வில்லங்கம் உண்டாக்கும். மேல் படிப்பு சற்று தடைசெய்யும். தந்தைக்கு உடல்நலம் பாதிக்கச் செய்யும். லக்கினத்திற்கு 10-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், தொழில் உத்தியோகத்தில் தேவை இல்லா பிரச்சினை உண்டாக்கும். முன்னேற்றத்தை சற்று தாமதப்படுத்தும். வாக்கு பலிதம் கொடுக்கும். லக்கினத்திற்கு 11-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், ஆடம்பர செலவு செய்ய வைக்கும். உங்கள் முயற்சிக்கான பலனை மற்றவர்கள் அனுபவிக்க வைக்கும். சதா சிந்தனையை தூண்டும். தேவை இல்லா நண்பர்களால் விரையம் உண்டாக்கும். அயல்நாடு விஷயத்தால் செலவு வைக்கும். லக்கினத்திற்கு 12-ல் சூரியன்-சுக்கிரன் இருந்தால், துறவி போல் வாழ்க்கை கொடுக்கும். செலவுகள், விஷம் போல ஏறும். பக்தி அதிகரிக்க செய்யும். நன்மைகள் செய்தாலும், தீமைகள் வந்தடையும். மனச்சஞ்சலம் உண்டாகும்.

27 December 2013

லக்னாதிபதி

நீங்கள் வாழ்க்கையில் நிறைய மனிதர்களை சந்தித்திருப்பீர்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்.  சிலர் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து வருவார்கள்.  சிலர் தலையைக் குணிந்து கூச்ச சுபாவத்துடன் வருவார்கள்.  இதற்குக் காரணம் என்ன என்றால், லக்னாதிபதியே ஆகும்.  ஒருவருடைய லக்னாதிபதி ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்றால் அவர் தலைநிமிர்ந்து வாழ்வார்.  மற்றவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்த்து தைரியமாக பேசும் திறன் படைத்தவர்களாக இருப்பார்.  லக்னாதிபதி உச்சம் பெற்றிருந்தால் தலைமை வகிக்கும் குணம் படைத்தவர்.  எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் நம்பர் ஒன் என்று பிறர் சொல்லுமளவிற்கு முதன்மையாக இருப்பார்.  எல்லோரையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்து வேலை வாங்கும் திறன் படைத்தவர், மற்றவர்கள் பார்வைக்கு இவர் கர்வம் பிடித்தவர் போலத் தோற்றமளிப்பார்.  கர்வம் பிடித்தவர் என்று கூட சிலர் நினைப்பார்கள்.
                லக்னாதிபதி ஆட்சியாகவோ அல்லது வேறு உச்சமாகவோ இருப்பது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அமையும் விஷயமாகும்.  எல்லோருக்கும் இப்படி அமையாது.  அப்படி அமையவில்லையென்றால் எப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டால், லக்னாதிபதி லக்னத்தில் இருப்பதைப் போல 5ல் இருக்கலாம்.  9ல் இருக்கலாம், வெகுசிறப்பாக இருக்கும் அதே போல் தனஸ்தானமானது 2ம் இடத்திலும் இருக்கலாம்.  ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் லக்னத்திற்கு மறையக்கூடாது.  லக்னத்திற்கு 3,6,8,12 போன்ற வீடுகளில் இருப்பதைத்தான் மறைவு ஸ்தானம் என்று சொல்கிறோம்.  அதே போல பகை வீட்டிலும் நீச வீட்டிலும் இருக்க்க்கூடாது.  இவ்வாறு இருந்தால் லக்னாதிபதி பலம் இழந்து காணப்படுகிறார் என்று புரிந்து கொள்ளுங்கள்.
லக்னாதிபதி பலம் இழந்து விட்டால் அவருக்கு சமுதாயத்தில் எதிர்ப்பார்க்கும் மரியாதை இருக்காது.  அவர் எவ்வளவுதான் மற்ற்வர்களுக்கு உதவி செய்தாலும், அவ்வாறு உதவி பெற்றவர்கள் இவர்தான் உதவி செய்தார், அதனால்தான் முன்னுக்கு வந்தோன் என்று நினைக்கமாட்டார்கள்.  இதனால் இவர் மணம் நொந்து கொள்வார்.
எனவே இங்கு இவர் மற்றவர்களுக்கு ஏணியாகவேப் பயன்படுவார்.  ஆனால் அதற்கான நன்றி இவர்களிடத்தில் இருக்காது.  எனவே லக்னாதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் ஒரு மாதிரி பலனையும், மறைந்திருந்தால் ஒரு மாதிரி பலனையும் சொல்ல வேண்டும்.
ஒருவருக்கு எத்தனை யோகங்கள் ஜாதகத்தில் இருந்தாலும், அதனை அனுபவிப்பதற்கு, லக்னாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டும்.  லக்னாதிபதி பலம் பெறவில்லையென்றால், அந்த யோகங்களை சரியாக அனுபவிக்க முடியாது.  இதனையும் ஓர் உதாரணத்தின் மூலம் விளக்க விரும்புகிறேன்.  நீங்கள் ஒரு வீடு கட்டுவதாக வைத்துக் கொள்ளுங்கள்.  ஐந்து மாடி கட்டிடம் கட்டுவதாக வைத்து கொள்ளுங்கள்.  அவ்வாறு அழகாக இத்தனை மாடி கட்டிடங்கள் கட்ட வேண்டுமென்றால் அஸ்திவாரம் பலமாக இருக்கவேண்டும்.  அஸ்திவாரத்தைப் பலமாக அமைக்காவிட்டால் கட்டிடம் சரியாக கட்ட முடியாது.  அதுபோலத்தான், லக்னாதிபதியும் பலமாக இல்லையென்றால் யோகத்தை சரியாக அனுபவிக்க முடியாது.  எனவேதான் ஒருவரது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்ல வேண்டுமென்றால், லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும்.  லக்னம் பலம் பெற்றால்தான், லக்னாதிபதி பலம் பெற்றால்தான் யோகத்தை முறையாக அனுபவிக்க முடியும்.
ஒருவருக்கு நிறைய பணம் வந்து கொட்டுகிறது.  அதை வைத்துக் கொண்டு அவர் அறுசுவை உணவை விதவிதமான நட்சத்திர ஓட்டலில் சாப்பிட விரும்புகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான், ஜீரணமாக்க் கூடிய வயிறு இருந்தால்தான் அவரால் கையில் இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு ருசியாக சாப்பிட முடியும்.  உடல் ஆரோக்கியம் இழந்தால், வயிறு கெட்விட்டால், கையில் பணம் இருந்தால் கூட தான் விரும்பிய உணவு எதையும் சாப்பிட முடியாது.  இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டு விட்டால், லக்னாதிபதி பலம் இழந்துவிட்டால் நல்ல பலன்களை அடைய முடியாது.  என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
உங்களது லக்னாதிபதி பலம் இழந்து விட்டால் நல்ல ஜோதிடரைப் அனுகி உங்கள் ஜாதகத்தை ஆய்வு செய்து பின் அதற்கு வேண்டிய பரிகாரத்தை செய்து கொள்ள வேண்டும்.  இருப்பினும் என்ன பரிகாரம் செய்வது ?
உங்களது லக்னாதிபதி பலம் இழந்து விட்டால் அந்த லக்னத்திற்கு அதிபராக உள்ள கிரகம் யார் என்று பாருங்கள்.  அதன் பிறகு அந்த கிரகத்திற்குரிய ஜெம்மை (ரத்தினம்) அணிந்து கொள்ளுங்கள்.  குறைந்த பட்சம் 2 காரட் அளவு திறப்பு வைத்து வெள்ளி மோதிரத்திலாவது அல்லது தங்க மோதிரத்திலாவது அணிந்து கொள்ளுங்கள்.  சிம்மலக்னமாக இருந்து, அதன் அதிபர் சூரியன் நீசமாக இருந்தால், சூரியனுக்குரிய மாணிக்கம் 1 ½ காரட் வரை அணிந்து கொள்ளுங்கள்.  சந்திரனாக இருந்தால் முத்து அல்லது சந்திரகாந்த கல் அணிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் ஆக இருந்தால் பவளம் அணிய வேண்டும்.  புதனாக இருந்தால் மரகதப்பச்சையையும், குருவாக இருந்தால் கனக புஷ்பராகத்தையும், சுக்கிரனாக இருந்தால் வைரம் அல்லது வெள்ளை ஜிர்கானையும், சனியாக இருந்தால் நீலக்கல்லையும் (இந்திரநிலம்) அணிய வேண்டும்.  இவ்வாறு அணிந்து கொண்டால் வானவெளியிலுள்ள அந்தந்த கிரகங்களின் சக்தியை  அந்த ரத்ன கற்கள் பெற்று அதனை அணிந்தவர்களுக்குக் கொடுத்துவிடும். 
ஜெம்ஸ் அணிவது போல லக்னாதிபதிக்கு உரிய ஆலய பரிகாரங்களையும் செய்து கொள்ளலாம்.  லக்னாதிபதி சூரியனாக இருந்தால் கோயிலுக்குச் சென்று சிவனுக்கு ஒர நெய், தீபம், நவகிரக சன்னதியில் சூரியனுக்கு ஒரு நெய்தீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வழிபட வேண்டும்.  ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வழிபட வேண்டும்.  இதேபோல நவகிரக பரிகாரஸ்தலங்களில் சூரியனுக்குரிய சூரியனார் கோயிலுக்குச் (மாயவரத்திற்கு அருகே உள்ளது) சென்று பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
உங்கள் லக்னாதிபதி சந்திரனாக இருந்தால், திங்கள்கிழமை அம்பாளை வணங்கி நெய்தீபம் ஏற்ற வேண்டும்.  நவகிரக சன்னதியில் சந்திரனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.  பௌர்ணமி பூஜையை செய்ய வேண்டும்.  அதேபோல் நவகிரக ஸ்தலங்களில் ஒன்றான திங்களுர் சென்று பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.  இதுபோல் சந்திரன்னின் ஸ்தலமான திருப்பதிக்கும் சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.  இதுபோல், உங்கள் லக்னாதிபதி எதுவோ, அந்த கிரகத்திற்குரிய பரிகாரத்தைச் செய்து கொள்ள வேண்டும். 
லக்னாதிபதியை குரு பார்த்தால் பலம் இழந்து விட்டாரே என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.  குரு பார்க்க கோடி பாவம் நிவர்த்தி எனபதற்கேற்ப லக்னாதிபதியின் பலம் பெருகும்.
உங்கள் லக்னாதிபதி ஆட்சி பெற்றால் பலம்; உச்சம் பெற்றால் பலம்; குருவின் பார்வையைப்பெற்றால் பலம்; லக்னாதிபதி தன்னுடைய வீட்டைப் பார்த்தால் பலம் – இவ்வாறு பல வழிகளில் லக்னாதிபதி பலம் பெறுகிறார்.

லக்னாதிபதி ராசி கட்டத்தில் எந்த வீட்டில் இருக்கிறாரோ, அதே வீட்டில் நவாம்ச கட்டத்தில் இருந்தாலும் பலம் பெறுகிறார் என்று சொல்ல வேண்டும்.  உதாரணத்திற்கு சொல்வதென்றால், ராசிக்கட்டத்தில் சிம்மத்தில் லக்னாதிபதி இருந்தால், நவாம்ச சக்கரத்திலும், சிம்மத்தில் லக்னாதிபதி இருந்தால், பலம் பெறுகிறது என்று சொல்லவேண்டும்.  இவ்வாறு பலம் பெறுவதை வர்க்கோத்தமம் பெற்றுள்ளது என்று சொல்வார்கள்.  எனவே ஒரு கிரகம் வர்க்கோத்தமம் பெறுகிறது என்றால், அந்த கிரகம் பலம் பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்

7, இடத்து அதிபர் எங்கிருந்தால் என்ன பலன்களைக் கொடுப்பார்?

7, இடத்து அதிபர் எங்கிருந்தால் என்ன பலன்களைக் கொடுப்பார்?


லக்னத்திற்கு 1,2,4,5,7,9,10,11 ஆகிய இடங்களில் ஏழாம் அதிபர் நின்றால் நல்ல பலன்களை அளிப்பார்.  3,6,8,12 போன்ற இடங்களில் ஏழாம் அதிபர் மறைந்தால் நல்ல பலன்களை அளிக்க மாட்டார்.  இப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்னென்ன பலன்கள் நடக்கும் என்று பார்ப்போம்.
லக்னம்
ஏழாம் அதிபர் லக்னத்தில் இருந்தால் மனைவி வந்த பிறகு இவருக்கு யோகம் ஏற்படும்.  பதவி, புகழ் அனைத்தும் திருமணத்திற்குப் பிறகு கிடைக்கும்.  பணம் நிறையவே கிடைக்கும்.  அயன சயன யோகம் அனைத்துமே கிடைக்கும் . அதாவது நல்ல சாப்பாடு, நல்ல படுக்கை, நல்ல வாழ்க்கை அனைத்துமே கிடைக்கும்.  வசதி படைத்த மனைவி இந்த ஜாதகருக்கு அமையும்.  ஏழாம் அதிபரும், லக்னாதிபதியும் நட்பு பெற்ற கிரகங்களாக இருந்தால் இன்னும் நல்ல பலன்களாகச் சொல்ல வேண்டும்.  இருப்பினும் வேறு சில பெண்களின் நட்பும், ஜாதகருக்கு தாமாகவே அமையும்.  எனவே இவ்வாறு அமையப் பெற்றவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இரண்டாம் தனஸ்தானமான இரண்டாம் வீட்டில் ஏழாம் அதிபர் நின்றால் பணக்கார மனைவி அமைவார்.  அதாவது மனைவி வருவார் என்று பார்த்தோம்.  குரு பார்த்தால் கோடிஸ்வர மனைவி அமையும்.  ஏழை வீட்டிலிருந்து பெண் வந்தாலும் ஜாதகர் திருமணம் செய்து கொண்ட பிறகு பணம் லட்சக் கணக்கில் கொட்டும்? எனவே மனைவி லட்சாதிபதியாக வருவார்  மனைவியின் பெயரில் தொழில் செய்தால் லாபம் அபரிதமாகக் கொட்டும்.  அதே நேரத்தில் ஏழாம் அதிபதியின் திசை வரும் பொழுது கண்டமும் ஏற்படலாம்.  குரு பார்த்தால் இந்த தோஷம் விலகும்.
மூன்றில் ஏழாம் அதிபர் மறையலாமா! மறையக்கூடாது.  மறைந்தால் மனைவியால் லாபம் இல்லை.  கணவன்-மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்படும்.  எனவே ஒருசிலர் மறுமணம் செய்து கொள்வார்கள்.  மூன்றாமிடம் சகோதர ஸ்தானம் அல்லவா! எனவே மனைவியால் சகோதர சகோதரிகளுக்கு லாபம்.  கொழுந்தனார், நாத்தனார் இவர்களுக்கு மனைவி நல்லவராக இருப்பார், கணவருக்கு கெட்டவராக இருப்பார்.
நான்கில் ஏழாம் அதிபர் நான்கில் அமரலாம்.  இந்த இடம் சுக ஸ்தானம் அல்லவா!எனவே மனைவி வந்த பிறகு கணவர் வாழ்வில் வசந்தம் வீசும்.  சுகமாக வாழ்வார்.  இந்த இடம் வீடு வாகனத்தைக் குறிப்பிடும் இடம்.  எனவே மனைவியால் கணவர் வீடு வாங்குவார்.  கார் வாங்குவார் எல்லாம் மனைவி வந்த நேரம் என்று ஓயாமல் தன்னுடைய மனைவியை ஜாதகர் புகழ்வார்.  இதே அமைப்பு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால் திருமணம் செய்துக் கொண்ட பிறகு சொந்தமாக வீடு அமையும்.  வாகனம் அமையும்.  இந்த இடம் தாயாரைக் குறிக்கும் இடமல்லவா! எனவே மனைவியால் தாயாருக்கு லாபமே! மனைவியின் ஆதரவில் தொழில் செய்தால் ராஜயோகத்தை அனுபவிக்கலாம்.  குடும்பத்தில் மனைவியை அனைவரும் தாங்குவார்கள். இவர்களும் அதற்கேற்ப பதவிசாக குடும்பத்தை நடத்துவார்கள். பெண்ணின் ஜாதகத்தில் இதே அமைப்பு காணப்பட்டால், மாமனார், மாமியார், மருமகளை தாங்கோ தாங்கவென்று தாங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.  சில குடும்பங்களில் மருமகனுக்கு ராஜமரியாதை இருக்கும்.  இதற்குக் காரணம் அந்த ஜாதகரின் மனைவியின் ஜாதகத்தில் ஏழாம் அதிபர் நான்கில் இருக்கும்.  எனவே ஆண்களே! உங்கள் மனைவியின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால், நீங்கள் பாக்கியவான்களே!
ஐந்தில்:ஏழாம் அதிபர் ஐந்தில் அமலாமா! கண்டிப்பாக அமரலாம்.  கேந்திர ஸ்தானாதிபர் திரி கோண ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் அமர்வது ராஜயோகமே! ஓர் ஆணின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் அற்புதமான வாழ்க்கை அமையும்.  சுகபோகமான வாழ்க்கை அமையும்.  பூர்வ ஜென்ம புண்ணியத்தின் விளைவாக நல்ல வாழ்க்கை அமையும்.   செய்தொழில் சிறக்கும் குழந்தைகளால் நல்ல ஆதாயத்தை அடைவார்கள்.  மனைவியால் செல்வமும், செல்வாக்கும் உயரும், இதே அமைப்பு பெண்ணின் ஜாதகத்தில் அமைந்தால், கணவன் அமைவார். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கைத் தரம் உயரும்.  உத்தியோக உயர்வு கிடைக்கும்.  செய்தொழில் சிறக்கும்.  நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.  ஆசாரமான நல்ல ஒழுக்கமுள்ள கணவன் பெண்ணுக்கு அமைவார்.  அதே போல ஆணின் ஜாதகத்தில் இருந்தால் ஆசாரமான நல்ல ஒழுக்கமுள்ள, புக்தியுள்ள பண்புள்ள மனைவி அமைவார்.
ஆறில் நோய், கடன் எதிரிகளைக் குறிக்கக்கூடிய ஆறாம் இடத்தில் களத்திர ஸ்தானாதிபதி இருந்தால் என்ன நடக்கும், கடன் ஏற்படும்? நோய் ஏற்படும்.  எதிரிகள் ஏற்படும், எப்படி ஏற்படும் என்று கேட்கிறீர்களா! மனைவியால் கடன் ஏற்படும்.  மனைவியின் உடல் நலம் பாதிக்கும்.  திருமணம் ஆனப் பிறகு ஜாதகரின் மனைவி நோயாளியாக மாறுவார்.  ஜாதகர் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் மனைவியின் வைத்தியத்திற்காகவே செலவு செய்வார்.  இதனால் கடன் ஏற்படும்.  மனைவியோ எதிரியாக மாறும் சூழ்நிலை ஏற்படும்.  இப்படி நீங்கள் கணிக்கலாம்.  சில நேரங்களில் பெண்களால் அவமானம் அமையலாம்.  பணமும் விரயமாகலாம்,  எனவே பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியம்.
ஏழாம் அதிபர் ஏழில் நின்றால் சொந்த வீட்டில் இருக்கிறார் என்று பொருள்.  அப்படியென்றால் மனைவி ஸ்தானம் வலுவாக இருக்கிறது என்று பொருள்.  ஏழாம் அதிபர் சுபகிரகமானால் மனைவியால் மகிழ்ச்சி.  சந்தோஷம் இவை அனைத்தும் கிடைக்கும்.  வியாபாரம் நன்றாக நடக்கும்.  ஏழாம் அதிபர் தீய கிரகங்களானால் மனைவியின் கை ஓங்கும்.  மனைவியின் பேச்சை இவர் தட்ட மாட்டார்.  ஏழாம் அதிபர் லக்னாதிபதிக்கு நட்பாக அமைந்தால், கூட்டுத் தொழிலால் ஆதாயம் கிடைக்கும்.  வரக்கூடிய மனைவி செல்வச்செழிப்புடன் இருப்பார்.
ஏழாம் அதிபர் எட்டாம் இடத்தில் இருக்கலாமா! மறைவு ஸ்தானங்களில் இருக்கக் கூடாது என்பதே உண்மை.  எட்டாமிடம் என்பது அஸ்டம ஸ்தானமாகும்.  இங்கு எந்த கிரகம் வந்தாலும் தீமையைத் தரும்.  அப்படியிருக்கையில் மனைவிக்குரிய ஸ்தானாதிபதி இங்கு இருந்தால் கண்டிப்பாக தீமையைச் செய்வார்.  மனைவியால் நிம்மதி குறைவு ஏற்படும். பெண்களால் கவுரவத்தை இழப்பார்கள்.  மனைவியின் ஊதாரியதனத்தால் கணவர் வருந்துவார்.  பொறுப்பு இருக்காது.  எனவே பரிகாரம் செய்து கொள்வது அவசியமாகும்.
ஒன்பது அதிபர் பாக்ய ஸ்தானமல்லவா! எனவே இங்கு ஏழாம் அதிபர் நின்றால், மனத்திற்குப் பிடித்த மாதிரி மனைவி அமையும், மனைவியால் பல யோகங்கள் ஜாதகர் அனுபவிப்பார்.  இளம் வயதிலேயே திருமணம் நடந்து விடும்.  மனைவியால் பல யோகங்களை ஜாதகர் அனுபவிப்பார்.  இளம் வயதிலேயே திருமணம் நடந்து விடும்.  மனைவியால் வெளிநாடு செல்ல வாய்ப்பும் அமையும்.  புகழ், செல்வாக்கு ஜாதகருக்கு ஏற்படும்.  பார்ட்னரால் தொழில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பத்து அதிபர் இந்த இடம் தொழில் ஸ்தானம் அல்லவா!  இங்கு ஏழாம் அதிபர் அமர்ந்தால், மனைவி உத்தியோகம் பார்த்து நல்ல வருமானத்தை அடைவார்.  மனைவி பெயரால் செய்யும் தொழில் சிறக்கும்.  ஏழாம் அதிபர் பத்தில் இருந்தாலும், பத்தாம் அதிபர் ஏழில் இருந்தாலும் தொழிலில் செய்தால்,அமோகமான லாபம் கிடைக்கும்.  நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.  வீட்டு நிர்வாகத்தை மனைவிதான் கவனித்துக் கொள்வார்.  ஆண்களுக்கு அவ்வளவாக்க் குடும்ப பொறுப்பு இருக்காது.  சுபகிரகங்கள் இங்கு அமரலாம்.  ஆனால் கேந்திரஸ்தானாதியாகி இங்கு அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படும்.  எனவே இந்த தோஷத்தைக் கட்டுபடுத்த அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
பதினொன்று மனைவியைக் குறிக்கக் கூடிய ஏழாம் அதிபர் லாபஸ்தானமான 11 ல் அமர்ந்தால் என்ன நடக்கும்?அமோகமாக லாபம் கிடைக்கும்.  லட்சாதிபதி மனைவி கிடைக்குமா அல்லது கோடிஸ்வர மனைவி கிடைக்குமா என்று சிலர் நிம்மைக் கேட்பார்கள்.  ஏழாம் அதிபர் 11ல் நின்றால் கண்னை மூடிக்கொண்டு சொல்லுங்கள்.  வரக்கூடிய மனைவி லட்சாதிபதியாகவோ அல்லது கோடிஸ்வரராக வருவார்.  ஏழாம் அதிபதி லாபம் ஏறி (11ல்) குருவின் பார்வையைப் பெற்றால் கோடிஸ்வர மனைவி அமைவது நிச்சயம்.  செய்தொழில் சிறக்கும், வீடு வாசல் வாகனம் சிறப்பாக அமையும்.  ஓர் ஏழைக்கு இந்த அமைப்பு இருந்தால் கூட, திருமணத்திற்குப் பிறகு வசதியுடன், அந்தஸ்துடன் வாழ முடியும்.
பதினொன்று விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் ஏழாம் அதிபர் நின்றால், மனைவியால் விரையம் ஏற்படும்.  மனைவிக்காக ஜாதகர் நிறைய பொருள் விரயம் செய்வார். ஜாதகர் குடும்பத்திற்காக, வம்பு வழக்கிற்காக நிறைய செலவு செய்வார்.  பொருள் நஷ்டம் ஏற்படும்.  ஏழாம் அதிபதியும் பன்னிரண்டாம் அதிபதியும் ஒரே அதிபராக இருந்தால் இந்த பலன் மாறுபடும்.  ஏனெனில் ஏழாம் அதிபர் 12 ம் வீடான சொந்த வீட்டில் அல்லவா நிற்கிறது.  சில நேரங்களில் விவாகரத்து வரைக்கும் செல்லக் கூடும்.
இனி ஏழாம் பாவம் வாழ்க்கைக் துணை நலத்தைத் தவிர, வேறு ஏதேனும் சில விஷயங்களை நமக்கு சொல்லி விடுகிறது.  12 வீடுகளில் அத்தனை விஷயங்களையும் சொல்லி விட முடியுமா என ஆச்சரியப்பட வேண்டியதில்லை.  இந்த பன்னிரிண்டு வீடுகளில், ஒவ்வொரு வீட்டைக் கொண்டும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.  ஆனால் ஏழாம் வீட்டிற்கும் மட்டும் பல விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக ஜோதிட சாஸ்திரம் அமைக்கப்படவில்லை.
ஏழாம் பாவம் என்பது முழுக்க முழுக்க இல்லற வாழ்க்கையை மட்டுமே தெரிந்து கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.  இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும்.  வரக்கூடிய மனைவி அல்லது கணவர் எப்படி இருப்பார்.  வசதியான இடத்திலிருந்து மனைவி வருவாரா அல்லது கணவர்  எப்படி இருப்பார், வசதியான இடத்திலிருந்து மனைவி வருவாரா அல்லது கணவர் வருவாரா – இப்படி சுற்றச்சுற்றி மணவாழ்க்கையை மையப்படுத்தியே ஏழாம் பாவம் சொல்கிறது.  மணவாழ்க்கையைத் தவிர்த்து வேறு ஒரு சில விஷயங்களுக்காக ஏழாம் பாவத்தைப் பார்ப்பதில்லை.  திருமண வாழ்க்கையை தெரிந்து  கொள்ள மட்டுமே இந்த வீட்டைப் பார்க்கின்றார்கள்.
திருமண வாழ்க்கையைத் தவிர்த்து, வேறு ஒரு விஷயத்திற்காக இந்த ஏழாம் வீட்டைப் பார்க்கின்றார்கள் என்றால், அது வியாபாரம் செய்ய பங்குதார்ர்களைப் பார்ப்பதற்காகவே என்று சொல்ல்லாம்.  வியாபாரத்தில் தொழில் செய்ய நம்முடன் இணைப்பவர்களை பிஸினஸ் பார்ட்னர் என்று சொல்கிறோம்.  இல்லறத்திற்கு life partner ஐ தேர்வுசெய்வது போல, தொழில் செய்வதற்கு நாம் பார்ட்னர்களை சரியாகத் தேர்வு செய்வதில்லை.  இதன் காரணமாகவே பலபேர் வியாபாரத்தில் பார்ட்னர்களிடம் ஏமாந்து விடுகின்றனர்.  தொழில் செய்து நொடிந்து விடுகின்றனர்.  எனவே நண்பர்களை தொழில் பார்ட்னர்களாக சேர்த்து, தொழில் செய்வதாக இருந்தால், ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்து அதன்பிறகே தொழில் செய்ய வேண்டும்.
ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் பாவம் லக்னத்திற்கு உதவி செய்யக்கூடிய வகையில் இருந்தால் நல்ல மனைவி கிடைப்பதைப் போல தொழில் செய்யவும், நல்ல பார்ட்னர் கிடைப்பார்.  ஏழாம் பாவம் பாதிக்கப்பட்டால் நல்லமனைவி அதாவது பிரச்சனைகளைக் கொடுக்காத மனைவி) கிடைக்கமாட்டார்.  எனவே நான் ஏழாம் பாவத்தில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் எப்படிப்பட்ட மனைவி அமையும்? மனைவியால் நல்ல நடக்குமா அல்லது நடக்காதா என்பதை நாம் தெரிந்து கொள்கிறோமல்லவா!  அந்த பலன்களை அப்படியே பிஸினஸ் பார்ட்னர்களுக்கு பொருத்திக் கொள்ளவேண்டும்.  மனைவியால் நல்லது நடக்கும் என்றால் பார்ட்னரால் நல்லது நடக்கும்.  மனைவியால் பிரச்சனை நடக்கும் என்றால் பார்ட்னரால் பிரச்சனை நடக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
ஏழாம் வீட்டு அதிபர் 2ம் வீட்டில் லக்னாதிபதியோடு சேர்ந்து நின்றால் பார்ட்னரால் நல்ல லாபம் வரும்.  ஏராளமான பணத்தைப் பெறுவார்.  லக்னாதிபதியோடு சேராமல், தனியாக தனஸ்தானத்தில் ஏழாம் அதிபர் நின்றாலும் பார்ட்னரால் பணம் கிடைக்கும்.  இதே போல 9 வீட்டில் இருந்தாலும், 10 ம் வீட்டில் இருந்தாலும் நல்ல ஆதாயத்தை ஜாதகர் பார்ட்னரால் அடைவார்.  லாபஸ்தானமான 11ம் இடத்தில் 7ம் அதிபர் இருந்தால், பார்ட்னரால் அடைவார்.  லாபஸ்தானமான 11ம் இடத்தில் 7ம் அதிபர் இருந்தால், பார்ட்னரால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும்.  எனவே ஜாதகர் துணிந்து பார்ட்னர்ஷிப் கம்பெனியை நடத்தலாம்.
ஏழாம் வீட்டு அதிபர் 3,6,8,12 போன்ற இடங்களில் மறைந்தால் பார்ட்னரால் எவ்வித லாபமும் இல்லை.  பிரச்சனைகள்தான் ஏற்படும்.  ஏழாம் வீட்டு அதிபர் 6ல் அமர்ந்தால், இப்படிப்பட்ட ஜாதகர் வேறு ஒரு நபரைத் தொழிலில் பங்குதாராக சேர்த்துக் கொண்டு தொழிலைத் தொடங்கினால் தொழிலில் சரிவு ஏற்பட்டு, கடன் ஏற்படும்.  இப்படிப்பட்ட அமைப்பை உடையவர்கள் மற்றவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் நடத்தக் கூடாது. ஏழாம் அதிபர் 12ல் இருந்தால், அது விரயஸ்தானமல்லவா! பார்ட்னரால் ஏகப்பட்ட விரயம் ஆகிவிடும்.  எனவே ஏழாம் வீட்டை வைத்துக் கொண்டு ஒருவர் கூட்டுச் சேர்ந்து தொழிலை நடத்தலாமா அல்லது வேண்டாமா என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
ஒருசிலர் கூட்டுத்தொழில் ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்கிறார்களே, அவர்களுடைய ஜாதகத்தில் கூட்டுத் தொழிலால் எவ்வித பிரச்சனைகளும் இல்லை என்றிருக்கிறதே! அப்படியென்றால் எடுத்த உடனேயே கூட்டுத் தொழில் வேறொரு நபருடன் செய்யலாமா என்று நினைக்கவேண்டாம்.  யாருடன் தொழில் செய்ய விரும்புகின்றோமோ, அவர்களுடைய ஜாதகமும், நம்முடைய ஜாதகமும் பொருந்துகிறதா என்று பார்க்கவேண்டும்.  திருமணப் பொருத்தம் எப்படி பார்க்கின்றார்களோ அப்படி தொழிலில் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் பொருத்தம் பார்க்கவேண்டும்

1 August 2013

ரீ சங்க தாரணி யட்சிணி தேவி மூல மந்தரம்

    ஸ்ரீ சங்க தாரணி யட்சிணி தேவி   மூல  மந்தரம்       ஓம் க்லீம்    நமோ பகவதே அரவிந்தேஸ்ரீ சங்க தாரணி திரீகாலம் வசம்  மமவசம் குருகுரு சுவாஹா