youtube

12 February 2016

நெற்றிக் கண்

நெற்றிக் கண் என்று ஒன்று உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை.சிவனை முக்கண்ணன் என்று அழைத்து வணங்குவார்கள். நக்கீரரை சோதிப்பதற்காக வந்த சிவன் தனது நெற்றிக்கண்ணை திறந்தார் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
கடவுள் என்று ஒருவரே இல்லை என்றும், இந்து மதத்தில் கூறப்படுவது ஜஸ்ட் புராணக்கதை என்றும் கூறும் அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் வாழும் நாம் நெற்றிக்கண் என்று ஒன்று உண்டு என்று கூறினால் அதற்கும் ஏதாவது வாதம் வைப்பார்கள்.
பகுத்தறிவு என்றால் என்ன என்றே விளங்கிக் கொள்ளாமல், இறை நம்பிக்கையற்ற தாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்றும் இறை நம்பிக்கையுள்ளவர்கள் (எம் மதமானாலும்) பகுத்தறிவு அற்றவர்கள் என்றும் கூறி மிகவும் வெப்பமான காலத்திலும் கருப்புச்சட்டையை அணிவது எந்த பகுத்தறிவில் சேர்ந்தது என்று தெரியவில்லை.
ஆனால் இந்துமதம் பகுத்தறிவுள்ள விஞ்ஞானத்துடன் இணைத்த மதம்.அதன் சிறப்பை மெல்ல மெல்ல இப்போது தான் சில மேற்கத்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து நமது அறிவு ஜீவிகளுக்கு புரியவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோவில்கள் கட்டி வைத்ததற்கும், பரம்பொருள் ஒன்றே என்று கூறும் இந்துமதம் கடவுளை பல நாமங்களில் அவரவர் விருப்பப்படி வழிபட அனுமதிப்பதற்கும் மற்றும் அதன் சில கொள்கைகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் பின்னால் பலமான காரணங்கள் உள்ளன.இதை விளங்கிக்கொள்ளும் அறிவு குறைவாக உள்ள காரணத்தால் அதை பொய் என்றோ மூட நம்பிக்கை என்றோ கூறக்கூடாது.
அதன் சில வழக்கங்களை சுயநலத்திற்காக சிலர் துஷ்பிரயோகம் செய்தால் அதற்கு மதம் பொறுப்பல்ல. எம்மதமானாலும் அன்பையும் கடவுளை அடையும் வழியயும்தான் கூறும்.ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு மதங்களை பழிப்பது சரியல்ல.
இப்போது மூன்றாவது கண்ணை பற்றி பார்ப்போம்.
“த்ரியம்பகன்” என்பது சிவனின் திர�

No comments: