youtube

31 July 2012

திருமணம் தாமதம் ஆகிறதா..? இதோ ஜோதிட பரிகாரம்

திருமணம் தாமதம் ஆகிறதா..? இதோ ஜோதிட பரிகாரம் திருமணம் தாமதம் ஆகிறதா..? இதோ ஜோதிட பரிகாரம்; சினிமா ஹீரோ விஜய்,சூர்யா மாதிரி இல்லைன்னாலும் நமக்குன்னு ஒரு ஹீரோ கிடைச்சா பரவாயில்லையே என தகுதி இருந்தும் பல வித சூழல்களால் திருமணம் தாமதமகிக்கொண்டே வரும் கன்னிப்பெண்கள் அதிகம்....ஆரம்பத்துல சினேகா,நயன்தாரா மாதிரி பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம் பிடிச்சிட்டு அப்புறம் ஏதோ சுமாரா இருந்தாக்கூட போதும் கல்யாணம் ஆனா சரி என்ற சலிப்புக்கே வந்துவிட்ட ஆண்களும் இன்று அனேகம்.... திருமண தாமதம் என்றால் திரும்ணஞ்சேரி,காளகஸ்தி என ஒரு ரவுண்ட் அடிச்சி பரிகாரம் செஞ்சிட்டு வருகிறோம்...இங்க வந்துட்டு போனா லேட் ஆகுறதே இல்லை என்பதுதான் காலம் காலமாக இருக்கும் முக்கிய நம்பிக்கை..ஆனா அங்கு போய் வந்து சில ஆண்டுகளாகியும் கல்யாணம் ஆகாமல் தடைபடுவது ஒரு சோகம்...பவானி,கொடுமுடியை பொறுத்தவரை நல்ல ராசியான பிராமணரை வைத்து பரிகாரம் செய்தால் உடனே திருமணம் ஆகிவிடும்... களகஸ்தி,திருமணஞ்சேரி மட்டும் போய்விட்டு வந்து பரிகாரம் எல்லாம் முடிச்சாச்சு என சொல்பவர்கள்தான் அநேகம்..குருபலம் வந்தாலும்,ஜாதகத்தில் கோட்சாரத்தில் உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்,அல்லது சுக்கிரனை எப்போது பார்க்கிறதோ அந்த வருடம் திருமணம் தடையில்லாமல் நடந்துவிடும்..வெறும் குருபலனை மட்டும் வைத்து திருமணம் நடந்துவிடும் என சொல்லிவிட முடியாது...7க்குடையவன் ,சுக்கிரன்,குரு,பாக்யாதிபதி புத்தியும் திசாபுத்தியில் நடக்கவேண்டும்...இவை இருந்தால் திருமண தாமதம் இருப்பதில்லை...எப்போது இவை வருகிறதோ அப்போது திருமணம் கூடி வரும்... பெண்கள்,ஆண்கள் ஜாதகத்தில் சில கிரகங்கள் ஏடகூடமாக அமரும்போது ,திருமண பொருத்தத்துக்கு நம் ஜாதகம் போகும்போது இதை ஜோசியர் தவிர்த்துவிடுகிறார்..இதனால் பல தாமதம் உண்டாகிறது...இது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்... சிலருக்கு குடியிருக்கும் வீடு அல்லது பூர்வீகம் சரியில்லாமல் சுபகாரியம் நடத்த முடியாமல் தடை ஏற்படுத்தலாம்..அதையும் கவனித்து இடம் மாறும்போது பலருக்கு திருமணம் ஆகியிருக்கிறது.. கரூர் அருகில் உள்ள தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்டரமர் கோயில் வழிபாடு செய்தால் திருமணம் தாமதமில்லாமல் நடக்கும் என ஏற்கனவே எழுதியிருந்தேன்......சினேகா,பிரசன்னா வெண்டுதல் நிறைவேறுதலுக்காக,இங்கு வந்தபோதுதான் பலர் ஓடிச்சென்று தாங்களும் வழிபட்டு வந்தனர்...இந்த கோயில் திருமணம் தடை,குழந்தை பாக்ய தடை போன்ற வேண்டுதல்களுக்கு உடனே நிவர்த்தி செய்து தரும் தலம் என்பதல் மிக பிரபலம்...நெரூர் சதாசிவ சித்தர் வரைந்து வைத்த அபூர்வ ஜனவசிய யந்திரமும் இங்கு இருக்கிறது...நின்ற கோல பெருமாளான இவர் நம் துன்பங்களை உடனே நிவர்த்தி செய்து தரும் அற்புத மூர்த்தியாவார்..இங்கு வெள்ளிக்கிழமையில் சென்று நெய்தீபம் ஏற்றி,துளசிமாலை சார்த்தி வணங்கி வாருங்கள்..இங்கு நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்ளுங்கள்..நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும்!!

No comments: