youtube

19 April 2016

எப்படி குளிக்க வேண்டும் ..?அறிவியல் விளக்கங்கள்....!

எப்படி குளிக்க வேண்டும் ..?அறிவியல் விளக்கங்கள்....!
நமது வீட்டின் வாயிலை அழகுபடுத்துவதில் கோலம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோன்று நமது உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்துவதுதான் அதிகாலை நீராடுதல்
தூங்கும்போது இந்திரியங்களில் ஏற்படும் அசுத்தி மற்றும் உடல் அசதி நீங்கி புத்துணர்வு பெற அதிகாலையில் நீராடுதல் நல்லது.
நீராடலில் மூன்று வகை உள்ளது. அவை
1 ரிஷி ஸ்நானம் [காலை 4 முதல் 5 வரை] உத்தமம்,
2 மனித ஸ்நானம் [காலை 5 முதல் 6.30 வரை] மத்திமம்.
3 ராட்சக்ஷ ஸ்நானம் [காலை 6.30க்கு மேல்] அதமம். சூரிய உதயத்துக்கு முன் நான்கு நாழிகைகள் அருணோதயம் எனப்படும். அந்த நேரத்தில் நீராடுவது பிராத ஸ்நானம் எனப்படும்.
அதிகாலையில் நீராடுபவர்களுக்கு சரீர அழகு பலம் சுத்தம் ஆயுள் ஆரோக்கியம் தைரியம் கிடைக்கும். சாஸ்திர விதிப்படி மூன்று வருட காலம் அதிகாலை நீராடுபவருக்கு ஏழு பிறவிகளில் செய்த பாபங்களும் நீங்கும் என்கிறது பராசரஸ்மிருதி.
நீராடுவது என்றால் உடனே தண்ணீரில் குதிப்பது என்று பொருளல்ல. எங்கே எப்படி குளிக்க வேண்டும் என்பதற்கும் விதிகள் இருக்கின்றன. ஆற்றில் நீராடும்போது நீரோட்ட திசையில் நின்று நீராட வேண்டும்.
குளிர்ந்த நீரில் குளித்தால் முதலில் தலையில் நீரை ஊற்றவேண்டும். வென்னீர் ஊற்றி தலை குளிக்கும்போது உள்ளங்காலில் ஆரம்பித்து பின் படிப்படியாக உச்சந்தலையில் ஊற்றவேண்டும் என்பது பெரியோர் அறிவுரை எனவே நீராடும்போது இறைப்பாடல்களைப் பாடிக்கொண்டோ அல்லது இறைகோஷங்களை ஓதிக்கொண்டோ குளிப்பது நலம்.
அறிவியல் விளக்கங்கள்:—–
அதிகாலை சூரிய ஒளியில் உள்ள விட்டமின் டி எலும்புகளின் பலத்துக்கு மிகவும் முக்கியமானது. எனவேதான் சூரியன் உதிக்கும் கிழக்கு திசை பார்த்து நின்று குளிக்கவேண��

No comments: