youtube

28 February 2016

அகத்தியர் கருஆமையில் சித்து

கருஆமையில் முன்றானாமை என்றொரு வகை இருக்கிறதாம். அதை குருவருளால் கண்டு அதன் கருவை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தக் கருவை சிவப்பு பட்டுத் துணியால் சுற்றி திரியாக செய்து கொள்ள வேண்டுமாம். அந்தத் திரியை விளக்கில் வைத்து நெய்விட்டு தீபமேற்ற வேண்டுமாம். தீபமேற்றினால் திரி எரிந்து அந்தக் கருவானது கருகி இருக்குமாம்.

அப்போது அதை எடுத்து கல்வத்தில் போட்டு காரெள்ளுத் தைலம் சேர்த்து கடைந்து எடுத்தால் மையாகுமாம். அந்த மைக்கு சம எடை சவ்வாது சேர்த்து  திலகமாக இட்டு நான்கு திசையையும் சுற்றிப் பார்த்தால் வெகு தூரம் வரை தெளிவாய் தெரியுமாம்.

அப்படியே மேலும் கீழும் நன்றாகப் பார்த்தால் மேலே பார்க்கும் போது அண்டம் வரையும், கீழே பார்க்கும் போது பாதாளம் வரையும் தெளிவாகத் தென்படுமாம். அப்போது அங்கே பாதாளத்தில் சங்கநிதி, பதுமநிதி என்னும் இரண்டு நிதிகளும் ஒன்றாகி பெருநிதியாகத் தோன்றுமாம். அப்போது அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு பூரணத்தில் மனதை நிலை நிறுத்தி கைலாய நிதியைத் தேட, அட்டாங்க வளமைகள் அனைத்தும் வந்து சேரும் என்கிறார் அகத்தியர்.

No comments: