youtube

10 February 2016

மரண வாயிலில் இலக்கணம் உதவுமா? (பஜகோவிந்தம்

மரண வாயிலில் இலக்கணம் உதவுமா? (பஜகோவிந்தம் 1)


பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் 
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே - ஏ மூட மனமே! கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே - நாம் போகும் காலம் வரும் போது

நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே - நாம் படித்த எந்த கல்வியும் உடன் வராது. வீணாக பொய்க்கல்விகளில் நேரத்தை வீணாக்காதே.

நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

***

18 ஏப்ரல் 2008 அன்று சேர்க்கப்பட்டது:

வயதில் மிகவும் மூத்த ஒரு முதியவர் 'டுக்ருங்கரணே' என்ற இலக்கணப்பாடத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்ததை ஆதிசங்கரர் கண்டார். அதனைக் கண்ட போது 'மரண வாயிலில் இருக்கும் இவருக்கு இந்த இலக்கணப் பாடமா வந்து உதவப் போகிறது?' என்ற எண்ணம் தோன்றி ஆதிசங்கரர் இந்த 'பஜகோவிந்தம்' பனுவலைப் பாடினார் என்பது வரலாற்றுத் தொன்மம்.

No comments: