youtube

20 February 2016

ஓஷோ என்ன சொல்றார் தெரியுமா ?

" நீ பிறந்த பொது மௌனத்தை தான் உலகத்துக்கு கொண்டு வந்தாய் . மொழி உனக்கு தரப்பட்டது .சமூகத்துடன் பழகுவதற்கு அது ஓர் அன்பளிப்பு . அது ஓர் கருவி . அது ஓர் சாதனம் . ஆனால் மௌனம் இந்த உலகத்துக்கு நீ கொண்டு வந்தது . அந்த மௌனத்தை நீ மீண்டும் அடைய முயற்சி செய் .... அதுதான் நீ மீண்டும் குழந்தை ஆவதற்கு வழி....

மகான்கள் என்ன சொல்றாங்க தெரியுமா ? உண்மையான வெறுமை தன்மை தான் கடவுள் . அந்த கடவுளோடு பேச விரும்புகிறவர்கள் கற்று கொள்ள வேண்டிய மொழி மௌனம் . இதுதான் மகான்கள் தங்கள் அனுபவத்தில் உணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிற உண்மை . இதை பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டியது நமது கடமை .
------------------------------------------------------
நம்ம ஆள் ஒருத்தர் கடவுளை பார்க்கணும்னு ஆசைப்பட்டார்

நான் உங்களுக்கு கடவுளை காட்றேன்னு சொன்னங்க அவங்க மனைவி .

நாலு நாள் பட்டினி போட்டாங்க ...கணவனுக்கு சாப்பாடே கிடையாது

அஞ்சாவது நாள் அவரை உக்கார வச்சி இலையை போட்டு சாப்பாடு போட்டாங்க ... பட்டினி கிடந்தவர் சாப்பாட்டை பார்த்தார் .

" நான் கடவுளை பார்த்திட்டேன் ! னு கத்தினார் .

எங்கே ? ன்னாங்க அந்த அம்மா .

"இதோ இந்த சாப்பாடு தான் இப்ப எனக்கு கடவுள் !" அப்படின்னு சொல்லிபுட்டு அவசர அவசரமா சாப்பிட ஆரம்பிச்சார் அவர்

No comments: