youtube

29 August 2017

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )
                                எத்தனையோ மகான்களுக்கு துன்பன்களும் துயரங்களும் வந்தன, அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டனர் . ஆனால் சாதாரண மனிதனால் அப்படி இருக்க முடியது . நோய் வந்தால் மருத்துவம் பார்ப்பதும் ,கஷ்டங்கள் வந்தால்  பரிகாரங்கள் தேடுவதும் மனித மனம் .அதை தவறு என்று சொல்வதற்கில்லை .
எதைசெய்தாலும் ,தெய்வத்தின் அருளை வேண்டுங்கள் தெய்வத்திடம் சரணாகதி 
அடையுங்கள் அவன் காப்பாற்றுவான் ,அப்படி இல்லாவிட்டால் இறைவன் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் 
பரிகாரம் என்ற பெயரில் போலிகளிடம் ஏமாறவேண்டம்.ஆனால் பரிகாரம் பொய் இல்லை
அதைப்பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம் .

                            ஒரு தீக்குச்சியில் எரியும் நெருப்பை அணைத்துவிடலாம் .ஒரு வாளி தண்ணீரில்
அணையும் நெருப்பும் உண்டு ,தீயணைப்பு வண்டி வந்து அணைக்க வேண்டிய நெருப்பும் உண்டு .
அணைக்க முடியாத காட்டுத்தீயும் உண்டு .கனமாக மழை பெய்தால் காட்டுத்தீயும்
அணைத்துவிடும் . அதுபோலதான்   கடவுளின் அருள். நல்ல குருவின் உதவியுன் கடவுளை தேடுங்கள் ,அவரிடம் சரணடையுங்கள்
கடவுள் உங்களை கப்பார் .நீங்கள் எந்த மதத்தவராயினும் சரி ,அந்த மதத்தின் மீதும்
அந்த கடவுளின்  மீதும் நம்பிக்கை வையுங்கள் ,"இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று
சொல்லுவதில்லை

No comments: