youtube

16 October 2014

யட்சிணி,தே வதை , வசியம் பூஜை தெய் வ ரகசியங்கள்

யட்சிணி,தே வதை , வசியம் பூஜை தெய் வ ரகசியங்கள் 4

 

யட்சிணி,தே வதை ,   வசியம்  பூஜை  தெய் வ ரகசியங்கள்
ஓம் குருவே சரணம்
ஓம் ஸ்ரீ விக்னேஸ்வராய நம:
ஓம் சிவாய நாம:
ஓம் விஷ்னுவே நம :
ஓம் பிரம்மைய நம:
ஓம் பஞ்ச பூதாய நம:
ஓம் அஷ்ட பாலகாய நம:
ஓம் நவ க்ரஹ தேவதாய நம:
ஓம் குல தேவதாய நம:
ஓம் பித்ரு தேவதாய நம:
ஓம் நவ சக்தியே நம:
ஓம் நமோ ஹர ஹர சிவா சிவ சூரிய நாராயணாய நம:
குரு வாசகம்
மனம் என்ற சக்தி இல்லை என்றால் மந்திரம் யந்திரம் தந்திரம் எதுவும் பலன் அளிக்காது. மனம் உங்களிடம் தன இருக்கிறது அதை எங்கும் கடன் பெற தேவை இல்லை. அதை அடக்க நீங்கள் பெற்றோராலோ, இறைவனலோ அடக்க முடியாது உங்களுக்கே கட்டு படக் கூடியது அதை ஒடுக்கி தவம் செய்யுங்கள். உங்கள் வெற்றியின் ரகசியம் இதில் தான் உள்ளது.
முதலில் இதை படியுங்கள்
கவனிக்க
இந்த நூல் தெய்வீக சாஸ்திரம் எனவே உயிர்புள்ள நூலாகும் உங்கள் ஆர்வத்தை தணித்துக்கொள்ளும் பொருட்டு ஏனோ தானோ என்று கையாளாமல் ஒவ்வொரு விஷயத்தையும் மிக பய பக்தியோடு படித்து உணர்ந்து பயிற்சி செய்யுங்கள், பாதி வெற்றியை பணிவும் நம்பிக்கையும் முயற்சியும் கொடுக்கும், மீதியை தெய்வம் கொடுக்கும். மந்திர பயிற்சியை கையில் எடுத்தாலோ நாம் தெய்வ நிலை மரியாதையை மக்களிடம் இருந்து பெறப்போகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் அந்த மரியாதைக்குரியவராக நாமும் நனைந்து கொள்ள வேண்டும் என்பதை மறக்க வேண்டாம.
நமக்கு பிடித்த இறைவனை தேர்ந்தெடுப்பதை விட இறைவனுக்கு பிடித்தவராக நான் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.
இறையருளை பெற்று இன்புற்று வாழ்வீராக. ஜெயபே ஜெயம்
வாழ்க வளமுடன்
முதலில்மத பித்த அனுமதி பெற பூஜை
பெற்றோருக்கு பத பூஜை செய்து அவர்கள் அட்சதை தெளித்து மனப்பூர்வமாக ஆசீர்வாதம் செய்ய வேண்டும். நீ ஏற்று செய்ய போகும் பூஜையை வெற்றியுடன் முடிப்பாயாக அதற்கு எங்கள் ஆசீர்வாதம் என்றும் உண்டு. என மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க வேண்டும். இலையேல் பூஜை நிறைவு பெறாது.. இது சன்யாச தீட்சை இல்லை ஆன்மீகத்தில் ஈடுபட போகும் போது பரம்பரை சாபம் நம்மை தடை செய்யாமல் இருக்க பெற்றோர் அனுமதி பெற்றுவிட்டால் நம்மை பரம்பரை பாவங்கள் எதுவும் அண்டாது ஆகையால் தன இந்த பத பூஜை அவசியமாகிறது. திருமணத்தின் போடும் பத பூஜை செய்வதும் இதற்குத் தான்.
பெற்றோர் இல்லாதவர்கள் அவர்களை மானசீகமாக கற்பனையில் நினைத்து அவர்கள் ஆசி வழங்கும்படி மரியாதைகேட்டுக்கொள்ளவும்.

பெற்றோர் அனுமதிக்க் மறுத்தாலும் ஸ்ரீகணபதியிடம் இறைவ யாருக்கும் எந்த பதிப்பும் இல்லாமல் நடத்து கொள்கிறேன் என்னை ஆசீர்வதியுங்கள் என கேட்டு கொள்ளவும்.\
பெற்றோர் விரோதமாக இருந்தால் மானசீகமாக ஆசி பெறவும். தொலைபேசியில் அவர்களுக்கு விஷயத்தை கூறி தனக்காக இறைவனிடம் வேண்டி கொள்ள கேட்டுக் கொள்ளவும். எல்லாம் வெற்றிகரமாக அமைய பெற்றோர், பித்ரு, குலதெய்வம் ஆசி மிக அவசியமாகும்.
யாவருக்கும் இது முதற்படியாகும்.
திருநீறு பூசும் முறை ..!!!
எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?
கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.
கட்டை விரல்
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
ஆள் காட்டி விரல்
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.
நடுவிரல்
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.
மோதிர விரல்
மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
சுண்டு விரல்
சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.
மோதிர விரல் – கட்டை விரல்
மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்

No comments: