youtube

11 February 2016

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா9

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா9

குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா9

விநாயகர்  பூஜை  தொடர்ச்சி

அவருக்கு அருகம்புல் நிறைய வைத்து சுத்தமான வெற்றிலை நிறைய ஒற்றை படையில் வைத்து, முளுகளை பாக்கு இரட்டை படையில் நிறைய வைத்து வழிபடவும். அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொறி காதலி, அவுல், ஐந்து வகையான கனிகள், எருக்கன் பூ, மல்லிகை பூ, வாசனை பத்தி, தேங்காய், வாழைபழம் இவைகள் அனைத்தும் கொண்டு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜிக்க வேண்டும். இந்த பூஜையே தங்களின் முதல் முழு பூஜையாக கணக்கில் கொள்ள வேண்டும். இவரிடம் சில கோரிக்கைகளை கூற வேண்டும். அது மிக தெளிவான சின்ந்தனையோடு ஒளிவு மறைவு இல்லாமல் வேண்டி  கொள்ள வேண்டும். (இதற்கு சங்கல்பம் என்று பெயர்) எதற்காக பூஜையை செயகீறிர்கள் உங்கள் கோரிக்கை என்ன உங்கள் கோரிக்கை கிடைத்த பின் அதை எதற்காக பயன்படுத்தபோகிறீகள். பயன்படுத்துவதின் மூலம் உங்களுக்கு என்ன லாபத்தை எதிர்பார்கிறீர்கள் என்பதை மனம் விட்டு கூச்சபடாமல் மனதில் உள்ளதை (அது எதுவாக இருந்ததாலும்) அப்படியே வேண்டி கொள்ள வேண்டும். ஏன் தாயும் தந்தையுமான ஏன் இறைவா ஏன் உயிர் சுவாசமாகவும் லோக ஆதாரமாகவும் என்னை ஆளும் பெரும் குருவே தங்களை சரணடைகிறேன். இந்த ஆதி அந்த லோகமும் உங்களுக்கு அடக்கம். எனக்கும் ஆத்மாவை அளித்த மூல பரம்பொருளே தங்களை முன் வைத்து துதிக்க்றேன். துணைக்கு அழைக்கின்றேன். தயங்காமல் நான் அளிக்கும் இந்த சிறு உபசரிப்பை ஏற்று மனமிறங்கி வாருங்கள் என்னை ஆளும் இறைவா! தெய்வ கடைமைகளை நான் அறியேன், தெய்வ நிபந்தனைகளை நான் அறியேன், பாவ புண்ணியங்களை நான் அறியேன், என் சகல கோத்ர பாவங்களை நான் அறியேன், நான் செய்த தவறுகள் சிலதை தவிர பலத்தை நான் அறியேன், ஏன் கடைமகைளை நான் அறியேன், என் குரு கடைமையை நான் அறியேன், வரப்போகும் துன்பங்களை நான் அறியேன், ஏன் குரு கடைமையை அறியேன், வரப்போகும் துன்பங்களை நான் அறியேன், நல்லது கெட்டதை நான் அறியேன் என் இறைவ இத்தனையும் அறியாத போடும் என் ஆசையும் தேவையும் பூர்த்தி செய்ய உங்களையே சரணடைகிறேன். அதற்கு பக்க துணையாக உறுதுணையாக காவல் தெய்வமாக, எவ்வித இடையூறும், என்னையா என் குடும்பத்தினரையோ அண்டாமல் காக்க வேண்டும். ஏன் இதயத்தில் வைத்து உங்களை பூஜிக்கிறேன். நான் தங்களை அற்பப் புத்தியால் நினைக்க மறந்தாலும் ஏன் நினைவில் நீங்காமல் இருந்து என்னை வலி நடத்துங்கள். லோக குலதெய்வமே. நான் நேசிக்கும் சித்திகளை எனக்கு பெற்று தாருங்கள். முக்காலம் உணரும் சக்தியும், வாக்கு பலித்தமும், ஜன வசியமும், சர்வ செல்வா வசியமும், கிடைக்க எந்த தெய்வங்களை நான் அழைத்தாலும், எவ்வித இடையூறுகள், எதிர்பார்ப்புகள் இல்லாமல் எனக்கு உதவிட தாங்களே எனக்கு உதவுங்கள். எந்த செயல் நடந்தாலும் அது தங்கள் செயலாலே நடந்தாக நான் வாழ்வேன். ஏன் ஆதார பரம் பொருளே எனக்கு தாங்கள் வசியமாய் இருந்து என்னை ஆசிர்வதியுங்கள்
ஓம் கம் கணபதயே நம:
என்று கூறி மனம் சலிப்பில்லாமல் கீழ் காணும் மந்திரத்தை காலை , மாலை, கூறவும் முடிந்தால் ஒரு வேலைக்கு மந்திரமும் கூறலாம்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே வர வரத
சர்வ ஜனம்மே வசமானய  சுவாக
மேற்கண்ட பிரார்த்தனை மிக மிக முக்கியமானது. இதனை படித்து மனப்பாடம் செய்து ஒரு செய்யுள் ஒப்பிப்பது போல ஒப்பித்தால் போதாது, ஒன்றிற்கு பலமுறை ஒவ்வொரு அர்த்தமும் நன்கு புரிந்து உணர்ந்து அதன் உருக்கத்தையும், அத்தியாவசியத்தையும் உணர்ந்து சொல்ல வேண்டும். இந்த வார்த்தைகள் சத்தியம் செய்வது போலாகும். இந்த பூஜை
பிரார்த்தனை தான் உங்களுக்கு ஆரம்ப பிள்ளையார் சுழி போன்றது. இந்த பூஜையின் அத்தியாவசியத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் மேலும் மன ஈடுபாடோடும் செயல்பட எதுவாகி இருக்கும். எனவே கீழ்காணும் ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். அத்தனையும் ஸ்ரீ விநாயக பெருமானுக்கு அடிமையானது. இதை வசியமானது என்று கூட வைத்துக் கொள்ளலாம். அவர் மக்களுக்காக சாபம் இல்லாமல் கொடுத்த மூலிகைகள் ஐந்து அருகம்புல் வெற்றிலை வேப்பிலை துளசி வில்வம். இவைகள் சாபமற்றதகும். இதில் அகரம் எனும் முதல் அட்சரத்திற்கு உரியது அருகம்புல் தான். இந்த அருகம்புல்லும் அதற்கான இறைவன் ஸ்ரீ கணபதியும் வசியம் நமக்கு ஆனால் தான் மற்ற மூலிகைகள் வசியமாகும். இல்லை என்றால் எதுவும் நமக்கு கட்டுபடாது. மந்திரமும் பலன் தராது. இந்த ரகசியத்தை அறிந்த நம் முன்னோர்கள் எந்த செயலுக்கும் துவக்கத்திற்கு முன் ஸ்ரீ கணபதியை அருகம்புல் கொண்டு வழிபட்ட பின் தான் மற்ற பணியை செய்தார்கள். நாமும் எந்த விசேஷமாக முதலில் விநாயகரை வணங்கியே தொடங்குவோம். அதற்கு காரணமே மேற்கண்ட நிகழ்வுதான். அவரிடம் தான் எல்லாம் ஐக்கியம். எந்த நிகழ்வை நாம் எடுப்பதாக இருந்தாலும் அவர் அனுமதித்தால் தான் அருள் கிடைக்கும். இல்லையேல் எதுவும் சிந்திக்காது. எனவே இவரிடம் தான் மனபூர்வமாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இவர் தான் ஞானத்தின் திறவுகோல். இவரின் முக்கியத்துவம் இப்போது புரிந்திருக்கும். எனவே இதை மனதில் கொண்டு பிரார்த்தனையை இவரிடம் தொடங்குங்கள் தடை இல்லாமல் முடித்து கொடுப்பார். சுருக்கமாக சொல்ல போனால் நம்மை ஆளக்கூடிய நவகிரகங்களும், உலகை ஆளக்கூடிய பஞ்ச பூதங்களும் பத்து திக்குகளும் இவருக்கே கட்டுப்பட்டது. நமக்கு ஸ்ரீ விக்னேஸ்வரர் உடனே கட்டுபடுவார். உண்மையான அன்போடு அழைத்தால் உடனே வரக்கூடியவர் இவரே எனவே முதல் பூஜை இவரிடம் அனுமதி பெற்று செய்வதே முதல் தேவ ரகசியமாகும்.
இதில் பொய் என் ரகசியம் இருக்கிறது. எல்லோருமே அவருக்குத்தான் முதல் பூஜையே கொடுக்கிறோம் ஏன் கேள்வி கேட்கத் தோன்றும். இங்கு ஒரு விஷயத்தை உணர வேண்டும். எல்லோருமே பொதுவாக ஏதோ பெரியவர்கள் முதலில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜிக்க சொல்லி இருக்கிறார்கள். நாமும் செய்வோமே நமக்கேன் வம்பு என்று தான் நினைத்து செய்கிறார்களே தவிர மனபூர்வமாக அவரின் பெருமைகளை அறிந்து பூஜை செய்யக் கூடியவர்கள் யாரோ ஒருவர் தான். அவரின் மேற்கண்ட ரகசியத்தை அறிந்து உணர்ந்து பூஜை தொடங்குபவருக்கு தான் அருளை கொடுப்பார். இல்லை எனில் கொடுக்க மாட்டார் சோதிப்பார். எனவே தங்களுக்கு அவரின் அணைத்து ஐக்கியமும் கொண்ட இறைவன் என்பதை உணர்தியுள்ளோம். இப்பொது அவரின் முக்கியத்துவத்தை உணர்ந்து விட்டதால் உங்களுக்கு எல்ல பாக்கியமும் கிட்டும். எனவே இதை ரகசியமாக பாவித்து தேவ ரகசியம் என்று குறிப்பிட்டேன்.
நீங்கள் இதையே முதல் பூஜையாக கணக்கில் கொள்ளவும்
விநாயகர் பூஜை என்றாலே சங்கடஹர சதுர்த்தியில் தானே ஆரம்பிப்பார்கள் என சந்தேகம் வேண்டாம். இது நித்ய பூஜை போன்றது முடன் முதலில் தொடங்கிய முகூர்த்த நாள் பார்த்து ஆரம்பித்த ஆரம்ப பூஜை பின் அடுத்து வரும் இந்த பூஜைக்கெல்லாம் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை.

No comments: